அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jul 25, 2014

அந்நஜாத்தின் புரோகிதப் புரட்டு. - 2


இறை தூதர்களில் ஒருவரான ஹஸ்ரத் ஈசா நபி (அலை) அவர்களை அந்-நஜாத் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் ஓய்வு பெற்ற ஒரு மாவட்ட ஆட்சியருக்கு ஒப்பிட்டு (நஜாத் மே 2011 பக்கம் 30) எழுதிய அவலத்தை கண்டித்து அப்துல் ஹமீது காதிர் என்பவர் எழுதிய விமர்சனத்தை அந்நஜாத் ஆகஸ்டு 2011 பக்கம் 20 இல் படித்திருப்பீர்கள். 

வழிகேடர்களின் கொள்கை என திருக்குர்ஆன் வருணித்துக் கூறும் இறுதி நபிக் கொள்கையை நிரூபித்துக் காட்ட திராணியற்ற நிலையில், அந்தப் புரோகிதக் கொள்கையை (40:35) நியாயப்படுத்துவதற்காக, வருகின்ற ஈஸா நபியும் நபிப்பதவியை இழந்து விட்டுதான் வந்து நிற்பார் என்று நாக்கூசாமல் கூறுகின்ற நஜாத் பிரிவினரின் கொள்கை எவ்வளவு வழி கேடானது என்பதை முஸ்லிம்களில் பலர் புரிந்து கொண்டே வருகின்றனர் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். மௌலவி புரோகிதர்களைப் புறக்கணிக்காதவரை முஸ்லிம்களுக்கு எழுச்சியில்லை என மார்தட்டிப் பேசும் நஜாத் பிரிவினரும் ஈஸா நபி (அலை) அவர்கள் விஷயத்தில் மௌலவி புரோகிதர்களைத் தான் பின் பற்றுகின்றார்கள் என்பதை பெரும்பான்மையான முஸ்லிம்கள் தற்போது உணர்ந்து வருகின்றனர். எனவே வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஆகவும், மஹ்தி ஆகவும் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் கூற்று நிறைவேறும் நாள் நெருங்கிவிட்டது. அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

“இன்றிலிருந்து 300 ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்னாலேயே ஈஸா நபியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்களாகட்டும், கிறிஸ்தவர்களாகட்டும் அவர்கள் தமது இந்தப் பொய்யான கொள்கையை கைவிட்டு விடுவார்கள்.” (ரூஹானி கஸாயீன் 20 தொகுதி பக்கம் 67) 

முஸ்லிம்களில் – அதுவும் அபூ அப்தில்லாஹ்வின் ஒப்புதல் வாக்கு மூலப்படி ஒரு காலத்தில் அந்நஜாத் பிரிவில் ஒருத்தராக இருந்த ஒருவராகிய ( நஜாத் ஆகஸ்டு 2011 பக்கம் 21 பார்க்க) அப்துல் ஹமீது காதிர் போன்றோரும். ‘இறை தூதர் ஈஸா நபி (அலை) உயிருடன் உயர்த்தப்படவில்லை: யுக முடிவில் அவர் மீண்டும் இவ்வுலகிற்கு வரமாட்டார். அதற்க்கு குர்ஆன் ஆதாரம் இல்லை..... கிறிஸ்தவர்கள் ஜீஸசை கடவுள் என உயத்துதவற்கு இந்த அபத்தமான கதையை சந்தைப் படுத்தினார்கள் (பார்க்க அந்நஜாத் ஆகஸ்டு 11 பக்கம் 20) என்ற அளவிற்கு புரிந்து கொண்டார்கள் என்றால் இது ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் அன்று சொன்ன வார்த்தை நிறைவேறிவிட்டது என்பதையே நிரூபித்துக் காட்டி விட்டது!

அது மட்டுமல்லாது, அப்துல் ஹமீது காதிர் என்பவர், இஸ்லாத்தில் மிக அதிகமாக போற்றத்தக்க இறை தூதர்களில் ஒருவரான ஈஸா நபி (அலை) அவர்களை, அபூ அப்தில்லாஹ் ஓய்வு பெற்ற ஒரு மாவட்ட ஆட்சியருக்கு ஒப்பிட்டது (பார்க்க அந்நஜாத் மே 2011 பக்கம் 30) அவரது பகுத்தறிவில்லாத சிந்தனைக்கு இன்னுமொரு ஆதாரமாகும் எனவும் அந்நஜாத்தில் விமர்சித்து எழுதியிருப்பது அபூ அப்தில்லாஹ் பாணியில் சொல்லப்போனால், நெற்றிப் பொட்டில் ஓங்கி அறைந்துவிட்டது போல் இருக்கிறதே என்பதையும் நடுநிலையில் சிந்திப்பவர்கள் உணர்ந்துகொண்டனர். அல்ஹ்மதுலில்லாஹ். 

இதற்குப் பதிலளிக்க திராணியற்ற அபூ அப்தில்லாஹ், தமது சுய விளக்கத்தில் ஒரு காலத்தில் ஒரு மாவட்டத்திற்கு கலெக்டர் ஆகப் பதவி வகித்தவர், ஓய்வு பெற்ற பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அம்மாவட்டத்திற்கு வரும் போது கலெக்டர் என்று சொல்லலாம் எனச் சப்பைக் கட்டு கூறியிருக்கிறார். (அந்நஜாத் ஆகஸ்டு 2011 பக்கம் 32) 

பிற்காலத்தில் தோன்றும் ஈசா (அலை) அவர்களைப் பற்றி ஈசா நபியுல்லாஹ் (அல்லாஹ்வின் நபியாகிய ஈசா) என்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நான்கு முறை கூறியதாக சஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளதை நாம் எடுத்து வைத்திருக்கிறோம். 

ஆனால் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் இந்த பத்வாவை (மார்க்க தீர்ப்பை) ஏற்றுக் கொள்வதற்கு அபூ அப்தில்லாஹ் தயாரில்லை. மாறாக, அந்தப் பதவி ஒரு ஓய்வு பெற்ற முன்னாள் பதவியைப் போன்றதுதான் என்று ஒரு சுய விளக்கத்தைக் கூறினார். ஹதீஸில் இல்லாத இந்தச் சொந்தக் கைச் சரக்கை அபூ அப்தில்லாஹ் மற்றும் அவரை சார்ந்தோர் கைவிடாத வரை அவர்களும் புரோகித மௌலவிகளைச் சேர்ந்தவராகவே இருப்பார். இந்த வகையில் ‘மௌலவி புரோகிதர்கள் சட்ட விரோதமாக கொல்லைப் புற இடுக்கு வழியாக திருட்டுத்தனமாக புகுந்து கொண்ட திருடனினும் கேடு கெட்ட திருடர்கள்’ (பார்க்க: அந்நஜாத் ஆகஸ்டு 2011 பக்கம் 30) என்று கடுமையாக விமர்சித்து எழுதும் அதே கூட்டத்தில்தான் இவர்களும் இருக்கின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது. 

‘சுய கருத்தை, சுய விளக்கத்தை நாம் கொடுத்தால், அது கால் காசும் பெறாது: அதை அப்பட்டமான குப்பை தொட்டியில் எறியவேண்டியதுதான். (அந்நஜாத் ஆகஸ்டு 2011 பக்கம் 29 பார்க்க) அன்று அபூ அப்தில்லாஹ்வின் கூற்றுப்படியே முன்னால் நபி, ரிடையர்டு நபி போன்ற சுயவிளக்கத்தை குப்பைத் தொட்டியில் எறிவதுதான் ஹஸ்ரத் காத்தமுன்னபியீன் (ஸல்) அவர்கள் மீது பற்று கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய வேலையாகும் என்பதை நஜாத் பிரிவினர்களுக்கு நாம் நினைவூட்டிக் கொள்கிறோம். 

அடுத்து தவப்பீ என்ற சொல் திருக்குர்ஆனில் ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களைப் பற்றி இரண்டு இடங்களிலும் (3:56, 5:118) இவை அல்லாத இடங்களிலும் வந்திருப்பதையும் அதில் எந்தவோர் இடத்திலும் உடலோடு தூக்குதல் என்ற பொருள் இருப்பதாக நிரூபிக்கவே முடியாது என்பதையும் நாம் ஜூன் 2011 இல் விளக்கியிருந்தோம். இதே சொல் நபிமார்களில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்காக 3 இடங்களில் (10:47, 13:41, 40:78) ஹஸ்ரத் யூசுப் நபி (அலை) அவர்களுக்காக ஓரிடத்திலும் (12:102) அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதையும் அங்கெல்லாம் எங்கேயுமே உடலோடு உயர்த்துதல் என்ற பொருள் வரவே இல்லை; அந்த இடங்களிலெல்லாம் நஜாத் பிரிவினர்கூட உடலுடன் உயர்த்துதல் என்ற பொருளைத் தரவில்லை. நபி மொழிகளிலும் தவப்பீ என்ற இந்தச் சொல் உடலுடன் உயர்த்துதல் என்ற நஜாத் பிரிவின் பொருளில் எங்கேயும் வரவில்லை என்பது மட்டுமல்லாது, நாம் கொடுக்கின்ற பொருளாகிய மரணத்தைக் கொடுத்தல் என்ற பொருளில்தான் வந்துள்ளது என்பதையும் நாம் எடுத்து வைத்திருந்தோம். 

3:56 இல் வந்துள்ள முதவப்பீக்க என்பதற்கு முமீத்துக (உமக்கு மௌத்தைத் தருவேன்) என்ற பொருளையே ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கொடுத்திருப்பதையும் (புகாரி தமிழாக்கம் பாகம் 5 பக்கம் 273 காண்க) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும் தவப்பைத்தனி (5:117) என்பதற்கு நீ எனக்கு மரணத்தைத் தந்தபோது என்ற பொருளிலேயே பயன்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். (புகாரி, கிதாபுத் தப்ஸீர் தப்சீரில் 5:118 காண்க) நாம் விளக்கி எழுதியிருந்தோம். அவையெல்லாம் நஜாத் பிரிவினரின் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் உரைத்ததனால்தான் அவற்றிக்கு மறுப்பு ஏதும் எழுதத் துணிவில்லாது போயிற்று!

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும், ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கொடுத்திருக்கும் பொருளை எந்த முஸ்லிமாலும் மறுத்துக் கூற முடியாது. அதிலும் நஜாத் பிரிவினர் மறுத்துக் கூறினால். அல்ஹதீஸ் உங்களுக்கு விளங்காது; நாங்களே விளக்குகிறோம் என்று கூறும் மௌலவிகள் நபி (ஸல்) அவர்களை விட நாங்களே விளக்கும் ஆற்றல் மிக்கவர்கள் என அகந்தை பேசுபவர்களே!’ என அந்நஜாத் எழுதிவரும் குற்றச்சாட்டின் கீழ், தாமே வந்துவிடுவார். 

தவப்பா என்பதற்கு மரணிக்கச் செய்தல் என காதியானிகள் பொருள் கொடுப்பது தவறானது என்று அபூ அப்தில்லாஹ் குறிப்பிட்டுள்ளார் என்றால் எவ்வளவு பேதமைத்தனமானது! நம் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் இது காதியானிகள் கொடுத்த பொருளா? அல்லது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கொடுத்த பொருளா என்பதைக் கூட பிரித்தறியும் பக்குவத்தை இழந்துவிட்டாரா அபூ அப்தில்லாஹ்? கபூரூர் ரஹீமாகிய அல்லாஹ்தான் இவரை மன்னிக்க வேண்டும்!

உண்மையைத் தேடுபவர்களுக்கு நாம் மேலும் பல சான்றுகளைத் தருகிறோம்: 

தவப்பீ என்ற சொல் பொதுவான சொல் வழக்கிலும் மரணத்தைக் கொடுத்தல் என்ற பொருளிலேயே பயன் படுத்தப்படுகிறது. உதாரணமாக, ஜனாஸா துஆவில், ‘வமன் தவப்பைத்தஹு மின்ன பதவப்பாஹு அலல் ஈமான்’ (எங்களில் எவருக்கு நீ மரணத்தைக் கொடுக்கின்றாயோ அவரை நீ ஈமானில் மரணிக்கச் செய்வாயாக) 

ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்; பலம்மா தவப்பிய ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். (பொருள்: ஹஸ்ரத் ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மரணமடைந்த போது....... (முஹ்தா இமாம் மாலிக் தொகுதி 1 பக்கம் 121) 

ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் கேட்டார்கள்; யாபுனய்யத்து அய்யு யவ்மின் துவப்பியா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (பொருள்: என் அருமை மகளே! ஹஸ்ரத் ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் எந்த நாளில் மரணித்தார்கள்? (முஸ்னத் அஹ்மது பின் ஹம்பல் தொழுதி 6 பக்கம் 118) 

அல்லாமா ஸம்ஹஷ்ரீ கூறுகிறார்கள்: முதவப்பீக என்பதன் பொருள், இயற்கை மரணத்தை தருவேன் என்பதாகும்.” ( தப்ஸீர் கஷ்ஷாப் தொகுதி 1 பக்கம் 306) 

அல்லதீன யதவப்பாஹும் அய்யமூதூன வ யுக் பழு அர்வாஹுஹும். பொருள்: உங்களில் தவப்பா ஆகின்றவர்கள் – அதாவது மரணிக்கின்றவர்கள், அவர்களின் ரூஹ் கைப்பற்றப்படுகின்றது. (ரூஹுல் பயான் தொகுதி 1 பக்கம் 248) 

அல்லாஹ் எழுவாயாகவும் உயிருள்ள ஒன்று செயப்படுபொருளாகவும் இருக்கின்றபோது தவப்பி என்ற சொல் பயனிலையாக வந்தால் அதற்கு ரூஹை கைப்பற்றுதல் என்ற பொருளை தவிர உடலைக் கைப்பற்றுதல் என்றோ ஒரு போதும் பொருள் வராது. அவ்வாறு திருக்குர்ஆனிலிருந்தோ ஹதீஸிலிருந்தோ எந்தச் சான்றையும் காட்ட இயலாது என்ற சவாலை மீண்டும் நாம் நினைவு படுத்துகிறோம். 

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் மஹ்தியாகத் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் இன்னும் அழுத்தமாக இவ்வாறு கூறுகிறார்கள்: 

“ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நபித்தோழர்களும், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும் தவப்பி என்ற இந்த சொல்லை உயிருள்ள ஒன்றிக்காக பயன்படுத்தும் போது எந்தெந்த பொருள்களில் பயன்படுத்தி வந்தனர்? இந்தச் சொல் அந்த நேரத்தில் அன்றாட பழக்க வழக்கங்களில் பல பொருள்களில் பயன்படுத்தப்பட்டு வந்ததா? அல்லது ஆன்மாவை கைப்பற்றுதல், மரணம் என்ற ஒரே பொருளில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்ததா என்பதை தெரிந்துகொள்வதற்காக இந்த எளியவன் நபிமொழிகளின் பக்கம் திரும்பினேன். இந்த ஆய்வுக்காக எனக்கு அதிகமாக உழைக்க வேண்டியது ஏற்பட்டது. சஹீஹ் புகாரி, சஹீஹ் முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, அபூதாவூது, நஸாயீ, தாரமீ, முக்தா, ஷரகுஹுல் ஸுன்னா ஆகிய எல்லா ஹதீஸ் நூல்களையும் புரட்டிப் பார்த்தபோது எனக்கு தெரிய வந்தது என்னவென்றால், மிஷ்காத்தை சேர்த்து இந்த எல்லா ஹதீஸ் நூல்களிலும் 346 தடவை பல்வேறு இடங்களில் தவப்பி என்ற இந்தச் சொல் வந்துள்ளது. நான் கணக்கிட்டுப் பார்த்ததில் சில தவப்பி என்ற சொற்கள் விடுபட்டும் இருக்கலாம். ஆயினும் படிப்பதிலும், கண்ணில் படுவதிலும் என ஒரு சொல்லும் வெளியில் இல்லை. மேலும் தவப்பி என்ற அந்த சொற்கள் எந்த அளவுக்கு இந்த (ஹதீஸ்) நூல்களில் வந்துள்ளனவோ அவை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து வெளிப்பட்டவையாக இருந்தாலும் சரி, அல்லது எந்தவொரு நபித்தோழரின் வாயிலிருந்து வெளிப்பட்டவையாக இருந்தாலும் சரி அந்த எல்லா இடங்களிலும் அந்த சொற்கள் மௌத் (மரணம்) மற்றும் ரூஹைக் கைப்பற்றுதல் என்ற பொருளைத் தவிர வேறு எந்த பொருளிலும் வரவில்லை.......எனவே வழிவழியாகக் கையாளப்பட்டு வரும் இதனை மறுக்கின்றவர், மரணம் மற்றும் ரூஹைக் கைப்பற்றுதல் என்ற பொருள் அல்லாத வேறு ஒரு பொருளில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து வெளிவந்துள்ளதாக நிரூபித்துக் காட்டுவது அவர் மீது பொறுப்பு ஆகும்.” (இஸாலேயே அவ்ஹாம் ரூஹானி கஸாயின் தொகுதி 3 பக்கம் 584) 

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் இந்தச் சவாலை இன்று வரை எந்த அல்லாமாவும், முப்தியும், மௌலவியும் நிரூபித்துக் காட்ட முன் வரவில்லை. மழைக்காக மத்ரஸாவையும் நாம் நெருங்கியதில்லைதான் என ஒப்புதல்வாக்குமூலம் கொடுத்த அபூ அப்தில்லாஹ்வாலும் இந்த சவாலை ஏற்க இயலவில்லை என்பதை புரிந்து கொண்டனர். 

Read more »

Jul 22, 2014

இயேசு வந்துவிட்டார் -1


அசன் அபூபக்கர்

இதோ வருகிறார்; அதோ வருகிறார் என்று இயேசுவின் அன்பர்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்குத் தொடர்ந்து கட்டியம் கூறிக் கொண்டிருப்பதை நாம் நன்கறிவோம். இன்று நேற்றல்ல; பல காலமாகவே இயேசு கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி வருவதை காண கிறிஸ்தவ உலகு மிகுந்த ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் காத்துக்கிடப்பது நமக்குத் தெரியும். 

இதே போன்றுதான் இயேசுவின் காலத்தில் யூத சமுதாயம், வானத்திலிருந்து இறங்கி வருகின்ற ஒருவருக்காக ஆவலோடு காத்திருந்தது: அவர்தான் மெசியா, வானத்திலிருந்து இறங்கி வந்து. பூமியில் தோன்றும் இந்த மெசியாதான் தங்களை ரோமானிய அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பார் என்றும், தங்களுக்கு ஒரு சுதந்திர நல்வாழ்வை வழங்குவார் என்றும் அவர்கள், காலங்காலமாக நம்பி வந்தனர். மேசிய என்ற சொல்லின் கிரேக்க மொழி வடிவம்தான் கிறிஸ்து ஆகும். ஆகவே அன்றைய யூத சமுதாய மக்கள் கிறிஸ்து என்ற ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வரக் காத்திருந்தார்கள் எனச் சுருங்கக் கூறலாம். 

இப்போது நாம் அவர்களின் மற்றொரு நம்பிக்கையையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். முன்னொரு காலத்தில் எலியா தீர்க்கதரிசி என்பவர் உயிருடன் வானத்திற்கு ஏறிச் சென்றுள்ளார்கள் என்பதும் அவர் மீண்டும் அதே உடலோடும் உயிரோடும் இப்பூவுலகிற்குத் திரும்பி வருவார் என்பதும் அந்த யூத மக்களின் நம்பிக்கையாகும். மேசியா என்ற கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி தங்களுக்கு மத்தியில் வந்து தோன்றுவதற்கு முன்னர், ஏற்கனவே வானத்திற்கு ஏறிச் சென்றிருந்த அதே எலியா தீர்க்கதரிசி அங்கிருந்து இறங்கி வந்து மேசியாவுக்காக அவரது வழியை ஆயத்தப் படுத்துவார் என்றும் யூத கோத்திரத்தினர் நம்பி வந்தனர். 

‘எலியா வருவார்’ என்ற தமது நீண்ட கால நம்பிக்கைக்கு ஆதாரமாக அவர்கள், பைபிள் பழைய ஏற்பாட்டில் உள்ள மல்கியா என்ற புத்தகத்தையே சுட்டிக்காட்டினார்கள். மல்கியாவில் எலியா தீர்க்கதரிசியின் இரண்டாம் வருகை குறித்து இவ்வாறு கூறப்பட்டுள்ளது: 

“இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.” (மல்கியா 4:5) 

இந்த எலியா, மேசியா தோன்றுவதற்கு முன்னர் வானத்திலிருந்து உயிருடன் இப்பூமிக்கு வந்து அதாவது பாலஸ்தீனத்துக்கு வந்து மேசியாவின் வருகைக்கான பாதையை ஆயத்தப் படுத்துவார் என்றும் அக்கால யூத மக்கள் நம்பி இருந்தனர். 

எனவே இயேசு பிரான் பாலஸ்தீனத்தில் அவதரித்து யூத மக்களுக்கு மத்தியில் போதித்து வந்த வேலையில் அவரை நோக்கி, நீர் கிறிஸ்து என்பது உண்மையானால் எலியா தீர்க்கதரிசி உமக்கு முன்னர் தோன்றியிருக்க வேண்டுமே..... அவர் எங்கே? என்று அவர்கள் தமது நியாயமான உண்மையான ஐயப்பாட்டை அவர் முன் எடுத்து வைத்தனர். 

அதற்கு மறுமொழியாக இயேசு கூறிய பதில் அறிய ஆவலாக உள்ளவர்களுக்கு மத்தேயு சுவிசேஷகர் என்ன கூறியுள்ளார் என்பதை இங்கு பார்ப்போம்: 

‘நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான் கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன்.’ (மத்தேயு 11:14-15) என்று அவர்களுக்கு மத்தியில் யோர்தான் நதிக்கரையில் ஞானஸ்நானம் வழங்கி வந்த யோவானைச் சுட்டிக் காட்டி நீங்கள் எதிர்பார்த்திருக்கும் எலியா ‘இவன்தான்’ என அடையாளம் காட்டினார். 

மேலும். ‘........... அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வர வேண்டும் என்று வேதபாரகர் சொல்கிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள், இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவது மெய்தான் ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்கிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷ குமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவானைக் குறித்து தங்களுக்குச் சொன்னார் என்று சீசர்கள் அப்பொழுது அறிந்து கொண்டனர்." (மத்தேயு 17:10) என்று இயேசு பிரான் சொல்லிக் காட்டியதன் மூலம் எலியா தமக்கு ‘முந்தி வந்து’ தோன்றிவிட்டார் என்பதையும் அவர் தமக்காகச் செய்ய வேண்டிய ‘எல்லாவற்றையும்’ சீர்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதையும் அப்பாமார யூதர்களுக்கு புரிய வைத்தார். இயேசு கிறிஸ்து தமது வாயால் தந்துள்ள இந்த விளக்கத்திலிருந்து ஒரு தீர்க்கதரிசியின் மறுஅவதாரம் அல்லது அவரது இரண்டாம் வருகை என்பது அவரைப் போன்ற இன்னொருவரின் வருகைதானே தவிர அவரே மீண்டும் வருவதல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது 

மற்றொரு நிகழ்வு மூலமும் ஒரு தீர்க்கதரிசியில் இரண்டாவது வருகை என்பதன் உண்மையான பொருள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். சகரியா தீர்க்கதரிசிக்கு யோவான் என்ற ஒரு மகன் பிறப்பான் என்னும் அறிவிப்பு தேவதூதன் மூலம் அவருக்கு அருளப்பட்டிருந்தது அந்த அருள்வாக்கிலிருந்து எலியா தீர்க்கதரிசியின் இரண்டாவது வருகை என்பது அதே எலியா தோன்றுவார் என்பதல்ல மாறாக யோவான் (ஞானஸ்நானன்) தோன்றியதால் நிறைவேறிவிட்டது என்பதை கீழ்க்கண்ட திருவசனங்கள் தெரிவிக்கின்றன.

கர்த்தருடைய தூதன் சகரியாவை நோக்கி, ‘............உன் மனைவியாகிய எலிசபத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக........’ அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான்..........’ என்று தீக்கதரிசனம் உரைத்தான். (லூக்கா 1:13-17) அதாவது சகரிய தீர்க்கதரிசிக்கு ஒரு மகன் பிறப்பான்; அந்த மகன் எலியா தீர்க்கதரிசியின் ஆவியும் பலமும் கொண்டவனாக இயேசுவுக்கு முன்னர் தோன்றுவான் என்பதையே இத்திரு வசனம் நமக்கு எடுத்துரைக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் எலியா தீர்க்க தரிசியின் இரண்டாம் வருகை என்பது அவரைப் போன்ற வேறொருவரால் அதாவது யோவான் (ஞானஸ்நானன்) இவ்வுலகில் தோன்றியதால் நிறைவேறிவிட்டது. 

மேற்கொண்ட பைபிள் திருவசனங்களிலிருந்து ஒரு தீர்க்கதரிசியின் இரண்டாம் வருகை என்றால் அதே பழைய தீர்க்கதரிசி இரண்டாவது தோன்றமாட்டார் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். மாறாக முன்னர் சென்ற அதே தீர்க்கதரிசியின் பண்புகலோடும் தத்துவத்தோடும் புதிதாக வேறொரு தீக்கதரிசி தோன்றுவார் என்றுமே நம் பொருள் கொள்ள வேண்டும் என்பதை மேற்சொன்ன திருவசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன. எனவே யூத மக்களுக்கு மத்தியில் ஏற்கனவே தோன்றி நற்போதனை செய்து மறைந்த இயேசு பெருமானின் இரண்டாவது வருகையும் இப்படித்தான் நிகழ வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதாவது இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றுவிட இயேசு பிரான் மீண்டும் இரண்டாவதாக இபூமிக்கு வருவாரென்றால், அதே பழைய இயேசு வரமாட்டார்; அவரது பண்புகளோடும், தத்துவத்தோடும் அவரைப் போன்ற வேறு ஒருவர் தோன்றுவார் என்பதுதான் அதற்குப் பொருளாகும். 

இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்ற ஒருவர் அல்லது இறந்து போன ஒரு மனிதன் மீண்டும் இவ்வுலகிற்கு வரமுடியாது என்பது இயற்கைச் சட்டமாகும். அதுவே இறைவன் வகுத்த விதியுமாகும். உண்மையிலேயே கிறிஸ்துவாகிய இயேசு சிலுவையில் உயிர் துறந்துவிட்டார் என்றால் அல்லது இவ்வுலகைத் துறந்து வானத்திற்கு ஏறிச் சென்றுவிட்டார் என்றால் அவர் மீண்டும் இவ்வுலகிற்கு உயிருடன் திரும்பி வர முடியாது என்பது எவராலும் மீற முடியாத ஒரு விதியாகும். அவ்வாறாயின் இயேசு பிரான் மீண்டும் இரண்டாவது இவ்வுலகிற்கு வருவார் என்று கூறும் பைபிள் தீர்க்கதரிசனங்களின் உண்மையான பொருள்தான் என்ன? என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அந்தக் கேள்விக்கும் விடை இருக்கிறது. 

இவ்வுலகைத் துறந்து வானத்திற்கு சென்ற தீர்க்கதரிசி ஒருவர், உயிரோடு வானத்திற்குச் சென்ற பின்னர், மீண்டும் இவ்வுலகிற்குத் திரும்ப வருவாரென்றால் இதைக் குறித்து பைபிளின் தீர்க்கதரிசனங்கள் என்ன கூறுகின்றன? என்பதை நாம் முதலில் கண்டறிய வேண்டும். அதன் பின்னர் அத்தீர்க்கதரிசனங்கள் எந்த வேதாகமத்தில் என்ன பொருள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும். அத்துடன் இவற்றைப் போன்ற முந்தைய தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறி உள்ளன என்பதையும் நாம் கண்டறிய வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் இயேசுவின் இரண்டாவது வரோகையைப் பற்றி தீர்க்கதரிசனத்தின் பொருளையும், அது எவ்வாறு நிறைவேறும் என்பதையும், பைபிள் அடிப்படையில் நாம் அறிந்து கொள்ளலாம். 

இவ்விடத்தில் நம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான மற்றொரு கருத்து உள்ளது அதாவது இயேசு பிரான் தம்மை எதிர்த்துக் கொடுமைகளுக்குள்ளாக்கிய யூதர்களை நோக்கி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதன்படி தேவனின் இராஜ்ஜியம் கொடிய உள்ளங்கொண்ட அந்த யூத சமுதாயாத்தை விட்டு நீக்கப்பட்டு வேறொரு சமுதாய மக்களிடம் வழங்கப்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இறைவனின் திட்டப்படி யூத மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த ‘தீர்க்கதரிசி’ என்ற இறையருள் (நபித்துவம்) இனி அந்த யூத கோத்திரத்தார்களிடமிருந்து பிடுங்கப்பட்டு அதற்குத் தகுதியான வேறொரு சமுதாயத்தாருக்கு வழங்கப்பட்டுவிடும். ஆகவே இயேசுவுக்குப் பிறகு யூத சமுதாயத்தில் தீர்க்கதரிசிகள் (நபிமார்கள்) தோன்றமாட்டார்கள். இதுவே இயேசு பிரான் விடுத்த எச்சரிக்கையின் நுட்பமான கருத்தாகும்.
Read more »

இந்த உம்மத்தில் ஈசா நபியின் வருகை நிகழ்ந்து விட்டது!


O.M முஸம்மில் அஹ்மது  

“ஈஸா நபியின் வருகை” எனும் தலைப்பில் மௌலவி P. ஜைனுல் ஆப்தீன் எழுதிய ஒரு கட்டுரை ஏகத்துவம் மார்ச் 2012 இதழில் வெளிவந்துள்ளது. அதில் “தஜ்ஜாலின் கொடுமை தலைவிரித்தாடும் போது ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகிற்கு இறங்கி வருவார் என்பது பத்து அடையாளங்களில் ஒன்றாகும் என எழுதியுள்ளார். ஆனால் அதற்கு எவ்விதச் சான்றையும் அவர் எடுத்து வைக்கவில்லை. 

இதை விட வேடிக்கையானது என்னவெனில். 1994-ஆம் ஆண்டு கோவையில் P.J யுடன் விவாதம் நடத்தியபோது பிற முஸ்லிம்களைப் போன்றே அப்போது JAQH எனும் பெயரில் இயங்கிய இவர்களும் ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து இறங்குவதாகத்தானே நம்புகிறார்கள் என நாம் கருதி, ஈஸா (அலை) அவர்கள் வானத்திற்கே செல்லவில்லை என்ற கருத்தை எடுத்துக் கூறியபோது அதை P.J மறுத்தவாறு, வானம், வானம் என நீங்கள் கூறுகிறீர்கள் நாங்கள் அந்த வார்த்தையைக் கூறவே இல்லை என பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். 

1994-ஆம் ஆண்டு விவாதத்தில் வானம் என்ற வார்த்தையை பகிரங்கமாக மறுத்த P.J ஏகத்துவம் மார்ச் 2012 பக்கம் 53 இல் ‘ஈஸா நபி வானிலிருந்து இவ்வுலகிற்கு இறங்கி வருவார் என முரண்பட்டு எழுதியிருக்கிறார். இவ்வாறு முரண்படுவது அவரது வாடிக்கையும் அதைக் கண்டு நாம் வேடிக்கை காண்பதும் புதுமையானது ஒன்றல்ல. ஆயினும் நடுநிலையுடன் சிந்திப்பவர்களுக்கு நாம் ஒன்றை கூறிக்கொள்வோம்: ஈஸா (அலை) அவர்கள் வானத்திற்கு சென்றதாக எந்த ஒரு ஹதீஸிலும் வராதபோது, அவர் வானத்திலிருந்து இறங்குவார் என நேரடிப் பொருளில் எப்படிக் கூறுகின்றீர்கள் என நாம் ஆலிம்களிடம் வினா கொடுத்த பிறகுதான் அவர்கள் தம் அறியாமையை ஒப்புக் கொள்ளும் கட்டாயத்திற்கு உள்ளாயினர். இதில் P.J யும் அடங்குவார். எனவேதான், கோவை விவாதத்தில் கூட ஈஸா நபி வானில் உயிருடன் இருக்கிறார் என்பதை அவரால் நிரூபிக்க முடியாமற்போனது மட்டுமின்றி, ‘வானம்’ என்ற வார்த்தையை பகிரங்கமாக வாபஸ் வாங்கும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டார். 

ஆனால் இப்போது அதே P.J ஈஸா நபி வானிலிருந்து இவ்வுலகிற்கு இறங்கி வருவார் என்ற முரண்பட்ட ஒரு செய்தியை ஏகத்துவ இதழில் எவ்வித ஆதாரமுமின்றி எழுதியுள்ளார். 

எந்த ஒரு சஹீஹான ஹதீஸிலும் ஈஸா(அலை) அவர்கள் வானத்திலிருந்து இறங்கி வருவார் என வரவில்லை! ஒரு வாதத்திற்காக நேரடியாக வானத்திலிருந்து இறங்கி வருதல் என பொருள் கொள்ளமுடியாது. ஏனெனில், இறங்குதல், இறக்குதல் என்ற இதே சொல்லை இறைவன் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் பயன்படுத்தி இருக்கிறான். அங்கே P.J உட்பட எவரும் நேரடியாக, வானிலிருந்து இறங்குதல், இறக்குதல் என்ற பொருளைக் கொடுக்கவில்லை. உதாரணமாக, 

கத் அன்ஸலல்லாஹு இலைக்கும் திக்ரன் ரஸுலன். நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு நினைவூட்டக் கூடிய இறைத்தூதரை இறக்கியுள்ளான். (65:11) 

இங்கு அல்லாஹ் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி ‘அல்லாஹ் இறக்கியுள்ளான்’ என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளான். ஆனால் அன்னார் (ஸல்) அவர்கள் வானத்திலிருந்து இறங்கி வந்தார்களா? இல்லையே! மாறாக, P.J உட்பட இந்த வசனத்திற்கு ‘அல்லாஹ்வின் வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதரை அனுப்பியுள்ளான் என்றே மொழி பெயர்த்துள்ளார். (P.J மொழியாக்கம் வசனம் 65:11 பக்கம்,826 காண்க ) 

2. வ அன்ஸல லக்கும் மினல் அன் ஆமி ஸமானியத்த அஸ்வாஜ். அவன் கால்நடைகளுள் எட்டு இணைகளை உங்களுக்கு இறக்கியுள்ளான். (39:7) இந்த வசனத்தில் அன்ஸல (இறக்கினான்) என்ற சொல் வந்தபோதிலும் கால்நடைகளை வானத்திலிருந்து இறங்கியதாக யாரும் பொருள் கொடுப்பதில்லை!

3. வ அன்ஸல்னல் ஹதீத. நாம் இரும்பை இறக்கியுள்ளோம். (57:26) 

இங்கேயும் P.J இரும்பு வானத்திலிருந்து இறங்குவதில்லை என்பதை அறிந்து ‘இரும்பையும் அருளினோம்’ என உஷாராக மொழிபெயர்த்துள்ளார். (P.J. மொழியாக்கம் பக்கம் 799 காண்க). இங்கு உஷாராக இருக்கும் அவர் இதே சொல் ஈஸா (அலை) அவர்களுக்காக வரும்போது மட்டும் நேரடிப்பொருளைத்தான் கொடுக்க வேண்டும் என கராராக இருக்கிறார்!

4. கத் அன்ஸல்னா அலைக்கும் லிபாஸன் என அல்லாஹ் கூறுகிறான். அதாவது நாம் உங்களுக்கு ஆடையை இறக்கினோம் என்பது இதன் நேரடிப் பொருளாகும். ஆனால் ஆடையை உங்களுக்கு ‘அருளினோம்’ என P.J தமிழாக்கம் செய்துள்ளார். (வசனம் 7:26 பக்கம் 242) 

ஆக, திருக்குர்ஆனில் அல்லாஹ் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் கால்நடைகளைப் பற்றியும், இரும்பைப் பற்றியும், ஆடையைப் பற்றியும் ‘இறக்கினோம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளான். அவ்வனைத்து இடங்களிலும் எல்லா முஸ்லிம்களும் அஹ்மதி முஸ்லிம்களைப் போன்றே வழங்குதல், அனுப்புதல், அருளுதல் என்ற பொருளையே கொடுத்துள்ளனர். இதில் நமக்கும் பிற முஸ்லிம்களுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அப்படியிருக்கும்போது, இதே சொல் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களுக்காக வரும்போது மட்டும் வானத்திலிருந்து இறங்குவார் என்று நேரடியான பொருளைத்தான் கொடுக்க வேண்டும் என அடம்பிடிக்கின்றனர். இதிலிருந்து இவர்கள் நுஸுல் (இறங்குதல்) என்பதன் உண்மையான பொருளைப் புரிந்து கொண்டே ஈஸா நபி விஷயத்தில் மட்டும் சொந்த கைச்சரக்கைத் திணிக்கப் பார்க்கின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். 

ஹதீஸில் ஈஸாவைப் பற்றி நஸல (இறங்குவார்) என்ற சொல் தானே வருகிறது என்ற ஐயத்திற்கு மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களிலேயே நமக்கு தெளிவு கிடைத்துவிட்டது. எனினும் ஹதீஸிலும் இதே சொல் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கான இரு உதாரணங்களை கீழே தருகின்றோம்: 

1. அன்னன் நபிய்ய ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம நஸல தஹ்த்த ஷஜரத்தன். அதாவது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் ஒரு மரத்தடியில் இறங்கினார்கள். (கன்ஸுல் உம்மால் தொகுதி 7 பக்கம் 59) 

2. கான இஸா நஸல மன்ஸிலன் பீ ஸபரின் லம் யர்த்தஹில் ஹத்தா யுஸல்லீ பீஹீ ரக்அதைனி, அதாவது, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் தங்கிய பிறகு இரண்டு ரக்ஆத் தொழுதுவிட்டு பயணம் மேற்கொள்வார்கள். (கன்ஸுல் உம்மால் தொகுதி 4 பக்கம் 19) 

ஹதீஸில் ஈஸாவுக்கு வந்துள்ள நுஸுல் என்ற சொல்தான் இந்த ஹதீஸுகளில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்காகவும் வந்துள்ளது. இங்கெல்லாம் முஸ்லிம்களில் எந்தப் பிரிவினரும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் வானிலிருந்து இறங்கினார்கள் எனப் பொருள் கொடுப்பதில்லை. இதே சொல் வழக்கு ஈஸா நபிக்காக வரும்போது மட்டும் அதற்கு நேரடிப் பொருள்தான் கொடுக்க ஆலிம்கள் துடிப்பதைக் காணும்போதுதான் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அதிக நேசம் கொண்டுள்ள நாம் துடிதுடித்துப் போகிறோம். 

‘இப்னு மர்யம் உங்களிடத்தில் இறங்கும்போது’ என ஹதீஸில் வந்துள்ளதென்றால் அதே மாதிரிதான் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி இறக்கினோம் என அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான். ஈசாவுக்கு நேரடிப் பொருள் கொடுக்க வேண்டும் என அடம்பிடிப்பவர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கும் அதே பொருளைத் தர வேண்டும். தருவார்களா? தந்ததில்லை: தருவதுமில்லை: தரவும் மாட்டார்கள். அப்படியானால் ஈஸாவுக்கு வரும்போது மட்டும் நேரடிப் பருளைத் தர முற்படுவது நியாயமானதல்ல என்பதை ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் மீது அன்பு கொண்டவர்களால் புரிந்து கொள்வது ஒன்றும் கடினமானதல்ல. இவர்களின் இச்செயல் ‘உண்மையிலேயே இது முறையற்ற பங்கீடாகும்’ (53:23) என்ற இறை வசனத்தையே நமக்கு நினைவூட்டுகிறது!

அடுத்து, ஈஸா நபியவர்கள் இறுதிக் காலத்தில் வரும்போது இறை தூதராக வர மாட்டார். எனவும் P.J குறிப்பிட்டுள்ளார். (ஏகத்துவம் மார்ச் 2012 பக்கம் 64) 

இதுவும் அப்பட்டமான பொய்யும், இட்டுக்கட்டும் ஆகும், இறை தூதராக வர மாட்டார் எனப் பொருள்படும் ஹதீஸின் அரபிச் சொல்லை இதுவரை எந்த ஆலிமும் எடுத்துக் காட்டவில்லை. P.J க்கும் நாம் சவாலாக விடுக்கிறோம். ‘இறை தூதராக வரமாட்டார்’ என நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸ் எதில் இடம் பெற்றிருக்கிறது? அதன் அரபி வாசகம் என்ன? என்பதைக் காட்டத் தயாரா? இவர்களால் காட்டமுடியாது என்பதற்கு கடந்த காலமே சான்று. 

ஆனால் நடுநிலையாக சிந்திக்கும் வாசகர்களுக்கு நாம் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்கிறோம்: இந்த ஆலிம்கள் கூறுவதற்கு நேர்மாறாக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தோன்றவிருக்கும் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி, நபியுல்லாஹி ஈஸா (அல்லாஹ்வின் நபியாகிய ஈஸா) என ஒரு முறை அல்ல: நான்கு முறை குறிப்பிட்டுள்ளார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் பாகம் 4 பக்கம் 878-882 ஹதீஸ் எண்: 5629காண்க) இந்த ஹதீஸை P.J யும் ஸஹீஹானது என ஒப்புக்கொண்டவாறு தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். (ஏகத்துவம் மார்ச் 2012 பக்கம்55) 

ஆனால் அதற்கு முரண்பட்டவாறு ‘நபியாக வர மாட்டார்’ என ஏகத்துவம் பக்கம் 54 இல் எழுதியிருக்கிறார். இதிலிருந்து அவர் குழம்பிப் போயிருக்கிறார்: ஒரு நிலைப்பாட்டில் இல்லை. அல்லது தெரிந்து கொண்ட மக்களைக் குழப்ப முயற்சிக்கிறார் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். அதே சமயத்தில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் நபியாகிய ஈஸா எனக் கூறிவிட்ட பிறகு இதில் இரண்டாம் கருத்து கொள்வதற்கோ, இரண்டாம் கருத்து கொடுப்பதற்கோ இங்கு இடமேயில்லை. 

அது மட்டுமின்றி, ஈஸா நபிக்கு அல்லாஹ் வஹி அறிவிப்பான் என்ற ஸஹீஹ் முஸ்லிமில் வருகின்ற நபிமொழியையும் P.J குறிப்பிட்டுள்ளார். (ஏகத்துவம் பக்கம் 55) 

வஹி அறிவிப்பான் என்ற அரபிச் சொல்லைத்தான் P.J ‘அல்லாஹ் செய்தி அனுப்புவான்’ என மொழிபெயர்த்துள்ளார். ஆக, இந்த நபிமொழியிலிருந்து வஹி வருவது நின்று விட்டது என்ற முஸ்லிம்களின் தவறான நம்பிக்கையும் அடிபட்டுப் போகின்றது. இந்த உம்மத்தில் தோன்றும் ஈஸாவுக்கு அல்லாஹ் வஹி அறிவிப்பான் என மேற்கண்ட ஹதீஸின் மூலம் விளங்கிக் கொள்கிறோம். 

அடுத்து, ஈஸப்னு மர்யம் முஸ்லிம் உம்மத்தில் தோன்றுவார் எனும் பொருள் பட ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நமக்கு இவ்வாறு கூறியிருக்கிறார்கள்: 

கய்ப அன்த்தும் இஸா நஸலப்னு மர்யம் பீக்கும் வ இமாமுக்கும் மின்க்கும். அதாவது (முஸ்லிம்களே!) இப்னு மர்யம் உங்கள் மத்தியில் தோன்றும் போது உங்கள் நிலை எவ்வாறு இருக்கும்? மேலும் அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாமாக இருப்பார். (புகாரி பாகம் 4 பக்கம் 145 ஹதீஸ் எண்: 3449) 

இந்த நபிமொழிக்கு P.J. இவ்வாறு தவறான பொருள் கொடுக்க முனைந்துள்ளார்: 

“உங்கள் இமாம் உங்களைச் சேர்ந்தவராக இருக்கும்போது, ஈஸா நபியவர்கள் இறங்குவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஏகத்துவம் பக்கம் 54) 

இந்த நபிமொழியில் இரண்டு வாக்கியங்கள் அமைந்துள்ளன. ஒன்று கய்ப அன்த்தும் இஸா நஸலப்னு மர்யம் பீக்கும் என்பது. அடுத்து வாவு (மேலும்) வந்துள்ளது. பிறகும் இமாமுக்கும் மின்கும் என வந்துள்ளது. 

அரபி மொழியில் வாவு மூன்று வகையில் பயன்படுத்தப்படுகின்றது: 1. வாவு அத்ப் (மேலும் என்ற பொருளில்) 2. வாவு கஸ்மிய்யா (சத்தியமாக என்ற பொருளில்) 3. வாவு ஹாலிய்யா (நிலையை விளக்குவதற்கு வருவது.) 

இங்கே P.J நிலையை விளக்குவதற்காக வந்த ‘வாவு’ என தவறான பொருளைக் கொடுக்க முனைத்துள்ளார். எனவே. ஈஸா நபி வேறு; இமாம் வேறு என்று அவர் தவறாக புரிந்து வைத்துள்ளதற்கேற்ப, உங்கள் இமாம் உங்களை சார்ந்தவராக இருக்கும்போது (இருக்கும் நிலையில்) ஈஸா மேலிருந்து இறங்கி வருவார் என தவறாகப் பொருள் கொடுத்துள்ளார். அதாவது இமாம் மஹ்தி உங்கள் மத்தியில் இருக்கும்போது, ஈஸா வானிலிருந்து இறங்குவார் என்ற தவறான பொருளைக் கொடுத்துள்ளார். ஆனால் இங்கு வந்துள்ள ‘வாவு’ அத்ப் எனும் வாவாகத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி (முஸ்லிம்களே!) இப்னு மர்யம் உங்கள் மத்தியில் தோன்றும் போது உங்களின் நிலை எவ்வாறு இருக்கும்? மேலும் அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாமாக இருப்பார் என்றே பொருள்படும். அதாவது இந்த உம்மத்தில் தோன்றும் இப்னு மர்யமும், இமாமும் ஒருவர்தான்; இரு வேறுபட்டவர்கள் அல்ல என்பதை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். 

இதனை நாம் அனுமானமாகக் கூறவில்லை. ஸஹீஹ் முஸ்லிமில் வரும் ஹதீஸ் நமது கருத்துக்கு வலுவூட்டுவதாக இருக்கிறது. அதில் இவ்வாறு வருகின்றது:

கய்ப அன்த்தும் இஸா நஸல பீக்குமுப்னு மர்யம் பஅம்மக்கும் மின்க்கும். பொருள்: (முஸ்லிம்களே!) உங்களுக்கு மத்தியில் ஈசப்னு மர்யம் தோன்றும் போது உங்களின் நிலை எப்படி இருக்கும்? அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாமத் செய்வார் என ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம்:185 ஹதீஸ் எண்:246) 

இங்கு நஸல (தோன்றும்போது) என்ற வினைச் சொல்லையும், அம்ம (இமாமத் செய்வார்) என்ற வினைச்சொல்லையும் ஒரே எழுவாயுடன் சேர்த்து ஹசரத் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அது ஈஸப்னு மர்யம் என்பதுதான், எனவே முஸ்லிம்களே! உங்களிலிருந்து தோன்றும் ஈஸப்னு மர்யம்தான் இமாமாக இருப்பார் என்ற கருத்து நமது சுய கருத்து அல்ல. மாறாக, இது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நமக்கு விளக்கித் தந்த கருத்தாகும்!

இந்தக் கருத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் கீழ் வரும் நபிமொழியும் இருக்கின்றது: 

“உங்களில் எவர் உயிருடன் இருப்பாரோ அவர் ஈசப்னு மர்யமை இமாம் மஹ்தியாகவும், தீர்ப்பளிப்பவராகவும், நீதி வழங்குபவராகவும் சந்திப்பார்.” (முஸ்னத் அஹ்மதிப்னு ஹம்பல் தொகுதி 2 பக்கம் 411) 

இந்த ஹதீஸில் இன்பு மர்யம்தான் இமாம் மஹ்தி (நேர்வழி காட்டப்பட்ட மஹ்தி) ஆகவும், ஹகம் (தீர்ப்பளிப்பவர்) ஆகவும், அத்ல்(நீதி வழங்குபவர்) ஆகவும் இருப்பார் என்பதை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கி விட்டார்கள். 

ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள இதே கருத்தை தெளிவு படுத்தியவாறு வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஆகவும், இமாம் மஹ்தி ஆகவும் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கீழ் வருமாறு கூறுகின்றார்கள்: 

“வரக் கூடிய இந்த (ஈஸா) மஸீஹ் என்பது உண்மையிலேயே முன்னர் வந்த அதே மஸீஹ் ஆகவே இருப்பார் என இமாம் முஹம்மது இஸ்மாயீல் புகாரி அவர்கள் சைகையாகக் கூட கூறவில்லை! இன்னும் சொல்லப்போனால் அவர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு ஹதீஸுகளை எடுத்து எழுதியுள்ளார்கள். அவை முதல் மஸீஹ் வேறு: இரண்டாவது மஸீஹ் வேறு எனத் தீர்ப்பளித்து விட்டன. ஏனெனில், ஒரு ஹதீஸின் கருத்து, இப்னு மர்யம் உங்களிலிருந்து தோன்றுவார் என்பதாகும். மேலும் தெளிவுபடுத்தியவாறு, ‘அவர் உங்களிலிருந்து தோன்றும் உங்களின் ஓர் இமாம் ஆக இருப்பார்’ என விளக்கிக் கூறியவாறு தெளிவு படுத்திவிட்டார்கள்........

ஆக, மர்யமின் மகன் என்ற சொல்லினால் மனதில் தோன்றுவதற்கு சாத்தியமாக இருந்த கருத்தை நீக்குவதற்காக இந்த சொற்களுக்குப் பிறகு, ‘உண்மையிலேயே மர்யமின் மகன் எனக் கருதிக் கொள்ளாதீர்கள்; பல் ஹுவ இமாமுக்கும் மின்க்கும் (மாறாக, அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாமாக இருப்பார்)’ என விளக்கவுரையாகக் குறிப்பிட்டுவிட்டார்கள்.” (இஸாலே அவ்ஹாம், ரூஹானி கஸாயின் தொகுதி 3பக்கம்: 124) 

தொடர்ந்து கூறுகிறார்கள்: 

“மேலும் இரண்டு ஈசாவும் வெவ்வேறானவர்கள் எனபதைத் தீர்மானிக்கும் இன்னொரு ஹதீஸ், முதல் மஸீஹின் உருவ அடையாளங்களை வேறு வகையிலும், இரண்டாம் மஸீஹின் உருவ அடையாளங்களை வேறு வகையிலும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.” (இஸாலே அவ்ஹாம் ரூஹானி கஸாயின் தொகுதி 3 பக்கம் 124) 

ஆம்! ஹதீஸில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இரு வேறுபட்ட ஈசாவைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். இதை ஆலிம்கள் மறைத்து விடுகின்றனர். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மூஸா(அலை) அவர்களின் சமுதாயத்தில் தோன்றிய ஈசா (அலை) அவர்களைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்: 

“நான் ஈஸா (அலை), மூஸா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டேன். ஈஸா (அலை) அவர்கள் சிவந்த நிறமுடையவர்களாகவும், சுருண்ட முடியுடையவர்களாகவும், அகன்ற நெஞ்சுடையவர்களாகவும் இருந்தார்கள். மூஸா(அலை) அவர்களோ கோதுமை நிறமும், பருமனான உடலும், நீளமான தலை முடியுடையவர்களாகவும் இருந்தார்கள்.” (புகாரி பாகம் 2 பக்கம் 1375-புதிய பதிப்பு ஹதீஸ் எண்:3438) 

இந்த ஹதீஸில் மூஸா (அலை) அவர்களுடன் ஈசா (அலை) அவர்களைப் பற்றி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இணைத்துக் கூறியதிலிருந்து அது இஸ்ரவேல் மக்கள் மத்தியில் தோன்றிய ஈஸா(அலை) அவர்களின் அங்க அடையாளங்கள் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். அதே சமயத்தில் பிற்காலத்தில் இந்த உம்மத்தில் தொன்றவிருந்த ஈஸப்னு மர்யமின் அங்க அடையாளங்களைப் பற்றிக் கூறும்போது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு வேறுபடுத்திக் கூறியிருக்கிறார்கள். 

ஒருமுறை நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது கனவில் காபாவை வளம் வருவதாகக் கண்டேன். அப்போது ஒருவர் தோன்றினார். அவர் கோதுமை நிறமும், நீளமான தலை முடியுடையவராகவும் இருந்தார்...........இவர் யார்? என நான் கேட்டபோது, இவர் இப்னு மர்யம் எனக் கூறப்பட்டது. (புஹாரி கிதாபுல் பிதன் பாகம் 2 பக்கம் 1376 புதிய பதிப்பு ஹதீஸ் எண் 3440 மற்றும் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 210 ஹதீஸ் எண்:277) 

இரண்டு மஸீஹுகளை வெவ்வேறான உருவத்திலேயே ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆக, பெயர் ஒன்றாக இருந்தாலும் அவ்விருவரும் வெவ்வேறானவர்கள் என்பதை இதன் மூலம் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நமக்கு உணர்த்தி விட்டார்கள். 

முதலில் கூறப்பட்ட ஹதீஸில் ஈஸா நபியை மூஸா நபியுடன் சேர்த்துக் கூறப்பட்டுள்ளதிலிருந்து அவர் மூஸா வின் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். இரண்டாவதாகக் கூறப்பட்ட ஹதீஸில் தஜ்ஜாலின் குழப்பம் மிகுந்த காலத்தில் தோன்றுவதாகக் கூறப்பட்டதிலிருந்து அவர் பிற்காலத்தில் இந்த உம்மத்தில் தோன்றும் மஸீஹ் என்பதையும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் குறிப்பால் உணர்த்திவிட்டார்கள். 

அடுத்து ஈஸா(அலை) அவர்களின் பணிகளைப் பற்றி புகாரி 2476, 3448, 3449 ஆகிய நபிமொழிகளில் வருகின்ற முன்னறிவிப்புகளுக்கும் வழக்கம் போல் எல்லா மௌலவிகளும் பொருள் கொடுப்பதைப் போன்றே பி.ஜே யும் பொருள் கொடுத்து தமது அறியாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.! உதாரணமாக, அவர் சிலுவையை முறிப்பார்: பன்றியைக் கொள்வார்: ஜிஸ்யா வரியை நீக்குவார்: வாங்குவதற்கு யாரும் இல்லாத அளவுக்கு செல்வம் கொழிக்கும் என்ற ஹதீஸைக் குறிப்பிட்டு இவற்றிற்கெல்லாம் நேரடியான பொருளை கொடுத்துள்ளார். 

இவ்வாறு நேரடி பொருள் கொடுத்தல் இந்த ஹதீஸுகள் அனைத்தும் அனர்த்தமாகிவிடும். மார்க்கத்தில் எவ்வித பலவந்தமும் இல்லை என்ற வசனம் திருக்குர்ஆனில் இருக்கும்போது அவர் எப்படி சிலுவையை முறிப்பர்? அது பலவந்தமாகாதா? அப்படியே அவர் சிலுவைகளை முறிக்கும் பணியில் அவர் ஈடுபட்டாலும் கிறிஸ்தவர்களால் மீண்டும் சிலுவைகளை உருவாக்கிக் கொள்ள முடியாதா என்ன? அவ்வாறே பன்றிகளைக் கொல்லுதல் என்பது ஒரு நபியின் கண்ணியத்திற்கு இணக்கமான செயலா என்ன? உலகத்திலுள்ள பன்றிகளை கொல்வதற்கே அவருக்கு நேரம் போதாத போது பிற மார்க்கப் பணிகளை செய்ய அவருக்கு எங்கிருந்து நேரம் இருக்கும்? ஆதமின் மகனின் பேராசையைப் பற்றிக் குறிப்பிட்ட நபி (ஸல்) அவர்கள், மனிதனின் பேராசையை மண்ணறையின் மண்தான் நிறைவேற்ற முடியும் எனக் கூறியிருக்கும் போது ‘வரவிருக்கும் மஸீஹ் செல்வத்தை வாரி வழங்குவார்; அதனை எவரும் வாங்க மாட்டார்’ என்ற இந்த ஹதீஸ் அதற்கு முரண்படுகிறதே? இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது இதற்கு நேரடியானப் பொருள் கொள்ள முடியாது; இவை உவமையாகக் கூறப்பட்டவை என்பதை சாதாரண முஸ்லிமாலும் புரிந்து கொள்ள முடியும். இதற்கு விளக்கமளித்தவாறு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கூறுகிறார்கள்: 

“இரண்டாவது சிறப்பு அடையாளம் என்னவெனில், வாக்களிக்கப்பட்ட மஸீஹ் வரும் போது சிலுவையை முறிப்பார்: பன்றியைக் கொல்வார். ஒற்றைக் கண் தஜ்ஜாலைக் கொல்வார்; எந்த காபிர் வரை அவருடைய மூச்சுக் காற்று சென்றடையுமோ அவர் உடனே மரணித்துவிடுவார் என்பதாகும். எனவே இந்த அடையாளத்திற்கு ஆன்மீகமாகக் கொள்ளப்பட்ட உண்மையான கருத்து என்னவென்றால், மஸீஹ் உலகில் வந்து சிலுவை மதத்தின் மதிப்பையும், கண்ணியத்தையும் தமது கால்களில் கீழ் போட்டு நசுக்கிவிடுவர். மேலும் எவர்களிடம் பன்றியின் வெட்கம்கெட்ட தன்மையும், அசுத்தத்தைத் தின்னும் பழக்கமும் இருக்கிறதோ அவர்களின் மீது மிகக் கூர்மையான சான்றுகள் எனும் வாள்களை பயன்படுத்தி அவர்கள் அனைவரின் வேலைகளையும் முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவார்.”(இஸாலே அவ்ஹாம் ரூஹானி கஸாயின் தொகுதி 3 பக்கம் 142)
Read more »

Jul 8, 2014

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பின்பற்றுபவர்களுக்கு கிடைக்கும் இறையருட்கள்.


“எவர் அல்லாஹ்வையும், அவனது ரெஸுலையும் (நபி (ஸல்) அவர்களையும்) முழுமையாகப் பின்பற்றுவார்களோ, அவர்கள் அல்லாஹ்வின் அருள்பெற்றவர்களான நபிமார்கள், ஸித்திக்குகள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள்; இவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். இது அல்லாஹ் விடமிருந்து வரும் அருளாகும். அல்லாஹ் எல்லாம் அறிந்தவனாக இருக்கின்றன.” (4:70,71) 

முஸ்லிம்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இறையருட்கள் இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சூரா பாத்திகாவில் வந்துள்ள அதே சொற்கள் அதாவது சிராத்தே முஸ்தகீம் (நேரான வழியைக்) காட்டுதல், நேரான வழியும் இறையருட்களைப் பெற்றவர்களின் நேரான வழியாகும். மேலும் இறையருட்களைப் பெற்றவர்கள் என்பதையும் விளக்கிக் கூறிவிட்டது. அதாவது நபி, சித்தீக், ஷஹீது, ஸாலிஹ் ஆகியோர். சூரா பாத்திகாவில் எத்தகைய மேலான அருட்கொடைகளை வேண்டுமாறு முகம்மதியா உம்மத்திற்கு கட்டளையிடப்பட்டுள்ளதோ மார்க்க அளவில் அதன் கருத்து, உயர்ந்த ஆன்மீகப் பதவிகளாகும். அவைகளனைத்தும் முஸ்லிம்களுக்கு கிடைக்கும் என அல்லாஹ் கூறுகிறான் என்பது இதிலிருந்து தெரிகிறது. 

சிலர் இந்தத் திருவசனத்திற்குப் பொருள் கூறும்போது ‘அவர்கள் (அல்லாஹ்வையும், திருத்தூதரையும் பின்பற்றுபவர்கள்) அருள் பெற்றவர்களோடு இருப்பார்கள்; அருள் பெற்றவர்களாக இருக்கமாட்டார்கள். என்று கூறுகின்றனர். அல்லாஹ்வையும், பெருமானார் (ஸல்) அவர்களையும் முழுமையாகவும் பின்பற்றுபவர்களைப் பற்றிய அல்லாஹ்வின் இந்த அறிவிப்பு சாதாரணமான ஒன்றல்ல. இதற்கு முன்னர் அல்லாஹ்வையும் ஹஸ்ரத் மூஸா (அலை) அல்லது ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) அல்லது ஹஸ்ரத் தாவூத் (அலை) போன்ற நபிமார்களையும் பின்பற்றுபவர்களைப் பற்றிய அறிவிப்பு இருந்தது. ஆனால் இப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுபவர்களைப் பற்றிக் கூறப்படுகிறது. எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தோன்றிய நபிமார்களை பின்பற்றியவர்களிடம் இறைவன் ‘நீங்கள் எவ்வாறு செய்தாலும் உங்களுக்கு இறையருள் கிடைக்காது. மாறாக இறையருள் பெற்றவர்களோடு இருப்பதற்குரிய தகுதியை மட்டும்தான் பெறுவீர்கள்! என்று அல்லாஹ் கூறியதுண்டா? இல்லையே? அவ்வாறிருக்கும்போது இந்த ஆயத்திற்கு மட்டும் ஏன் இப்படிப் பொருள் கொள்கிறீர்கள்? எப்படிப்பட்ட அநியாயமான பொருள் கொடுக்கப்படுகிறது. இது பெருமானார் (ஸல்) அவர்கள் மீதும் திருக்குர்ஆன் மீதும் சுமத்தப்படும் அபாண்டமான குற்றச்சாட்டாகும். இது எம்பெருமானார் (ஸல்) அவர்களின் கௌரவத்திற்கு ஏற்படுத்தும் களங்கமாகும். 

எல்லா நபிமார்களை விடச் சிறந்தவரும், மகத்துவமிக்கவரும், எல்லா அருட்களின் உரைவிடமுமாகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றினாலும், அவர்கள் இறைவனுடைய அருள் பெற்றவர்களாக ஆகமாட்டார்கள்; அவர்கள் அருள் பெற்றவர்களோடு வைக்கப்படுவார்கள் என்று விளக்கம் கூறுவது எந்த அளவுக்குப் பொய்யானதும் உண்மைக்கு மாறானதுமான ஒரு கருத்தாகும். இங்கு பயன் படுத்தப்பட்டிருக்கும் மஅ என்ற சொல்லுக்குத்தான் இப்படி தவறான பொருள் கொடுக்கப்படுகிறது. இதனை திருக்குர்ஆன் கண்டிக்கிறது. 

திருக்குர்ஆனில் ஓரிடத்தில் ‘வதவப்பன மஅல் அப்றார்’ ‘இறைவா! எங்களை நல்லடியார்களுடன் மரணிக்கச் செய்வாயாக!’ என வந்துள்ளது. இதற்கு ‘நல்லடியார்கள் மரணிக்கும் பொழுது அவர்களோடு சேர்த்து எங்களையும் மரணிக்க செய்வாயாக என்றா பொருள் கொள்ள முடியும்? எப்படியெல்லாம் நீங்கள் முகம்மதிய உம்மத்தை இழிவு படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்? இங்கு, எங்களை நல்லடியார்களாக – நல்லடியார்களைச் சேர்ந்தவர்களாக மரணிக்கச் செய்வாயாக!’ என்றுதான் பொருள் கொள்ள வேண்டுமேயொழிய நல்லடியார்களுடன் சேர்த்து எங்களையும் மரணமடையச் செய் என்று பொருள் கொள்ளக் கூடாது.

‘மஅ’ என்ற சொல்லைப் பன்மையோடு சேர்த்துப் பயன்படுத்தும் பொழுதும், ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களோடு சேர்த்துப் பயன்படுத்தும் பொழுதும் பொதுவாக, ‘மின்’ என்ற பொருள்தான் கொடுக்கப் படுகிறது. ஆனால் வேறு இனத்தைச் சேர்ந்தவர்களோடு ‘கூட’, ‘உடன்’ என்ற பொருள்வரும். உதாரணமாக, 

‘இன்னல்லாஹா மஅஸ்ஸாபிரீன்’ 

‘நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’ இங்கு அல்லாஹ்வும் மனிதனும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இல்லாத காரணத்தினால், ‘அல்லாஹ் பொறுமையுள்ளவர்களைச் சேர்ந்தவனாக இருக்கிறான்’ என்று பொருள் கொள்ளமுடியாது. ‘கழுதை சமுதாயத்துடன் வந்தது’ என்று கூறினால் கழுதை சமுதாயத்தை சேர்ந்தது என்று பொருளில்லை. ஏனென்றால் இரண்டும் தனித்தனி இனங்களாக இருக்கின்றன. 

ஆனால், ‘ஸைத் என்பவர் நல்லவர்களோடு இருக்கிறார்; ‘என்மீது நேசம் கொண்டவர்களுடன் நான் இருக்கிறேன்’ என்றால், ‘நான் அவர்களைச் சேர்ந்தவனாக இருக்கிறேன்’ என்றுதான் பொருள் இப்படிப்பட்ட இடங்களில் வரும் சொல்லுக்கு ‘மின்’ என்றுதான் பொருள் கொள்ளவேண்டும். 

திருக்குர்ஆனே இங்கு ‘மஅல்லதீன அன் அமல்லாஹு அலைஹிம்’ (அல்லாஹ்வின் அருள்பெற்றவர்களுடன்) என்று கூறியதற்குப் பிறகு அதற்க்கு விளக்கமாக, ‘மினன்னபியீன் ‘(நபிமார்களைச் சேர்ந்தவர்) என்று கூறியிருக்கிறது. இங்கு ஏன் ‘மா அன் நபிய்யீன்’ என்று கூறப்படவில்லை? எனவே ‘மஅ’ என்ற சொல்லுக்கு இங்கே ‘மின்’ என்றே பொருள் கொள்ள முடியும். 

இப்போது மஅ என்பதற்கு உடன் இருத்தல் என்ற பொருள் மட்டும்தானே தவிர அப்பிரிவினர்களைச் சேர்ந்தவர்களாக இருத்தல் என்பதல்ல என்றால், இந்த விளக்கத்தின் படி, முஸ்லிம்கள் நபியாக மாட்டார்கள், நபிமார்களுடன் இருப்பார்கள். சித்தீக்குகள் (உண்மையாளர்கள்) ஆக மாட்டார்கள். உண்மையாளர்களுடன் இருப்பார்கள். அவ்வாறே ஷஹீது (உயிர்த் தியாகிகள்) ஆக இருக்கமாட்டார்கள். ஆனால் உயிர் தியாகிகளுடன் இருப்பார்கள். மேலும் ஸாலிஹீன் (நல்லடியார்கள்) ஆக மாட்டார்கள். நல்லடியார்களுடன் இருப்பார்கள் என்று இந்த வசனத்திற்குப் பொருளாகிவிடும். இதை விட பெரும் தவறான பொருள் என்ன இருக்க முடியும்? இந்த உம்மத்தில் நபி போகட்டும், சித்தீக் (உண்மையாளர்)கள், ஷஹீது (உயிர்த் தியாஹி)கள், ஸாலிஹ் (நல்லடியார்)கள் கூட தோன்றமாட்டார்கள் என்பதைவிட முகம்மதியா உம்மத்திற்கு வேறு என்ன அவமானம் இருக்கமுடியும்?
Read more »

தமக்கு ஞானம் இல்லை என்றால் ஹதீஸை பலகீனப்படுத்துவதா!?


இஸ்லாத்தில் சில பெயர்தாங்கி ஆலிம் பெருமக்கள் எந்த ஹதீஸ் தமக்கு தோதுவாக இருக்கிறதோ, எதுக்கு மட்டும் தம்மால் விளக்கம் அளிக்க முடியுமோ அதை உறுதியான ஹதீஸ் என்று கூறுகின்றார்கள். அதே சமயம் எந்த ஹதீஸிற்கு தம்மால் விளக்கம் கொடுக்க முடிவதில்லையோ அதை மிக எளிதாக பலகீனப்படுத்தியும் விடுகின்றார்கள். இந்த வரிசையில் பல ஹதீஸ்கள் இவர்களின் பார்வையில் உள்ளன..அதனை இந்த ஆலிம்கள் தனது சுய நலனை கருதி லயீஃப் அதாவது இந்த ஹதீஸ் பலகீனமானது என்று ஃபத்வா கொடுத்துவிடுகின்றார்கள். அதில் ஒன்றை நாம் கீழே காண்போம்:

ஒரு ஹதீஸ் இவ்வாறு வருகின்றது: 

2321 முஹம்மத் பின் ஸியாத் அல் அல்ஹானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூ உமாமா அல் பாஹிலீ (ரலி) அவர்கள், ஒரு வீட்டில் ஏர்கலப்பை யையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், இந்தக் கருவி ஒரு சமுதாயத்தினரின் வீட்டில் புகும் போது அந்த சமுதாய வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸை சிலர் பலகீனமானது என்று கூறிவருகின்றனர். காரணம் இதற்குண்டான ஞானம் அவர்களுக்கு இல்லை. இதற்கு எவ்வாறு நாம் சுய விளக்கம் தருவது என்பதை அவர்களால் யூகித்து கூட பார்க்க முடியவில்லை. ஆகவேதான், இவ்வாறு தனது சுய சிந்தனைக்கு எட்டாத ஹதீஸ்களை இவர்கள் அந்த ஹதீஸ்கள் பலகீனமானது என்று ஃபத்வா கொடுத்து வருகின்றனர்.

இந்த ஹதீஸின் சனதிலும் எந்த பலகீனமும் இல்லை எனும் போதும், குர்ஆனிற்கு முரண்படுகிறதா என்று பார்த்தாலும் இல்லை. அது பலகீனமானது இல்லை எனும் போதும் இவர்கள் எந்த வகையில் பலகீனமானது என்று கூறுகின்றார்கள். ஆம் சிலர் ஒரு சில ஹதீஸ்களை வைத்து அதாவது ரசூல் (ஸல்) அவர்கள் விவசாயத்தை ஆதரித்து பல ஹதீஸ்கள் கூறியுள்ளார்கள் , அந்த ஹதீஸ்களெல்லாம் இந்த ஹதீஸிற்கு முரண்படுகிறது என்று கூறி இதனை பலகீனபடுத்துகின்றனர். இவர்களின் இந்த அளவுகோல் மிகவும் வியப்பிக்குறியதே. இந்த ஹதீஸை இவர்கள் அளக்கும் அளவுகோல் தவறானதே. இந்த ஹதீஸ் அனைத்து ரீதியிலும் நம்ப தகுந்த ஹதீஸாகவே இருக்கின்றது. அப்படி என்றால் இந்த ஹதீஸிற்கான விளக்கம்தான் என்ன? என்ற கேள்விக்கான பதிலை கீழே பார்போம்:

இந்த ஹதீஸின் விளக்கம்:

இந்த ஹதீஸின் விளக்கம் என்னவென்றால், எந்த சமுதாயத்தில் இந்த விவசாய கருவிகள் இருந்து வருகிறதோ அதாவது தொடர்ந்து அவர்கள் விவசாயியாகவே இருந்து வருகின்றார்களோ அந்த சமுதாயம் வளர்ச்சி பெருவதில்லை, அவர்கள் ஆட்சி செய்யப்படுபவர்களால்  அடக்குமுறைக்கு ஆளாகிவிடுகின்றனர். ஒரு பக்கம் பலனின் அடிப்படையில் இந்த விவசாய வேலை அருளுக்குரியதாக இருக்கிறது. மறுபக்கம் தீய முடிவின் அடிப்படையில் கொடியதாக இருக்கிறது. ஹஸ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூற்றின் கருத்து என்னவென்றால், தற்போது வரை விவசாயிகள் அனைத்து நாட்டிலும் அங்குள்ள ஆட்சி அதிகாரிகளின் அடிமைக்குட்பட்டு இருந்து வருகின்றனர். விவாசியிகள் மீது செய்யும் கொடுமையின் காரணத்தினால்தான் கம்யூனிசம் தோன்றுவதற்கு காரணமாக இருந்தது. இதன் காரணமாக 1779 இல் ஃபிரான்ஸ் விவசாயிகள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்கள். இவர்கள் தாங்கள் பயிர் செய்த நிலத்தை பெறுவதற்காக ஆட்சி அதிகாரிகளுக்கெதிராக வாளை உபயோகித்தார்கள். இறுதி முடிவு அவர்களுக்கு நேர் எதிராகவே அமைந்தது. அவர்கள் விடுதலை பெரும் சூழ்நிலையை முழுவதுமாக இழந்துவிட்டார்கள். 

சில விரிவுரையாளர்கள் ரசூல் (ஸல்) அவர்களின் இந்த கூற்றுக்கு இவ்வாறு விளக்கம் அளித்துள்ளனர் அதாவது, " இரவும் பகலுமாக ஒரு சமுதாயம் விவசாயத்திலேயே மூழ்கிவிட்டாலோ மேலும் போர் கலை அறிவதிலிருந்து விலகியவர்களாக இருந்தாலோ இறுதியாக அவர்கள் (அந்த சமுதாயம்) அடக்குமுறைக்கு ஆளாகிவிடுகின்றனர். இவ்வாறு அவர்களுக்கு இழிவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றன. (ஃபத்ஹுல் பாரி பாகம் 5 பக்கம் 8)

ஆக இந்த ஹதீஸிற்கு இவ்வாறு விளக்கம் இருக்க, தனக்கு இந்த ஹதீஸிற்கு விளக்கம் தெரியவில்லையே என்ற ஒரே காரணத்திற்காக ஒரு சப்பை கட்டை கட்டி இதனை பலகீனப்படுத்துவது இவர்களின் சுய நலனையே காட்டுகிறது, இவர்கள் தனது சுய நலத்தின் அடிப்படையை கொண்டே தனது பிழைப்பை நடத்துகின்றனர் , நடத்திவருகின்றனர் இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை இருக்கிறது என்றும், இருப்பதை இல்லை என்றும் தனது மன இச்சை படி மார்க்கத்தோடு விளையாடி வருகின்றனர் என்பதும் இவர்களின் இந்த செயலின் மூலம் தெரியவருகின்றது.
Read more »

Jul 6, 2014

சுலைமான் நபியின் மீது கட்டுக்கதை


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 327 இல் ஜின்களுக்கு மறைவானவை தெரியாது என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: 

ஸுலைமான் நபிக்குப் பயந்து கொண்டு பைத்துல் முகத்தஸை கட்டும் பணியில் ஜின்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். (குர்ஆன் 34:14) 

ஸுலைமான் நபி நின்ற நிலையிலேயே இறந்து விட்டார் ஆனாலும் கைத்தடியை ஊன்றிக் கொண்டிருந்ததால் அவர் கீழே விழாமல் அப்படியே நின்றார். பிறகு கைத்தடியை கரையான்கள் அரித்த போது, அவரது உடல் கீழே விழுந்தது. அவர் விழுந்த பிறகுதான் ஸுலைமான் நபி ஏற்கனவே இறந்துவிட்டார் என்ற செய்தி ஜின்களுக்குத் தெரிகிறது. 

தங்களுக்கு அருகில் நின்று கொண்டிருக்கும் ஸுலைமான் நபி உயிருடன் இருக்கிறாரா? மரணித்து விட்டாரா? என்பதைக் கூட ஜின்களால் கண்டு பிடிக்க இயலவில்லை. 

நம் விளக்கம்: 

ஸுலைமான் நபி (அலை) அவர்கள் பைத்துல் முகத்தஸை ஜின்களைக் கொண்டு கட்டும்பணி – அச்சமயம் நின்ற நிலையில் மரணித்தல் – கீழே விழாமல் அப்படியே நிற்றல் – கைத்தடியை கரையான்கள் அரித்தல் – அவர் கீழே விழுதல் ஆகியவை திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இல்லாத கட்டுக் கதைகள் இப்படிப்பட்ட கற்பனை வளம் செறிந்த கட்டுக் கதையை பி.ஜே எங்கிருந்து பெற்றார்? ஆதாரம் தரமுடியுமா? 

பி.ஜே தன் திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 237 இல், ஜின்களுக்கு கண்மூடித் திறப்பதற்குள்ளும், இருந்த இடத்திலிருந்து எழுவதற்குள்ளும் ஒரு நாட்டிற்குள் இருக்கும் சிம்மாசனத்தை மற்றொரு நாட்டில் கொண்டு வந்து வைக்கக் கூடிய ஆற்றல் இருந்தது என்றும் எழுதுகிறார், அப்படி என்றால், 

1) ஒரு மனிதர் உயிருடன் இருக்கும் போது அவருடைய உடல் நிலையும், தூங்கும் போதோ, மரணித்த பின்னோ காணப்படும் உடல் நிலையும் பார்த்தாலே தெரியுமே! தூங்கும் போது தலை சாய்ந்தோ, கழுத்து தொங்கியோ காணப்படும். இந்த அற்ப அறிவு கூடவா ஜின்களுக்கு இல்லாமல் போய்விட்டது? 

2) பைத்துல் முகத்தஸை ஜின்கள் ஓரிரு நாள்களில் கட்டி முடிக்க வேண்டியதுதானே! ஏன் கட்டி முடிக்கவில்லை? எத்தனை மாதங்கள், வருடங்கள் ஆயின என்பதற்கு பி.ஜே நபிமொழி ஆதாரம் காட்டுவாரா? 

3) ஸுலைமான் நபி நின்ற நிலையிலேயே இறந்து விட்டார் ஆனாலும் கைத்தடியை ஊன்றிக் கொண்டிருந்ததால் அவர் கீழே விழாமல் அப்படியே நின்றார் என்றால்,

ஒரு மன்னரும் நபியுமாகிய அவருக்கு ஆன்மீக, அரசியல், இல்லறம், சுய வேலைகள் இவை எதுவும் இல்லையா? அதையெல்லாம் கவனிக்காமல் பல நாட்களாக, பல வாரங்களாக, இந்தக் கட்டிடப் பணியைத் தான் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாரா? இதற்கு வேறு பணியாளர்கள் யாரும் இல்லையா? மந்திரிகளும் மனைவி மக்களும், பிறரும் அவரைத் தேடி வரவில்லையா? 

4) இறந்து பன்னாட்களாகியும் மன்னர் வரவில்லையே என்பதை யாரும் கவனிக்கவில்லையா? மன்னரும் மற்ற பணிகள் எதையும் கவனிக்கவில்லை. மன்னரையும் யாரும் கவனிக்கவில்லை என்று பி.ஜே நம்புகிறாரா? 

5) ஒரு மனிதனின் ரூஹ் பிரியும் போது, அவர் எப்படிப்பட்ட பலசாலியாக இருந்தாலும் கீழே விழாமல் கைத்தடியை ஊன்றிக் கொண்டு நிற்க முடியும் என்று அறிவும் அனுபவமும் கொண்ட ஒரு மனிதன் நம்ப முடியுமா? முடியும் என்றால், அதனை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துக் காட்ட முடியுமா? 

6) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கே 63 வயதில் மரண வேளையில் இரு கால்களையும் தரையில் ஊன்றி நடக்க முடியவில்லை என்றால் இத்தனைக்கும் அவர்கள் இரு மனிதர்களின் தோள்களில் தம் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டிருந்தார்கள் என்றால், சுலைமான் நபி எப்படி உயிர் பிரியும் போது கைத்தடியால் ஊன்றிக் கொண்டு நிற்க முடியும்? 

7) சில அல்லது பல நாட்களாக ஒரு மனித நபி, இறை வழிபாட்டுக்காக, இயற்கை தேவைகளுக்காக, இல்லறப் பணிகளுக்காக, அரசியல் பணிகளுக்காகக்ச் செல்லாமல் இருப்பதை ஜின்களுக்கு கண்கள் இருந்தும் கவனிக்கவில்லையா? அவை கருத்துக் குருடாக இருந்தனவா? அல்லது அவை அனைத்தும் குருட்டு ஜின்களா? 

8) தங்களுக்கு அருகில் நின்று கொண்டிருக்கிற ஸுலைமான் உயிருடன் இருக்கிறாரா? மரணித்து விட்டாரா என்பதைக் கூட ஜின்களால் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால், 

அந்த ஜின்கள் வானம் சென்று, அதைத் தீண்டியிருக்கமுடியும், ஒட்டுக் கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்ந்திருக்க முடியும் என்பது சரியா? (ஆதாரம்: 72:8-9 பி.ஜே தமிழாக்கம்). கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா? 

9) சுலைமான் நபிக்கு பயந்து கொண்டு பைத்துல் முகத்தஸைக் கட்டும் பணியில் ஜின்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தன என்று பி.ஜே எழுதியுள்ளார். அப்படி என்றால், சுலைமான் நபி ஒரு கொடிய சர்வாதிகாரியா? அவர் ஜின்களை ஈவு இரக்கமின்றி ஜின்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை கொத்தடிமைகளாக நடத்திக் கொண்டிருந்தாரா? இஸ்ரவேல் மக்களை பிர்அவ்ன் கொத்தடிமைகளாக நடைத்தியது போல் ஸுலைமான் நபி நடத்தினாரா? பி.ஜே யின் கற்பனை கதை, ஒரு நபியை, நீதியான ஆட்சி நடத்திய இறக்க குணம் கொண்ட ஒரு அரசரை கொடுங்கோலனாக படம் பிடித்துக் காட்டுகிறது. 

10) கைத்தடியை ஊன்றிக் கொண்டிருந்தார். கைத்தடியைக் குறிக்க அரபி மொழியில் பல சொற்கள் இருக்கலாம். அதை நான் மறுக்கவில்லை. ஆனால், கைத்தடி என்றாலே குர்ஆன், நபிமொழி வரலாறு தெரிந்த மக்களும் பாமர மக்களும் கூட அஸா என்று கூறுவார். மூஸா நபியின் அஸா அவர்களின் நினைவுக்கு வரும். சுலைமான் நபியின் கைத்தடியைக் குறிக்க அஸா என்று வராமல் மின்சஅத் என்ற சொல் வந்துள்ளதே ஏன்? ஆடு மாடு மேய்ப்பவர்களின் கையில் கைத்தடி இருக்கும். சுலைமான் நபியின் கையில் கைத்தடி எதற்கு? கைத்தடியை ஊன்றிக் நடக்கும் அளவுக்கு அவர் வலிமையின்றி இருந்தாரா? அப்படி எனில் கட்டிடப் பணியை அவர் ஏன் கவனிக்க வந்தார்? வேறு ஆட்கள் அப்பணிக்கு நியமிக்கவில்லையா? 

கரையான்கள் கைத்தடியை அரித்து தின்று விட்டது என்பதில் திருக்குர்ஆனில் மூல பாடத்தில் தாபத்துல் அர்ல் – பூமியிலுள்ள பூச்சி என்றுதான் வருகிறது. மனிதன் உட்பட பூமியில் ஊர்ந்து செல்லும் அனைத்து உயிர்களையும் அது குறிக்கும். கரையான்களைக் குறிக்க அரபி மொழியில் வேறு சொல்லே இல்லையா? ஸுலைமான் நபியின் கைத்தடியை, அரண்மனையில் அரித்துத் தின்ற கரையான்கள், ஒருவரின் உடலையும் உணவையும் எப்படித் தின்னாமல் விட்டு வைத்திருக்கும்? (திருக்குர்ஆன் 2:260) 

கைத்தடி என்பது இந்த இடத்தில் செங்கோலைக் குறிக்கும் என்பதனை கீழ்க்கண்ட ஹதீஸிலிருந்து நாம் விளங்குகிறோம். 

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

கஹ்தான் குலத்திலிருந்து ஒரு மனிதர் மக்களைத் தம் கைத்தடியால் ஓட்டிச் செல்பவராகத் தோன்றாதவரை உலக முடிவு நாள் வராது. (ஆதாரம்: புகாரி 3517) 

அதாவது இதில் கைத்தடி செங்கோலையும் ஓட்டிச் செல்லுதல் ஆட்சி செய்தலையும் குறிக்கும் எனவே சுலைமான் நபியின் ஆட்சியை சீரழிக்கக் கூடிய ஒருவர் ஆட்சிப் பொறுப்புக்கு வரவிருக்கிறான் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. 

இதிலிருந்து பி.ஜே திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்படாத கட்டுக்கதையைக் கூறி திருக்குர்ஆன் வசனத்திற்கு தவறான விளக்கம் தருகிறார் என்பது தெரிகிறது;

Read more »

சுலைமான் நபியைப் பற்றிய தவறான கருத்து.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 338 இல் அவரை ஒரு சடலமாக போட்டோம். பின்னர் அவர் திருந்தினார் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

இவ்வசனத்திற்கு (38:34) பெரும்பாலான மொழி பெயர்ப்பாளர்கள் தவறாகவே மொழிபெயர்த்துள்ளனர் ஸுலைமானின் சிம்மாசனத்தின் மீது முண்டத்தைப் போட்டோம். சடலத்தைப் போட்டோம் என்று தங்கள் மொழி பெயர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இதற்கேற்ப கட்டுக்கதைகளையும் விளக்கவுரை என்று குறிப்பிட்டுள்ளனர். இவ்வசனத்தில் ஸுலைமானை ஒரு சடலாகப் போட்டோம் என்று கூறப்படுகிறது. இது, நோயுற்று பலவீனப்பட்டு படுக்கையில் விழுந்து கிடக்கும் நிலையைக் குறிக்கும் சொல்லாகும். 

நம் விளக்கம்: 

திருக்குர்ஆன் (38:35) வசனத்தின் தமிழாக்கம், நிச்சயமாக ஸுலைமானை நாம் சோதித்தோம். அவரது அரியணையில் ஒரு உடலைப் போட்டோம். பிறகு அவர் திரும்பினார் என்பதாகும். தமிழ், ஆங்கிலத்தில் உள்ள திருக்குர்ஆனில் காணப்படும் மொழியாக்கம் இதுவே, அதாவது, 

1) அவரது அரியணையில் ஒரு சடலத்தைப் போட்டோம் என்றுதான் காணபடுகிறது. பி.ஜே எழுதியிருப்பது போல், அவரது சிம்மாசனத்தில் அவரை ஒரு சடலமாகப் போட்டோம் என்று வரவில்லை. 

2) அவரை சடலமாகப் போட்டோம் என்றால் ஸுலைமான் நபிக்கு நோயை ஏற்படுத்தினோம் என்று பொருள் என பி.ஜே எழுதுகிறார். 

அப்படி என்றால், சுலைமான் நபிக்கு நோயை ஏற்படுத்தினோம் என்று அல்லாஹ் கூறியிருக்கலாமே. அப்படி அல்லாஹ் கூறவில்லையே! இதற்கு நபிமொழி ஆதாரம் இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லையே! எனவே ஸுலைமான் நபி நோயுற்றார் என்பது தவறாகும். 

இதில் வேடிக்கை என்னவென்றால், ஸுலைமான் நபிக்கு இல்லாத நோயை இருப்பதாகக் கூறுகிறார். இப்ராஹீம் நபி, நான் நோயாளி எனக் கூறியிருக்கும் போது, அவர் நோயாளி என்று பொய் சொல்கிறார் என்று பி.ஜே கூறுகிறார். இல்லாததை இருப்பதாகவும் இருப்பதை இல்லாதது என்றும் பி.ஜே ஏன் கூறுகிறார்? அல்லாஹ் நன்கறிவான்!

3) ஒரு வாதத்துக்காக, ஸுலைமான் நபி நோயுற்றார் என்று வைத்துக் கொள்வோம், நோயில் விழுந்தவர் பாயில் தானே படுப்பார். அரியணையிலா போடப்படுவார்? அரியணையில் ஒரு சடலத்தைப் போட்டோம் என்று ஏன் அல்லாஹ் சொல்ல வேண்டும். அரியணை என்பது ஆட்சி அதிகாரத்தையும், சடலம் என்பது ஆட்சி திறனற்ற தன்மையையும் குறிக்கும். அரியணை என்ற சொல்லை அல்லாஹ் வீணாகப் பயன்படுத்தவில்லை. 

4) எனவே, ஸுலைமான் நபி ஏதோ தவறு செய்தார் என்பதற்கோ, அதற்காக நோய் அவருக்கு வந்தது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. இது அவருக்குப் பிறகு அவரது அரியணையில் ஆட்சி அதிகார திறனற்றவன் அமரப் போகிறான் என்பதை, இறைவன் எடுத்துக் கூறுகிறான். சுலைமான் நபிக்குப் பிறகு அவரது அரியணைக்கு ஆட்சி திறனற்ற அவரது மகன் வந்தான் என்று வரலாறு சான்று கூறுகிறது. 

இவனைக் குறித்தே 34:14 திருக்குர்ஆன் வசனத்தில் சுலைமான் நபியின் கைத்தடியை (செங்கோலை) அரித்துத் தின்றது தாப்பத்துல் அர்ல் (உலகப் பூச்சி) என்று கூறப்பட்டுள்ளது.
Read more »

ஷேர் அலி திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பை டவுன்லோட் செய்யுங்கள்.


ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் தோழர்களில் ஒருவரான ஹஸ்ரத் ஷேக் அப்துல் அஸீஸ் அவர்கள் கீழ்வரும் நிகழ்ச்சி ஒன்றை கூறினார்கள்.

ஹஸ்ரத் இமாம் மஹ்தி(அலை) அவர்களின் தோழரும் ஹாபிஸுமான முதியவர் ஒருவர் இருந்தார். இவர் கண்பார்வையற்றவர். மேலும் வயதானதன் காரணமாக அவருக்கு கேட்கும் சக்தியும் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. அவர் ஒருமுறை என்னிடம் இவ்வாறு கூறினார்.

ஒருமுறை நான் ஹக்கீம் குத்புதீன் அவர்களிடம் சென்று எனது காது மந்தமாகி வருவதைத் தெரிவித்தேன். அவர் எனது காதுகள் காய்ந்திருப்பதைக் கண்டு தினமும் பால் அருந்தி வரவேண்டும் என ஆலோசனைக் கூறினார். அதற்க்கு நான் 'இரண்டு வேலை உணவு கூட எனக்கு 'லங்கர் கானா' (இமாம் மஹ்தி (அலை) அவர்களின் விருந்தினர் விடுதி) யில் தான் கிடைக்கிறது, இந்நிலையில் பாலுக்கு நான் எங்கே போவேன்? என்று கூறினேன்.

அப்போது அங்கு ஒருவர் வரும் சப்தம் கேட்டது, 'ஹாபிஸ் சாஹிப் என்ன சொல்கிறார்?' என்று கேட்டார். அதற்க்கு ஹக்கீம் சாஹிப், "இவருக்கு காதில் கோளாறு அதனால் பாலருந்த ஆலோசனை கூறியுள்ளேன். ஆனால் இவரோ பாலுக்கு எங்கே போவது என்கிறார்" என்றார்.

அன்று இரவு ஒரு மனிதர் இருட்டிய பிறகு நான் தங்கியிருக்கும் அறைக்கு வந்து பால் கொண்டு வந்துள்ளதாகக் கூறினார். நான் எனது பாத்திரத்தை தந்த போது ஒரு லிட்டர் அளவு பாலை அதில் ஊற்றி சென்றார். இப்படி அந்த மனிதர் ஏறத்தாழ ஒன்றரை வருடம் எனக்கு பால் கொண்டு வந்து தருகிறார்.

இதனைக் கேட்ட ஷேக் அப்துல் அஸீஸ் அவர்களுக்கு இப்படி தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாது ஹாபிஸ் சாஹிபிற்கு பால் கொண்டு தருவது யார்? என்று கண்டறிய ஆவல் ஏற்பட்டது. அதனால் ஒரு நாள் இருட்டியபிறகு ஹாபிஸ் சாஹிப் தங்கி இருந்த இடத்திற்கு சென்று காத்திருந்தார். அப்போது ஒரு மனிதர் இருட்டில் வந்து ஹாபிஸ் சாஹிபின் அறைக்குள் நுழைந்தார். ஹாபிஸ் சாஹிப் கட்டிலில் அமர்ந்திருந்தார். அந்த மனிதர் பாலைக் கொடுத்துவிட்டு திரும்பினார். அப்போது ஹஸ்ரத் ஷேக் அப்துல் அஸீஸ் அறைக்குள் நுழைந்தார். ஆள்வரும் ஓசையைக் கேட்டு அந்த மனிதர் மூலையில் பதுங்கினார். அங்கு இருட்டாக இருந்ததால் அந்த மனிதர் யார் என்று தெரியவில்லை. உடனே ஹஸ்ரத் ஷேக் அப்துல் அஸீஸ் அவர்கள் "சகோதரரே தாங்கள் யார்?" என்று கேட்டார். வெட்கத்துடன் மெல்லிய குரலில் பதில் வந்தது "நான் ஷேர் அலி" .

ஹஸ்ரத் ஷேக் அப்துல் அஸீஸ் கூறுகிறார்கள் நான் சங்கடத்துக்குள்ளானேன். நான் செய்த காரியம் குறித்து வெட்கப்பட்டேன். ஹஸ்ரத் ஷேர் அலி அவர்கள் காக்க நினைத்த இரகசியத்தை நான் வெளிப்படுத்திவிட்டேன். ஒரு நீண்ட காலம் அவர் முன் செல்வதற்கே நான் வெட்கப்பட்டேன்.

சாதரணமாக ஒரு நற்செயலைச் செய்து விட்டு மக்கள் தம்பட்டம் அடிக்கின்ற இக் காலத்தில் ஒன்றரை ஆண்டு காலமாக ஒரு நற்செயலை செய்திருந்தும் தன்னை வெளிப்படுத்த நினைக்காத ஹஸ்ரத் ஷேர் அலி அவர்கள் உண்மையில் ஒரு மாமனிதர். இத்தகு தோழர்களைதான் ஹஸ்ரத் மஹ்தி (அலை) அவர்கள் கொண்டிருந்தார்கள்.

ஹஸ்ரத் மௌலவி ஷேர் அலி அவர்கள் பின்னாளில் திருக்குரானை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்கள். அதன் பல பதிப்புகள் வெளி வந்துள்ளன. அண்மையில் கூட அவர்களின் மொழியாக்கம் அழகிய முறையில் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது. மேலும் அவர்களின் திருக்குர்ஆனின் iPhone மற்றும் Androidற்கான மென்பொருளை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் :


நாஸிர் அஹ்மத்
Read more »

Jul 4, 2014

குர்ஆனில் கைவைத்து தனது உள்நோக்கத்தை வெளிப்படுத்திய கீழ்தரமான ஆலிம்களின் செயல்


அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத் வெளியிட்ட ஆண்ட்ராய்டு மற்றும் ஐஃபோனிற்காக குர்ஆன் மென்பொருளில் இல்லாத எழுத்துக்களை சேர்த்துள்ளார்கள் என்று எதிரிகள் இப்போது புது பொய்யை  பாமர மக்கள் முன் பரப்பி வருகின்றனர். திருக்குர்ஆனில் சூரா ஆலு இம்ரான் வசனம் 7 இல்  "பில் ஹக், பில் ஹக், பில் ஹக்" என்று இல்லாத ஒரு சொல்லை இந்த காதியானிகள் சேர்த்துள்ளார்கள் என்பதே! இது பொய்யை மூலதனமாகக் கொண்டு பிழைப்பை நடத்தும் ஆலிம்களின் செயலாகும். உண்மை எது என்பதை கீழே உள்ள படத்தை பார்த்து அறிந்து கொள்ளவும்:

எதிரிகளால் Edit செய்து வெளியிட்ட ஃபோட்டோ இதோ:


அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் தரப்பில் வெளியிட்ட ஆண்ட்ராய்டு மற்றும் ஐஃபோனிற்கான குர்ஆன் மென்பொருளின் Screenshot  கீழே: 
Android Mobile Phone இன் Screenshot கீழே:


i Phone இன் Screenshot கீழே:


அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் தரப்பில் வெளியிடப்பட்ட ஒரிஜினல் குர்ஆன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஃபோனிற்கான மென்பொருளின் படம் மேலே தரப்பட்டுள்ளது. எந்த இடத்தில் இந்த கீழ்தரமானவர்கள் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தை நோக்கி குர்ஆனில் இடைசெருகள் செய்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளனரோ அந்த இடத்தை கோடிட்டு நாம் காட்டியுள்ளோம். இதில் அதிகமாக எந்த எழுத்து சேர்க்கப்பட்டுள்ளது என்பதை பார்த்து உண்மை எது பொய் எது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தரப்பில் வெளியிடப்பட்ட குர்ஆனின் iPhone மற்றும் Androidற்கான மென்பொருளை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்:




                                              








இதில் ஓர் வேடிக்கை என்னவென்றால், அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் தரப்பில் வெளியிடப்பட்ட குர்ஆன் மென்பொருள் ஆங்கில மொழியாக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த கீழ் தரமானவர்கள் எதில் இந்த காதியானிகள் தவறு செய்துள்ளனர் என்று சுட்டி காட்டி படம் போட்டு காட்டிருக்கிறார்களோ அது மொழியாக்கம் இல்லாத குர்ஆன். ஆக நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கேற்ப இவர்கள் செய்த இந்த இழிவான செயல்மூலம் இவர்களே மகா பொய்யர்கள் என்பதை அல்லாஹ் வெளிப்படுத்தி காட்டிவிட்டான். அல்ஹம்துலில்லாஹ்...

எதிரிகளின் இந்த இழிவான செயல் பொறாமையின் உச்சகட்டம் என்பதை வெளிப்படுத்துகிறது. இல்லாததை இருக்கிறது என்று இட்டுக்கட்டி அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் மீது அநியாயமாக பொய் கூறியுள்ளனர். தமிழ் நாட்டிலுள்ள த த ஜ பிரிவினர்களின் தலைவர் சகோ பி.ஜெ வும் இதில் உட்பட்டிருக்கிறார். தான் காணாத ஒரு விஷயத்தை கேள்வி பட்டு அதை அப்படியே தனது வலைதளத்தில் ஏற்றியுள்ளார். (காண: http://www.onlinepj.com/katturaikal/beware-of-qaadhiyani-quraan-app-/#.U7JhgJSSwuc) ஹஸ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள், எவர்கள் தான் கேள்விபடுவதை எல்லாம் (தீர விசாரிக்காமல்) பரப்பி வருகிறாரோ அவர் மகா பொய்யன் என்று கூறியுள்ளார்கள். (நூல்:முஸ்லிம்) இவர்களை அல்லாஹ்வே பார்த்துக் கொள்வான். ஆனால் இவ்வாறான கீழ்தரமான மக்களை பாமர மக்கள் இனம் கண்டு கொள்ளவேண்டும். எங்களை மக்கள் முன் இவர்கள் இஸ்லாத்தின் எதிரிகள் என சித்தரித்து கூறுவதற்காக இவர்கள் அல்லாஹ்வின் வசனத்திலேயே கை வைத்துவிட்டனர். இவர்களை அல்லாஹ்வே பார்த்து கொள்வான். அல்லாஹ்வின் சாபம் என்றென்றும் பொய்யர்கள் மீது இறங்கக்கூடியதாக இருக்கின்றது.
Read more »

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதை


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 218 இல் நபிகள் நாயகத்துக்கே சந்தேகமா? என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு அதை வேதமுடைய சமுதாயத்தினர் தீர்த்து வைப்பார்கள் என்று திருக்குர்ஆன் வசனத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் இறைத் தூதராக நியமிக்கப்பட்ட போது தமக்கு இறைவனிடமிருந்து தான் வஹி வந்துள்ளதா? அல்லது தமக்கு வேறு ஏதும் ஏற்பட்டு விட்டதா? என்று சந்தேகம் கொண்டார்கள். 

இறைவன் புறமிருந்து மனிதர்களுக்கு வேதம் அருளப்படுமா? என்ற அடிப்படையான விசயத்தில் சந்தேகம் கொண்டால் வேதமுடைய சமுதாயத்தினரிடம் கேட்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். 

அவ்வாறு கேட்டால் இறைவனிடமிருந்து மனிதர்களுக்கு வேதம் வழங்கப்படும் என்ற அடிப்படையை அவர்கள் உறுதிப்படுத்துவார்கள் என்பதுதான் இந்த கருத்து. 

திருக்குர்ஆன் கூறப்படும் செய்திகளுக்கு அவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. 

நம் விளக்கம்: 

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி இதை விட மோசமாக ஒருவர் எடை போட முடியாது! 10:94-95 வசனங்களுக்கு அவர் தந்த மொழியாக்கத்தைப் பார்த்தாலே தவறு புரியும். 

10:94 இல், (முஹம்மதே) நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்தைய வேதத்தை ஒதுவோரிடம் கேட்பீராக. உமது இறைவனிடமிருந்தே இவ்வுண்மையை உம்மிடம் வந்துள்ளது. சந்தேகிப் போரில் நீர் ஆகிவிடாதீர். 

இந்த வசனத்துக்குத்தான் பி.ஜே விளக்கம் தந்துள்ளார் அவருடைய விளக்கம் தவறு என்பதை அடுத்த வசனமே கூறுகிறது: 

10:95 இல், அல்லாஹ்வின் வசனங்களைப் பொய் எனக் கருதுவோரில் நீர் ஆகிவிடாதீர். அவ்வாறு செய்தால் நஷ்டம் அடைந்தவராவீர். 

10:94 இல் வரும் நீர் எனும் சொல் முஹம்மது நபி(ஸல்) அவர்களைக் குறித்து கூறப்பட்டுள்ளது என்று எண்ணியதே பி.ஜே செய்த தவறான விளக்கத்திற்குக் காரணமாகும். அப்படி என்றால் 10:95 வசனத்தில் வரும் நீர் என்பதும் நபி (ஸல்) அவர்களைத்தானே குறிக்கும். நபி (ஸல்) அவர்கள் தமக்கு இறங்கிய அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதினார் என்று பி.ஜே நம்பத் தயாரா? 10:94 வசனத்தில் வரும் நீர் எனும் சொல், நபி (ஸல்) அவர்களைக் குறிக்காது என்றால் 10:94 வசனத்தில் வரும் நீர் என்ற சொல் எப்படி நபி (ஸல்) அவர்களைக் குறிக்கும்? 

எனவே, 10:94 வசனத்தில் வரும் நீர் – உமக்கு எனும் சொற்கள் நபி (ஸல்) அவர்களைக் குறிக்கவில்லை என்று அறிந்து கொள்கிறோம். எனவே அவரது அந்த விளக்கம் ஒரு அபத்தம் என்று அறிந்து கொள்ளுங்கள். அப்படி என்றால் அந்த நீர் என்பது திருக்குர்ஆனை வாசிக்கும் என்னையும் உங்களையும் குறித்துச் சொல்லப்பட்டவை என்று அறிந்து கொள்ளுங்கள். 

2) நபி (ஸல்) அவர்களுக்கு தனக்கு அருளப்பட்ட வேத வசனமா? என்ற சந்தேகம் வந்துவிட்டதாகவும் அந்த சந்தேகத்தை வேதக் காரர்களாகிய யூத, கிறிஸ்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வேத செய்திகள் இறைவனிடமிருந்து வரும் என்ற அடிப்படையை நபி (ஸல்) அவர்களுக்கு உறுதிப்படுத்துவார்கள் என்றும் எழுதியுள்ளார்! இவ்வாறு எழுதுவதற்கு இவரால் எப்படி முடிந்தது என்று என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் தன் 40 வது வயதில் தனக்கு வஹி வந்த போது, தனக்கு வந்தது வேத வஹியா? என்பதைக் கேட்டுத் தெரிய வேண்டிய தேவை என்ன? கிறித்தவர்கள் தங்களுக்கு வந்த வேத நூற்களைப் படித்ததைப் பார்த்துத் தெரிந்திருப்பார்களோ? முதல் வஹி வந்த போதே அன்னை கதீஜா (ரலி) அவர்கள் இன்ஜீலை மொழியாக்கம் செய்து கொண்டிருந்த வரக்கா பின் நவ்பல் அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்களிடமிருந்து தனக்கு வந்தது வேத வஹியே என்று அறிந்து தெரிந்து, முழுக்க உணர்ந்து தெரிந்த பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு மதினாவில் உள்ள வேதக்காரர்களிடம் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியது எப்படி வரும்? 

3) நபி (ஸல்) அவர்களைப் பற்றி இவ்வாறு எழுதும் இவர் ஈஸா நபி அவர்களைப் பற்றி எழுதியுள்ளதைப் பாருங்கள். 

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 276 இல் பி.ஜே 

வேதம் வழங்கப்படுவதும் ஒருவர் நபியாக ஆக்கப்படுவதும் 40 வயதில்தான் என்று சில பேர் கூறி நாற்பதில் ஒரு தனி முக்கியத்துவம் இருப்பது போல் சித்தரிக்கின்றனர். 

யஹ்யா நபி பிறக்கும் போதே நபியாகப் பிறக்கிறார்கள். சிறுவராக இருக்கும் போதே அவருக்கு வேதத்தைக் கொடுத்து விட்டான் என இவ்வசனம் (19:12) கூறுகிறது. 

மேலும் 19:30 இவ்வசனத்தில் ஈஸா நபியவர்கள் பிறந்தவுடனே தம்மை இறைவனின் தூதராக நியமித்து வேதத்தை வழங்கியதாக கூறினார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நபியாக நியமிக்கப்படுவதற்கும் வயதுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதற்கு இவ்வசனங்கள் சான்றாகும். 

இந்த விளக்கத்தையும் நபி (ஸல்) அவர்களுக்கு கூறிய விளக்கத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒருபக்கம் பிறந்த மேனியுண்ட தாயின் மார்பில் பாலருந்தி தாயின் மடியில் சிறுநீரும் மலமும் கழிக்கும் சிறு குழந்தைகளுக்கு கையில் வேதம் கொடுக்கப்படுகிறதாகவும் அவர்கள் தங்களை நபி என்றும் எனக்கு இந்த வேதம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் பேசும் பாலருந்தும் பச்சிளம் குழந்தைகள்!

மறுபக்கம் ஒரு நபிக்கு மணமுடித்துப் பிள்ளைகளுக்குத் தந்தையாகிய பின் நபியாகி வேதம் வழங்கப்பட்ட பின்னர் பல்லாண்டுகள் கழித்து தனக்கு வழங்கப்பட்டது வேதமா? என்று சந்தேகம் வருகிறதாம். அதனை வேதக்காரர்களிடம் கேட்டுத் தெரிய வேண்டுமாம். யா அல்லாஹ்! நீ எங்களை இந்த மூட முல்லாக்களின் வழிகேடுகளிலிருந்து காப்பாற்றியதற்குரிய நன்றிக்கடனை நாங்கள் எப்படி செலுத்தப் போகிறோம்? அதற்கு எங்கள் வாழ்நாள் எல்லாம் போதாதே!

4) தங்களை நபி (ஸல்) அவர்களின் வாரிசுகள் என்றும் வேதத்துக்கு சொந்தக்காரர்கள் என்றும் வாய்கிழிய பேசும் இவர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த அநியாயத்தை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு இழைக்கப் போகிறார்கள்? 

5) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் முதல் வஹியின் போது ஓதுவீராக! உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! என்று கூறிய பின்னரும் வேதச் செய்திகள் இறைவனிடமிருந்து மனிதனுக்கு வருமா? என்ற சந்தேகம் நபி (ஸல்) அவர்களுக்கு வந்தது என்று பி.ஜே எழுதுகிறார். எனவே இவர் ஒரு நபியின் உண்மை இலக்கணத்தை உண்மையிலேயே அறியாததின் காரணமாகத்தான் பாலருந்தும் பாலகர்கள் பிறக்கும் போதே நபியாகப் பிறந்து சுமக்க முடியாத வேதத்தைக் கையில் பிடித்துக் கொண்டு இது வேதம் என்று கூறினார்கள் என்று எழுதுகிறார். 

நல்ல வேலை நபியாகப் பிறக்கும் போதே அவர்கள் கையில் வேதத்துடன் பிறந்தார் என்று எழுதவில்லை! (நவூதுபில்லாஹ்) 

6) அல்லாஹ் திருக்குர்ஆனில் நபிமார்களைத் தேர்ந்தெடுக்கின்றான் (22:76) என்ற சொற்றொடரைக் கையாளுகிறான். நபிமார்களைப் பிறக்கச் செய்கிறான் என்று எங்கும் கூறவில்லை. நபியாக ஆக்கினான் என்றுதான் திருக்குர்ஆன் கூறுகிறது. நபியாகப் பிறக்க செய்தான் என்று கூறவில்லை. 

ரஸுல்மார்கள் அனுப்பப்பட்டுள்ளார்களே தவிர ரஸுலாகப் பிறப்பார்கள் என்று அல்லாஹ் கூறவில்லை. 

தன் தூதை வழங்கினான் என்றுதான் திருக்குர்ஆன் கூறுகிறதே தவிர தூதராகவே பிறந்தார் என்று கூறவில்லை. (6:125) 

7) யஹ்யா நபியும், ஈஸா நபியும் வயிற்றிலிருந்து வெளிவரும் போதே நபியாக ரெஸுலாக வந்தார்கள் அவர்களுக்கு வேதம் கொடுக்கப்பட்டது என்றால் 

அவ்விருவரும் இறைவனிடமிருந்து செய்திகள் பெற்றிருக்கவேண்டும். அதை அவ்வப்போது மக்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும். அதாவது அவர்களுக்கு இறைவனிடமிருந்து வேத வசனங்கள் இறங்கின அவர்கள் மக்களை அழைத்து அவர்களிடம் அவற்றை அறிவித்தார்கள் என்பதற்கு தக்க ஆதாரங்கள் வேண்டும். அப்படி அவ்விருவரும் செய்திருப்பதாகத் தெரியவில்லை. எனவே அவர்கள் பிறக்கும் போதே நபியாக ரஸுலாக பிறந்தார்கள் என்பது தவறாகும். 

!9:13 இல், யஹ்யாவே! நீர் வேதத்தை உறுதியாகப் பற்றி கொள்க என்று கூறினோம் என்று அல்லாஹ் கூறுகிறான். இதிலிருந்து நாம் தெரிவது என்ன? யஹ்யா நபியின் காலத்தில் அவரது சமுதாய மக்கள் வேதத்தை விட்டுவிட்டு, வேதமல்லாத ஹதீஸ் போன்றவற்றுக்கு முன்னுரிமை வழங்கி வந்துள்ளனர். என்றும், எனவே யஹ்யா நபி அம்மக்களுக்கு இறைக்கட்டளைக்கு ஏற்ப தவ்ராத் வேதத்தை மக்கள் உறுதியாகப் பற்றிப் படிக்க ஏவினார். வேதத்தின் வழியில் வாழ வலியுறுத்தினார் என்றும் தெரிகிறது. 

8) நபி என்போர் அச்சமூட்டி எச்சரிப்போர் என திருக்குர்ஆன் (33:46) கூறுகிறது. இறைவனின் கட்டளைகளை எடுத்துச் சொல்வதுதான் இறைத்தூதர்களின் பணியாகும் என (5:100) திருக்குர்ஆன் கூறுகிறது. யஹ்யா நபியும், ஈஸா நபியும் பச்சிளம் குழந்தைப் பருவத்தில் அப்பணிகளை எப்படி நிறைவேற்றினார்கள்? 

9) யூனுஸ் நபி ஒரு சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டு, அவர் அப்பணியை மக்களுக்குச் செய்யாமல் விட்டுச் செல்ல நினைத்ததை இறைவன் விட்டு வைத்தானா? இல்லை என்றால், பச்சிளம் பாலகர்களிடம் தன் தூதுப் பணியை வீணாக விட்டு வைத்திருந்தான் என்று எண்ணுவது எவ்வளவு அறிவீனம்! அப்படி அப்பச்சிளம் குழந்தைகளை நபியாக்க வேண்டிய தேவை என்ன? 

10) அன்னை கதீஜா (ரலி) அவர்களும் வரக்க பின் நவ்பல் அவர்களும் முதல் வஹியிலிருந்து நபி (ஸல்) அவர்களை நபி என்றும் அவர்களுக்கு வந்தது வேத வசனம் என்றும் அதை ஜிப்ரீல் கொண்டு வந்தார் என்றும் தெரிந்து கொண்டார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தனக்கு வந்தது வேத வஹி என்பதில் ஐயம் கொண்டவராக இருந்தார்கள் என்று இந்த ஆலிம்கள் எண்ணுவது எவ்வளவு கொடுமை! அந்த கிறிஸ்தவர்களுக்கு இருந்த அறிவு கூட இந்த முஸ்லிம் ஆலிம்களுக்கு இல்லையே!

11) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி இப்படி எடை போடும். இந்த பெயர் தாங்கிய ஆலிம்கள் இக்காலத்தில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி வந்துள்ள உம்மத்தி நபியும், மெய்ப்பிக்கும் தூதரும் ஆகிய இக்காலத்தின் இமாமை எப்படி நம்புவார்கள்? முஸ்லிமாக பிறந்து வளர்ந்து ஆலிம் பட்டம் பெற்றவர்களின் கதியே இது என்றால் யூத, கிறித்துவ மக்களின் நிலை என்ன? எனவே முஸ்லிம்களே! இவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள்.
Read more »