அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

May 30, 2014

மது படிப்படியாக தடை செய்யப்பட்டதா? (நாசிக், மன்சூக் - திருக்குர்ஆனில் இல்லை.)


மாற்றிய வசனம் 5:90,91; மாற்றப்பட்ட வசனம் 2:219;4:43) 

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 116 இல் போதையாக இருக்கும் போது என்னும் தலைப்ப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

முதலில் அரபு மக்களுக்கு குடி தடுக்கப்படாமல் இருந்தது. (திருக்குர்ஆன் : 16:67) பின்னர் படிப்படியாக இது குறித்து தடைகள் இறங்கின. 

போதையாக இருக்கும் போது தொழக்கூடாது என்ற கட்டளை வந்தது. (திருக்குர்ஆன்:4:43) பிறகு குடிக்காமல் இருப்பதே நல்லது என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது (திருக்குர்ஆன்:2:219) அதன் பிறகு அறவே போதை கூடாது என்று முழுமையாகத் தடை செய்யப்பட்டது. (திருக்குர்ஆன்: 5:90-91) என்று எழுதியுள்ளார். 

நம் விளக்கம்: 

திருக்குர்ஆன் 5:90-91 வசனம், குடிக்கவே கூடாது என்ற சட்டத்தின் மூலம் அதற்கு முன்னர் வந்த குடி பற்றிய பிற சட்டங்களை ரத்து செய்து விட்டது என்றால் இதனைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, நபித் தோழர்கள் அனைவரும் கூறும் சான்று ஒன்றை உலகில் யாராவது எடுத்துக் காட்ட முடியுமா? முடியாது. 

குடிப்பழக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டு ஒரு கட்டத்தில் முழுமையாக தடை செய்யப்பட்டது என்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களே கூறாதிருக்கும் போது அவர்களுக்குத் தெரியாத ஒன்று இவர்களுக்குத் தெரிந்து விட்டதா? இது பற்றிய சட்டம் இஸ்லாம் புதிதாக அறிமுகம் ஆகும் ஒரு நாட்டில் இப்படித்தான் படிப்படியாக குறைக்கப்பட வேண்டுமா? அல்லது ஒரேயடியாக 5:90-91 வது வசனத்தின் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமா? 5:90-91 வசனமே நடைமுறைக்கு வரும் என்றால், அரபு நாட்டுக்கும் பிற நாட்டுக்கும் பாகுபாடு காட்டியது ஆகாதா? 

அரபு மக்கள் குடியில் மட்டுமா அப்படி இருந்தார்கள். விபச்சாரம், வட்டி போன்ற இதர தீய செயல்களிலும் எப்போதும் அப்படித்தானே இருந்தார்கள். அந்தத் தீய பழக்கங்களும் படிப்படியாகக் குறைக்கப்பட்டு ஒரு கட்டத்தில் முழுமையாக நீக்கப்பட்டதா? அதற்கு பி.ஜே கைவசம் ஆதாரங்கள் உண்டா? என்று பல கேள்விகள் எழும்!

பி.ஜே மேலே காட்டிய வசனங்கள் எல்லாம் அவர் கூறுவது போல் படிப்படியாக குடியைக் குறைக்கக் கூறியது அன்று. திருக்குர்ஆன் 16:68 - ஐக் காண்போம். திருக்குர்ஆன் 16:66-70வசனங்கள். 

1. மழை நீர் 2. பால் 3. கனிரசம் - உணவு . 4.தேன் பற்றிக் கூறப்பட்டுள்ளது. எனவே இது வெறும் மது பற்றிய போதனை இல்லை என்று தெளிவாகிறது. அதிலும். 

பேரீச்சை மற்றும் திராட்சைக் கனிகளிலிருந்து மதுவையும் அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள். விளங்கும் சமுதாயத்துக்கு இதில் சான்று உள்ளது என்று அவ்வசனம் கூறுகிறது. மதுப்பழக்கம் என்றால் மதுவை மட்டும் கூறியிருக்க வேண்டும். அத்துடன் அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள் என்று கூறப்பட்டுள்ளதால் குடிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று விளங்குகிறது. 

மழை நீரைப்பற்றிக் கூறும் போது, செவியேற்கும் மக்களுக்கு இதில் அடையாளம் உள்ளது என்றும், பாலைப் பற்றி கூறும் போது இதில் படிப்பினை உள்ளது என்றும், கனிரசத்தையும் அதன் உணவைப்பற்றியும் கூறும் போது செயலாற்றும் மக்களுக்கு இதில் அடையாளம் உள்ளது என்றும், தேனைப்பற்றிக் கூறும் போது செயலாற்றுபவர்களுக்கு இதில் ஓர் அடையாளம் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 

எனவே, இது மதுவுடன் சம்பந்தமில்லாதது என்று விளங்குகிறது. திருக்குர்ஆனில் சொர்க்கத்தில் நீராரும், பாலாரும், மது ஆறும், தேனாறும் ஓடுவதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே மறுமையில் சொர்க்கத்தில் ஓடும் அந்தந்த ஆறுகளிலிருந்து நீரையும், பாலையும், மதுவையும், தேனையும் மறுமையில் அருந்துபவர்கள் இவ்வுலகில் ஹலாலான நீரையும், பாலையும், பழரசத்தையும், உணவையும், தேனையும் அருந்தியிருக்க வேண்டும் என்பதால் 16:67 இல் கூறப்பட்டது ஹலாலானது என்று விளங்குகிறது. ஹலாலான கனிரசம் என்றும், மது இல்லை என்றும் விளங்குகிறது. 

திருக்குர்ஆன் 16:67 வது வசனத்தின் அடிக்குறிப்பில், 

இங்கு ஸகர் (மது) என்று குறிப்பிட்டிருப்பது போதை தரும் குடிப்பையல்ல; இது நபீது என்ற பானத்தையாகும். மது தயாரிப்பதற்காக பழச்சாற்றைப் புளிக்க வைக்கிறார்கள். ஆனால் நபீது தயாரிக்கும் விதம் வேறு. பழரசங்களைக் கொதிக்க வைத்து, அது மூன்றிலொரு பாகமாக வற்றியதும் நபீது கிடைக்கிறது. இது அனுமதிக்கப்பட்டிருக்கிறது. பெரியோர்கள் இதை அருந்தி இருக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. 

ஸக்ரு என்பது பசி தீர்க்கும் உணவு என்று பொருள்படும் என அபூ உபைதா சொல்லியிருப்பதாக தப்ஸீர் காஸினில் குறிப்பிடப்பட்டிருக்கிறது (காஸின்: குர்துபீ, நஸயீ; மஆரிப்) 

முஸ்லிம் மன்னர்கள், அப்பாஸிய கலீபாக்கள் குடிக்கிறார்கள் என்று மேலை நாட்டினர் சித்தரித்துக் காட்டுவதெல்லாம் நபீது அருந்திக் கொண்டிருந்ததைத்தான். 

நபீது போதை தருவதல்ல; அதை அருந்துதல் ஹலால் என்று இமாமுல் அஹ்லமும், ஹஸ்ரத் அபூயூஸுபும் அறிவித்திருக்கிறார்கள். (நஸபீ - மதாரிக் - பக்கம். 161 மூன்றாம் பாகம்) ஆதாரம் : அப்துல் வஹ்ஹாப் குர்ஆன் தர்ஜுமா 16:67 வது வசனத்தின் அடிக்குறிப்பு எண் 153. 

பேரீச்சை மற்றும் திராட்சைப் பழங்களிலிருந்து பிழியப்படும் ரசங்களை ஆகுமாக்கப்பட்ட (ஹலாலான) வகையில் பருகுவதை இத்திருவசனங்கள் குறிப்பதாக ஹஸ்ரத் இப்னு ஜுபைர், நகஈ, சஅபீ, அபூதவ்ர் ஆகியோர் கூறுகின்றனர். (தப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் 61:7 வசனத்தில் விரிவுரை) 

திராட்சை என்பதற்கு லத்தீன் மொழியில் என்ன சொல்லோ அதன் சாயலில் வந்த வார்த்தைதான் வைன். உண்மையில் இது பழரசம். அதை மெதுவாக மாற்றியது நம் தவறு. கி.மு. 5000-6000 ஆண்டுகளிலேயே மக்கள் வைன் பருகியிருக்கிரார்கள் என்கிறது விக்கிபீடியா இணையதளம். ஜார்ஜியாவில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வைன் கிடைத்திருக்கிறது. வாரம் இரு கிளாஸ் வைன் குடித்தால் ஆஸ்துமா வராது என்கிறது டென்மார்க் ஆராய்ச்சி நிறுவனம். 

என்ன சிக்கல் என்றால் இன்று வைனுடன் ஆல்கஹாலை அதிகப்படியாக கலந்து அதையும் மதுபான பட்டியலில் சேர்த்துவிட்டோம். இதனால் வைன் தரும் மருத்துவ பலன்களை பெருமளவு இழந்துவிட்டோம். புற்று நோய் வராமல் தப்பாது, இதய நோயை விரட்டுவது, வயதாகும் போது ஏற்படும் மூளை மந்தத்தை தருப்பது....என பல வேலைகளை வைன் செய்கிறது. (தினகரன் 26.05.2013, பக்கம் 11) 

இரண்டாவதாக, 4:44 இல், நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் கூறுவதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மயக்க நிலையில் இருக்கும் போது தொழுகையை நெருங்காதீர்கள் என்று வருகிறது. 

இவ்வசனத்தில் வரும் சுகாரா எனும் சொல்லுக்கு மயக்க நிலை என்று பொருளாகும். இது குடிபோதையை மட்டும் குறிக்காமல், கடுங்கோபத்திற்கு உள்ளானவன், காதல் போதைக்கு உள்ளானவன், அச்சத்தால் தாக்குண்டவன், தூக்க போதைக்கு ஆளானவன் என்றெல்லாம் பொருள் உண்டு. எனவே இத்தகைய நிலைகளில் தொழுகையை நெருங்காதீர்கள் என்று பொதுவாக கூறும் வசனமாகும். குடியை மட்டும் கூறி தடை செய்யும் வசனம் அன்று. 

மூன்றாவதாக 2:219 வசனத்தில், குடிக்காமல் இருப்பதே நல்லது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பி.ஜே கூறுகிறார். இதுவும் தவறாகும். 2:218, 2:219 ஆகிய வசனங்களில் அவர்கள் புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் வினவுகின்றனர் (2:219) என்றும். 

நம்பிக்கை கொனவர்களும், (தம் வீட்டைத்) துறந்து சென்று அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிபவர்களும் ஆகிய இவர்களே (2:219) என்றும் போரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. 

2:220 வசனத்தில் அவர்கள் உம்மிடம் மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் வினவுகின்றனர் என்று வருகிறது. 

எனவே, இது போருடன் சம்பந்தப்பட்ட கேள்வி என்று விளங்குகிறது. அக்கால மக்களிடம் போரில் மதுவும், உணவும் வழங்குவதற்கு பலர் முன்வருவார்கள். போரிடும் வீரர்களுக்கு மதுவையும், உணவையும் யார் வழங்குவது என்பாது பற்றி சீட்டுக் குலுக்கிப் போட்டு பார்த்து முடிவு எடுப்பது வழக்கம். இதுவே இங்கு சூதாட்டம் என்று கூறப்படுகிறது. இந்த சூதாட்டத்தில் யார் பெயர் வருகிறதோ அவர்கள் போர் வீரர்களுக்கு மதுவும் உணவும் வழங்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்படும். 

இவ்வாறு செய்வதில் கொஞ்சம் நன்மையையும் மிகுதியாக தீமையும் உண்டு என்று இவ்வசனம் கூறுகிறது. எனவே இவ்வசனம் குடியைப் படிப்படியாக குறைக்கும் வசனம் ஆகாது. 

முழுமையாகத் தடை செய்யப்பட்ட வசனம் 5:91, 5:92 என்பதே சரி. 

நம்பிக்கை கொண்டவர்களே! போதைப் பொருள்கள், சூதாட்டம், சிலைகள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியன அருவருக்கத்தக்கதும் சைத்தனின் செயலும் ஆகும். எனவே நீங்கள் வெற்றி பெரும் பருத்து அவற்றிலிருந்து (முற்றிலும்) விலகிக் கொள்ளுங்கள். இதில் நம்பிக்கை கொண்டவர்களே என்று அழைக்கப்பட்டுள்ளது. போதை தரும் மதுவும் சூதாட்டம், சிலை, குறிபார்க்கும் அம்புகள் என்று வருகிறது. முற்றிலும் விலகுங்கள் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே மதுவை தடை செய்த சட்டம் 5:90-91 என்பதே சரி இவ்வசனம் எதனையும் ரத்து செய்யவில்லை.
Read more »

May 29, 2014

அஹ்மதிய்யா ஜமாத்தும், கவிஞர் இக்பாலும்


தமிழ் நாடு வக்பு வாரியத்தின் மாத ஏடான ‘இஸ்மியில்’ மௌலான என்பவர் அஹ்மதிய்யா ஜமாஅத் பற்றிய தமது கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார், 

“மகாகவி இக்பால், காதியானிகளை முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து மாற்றிவிடவேண்டுமென வெகுகாலத்திற்கு முன்பே கூறினார். அவருடைய கூற்று அப்பொழுது முக்கியத்துவம் இல்லாமல் ஆக்கப்பட்டிருந்தது”

அஹ்மதிய்யா ஜமாத்தை எதிர்ப்பவர்கள், ‘அஹ்மதிகள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று கூறுவதற்கு, கவிஞர் இக்பாலின் வாலைப்பிடித்துக் கொண்டு, அந்த ஒரு சான்றே போதுமானது எனப் பேசுவது வழக்கம். ஆனால், அல்லாமா இக்பால், பாக்கிஸ்தானில் உள்ள ஸியால் கோட்டில் படித்துக் கொண்டிருந்த பொழுதே அவர் அஹ்மதிய்யா ஜமாஅத்தின் மீது பற்றும் பாசமும் கொண்டிருந்தார். கவி இக்பாலின் வரலாற்றை முறையாகப் படித்திருந்தால் விளங்கிக் கொள்ளமுடியும். அவர் வாலிபராக இருந்த காலத்தில், லூதியானாவில் உள்ள ஒரு புகழ் பெற்ற மௌலானாவும், கவிஞருமான ஸ அதுல்லாஹ் ஸஅதி என்பவர், ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களைத் தாக்கித் தரக்குறைவான வார்த்தைகளைக் கொண்ட ஒரு கவிதை எழுதியிருந்தார். அச்சமயம் கல்லூரி மாணவரான கவி இக்பால் ஒரு கவிதையின் மூலமே பதிலடி கொடுத்து ஒரு கவிதை எழுதினார்கள் அது பின்வருமாறு: 

நாற்றமெடுக்கும் உமது நாவு கண்டோம் – அதை

போற்றுவோர் தோட்டிகளே!

மலர் கொழிக்கும் பூங்காவல்ல உமது கவிதை 

மலஜல கூடமே காண்பீர்!

முத்துகளல்ல உமது கவிதைகள் – மாறாக

மௌத்துக்கள், இழவுகள் இன்னாத சொற்கள்,

தூரிகையால் வரைந்த ஓவியமன்று உமது கவிதை – அன்றி 

துடப்பக்கட்டை குச்சிகளின் கீரல்கள்

உண்மையெனும் வெயிலில் நின்று தவிக்கின்றவரே – உமக்கு 

உலகியற்றியான் நிழல் தரட்டும்.

யூதராக மாறிவிட்ட உமக்கு – இனி 

வேதியர் வேஷமெதற்கு – அதிலிருந்து வில 

காத தூரம் சென்றுவிட்டீரே ஐயோ! போதும் போதும் 

கழற்றிடுவீர் உமது தலைப்பாகையை!

(ஆயினாயே ஹக் நுமா பக்கம் 107) 

இப்போதைய இந்த மௌலானக்களுக்கும் இக்கவிதை ஒரு அறிவுறையாக இருக்கின்ற படியால், இதைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம். 

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களைப் பற்றி, இக்பால் ஒரு கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார். 

“தற்போது இந்தியாவிலுள்ள முஸ்லிம்களில் மிர்ஸா குலாம் அஹ்மத் மிகப் பெரிய சிந்தனையாளராக இருக்கிறார். (இந்தியன் என்குயரி 1900 A D)

மேலும் அஹ்மதிகளைப் பற்றி அவர் ஒரு நூலில் கூறியுள்ளதாவது: 

“என்னுடைய கருத்து என்னவென்றால் உண்மையான இஸ்லாமிய ஒழுங்கு முறையை, ஹஸ்ரத் நபிகரீம் (ஸல்) அவர்கள் தங்கள் செயல் முறை மூலம் முன் மாதிரியை கட்டித்தந்துள்ளார்கள். இம் முன்மாதிரியை கடைப்பிடிக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். 

பஞ்சாபிலுள்ள காதியானி ஜமாத்தின் இஸ்லாமிய ஒழுங்கு முறை பரிபூரண மாதிரி வெளிப்பட்டிருக்கின்றது. (மில்லத் தே பைலபார் ஏக் இம்றானி நஸர் 1919) 

கவி இக்பாலும் ஈஸா நபி (அலை) மரணமும்: 

இவ்விஷயம் பற்றி இக்பால் கூறுவதாவது, ‘நான் இந்த (அஹ்மதிய்யா) இயக்கம் பற்றிப்படித்ததன் காரணமாக, நான் அறிந்து கொண்ட உண்மை என்னவென்றால், ஈஸா நபி அவர்களின் மரணம், ஒரு சாதாரணம் மனிதனின் மரணத்திற்கொப்பானதுதான் என்பதும், அவருடைய இரண்டாவது வருகையாகக் கூறப்படுவது, அவருடைய குண இயல்புகளைக் கொண்டவரும், அவருக்கொப்பானவருமான ஒருவர் வருகையைப் பற்றியதே என்பதாகும். (அல்லாமா இக்பால்கா பைகாம் மில்லத்தே இஸ்லாமியாகே நாம்: பக்கம்: 32) 

இக்பாலும், ஜிஹாதும்: 

‘வன்முறையை ஆதரிக்கின்றவன் முஸ்லிம் அல்ல. ஷரியத்தின் அடிப்படையில் வன்முறையை ‘ஜிஹாத்’ எனக் கூறுவதற்கில்லை. மார்க்கப் பிரச்சாரத்தினிமித்தம் வாளேந்துவது தடுக்கப்பட்டிருக்கிறது. (மகாதீபே இக்பால் பாகம் 1. பக்கம் 203) 

இக்பாலும் ‘இறுதி நபி’ கொள்கையும்:

இன்றைய முஸ்லிம்களையும், அவர்களுடைய நிலை கெட்ட மௌலானாக்களையும் கண்டு, அவர்களை சீர்திருத்த, ஒரு நபி வரவேண்டியது அவசியமென, இக்பால் கீழ்வரும் வசனங்களில் எழுதுகிறார். 19-07-1916 இல் மௌலானா ஹசன் நிசாமி என்பவருக்கு எழுதிய கடிதத்தில் கூறுகின்றார். 

“..........உங்கள் பிராத்தனை இக்காலத்தில் நிறைவேறினால் எவ்வளவு நலமாக இருக்கும்! அல்லது நபி பெருமானார் (ஸல்) அவர்கள் மீண்டும் ஒரு முறை இங்கு வந்து, இந்தியாவிலுள்ள முஸ்லிம்களுக்கு உண்மையான இஸ்லாத்தைப் பற்றி விளக்கிக் கூறுவார்களேயாயின், அது எவ்வளவு நல்லதாக இருக்கும். (மகாதிபே இக்பால் பாகம் 1, பக்கம் 41) 

இது மட்டுமின்றி, இன்னொரு கடிதத்தில் கீழ்வருமாறு எழுதுகிறார். அதாவது, ‘நான் நபிகள் நாயகத்தின் பிரதிபலிப்பு – நிழல் என்று வாதிக்கும் இயக்கத்தின் ஸ்தாபகரின் வாதத்தை, நாம் வரலாற்று அடிப்படையில் ஆராய வேண்டும்.” (மகாதிபே இக்பால் பக்கம் 1, பக்கம் 419) 

இக்பாலும் அஹ்மதிய்யா ஜமாத்தும்: 

“அஹ்மதிய்யா ஜமாஅத்தில் இஸ்லாத்தின் மீது பற்றுக் கொண்டோர் ஏராளமாகக் காணமுடியும். இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக அவர்கள் ஆற்றும் பணிகள் பாராட்டுக்குறியவை ஆகும். ஒரு இயக்கத்தில் சேருவதும், சேராமலிருப்பதும் வேறு விஷயம். ஆனால், உலகில் இஸ்லாத்தை வெற்றி பெறச்செய்வதற்காக அஹ்மதிய்யா ஜமாஅத்து காட்டிவருகின்ற ஆர்வமும், துடிப்பும், தீவிரமும் உளமாரப்பாராட்டப்பட வேண்டியதாகும்” (மகாதீபே இக்பால் பாகம் II: பக்கம் 232) 

மேற்கண்டவாறெல்லாம், அஹ்மதிய்யா இயக்கம் பற்றியும், அதன் ஸ்தாபகர் பற்றியும் பாராட்டியதுடன், அதன் கொள்கைகளையும் ஆதரித்து ஆமோதித்து வந்த இக்பால், பிற்காலத்தில் அஹ்மதிய்யா இயக்கத்தை எதிர்க்கத் துவங்கினார் என்பது சிந்திக்கவேண்டிய ஒரு விஷயமாகும். இந்த மனமாற்றத்திற்கு ஒரு வரலாற்று உண்மை மறைந்திருக்கிறது. 

24-07-1931 ம் வருடம் சிம்லாவில் ஒரு அனைத்திந்திய முஸ்லிம் மாநாடு நடைபெற்றது. காஜா ஹஸன் நிஜாமி, அல்லாமா இக்பால் கலந்து கொண்ட அம்மாநாட்டிற்கு விஷேச அழைப்பின் பேரில் அப்போதைய அஹ்மதிய்யா ஜமாஅத்தின் இமாம், ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மத் அவர்களும் வருகைதந்திருந்தார்கள். அம்மாநாட்டில் காஷ்மீரில் வாழ்கின்ற முஸ்லிம்களின் மிகவும் பரிதாபகரமான அவலநிலை குறித்து ஆராய்ந்து அவ்வவலநிலை நீங்க திட்டம் தீட்டுவதற்காக, ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்கமிட்டியின் தலைவர் பதவிக்கு, அஹ்மதிய்யா ஜமாஅத்தின் கலீபா அவர்களின் பெயரை, அல்லாமா இக்பால்தான் முன் மொழிந்தார். அங்கு கூடியிருந்த மற்ற தலைவர்களும் அதை ஏகமனதாக ஆதரித்தனர். ஏகோபித்த அம்முடிவை ஏற்று, அஹ்மதிய்யா ஜமாஅத்தின் கலீபா ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மது அவர்கள், அக்குழுவின் தலைவராக, காஷ்மீர் மக்களின் துயர் நீக்க பல திட்டங்களை தீட்டி, செயலாற்றினார்கள். இத்திட்டங்களை நிறைவேற்றும்பொருட்டு அஹ்மதிய்யா ஜமாஅத்து ஏராளமான பொருள் தியாகங்கள் செய்தது. அதன் காரணமாக, அஹ்மதிய்யா ஜமாஅத்திற்கும், அதன் தலைவர் அவர்களுக்கும், காஷ்மீர் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு ஏற்பட்டது. 

அதே சமயத்தில் அதாவது 1934,35 ஆம் ஆண்டில், பஞ்சாபிலும், அதன் சுற்றுவட்டாரங்களிலும் அஹ்ராரி இயக்கம் தோன்றி, அஹ்மதிய்யா ஜமாத்திற்கெதிராக மக்கள் மத்தியில் மாபெரும் கிளர்ச்சியை தூண்டிவிட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெறும் வெற்றிகரமான பணியைக் கண்டு பொறாமை கொண்டு, அதன் காரணமாக அல்லாமா இக்பாலின் மனதைக் கலைக்க அஹ்ரார் இயக்கம் அவரைத்த லைவராக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டது. அதோடு, மேலும் பல பதவிகளை தருவதாக வாக்களித்தனர். இவ்வாறான காரணங்களால், உலகாசை, பதவி, புகழ் இவற்றிக்கு ஆசைப்பட்ட இக்பால், அச்சமயம் முதற் கொண்டு தமது எண்ணங்களைப் படிப்படியாக மாற்றிக்கொண்டு அஹ்மதிய்யா ஜமாஅத்தை எதிர்க்கும் வகையில் தமது அபிப்ராயங்களை வெளியிடத் துவங்கினார். 

இதுவே நடந்த உண்மை. பதவி ஆசையாலும், பண மோகத்தாலும் கண்கள் மறைக்கப்பட்டு, இன்றும்கூட, ஆலிம் சாஹிபுகள் அஹ்மதிகளை எதிர்த்துக்கொண்டிருப்பதை நாம் சாதாரணமாகக் காணமுடியும். அந்த வகையில் ‘இஸ்மியின்’ மௌலானாவும் ஒருவராக இடம்பெற்றுள்ளார் என்பதில் எமக்கு ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
Read more »

May 27, 2014

கரைபடியாத மறைநூல் – திருக்குர்ஆன்


“இன்னா நஹ்னு நஸ்ஸல்னாத் திக்ர வ இன்னா லஹு ல ஹாபிலூன்.” 

நிச்சயமாக நாமே இந்த திக்ரை (திருக்குர்ஆனை) இறக்கினோம். மேலும் நாமே இதன் பாதுகாவலனாக இருப்போம்” (திருக்குர்ஆன் 15:10) 

திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்ட மறைநூல் மட்டுமன்று அவனால் எல்லாக் காலத்திலும் பாதுகாக்கப்படுகின்ற அற்புத நூலும் கூட என இத் திருவசனம் அறிவுறுத்துகின்றது. 

வேத நூற்களாகட்டும, வேதாகமமாகட்டும் அவற்றில் இறை வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்று கூறலாமேயொழிய அவை முழுக்க முழுக்க இறை வசனங்கள் எனக் கூறயியலாது. ஏனெனில் அவற்றில் நீக்கப்பட்டதும் புதிதாக சேர்க்கப்பட்டதும் அநேகம் உண்டு. 

இந்த உண்மையை அந்த வேத நூற்களைப் போன்றுகின்றவர்கள் கூட ஒப்புக் கொள்கின்றனர். 

ஆனால் திருக்குர்ஆன் அன்று அருளப்பட்ட விதமே இன்றும் இலங்குகின்றது. 

இந்த உண்மையை இஸ்லாமை தூற்றுகின்றவர்கள் கூட ஒப்புக் கொள்கின்றனர். 

இஸ்லாத்தின் எதிரியாகிய சர் வில்லியம் மூயிர் திருக்குர்ஆனைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

“குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் முகம்மதால் தொகுக்கப்பட்டவிதமே அசலாகவும் மாற்றப்படாததகவும் இருக்கிறது.” (லைப் ஆப் முஹம்மது எனும் நூலின் முன்னுரையில்) 

ஜெர்மானிய அறிஞரான பேராசிரியர் நோல்டெக் இவ்வாறு கூறுகிறார். 

“......ஆனாலும் உதுமானின் குர்ஆன் சில இடங்களில் நூதனமாக அமையப் பெற்றிருந்தாலும் அதிலுள்ளவை அசலான வசனங்களாகும்.” (என்சைகிளோ பீடியா பிரிட்டானிகா) 

பேராசிரியர் நிக்கல்சன் என்பவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். 

“இஸ்லாத்தின் மூலாதாரத்தை அதன் ஆரம்பகால வளர்ச்சியையும் கண்டறியத் தக்கவகையில், இதில் (திருக்குர்ஆனில்) தனித்துவமானதும் மறுக்கயிலாதுமான விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. இத்தகைய விஷயங்கள் பௌதீக நூற்களிலோ கிருத்துவ நூற்களிலோ அல்லது வேறு புராதன மத நூற்களிலோ இல்லை” (லிடரரி ஹிஸ்டரி ஆப் தி அரப்) 

ஏனைய மறை நூற்களோடு திருக்குர்ஆனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது திருக்குரானை இறைவனே பாதுகாத்து வருகின்றான். அதற்கான ஏற்பாடுகளை அவனே செய்திருக்கிறான் என்ற உண்மையை தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். 

திருக்குர்ஆன், எழுத்தறிவற்ற மக்களிடம் தரப்பட்டது. ஆனால் அதன் ஒவ்வொரு சொல்லும் பாதுகாக்கப்பட்டுள்ளது. கல்வியறிவுமிக்க மக்களுக்குத் தரப்பட்ட மறை நூற்களில் எதுவுமே அசலாக இல்லை. அவற்றில் சில காணாமலே போய்விட்டன. 

திருக்குர்ஆன் எவ்வித மாற்றமும் நிகழாமல் திகழ்வதற்கு இரண்டு முக்கிய ஏற்பாடுகளை இறைவனே செய்திருக்கின்றான். ஒன்ற, திருக்குரானின் ஒவ்வொரு வசனமும் அது அருளப்பட்ட உடனேயே எழுதப்பட்டு மிகக் கவனமாகப் பாதுகாக்கப்பட்டது. அடுத்து முஸ்லிம்களில் பலர் அந்த வசனங்களை அப்போதே உடனடியாக மனனம் செய்திருக்கின்றனர். 

இந்த உன்னத கைங்கரியம் நாளுக்கு நாள் அதிகரித்து கடந்த நூற்றாண்டுகளில் லட்சோப லட்சம் முஸ்லிம்கள் முழுக் குர்ஆனையும் மனனம் செய்திருக்கின்றனர். 

திருக்குர்ஆன் எவ்வித அப்பழுக்கின்றி திகழ்வதற்கு இன்னும் பல காரணங்களைக் கூறலாம். 

இறைவன், முஸ்லிம்களை திருக்குர்ஆன் மீது அசாதாரணமான பற்றுதல் கொள்ளச் செய்திருக்கிறான். திருக்குர்ஆனின் வசனங்களில் அர்த்தம் புரியாத நிலையில் கூட திருக்குர்ஆனை முஸ்லிம்கள் ஓதுகின்றனர். மனனம் செய்கின்றனர். 

திருக்குர்ஆனின் வசனங்கள் பாடல்கள் போன்று அமைந்துள்ளன அதனால் அவற்றை எளிதில் மனனம் செய்யமுடிகிறது. 

திருக்குர்ஆன் உலகெங்கும் அதன் ஆரம்ப நாட்களிலேயே பரப்பப்பட்டுவிட்டது. அதனால் அதன் வசனங்களைச் சிதைக்க யாருக்கும் வாய்ப்பே இல்லாது போய்விட்டது. 

திருக்குர்ஆனின் மொழியாகிய அராபிய மொழியை இறைவன் உயிருள்ள மொழியாக இன்றும் நடைமுறையிலுள்ள மொழியாக விளங்கச் செய்திருக்கின்றான். 

இயேசு பெருமான் பேசிய எபிரேய மொழியோ ரிஷிகளின் சமஸ்கிருத மொழியோ இன்று வழக்கில் இல்லையென்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்று. 

சுருக்கமாகக் கூறுவதென்றால் திருக்குர்ஆன் எவ்வித இடைச் செருகலுக்கோ நீக்கலுக்கோ இலக்காகாமல் அன்று அண்ணல் நபிபெருமானார் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட விதமே இன்றும் அப்பழுக்கின்றி திகழ்ந்து கொண்டிருக்கின்றது. 

என்றாலும், பல்வேறு கால கட்டங்களில் இந்தத் தூய திருமறைக்கு மாசு கற்பிக்கின்றவர்கள் இருந்தே வந்திருக்கின்றனர். 

அண்மையில் திருக்குர்ஆனை “கம்பியூட்டர்” மூலம் ஆய்வு செய்த அமரிக்காவைச் சார்ந்த டாக்டர் ராஷித் கலீபா என்பவர் திருக்குர்ஆனின் அத்-தௌபா எனும் அத்தியாயத்தின் கடைசி இரண்டு வசனங்கள் இடையில் சேர்க்கப்பட்டவை அல்லது அந்த அத்தியாயம் முழுவதுமே இடைச்செருகலாயிருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். 

சிறிது காலத்திற்கு முன் இந்த டாக்டர் ராஷித் கலீபா திருக்குர்ஆன் முழுவதுமே ஒரு கணக்கின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதுவே மனிதக் கரத்தால் ஆனா ஒரு மறை நூலன்று என்பதற்குச் சான்றாகும் என்று கூறி கீழ்வருமாறு தமது கண்டு பிடிப்பை விளக்கியிருந்தார். 

திருக்குர்ஆனின் முதற் சொல்லான ‘பிஸ்மி’ திருமறையில் 19 இடங்களில் காணப்படுகிறது திருக்குர்ஆன் 114 சூராக்களைக் கொண்டது இது 19 இன் 6 மடங்கு ஆகும். முதலில் அருளப்பட்ட இக்ரஹ் சூரா (சூரா அல்-அலக்) 19 வாக்கியங்களைக் கொண்டது. முதலில் அருளப்பட்ட வசனங்கள் 19 சொற்களை கொண்டிருந்தது. இந்த 19 சொற்களில் 285 எழுத்துக்கள் அது 19X5 ஆகும் இறுதியாக இறங்கிய அந் நஸர் என்ற அத்தியாயமும் 19 வார்த்தைகளைக் கொண்டது. ‘அல்லாஹ்’ என்ற சொல் திருக்குர்ஆனில் 2698 இடங்களில் காணப்படுகிறது. இது 19X142 ஆகும். அதுபோல் (ஒரு பிஸ்மில்லாஹ்வை மட்டும் கணக்கில் கொண்டு) அர்-ரஹ்மான், 57 இடத்தில் காணப்படுகிறது இது 19X3 ஆகும். அர்-ரஹீம் 114 இடத்தில் காணப்படுகிறது. இது 19X6 ஆகும். இப்படி திருக்குர்ஆன் முழுவதுமே 19 ஆம் எண்ணுடன் தொடர்புள்ளதாக இருக்கிறது. இதைத்தான் ‘அதன் மேலிருப்பது பத்தொன்பதாகும்’ (74:31) என்று திருமறை வசனம் உணர்த்துகிறது. 

இவ்வாறு டாக்டர் ராஷித் கலீபா எண் கணித அடிப்படையில் திருக்குர்ஆனின் சிறப்பை விளக்கிட முயன்றிருந்தார். ஆனால் இப்போது சூரா “அத்-தௌபா’வின் இரண்டு வசனங்கள் இவருடைய கணிப்பிற்கு இணங்கி வராத காரணத்தால் அவை பிற் காலத்தில் சேர்க்கப்பட்டவை என்கிறார். 

அகில உலகையும் படைத்துக் காத்து பரிபாலித்து வரும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் வசனங்கள் கம்பியூட்டரில் அடங்க வேண்டும் என இந்த ராஷித் கலீபா எதிர் பார்ப்பது எத்துணை பேதமைத்தனமானது? 

இடைச்செருகல் என்பதற்கு திருக்குர்ஆனைப் பொறுத்த அளவில் எக்காலத்திலும் வாய்ப்பு இருக்கவில்லை என்பது இஸ்லாமிய வரலாறு கூறும் ஓர் உண்மையாகும். 

ஏற்கனவே குறிப்பிட்டது போன்று திருக்குர்ஆன் எழுதி வைக்கப்பட்ட மறைநூல் மட்டுமல்லாது மனனம் செய்யப்பட்ட நூலும் ஆகும். நபிபெருமானாரவர்கள் வாழ்ந்திருந்த காலத்திலேயே முழுத் திருக்குர்ஆனையும் ஆயிரக்கணக்கானோர் மனனம் செய்திருந்தனர். திருக்குர்ஆனை மக்களுக்கு கற்றுத் தரும் ஏற்பாடும் அப்போது செய்யப்பட்டிருந்தது. “திருக்குர்ஆனைக் கற்க விரும்புவோர் அதனை அப்துல்லாஹ் பின் மஸ்வூத், ஸாலிம் மவ்லா, அபிஹுதைபா, மவ்அத்தா பின் ஜபல், உபை பின் காப் ஆகியோரிடமிருந்து கற்கலாம் என நபிபெருமானார் கூறியதாக ஸஹிஹ் முஸ்லிமில் காணப்படுகிறது. 

ஆரம்பகால முஸ்லிம்கள் திருக்குர்ஆனை கற்பதிலும் அதனை மனனம் செய்வதிலும் அசாதாரணமான ஆர்வம் கொண்டிருந்தார்கள். அந்த மறையை தமது உயிரைவிட மேலாக நேசித்தார்கள். இவர்களைத் தொடர்ந்து கோடிக்கணக்கானோர் இந்த அருள் மறையை தமது இதயங்களிலே பதிய வைத்துள்ளனர். இவற்றையெல்லாம் மீறி இரண்டு வசனங்கள் புகுந்துவிட்டன என கூறுவதென்றால் அது அபத்தமேயாகும். டாக்டர் ராஷித் கலீபா கம்பியூட்டரில் நேரத்தை செலவிட்டதற்கு பதில் இஸ்லாமிய வரலாற்றை ஆராய்வதற்குச் செலவிட்டிருந்தால் இது போன்ற அபத்தக் கருத்தை வெளியிட்டிருக்க மாட்டார். 

அண்ணல் நபிபெருமானார் (ஸல்) அவர்களும் கலீபாக்களும் திருக்குர்ஆன் விஷயத்தில் எந்த அளவுக்கு கவனமுள்ளவர்களாக இருந்தார்களென்றால் அதன் சொற்களை உச்சரிப்பதில்கூட தவறு வரக்கூடாது என்று விரும்பினார்கள். திருக்குர்ஆனை ஒரு சஹாபி கற்றுக் கொடுக்கும்போது அவர் சரியாக ஒதுகின்றாரா என்பதை நபிபெருமானாரவர்கள் மறைந்திருந்து கண்காணித்த ஒரு நிகழ்ச்சி ஸஹீஹ் முஸ்லிமில் விபரிக்கப்பட்டிருக்கிறது. 

அண்ணல் நபிபெருமானார் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் முஸைலமா என்பவன் முஸ்லிம்களோடு போர்தொடுத்தான். அந்தப் போரில் ஐநூறு ஹாபில்கள் ஷஹீத் ஆனார்கள். அப்போது ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் அப்போதிருந்த கலீபாவான ஹஸ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களிடம் திருக்குர்ஆனை நூல் வடிவிலாக்க வேண்டுமென்ற யோசனையைத் தெரிவித்தார்கள். ஹஸ்ரத் அபூபக்கர் அவர்கள் முதலில் இதற்கு இணங்காவிட்டாலும் பிறகு அந்த ஆலோசனையை ஏற்று அப்பணியை ஹஸ்ரத் செய்து பின் தாபித் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். ஹஸ்ரத் செய்த் அவர்கள் நபிபெருமானாரிடமிருந்து திருக்குர்ஆன் வசனங்களைக் கேட்டு அவற்றை பதிவு செய்தவர்களில் ஒருவராவார். பதிவேடுகளைத் திரட்டி அதிலுள்ளவைகளை, முழுத் திருக்குர்ஆனையும் மனனம் செய்தவர்களைக் கொண்டு சரிபார்த்து திருக்குர்ஆனை நூல்வடிவில் அமைக்க ஹஸ்ரத் அபூபக்கர் அவர்கள் பணித்தார்கள். 

திருக்குர்ஆனை நூல்வடிவாக்கும் இப்பெரும் பணி மிகுந்த கவனத்தோடு பல சஹாபிகளின் கண்காணிப்புடன் செய்து முடிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இடைச் செருகல் என்பது எள்ளளவும் சாத்தியமில்லை. டாக்டர் ராஷித் கூறுவது போன்று புதிதாக இரண்டு வசனங்களை யாரேனும் புகுத்த முற்பட்டிருந்தால் முழுத் திருக்குர்ஆனையும் தமது உள்ளத்தில் வைத்துள்ள சஹாபா பெருமக்கள் அதற்கு அனுமதித்திருப்பார்களா? பொங்கி எழுந்து அப்படி செய்ய முனைந்தவனின் தலையை கொய்திருக்கமாட்டார்களா? 

திருக்குர்ஆனுக்கு மாசு கற்பிக்க முனைந்தவர்கள் எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் தோல்வியை தழுவியுள்ளார்கள் என்பது வரலாற்று உண்மையாகும். பேராசிரியர் நோல்டாக் இதனை அழகாகச் சொல்கிறார்:- 

“குர்ஆனில் பிற்காலத்தில் இடைச் செருகல்கள் இருப்பதாக நிரூபிக்க ஐரோப்பிய அறிஞர்களால் செய்யப்பட்ட முயற்ச்சிகள் தோல்வியடைந்தன” (என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா) 

திருமறையில் இடைச்செருகல் உண்டு என்ற தமது தவறான கருத்தை உலகெங்கும் பரப்ப டாக்டர் ரஷித் கலீபா முயன்றிருக்கிறார். 

இறுதியாக, திருக்குரானுக்கு ஒரு சிறந்த விரிவுரையை இக்காலத்தில் வழங்கியவர்களும் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் இரண்டாவது கலீபாவாகத் திகழ்ந்த இஸ்லாத்திற்கு ஈடிணையற்ற ஒரு மகத்தான தொண்டினைச் செய்திருந்தவர்களுமான ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மத் (ரலி) அவர்களின் கவிதை வடிவிலான ஓர் அறிவுரையையே டாக்டர் ராஷிதிற்கு கூறவேண்டியதிருக்கிறது. அது இதுதான். 

“அகல்கோ தேனுபே ஹாகிம்நா பனாவோ, ஹர்கிஸ் ஏ தோ ஹூத் அந்திஹே, கர் நய்யரே இல்ஹாம் நஹோ”

அறிவைக் கொண்டு மார்க்கத்திற்கு ஒருபோதும் தீர்ப்பளிக்காதே! இல்ஹாம் எனும் இறையொளி இல்லையென்றால் அறிவு குருடானதே!

இறுதியாக டாக்டர் ராஷித் கலீபாவிற்கு திருக்குர்ஆனின் பதில்!

இவருடைய கம்பியூட்டர் கணிப்புகளால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் மேற் கூறப்பட்ட தவறான கூற்றுக்குக் கிடைக்கும் தண்டனைப்பற்றியும் அவர் எந்த அத்தியாயத்தின் அடிப்படையில் கணக்கெடுத்துள்ளாரோ அதிலேயே அல்லாஹ் கூறியிருக்கிறான். 

நிச்சயமாக அவன் நினைப்பது போல் அல்ல. அவன் நம்முடைய வசனங்களுக்கு கடும் விரோதியாக இருக்கின்றான். விரைவில் நான் அவனை கடினமான சிகரத்தில் ஏற்றி விடுவேன் (ஏனென்றால்) அவன் திருக்குர்ஆனைப் பற்றி) சிந்தனை செய்து தவறான கணிப்பை செய்திருக்கிறான். அவன் தவறான கணிப்பு செய்ததினால் அவனுக்கு அழிவே ஏற்பட்டு விடும். (மீண்டும் நான் கூறுகிறேன்) அவனுடைய பொய்யான கணிப்புகள் அவனை நாசத்திற்கே ஆளாக்கிவிடும். (74:16-18) 

இது மனிதனுடைய வசனம் (இடைச் செருகல்) என்று கூறுபவனை ஸகர எனும் நரகத்தில் நான் எறிவேன். அந்த ஸகர் எனும் நரகம் என்ன வென்பதை நீர் அறிவீரா? அது எவரையும் விட்டுவைக்காது. மனிதனுடைய தோலை எரித்துவிடும். அதன் மீது (அவனுக்கு தண்டனை கொடுக்க) பத்தொன்பது அமரர்கள் இருப்பார்கள். (74:25-30)
Read more »

May 26, 2014

சுவர்கதிற்குரிய 73 வது பிரிவு அஹ்மதிய்யா ஜமாஅத்தே - முல்லாக்களின் ஏகோபித்த கருத்து.


மௌலவி ஸபர் அலி என்பவர் கீழ்வருமாறு ஒரு அறிக்கையை விடுத்திருந்தார்; அவர் கூறுகிறார்:

"இந்த செயற்குழு (அதாவது 1974 செப்டம்பர் 6 ஆம் நாள் அன்று பாகிஸ்தான் அரசு ஒரு குழுவை அமைத்து அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தை காஃபிராக்கியது அந்த செயற்குழு) கடந்த 1400 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக "இஜ்மாயே உம்மதிற்கான" (சமுதாயத்தில் ஏகோபித்த கருத்தை அறிகின்ற) வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று காதியானிகளுக்கு எதிராக 72 பிரிவுகள் (இங்கு கவனிக்க வேண்டியது) ஒன்று சேர்ந்திருக்கின்றன. ஷியா, சுண்ணி, அஹ்லே ஹதீஸ், வஹ்ஹாபி, தேவ்பந்தி, பரேல்வி, ஆகிய பிரிவுகளைச் சார்ந்தவர்களும் மற்றும் ஏனைய எல்லா பிரிவினார்கள், பீர்முர்ஷத்கலும் எல்லா சூஃபி மார்களும் காதியானிகள் காஃபிர்கள் என்றும் இஸ்லாத்திலிருந்து விலகியவர்கள் என்றும் ஏக மனதாக கூறி உள்ளனர்." (ஸமீந்தார் 5-11-1974 பக்கம் 2)

அடுத்து "நவாயே வக்த்" எனும் ஏட்டில் "72 பிரிவினரின் இஜ்மா" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதை பாருங்கள்:

......................."இஸ்லாமிய வரலாற்றில் இதற்கு முன்னர் ஒரு முக்கிய பிரச்சனையை குறித்து சமுதாயத்தின் ஏகோபித்த கருத்து இருந்ததாக தகவல் இல்லை. இந்த ஏகோபித்த கருத்தை நாடெங்குமுள்ள எல்லா உலமாக்களும் , அரசியல் தலைவர்களும் சூஃபிகளும் ஒன்று பட்டு தெரிவித்துள்ளார்கள். முஸ்லிம்களிலுள்ள 72 பிரிவுகளும் இவ்விஷயத்தில் ஒன்று பட்டிருப்பது மகிழ்ச்கிக்குரியதாகும்." (நவாயே வக்த் 6-10-1974)

என்னவோரு தீர்ப்பு....! இந்த முல்லாக்கள் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்கள் "அந்த 72 கூட்டத்தினர் நரகவாசிகளாக இருப்பர்" என்ற தீர்ப்பை மறந்து நபி (ஸல்) அவர்களின் அந்த தீர்ப்புக்குரியவர்கள் நாங்களே என்பதை "நுணலும் தன் வாயால் கெடும்" என்ற பழமொழிக்கேற்ப தங்களது வாயினால் ஒப்புக் கொண்டு விட்டார்கள்.....! இங்கு நடுநிலை வாதிகள் சற்று சிந்திக்க வேண்டும்...

இப்போது சொல்லுங்கள் சகோதரர்களே அந்த 73 வது கூட்டம் யார்....? எந்த விஷயத்தை குறித்து இவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் தெரியுமா? 72 பிரிவானதில் நாம் ஒன்று சேர்ந்திருப்பதில் இவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

அல்லாஹ்வின் நியதி எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை பாருங்கள்! நாங்கள் 72 பிரிவார் ஒரு புறம் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் ஜமாஅத் அதாவது 73 வது பிரிவு தனியாக மறுபுறம் என இவர்களே கூறியிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணை! நீங்களே அந்த 72 பிரிவுகள். நாங்கள் 73 வது பிரிவு அதாவது தனித்து விடப்பட்ட ஒதுக்கப்பட்ட ஒரே ஜமாஅத். இந்நிலையில் உங்களின் "ஃபத்வா" வெறும் செல்லாக் காசுகள். அண்ணல் மாநபி (ஸல்) அவர்களின் தீர்ப்பே விலை போகும். அந்த மனிதப் புனிதரின் தீர்ப்பு தவறானது என நிரூபித்து காட்டக்கூடிய ஒருவனை எந்த தாயும் பெற்றெடுக்கவில்லை. இனி பெற்றெடுக்கவும் மாட்டாள்..

1974 செப்டம்பர் 6 ஆம் நாள் உங்களுக்கு இருள் நிறைந்த நாளாக பிறந்திருக்கிறது. அன்றைய தினம் எங்களுக்கு ஓர் ஒளி மயமான நாளாகும். ஏனெனில் அன்றைய தினம் அண்ணல் மாநபியின் முன்னறிவிப்பு நிறைவேறியுள்ளதை நீங்களே உறுதி செய்து விட்டீர்கள். நபி பெருமானாரின் அந்த மகத்தான முன்னறிவிப்பை பொய்யாக்க முனைந்து நீங்கள் தோற்றுப் போனீர்கள். அதுவோ மிகப்பிரகாசமாக நிறைவேறி விட்டது. நீங்கள் 72 பிரிவாரும் ஒன்று பட்டு எங்களை தனியாக ஒதுக்கியதின் மூலம் நீங்கள் அத்தனை பிரிவாரும் பொய்யான ஜமாத்துக்கள் என உங்களுக்கு எதிராகவே தீர்பளித்து கொண்டிருக்கிறீர்கள்.

அண்ணல் மாநபி முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களிடமிருந்து எங்களைப் பிரித்து விடலாம் என்று எண்ணியிருந்தீர்கள். ஆனால் உங்களின் தீர்ப்பின் மூலம் அந்த மாநபியோடுள்ள எங்களின் பிணைப்பு மிக இருக்கமானது என்பதை வெளிப்படுத்தி விட்டீர்கள்.

உங்களால் விரிக்கப்பட்ட வலையில் நீங்களே விழுந்து விட்டீர்கள். உங்களுடைய உலமாக்களும் பெரியவர்களும் முன்பு கூறியிருந்த ஃபத்வா க்களை நீங்களே செல்லாக் காசுகளாக்கி எங்களுக்கு எதிராக அணி திரண்டீர்கள். அண்ணல் மாநபி சொன்ன அந்த ஒரு ஜமாஅத் அஹ்மதிகளாகிய நாங்கள்தான் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். இதன் மூலம் எல்லாம் வல்ல இறைவன் வெற்றியின் வாயிலை எங்களுக்கு திறந்து தந்துள்ளான். இது குறித்து நாங்கள் பெரும் மகிழ்ச்சியும், திருப்தியும் அடைந்திருக்கின்றோம். அல்ஹ்மதுலில்லாஹ்............!!
Read more »

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர்கள் அளித்த பதிலும்.


கேள்வி: கலிமா கூறுபவரையும், கிப்லாவை முன்னோக்கித் தொழுபவரையும் காபிர் என்று கூறுவது சரியானதல்ல” எனத் தாங்கள் ஆயிரக்கணக்கான இடங்களில் எழுதியுள்ளீர்கள். இதிலிருந்து நம்பிக்கையாளர்களில் எவர்கள் தங்களை நிராகரித்தால் “காபிர்” ஆகி விட்டார்களோ அவர்களைத் தவிர தங்களை ஏற்றுக் கொள்ளாததால் மட்டும் எவரும் காபிர் ஆகமாட்டார் என்று தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அப்துல் ஹகீம் கான் என்பவருக்கு “எனது தூதுச் செய்தி எட்டியபின்னர் என் மீது நம்பிக்கை கொள்ளாத ஒவ்வொருவரும் முஸ்லிம் ஆகமாட்டார்” என எழுதியுள்ளீர்கள். “திரியாகுல் குலூப்” என்ற புத்தகத்தில் என்னை ஏற்றுக் கொள்ளாததால் எவரும் காபிர் ஆக மாட்டார்” என்று எழுதியுள்ளீர்கள். இப்போது நீங்கள் எழுதியதற்கும் இதற்கு முன்னர் நீங்கள் எழுதியதற்கும் இடையில் முரண்பாடு உள்ளதே? விளக்கம் தருக. 

பதில்: நீங்கள் காபிர் என்று கூறுபவரையும், என்னை நம்பாதவரையும் தனித்தனியாகப் பிரிக்கின்றீர்கள். ஆனால் இறைவன் பார்வையில் இவர்கள் ஒருவரேயாவர். எவர் என்னை ஏற்றுக் கொள்வதில்லையோ அவர் என்னை குறித்து, நான் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவன் என்றே கருதுகின்றார். ஆல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவன் எல்லாக் காபிர்களையும் விடக் கொடிய காபிராக இருப்பதாக அல்லாஹ் கூறியுள்ளான். 

“அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுகின்றவனை விடவும் அல்லது அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப் படுத்துகின்றவனை விடவும் கொடியோன் எவன்? (திருக்குர்ஆன் 7:38 ) 

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்திலிருந்து முதலாவதாக அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுகின்றவர் கொடிய காபிராக இருக்கின்றார் என்றும் இரண்டாவதாக, அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்படுத்துகின்றவர் கொடிய காபிராக இருக்கின்றார் என்றும் தெரிகிறது. என்னைப் பொய்ப்படுத்துகின்ற ஒருவரது பார்வையில் நான் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனாக இருப்பதால் அது உண்மையென்றால் நான் காபிர் மட்டுமல்ல, மாறாக கொடிய காபிராக இருக்கின்றேன். ஆனால், நான் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனாக இல்லாமல் இருந்தால் என்னை நிராகரிப்பவரின் மீதே அவரது “குப்ர்” வீழ்கிறது. இதைத்தான் மேற்கண்ட வசனம் எடுத்துக் கூறியுள்ளது. 

எனவே எவர் என்னை ஏற்றுக் கொள்வதில்லையோ அவர் இறைவனையும் அவனுடைய தூதரையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் இறைவனும் அவனுடைய தூதரும் என்னைப் பற்றிச் செய்துள்ள முன்னறிவிப்புகள் இருக்கின்றன. அதாவது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதிக்காலத்தில் என்னுடைய உம்மத்திலிருந்து வாக்களிக்கப்பட்ட மஸீஹ் தோன்றுவார் என முன்னறிவித்துள்ளார்கள். மேலும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “மிஹ்ராஜ்” சம்பவம் நடைபெற்ற இரவில் மஸீஹ் இப்னுமர்யம் இவ்வுலகிலிருந்து காலம் சென்றுபோன நபிமார்களோடு கண்டிருக்கின்றார்கள். மேலும் ஷஹீதாக விளங்கிய எஹ்யா (அலை) அவர்களுடன் அன்னாரை இரண்டாவது வானத்தில் கண்டார்கள். மஸீஹ் இப்னுமர்யம் மரணித்துவிட்டதாகத் திருக்குர்ஆனும் அறிவிக்கின்றது. இறைவன் எனது உண்மைக்கு சாட்சியாகத் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான இறை அடையாளங்களை வெளிப்படுத்தியுள்ளான். மேலும் விண்ணில் எனக்காகச் சூரிய, சந்திர கிரகணங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இப்போது எவர்கள், இறைவனும் அவனுடைய தூதரும் கூறியவற்றை ஏற்றுக் கொள்ளாமலும் திருக்குர்ஆனைப் பொய்ப்படுத்துகின்றவராகவும் இருக்கின்றார்களோ, மேலும் தெரிந்து கொண்டே இறைவனது அடையாளங்களை மறுத்து என்னை அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனாகக் கருதுகின்றார்களோ, அவர்கள் எவ்வாறு நம்பிக்கையாளர்களாக இருக்கமுடியும். 

அவர் ‘முஹ்மின்’ ஆக இருந்தால், நான் இறைவன் மீது பொய்யைப் புனைந்து கூறுவதன் காரணமாக காபிராகி விடுகின்றேன். ஏனெனில் நான் அவரது பார்வையில் நான் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனாக இருக்கின்றேன். அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: 

“நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம் என்று காட்டரபிகள் கூறுகின்றனர். நீர் கூறுவீராக! நீங்கள் (உண்மையிலேயே) நம்பிக்கை கொள்ளவில்லை. நாங்கள் (வெளிப்படையாகக்) கட்டுப்பட்டோம் என்று நீங்கள் கூறுங்கள். ஏனெனில் (உண்மையான) நம்பிக்கை இதுவரை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. (திருக்குர்ஆன் 49:15) 

இதிலிருந்து கட்டுப்பட்டு நடப்பவர்களையே அல்லாஹ் ‘முஹ்மின்’ என்று பெயரிடாத போது, இறைவனது வசனங்களை பகிரங்கமாக பொய்ப்படுத்துவதிலிருந்து விலகாதவர்கள், நான் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறாதவனாகவும் “முஹ்மின்” ஆகவும் இருக்கும் நிலையில் என்னைப் பொய்ப்படுத்தி நிராகரித்ததன் பிறகு அவர்கள் “காபிர்கள்” ஆகி விட்டதைத் தாமாகவே ஏற்றுக் கொள்கின்றனர். என்னைக் “காபிர்” என்று கூறியதன் காரணமாக அவர்கள் தங்கள் “குப்ரி”ன் மீது சாட்சி முத்திரை இடுகின்றனர். (ஹகீகதுல் வஹி, ரூஹானி கஸாயின், தொகுதி 22, பக்கம் 167)
Read more »

May 21, 2014

தென்காசியாரின் குற்றச்சாட்டு - அவருக்கு அற்புதங்கள் மூவாயிரம் எனக்கோ மூன்று இலட்சம்


ஆரம்ப காலம் முதலாகவே உண்மையின் எதிரிகள், பொய்யின் நண்பர்கள், இறைவன் புறமிருந்து தோன்றும் எல்லா இறைதூதர்களுக்கும், மார்க்க சீர்திருத்தவாதிகளான முஜத்திதுமார்களுக்கும் எதிராகப் பொய், வஞ்சகம், முதலியவைகளின் அடிப்படையில் அவர்களை எதிர்த்தும், துன்புறுத்தியும் வந்துள்ளனர். அவர்களுக்கு எதிராக மக்களிடையே தப்பெண்ணங்களையும் பொய்ப் பிரச்சாரங்களையும் கட்டவிழ்த்துவிட்டு மக்கள் அவர்களை ஒப்புக்கொள்வதிலிருந்தும் தடை செய்து கொண்டிருந்தார்கள் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. பார்க்க (திருக்குர்ஆன் 4:61, 7:46) 

எல்லா இறைத்தூதர்களுக்கும் எதிராக ஒரேவிதமான ஆட்சேபனைகள் கூறப்பட்டு வந்துள்ளன என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. 

“(நபியே) உமக்குமுன் தோன்றிய எல்லா நபிமார்களுக்கும் எதிராகவும் கூறப்பட்ட ஆட்சேபனைகள் உம்மீதும் கூறப்பட்டும். (41:44) 

இறைவனாலும், திருநபி (ஸல்) அவர்களாலும் முன்னறிவிக்கப்பட்டு இக்காலத்தில் தோன்றியிருக்கும் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களுக்கு எதிராகவும் பொய், ஏமாற்று இவற்றின் அடிப்படையில் இதே போன்று ஆட்சேபனைகளும், குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டு வருகின்றன. 

இஸ்லாத்தின் கொடிய எதிரியாகிய சுவாமி தயானந்த சரஸ்வதி தமது ‘சத்தியார்த்தப் பிரகாஷ்’ என்ற நூலின் 14 வது அத்தியாயத்தில் திருக்குரானின் பல வசனங்களை முன்னும், பின்னும் நீக்கியும், வெவ்வேறு அத்தியாயங்களில் உள்ள வெவ்வேறு வசனங்களை எடுத்து முன்னும் பின்னும் நீக்கி ஒன்றாக சேர்த்து ஏராளமான ஆட்சேபனைகளையும், பொய்க் குற்றச்சாட்டுகளும் செய்துள்ளார். இதே வழியைத்தான் தயானந்த சரஸ்வதியின் வாரிசுகளான ஆலிம்கள், சிறிதளவேனும் இறையச்சமும், இறை பக்தியுமில்லாமல் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களுக்கு எதிராகவும் கடைப்பிடித்து வருகின்றனர். 

அண்மையில் ஒரு சகோதரர் எனக்கு எழுதிய கடிதத்தில், “முஸ்லிம் சீர்திருத்தம்” (ஆசிரியர் – முஹம்மது அப்துல்காதிர் – தென்காசி) என்ற புத்தகத்தில் மிர்ஸா குலாம் அஹ்மதைப் பற்றி எழுதப்பட்டுள்ளதாகக் கூறி அதற்க்கு விளக்கம் தருமாறு கேட்டுள்ளார். 

அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து ஆட்சேபனைகளும், சுவாமி தயானந்த சரஸ்வதி திருக்குர்ஆனின் வெவ்வேறு அத்தியாயங்களில் இருந்து வசனங்களை ஒன்றாகச் சேர்த்து, இஸ்லாத்திற்கும், திரு நபி (ஸல்) அவர்களுக்கும் எதிராக செய்துள்ள ஆட்சேபனைகளைப் போன்றே இருக்கின்றன. 

மேற்கண்ட அந்த புத்தகத்தில் 190-191 ஆம் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.

“காதியானி மிர்ஸாஜி கூறுகிறார், உங்களது நபியைவிடவும் நான் அந்தஸ்தில் உயர்ந்தவன். அவருக்கு அற்புதங்கள் மூவாயிரம் எனக்கோ மூன்று இலட்சம்” மேலும் இருபது இலட்சம் வரையுண்டு (ஹகீகத்துல் வஹி பக்கம்:46, பராஹீனே அஹ்மதியா பாகம்:5, பக்கம்:128, துஹ்பே கோல்டவியா பக்கம்:63) 

ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களால் எழுதப்பட்ட இந்த நூல்களை, ‘முஸ்லிம் சீர்திருத்தம்’ ஆசிரியர் கண்ணால்கூட பார்த்திருக்கமாட்டார் என்று உறுதியாகக் கூறமுடியும். ஏனென்றால் அந்த நூல்களில் அவ்வாறு எழுதப்படவே இல்லை.

உங்களது நபியை விடவும் நான் அந்தஸ்தில் உயர்த்தவன் என்று ஹஸ்ரத் அஹமது (அலை) அவர்கள் எந்த நூலிலும் கூறவில்லை. ஹஸ்ரத் அஹமத் (அலை) அவர்கள் முஸ்லிம்களிடம் “உங்கள் நபி” என்ற வார்த்தையை எவ்வாறு பயன்படுத்தவார்கள். இது தயானந்த சரஸ்வதியின் நேரடி வாரிசான தென்காசியாரின் உளறலேயாகும். அவருக்கு எங்கள் பதில் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும், கோபமும் உண்டாவதாக’ என்ற இறைவசனமேயாகும். 

மேலும் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்களை விட தான் அந்தஸ்தில் உயர்ந்தவன் என்று எங்கும், எதிலும் கூறவில்லை. இதுவும் தென்காசியாரின் பொய் குற்றச்சாட்டாகும். 

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் உர்து, பார்ஸி, அரபி, ஆகிய மொழிகளில் என்பதிற்கு மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்கள் அவை அனைத்திலும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை புகழ்ந்து எழுதியுள்ளார்கள். இத்தகைய புகழ்ச்சியைப் படிக்கும் எந்த ஒரு மனிதனாலும் இத்தகைய அபாண்டமான பொய்யைக் கூற முடியாது. அவ்வாறு கூறியிருக்கும் தென்காசியாரோ அவரைப் போன்றோரோ இறைவனின் சாபத்திலிருந்து தப்பமுடியாது. 

ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் இவ்வாறு எழுதியுள்ளார்கள். 

“ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் எல்லா இறைதூதர்களைவிடவும் சிறந்தவரும் உயர்ந்தவரும் காதமுன்னபியீனும் இதுவரை வந்த, இறுதி நாள் வரை வரைப்போகும் எல்லா மனிதர்களைவிடவும் அந்தஸ்திலும், மகத்துவத்திலும் உயர்ந்தவராவார்கள். (ஆயினாயே கமாலாத்தே இஸ்லாம்) 

“எல்லா ஆன்மீக பிரகாசங்களின் உறைவிடமான எங்களது தலைவர் ஹஸ்ரத் முஹம்மத் நபி (ஸல்) அவர்களே ஆவார்கள். அந்தப் பிரகாசத்தில் நான் அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறேன். நான் அந்த பிரகாசத்திலிருந்து புறப்பட்ட ஒரு கதிர் மட்டுமே உண்மையில் முழுப் பிரகாசனமும் அவர்களே. நான் எம்மாத்திரம்.!

எல்லா நபிமார்களைக் காட்டிலும் சிறப்பானவரே! உங்கள் மூலமாகத்தான் நாங்கள் சிறந்த சமுதாயமாக ஆகியிருக்கிறோம். உங்களது காலடிகளைப் பின்பற்றிதான் நாங்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். (துர்ரே ஸமீன்) 

எனது உயிரும் எனது இதயமும் திருநபி (ஸல்) அவர்களுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்றன. எனது உடல் நபி (ஸல்) அவர்களின் வீட்டுவாசலுக்கு அர்ப்பணம். நான் மக்களுக்காக வெளிப்படுத்திய இந்த நீரூற்று எனக்கு சொந்தமில்லை. கரை காணாத கடலாக இருக்கும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட சில துளிகளேயாகும் (துர்ரே ஸமீன்)

“ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுடைய தகுதியையும், மகத்துவத்தையும் மக்களால் கணிக்கவே முடியாது. அவருடைய எளிய தாசனாகிய ஒருவர் இக்காலத்தில் மஸீஹாக தோன்றியிருக்கிறார் என்றால் அந்த ஆத்மீக குருவின் தகுதியும் மகிமையும் எத்தனை உயர்ந்தது.” 

நாம் எல்லாவற்றையும் நபி (ஸல்) அவர்களிடமிருந்துதான் பெற்றுக் கொண்டோம். இறைவா! நீயே இதற்கு சாட்சியாக இருக்கின்றாய்! எங்களுக்கு உண்மையைக் காட்டித்தந்த பூரணச் சந்திரன் எங்கள் தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களே! (துர்ரே ஸமீன்) 

இறைவன் தன்னுடன் உரையாடும் சிறப்பினை எனக்கு வழங்கியிருக்கிறான். ஆனால் இந்த சிறப்பு எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றியதன் காரணமாகத்தான் கிடைத்துள்ளது. நான் நபி (ஸல்) அவர்களின் உம்மத்தாக இல்லாமலும் அவர்களைப் பின்பற்றாமலும் இருந்திருந்தால் உலகில் உள்ள அனைத்து மலைகளின் அளவுக்கு எனது நற்செயல்கள் இருந்திருந்தாலும் இறைவனுடன் உரையாடும் சிறப்பு ஒருபோதும் கிடைத்திருக்காது. ஏனென்றால் தற்போது முஹம்மதிய நுபுவத்தை தவிர எல்லா நுபுவத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. ஷரியத்துடைய நபி எவருமே இனி வரமாட்டார். ஷரிஅத்தில்லாத நபி வரலாம். ஆனால் அவர் முதலில் நபி (ஸல்) அவர்களின் உம்மத்தியாக இருக்கவேண்டும். இதன் அடிப்படையில் நான் உம்மத்தியாகவும் நபியாகவும் இருக்கின்றேன். (தஜல்லியத்தே இலாஹிய்யா பக்கம் 24, 25) 

மேலும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுடைய ஏராளமான நூல்களில் தமக்கும் திருநபி (ஸல்) அவர்களுக்குமிடையிலுள்ள உறவை விளக்கமான முறையில் எடுத்துரைத்துள்ளார்கள். உண்மை இவ்வாறிருக்க ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் முஸ்லிம்களைப் பார்த்து “உங்களது நபியை விட நான் அந்தஸ்தில் உயர்ந்தவன்” என்று கூறியுள்ளதாக கூறுவது தென்காசியாரின் பிதற்றலே அன்றி வேறில்லை. 

பாமர முஸ்லிம்களை ஏமாற்றி அஹ்மதிய்யா ஜமாத்தைப் பற்றியும் அதன் தூய ஸ்தாபகரைப் பற்றியும் அவர்களுக்கிடையில் வெறுப்பையும் துவேஷத்தையும் உண்டாக்கவேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இத்தகையதொரு அபாண்டமான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். 

அடுத்து பொய்யாசிரியர் தென்காசியார் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுடைய நூல்களிலிருந்து இரண்டு வசனங்களை எடுத்து முன்னும் பின்னும் நீக்கிவிட்டு, இல்லாததை சேர்த்தும் முஹம்மது நபிக்கு அற்புதங்கள் மூவாயிரம் எனக்கோ மூன்று இலட்சம் என்று கூறியதாக எழுதியுள்ளார். 

சுவாமி தயானந்த சரஸ்வதி தந்து சத்தியார்த்தப் பிரகாஷ் எனும் நூலில் இதே வழியைத்தான் கையாண்டிருக்கிறார். திருக்குர்ஆனிலுள்ள, “நீங்கள் உண்ணுங்கள் பருகுங்கள் ஆனால் வரம்பை மீறாதீர்கள். (7:32) “நீங்கள் சுய உணர்வற்றவராக இருக்கும் நிலையில் தொழுகையின் பக்கம் அணுகாதீர்கள். (4:44) என்ற வெவ்வேறு வசனங்களை எடுத்து, “தின்னுங்கள் குடியுங்கள் தொழுகையை அணுகாதீர்கள் (7:32, 4:44) என்று திருக்குரானில் கூறியிருப்பதாக தயானந்த சரஸ்வதி எழுதியுள்ளார். 

சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றே தென்காசியாரும். ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களுக்கு எதிராக மக்களை தூண்டி ஏமாற்ற நினைக்கிறார். 

இனி ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் கூறியுள்ளவற்றை காண்போம்:- 

தென்காசியார் எடுத்து வைக்கும் பக்கத்தில் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்: 

எனக்கு துணையாகவும் சாதகமாகவும், எனக்கு பல அடையாளங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றான். இன்றைய நாள் வரை அதாவது 1906 ஜூலை 16 ஆம் தேதி வரை அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் நான் இறைவன் மீது ஆணையிட்டு கூறுகிறேன். அந்த அடையாளங்கள் (நிஷான்) மூன்று இலட்சத்திற்கு மேல் இருக்கும். எனது இந்த ஆணையின் மீது எவருக்காவது நம்பிக்கை இல்லையானால் நான் அதற்குள்ள சான்றுகளைத் தர இருக்கிறேன்.” ( ஹகீக்கத்துல் வஹி பக்கம் - 67) 

மேலும் அதே நூலில் ஏராளமான மறுக்க முடியாத அடையாளங்களை எடுத்துரைத்திருந்தார்கள். 

துஹ்பே கோல்டவியா எனும் மற்றொரு நூலில் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மூவாயிரம் அற்புதங்கள் (முஹ்ஜிஸாக்கள்) கிடைத்திருந்தன என்று கூறியதை இவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இரண்டு புத்தகங்களில் குறிப்பிட்டதை ஒன்றாக சேர்த்து மக்களை ஏமாற்ற முற்பட்டிருக்கிறார். 

தமது உண்மைக்கு ஆதாரமாக 3 லட்சம் அடையாளங்கள் (நிஷான்) தரப்பட்டிருகின்றன என்று குறிப்பிட்ட ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் வேறொரு நூலில் கூறுகிறார்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய அற்புதங்கள் நாலா புறமிருந்தும் ஒளிவீசிக்கொண்டிருக்கின்றன. அந்த அற்புதங்கள் எப்படி மறைந்து போகும். சஹாபா பெருமக்களுக்கு முன்னால் வெளிப்பட்ட அற்புதங்கள் (முஹ்ஜிஸாக்கள்) 3000 க்கும் மேலாக இருக்கின்றன. அந்தந்த நேரங்களில் பூர்த்தியான முன்னறிவிப்புகள் பத்தாயிரத்திற்கும் மேலாக இருக்கின்றன. இவைகளைத் தவிர திருக்குரானில் இருந்து வெளியாகும் ஏராளமான அற்புதங்களும், பிற வசனங்களும் முன்னறிவிப்புகளும் நம்முடைய காலத்திலும் பூர்த்தியாகிக் கொண்டிருக்கின்றன. 

ஒவ்வொரு அற்புதமும் (முஹ்ஜிஸாத்தும்) ஏராளமான அடையாளங்களை(நிஷான்) கொண்டது. அற்புதம், அடையாளம் இரண்டிற்கும் வேறுபாடு தெரியாமல் குழம்பி போயிருக்கிறார் தென்காசியார்.

ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் கூருகிறார்கள்: 

“எந்த அளவில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு முஹ்ஜிஸாத்துகள் (அற்புதங்கள்) கிடைத்திருக்கின்றனவோ அந்த அளவிற்கு எந்த நபிக்கும் முஹ்ஜிஸாத்துகள் எனும் அற்புதங்கள் கிடைக்கவில்லை. முற்கால நபிமார்களுடைய முஹ்ஜிஸாத்துகள் அவர்களுடைய மரணத்துடன் முடிவு பெற்றுவிட்டன. ஆனால் நமது நபி ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முஹ்ஜிஸாத்துக்கள் இதுவரை வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இறுதி நாள் வரை வெளிப்பட்டு கொண்டே இருக்கும் (ஹக்கீக்கத்துல் வஹி பக்கம்: 35)

எனக்கு சாதகமாக வெளியான அற்புதங்களும் உண்மையில் நபி (ஸல்) அவர்களுடைய அற்புதங்களேயாகும். (ஹகீகத்துல் வஹி பக்கம் 35)

இங்கு ஒரு உண்மையைக் கூற விரும்புகிறேன். பொய் சரக்குகளை அவிழ்த்துவிடும் தென்காசியார் என்பவர் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் எழுதிய 80 க்கும் அதிகமான நூல்களில் ஒரு நூலைக் கூட படிக்கவோ, பார்க்கவோ இல்லாமல் அஹ்மதிய்யா ஜமாத்திற்கு எதிராக எழுதப்பட்ட காதியானி மத்ஹப் போன்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட பொய்க்குற்றச்சாட்டுகளைத்தான் காப்பியடித்து எழுதியிருக்கிறார்.
Read more »

May 17, 2014

அந் நஜாத் ஏட்டின் சிந்தனைக்கு - எம். பஷாரத் அஹ்மது.


அந்நஜாத் ஏட்டின் டிசம்பர் மாத இதழில் 18 ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

“அல் குர்ஆனின் எந்த வசனத்தில் எந்த சமூகம் செய்த தவறு சுட்டிக் காட்டப்பட்டிருந்தாலும் அந்த தவறை முஸ்லிம்களும் கண்டிப்பாகச் செய்யக்கூடாது; மீறிச் செய்தால் அந்த சமூகத்தினர் அடைந்த தண்டனையை இவர்களும் அடைய வேண்டிவரும் என்பதே சரியாகும்.

உதாரணமாக அல்குர்ஆன் 7:81 இல் “மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள். நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராக இருக்கின்றீர்கள்” என்று கடுமையாக எச்சரித்துள்ளான் அல்லாஹ்.

இந்த 7:81 இறைவாக்கை ஓதிக் காட்டி முஸ்லிம்கள் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடக்கூடாது என எச்சரித்தால், அதை மறுத்து இந்த 7:81 வசனம் லூத் (அலை) அவர்களின் கௌமுகள்(சமூகம்) பற்றி இறங்கிய வசனம், இதைப் போய் முஸ்லிம்களாகிய எங்களிடம் ஓதிக் காட்டி இந்த தவறை நாங்கள் செய்யக் கூடாது என எச்சரிப்பது என்ன நியாயம்? என்று கேட்பார்களா? புரோகித மௌலவிகள் ஒருகால் இப்படியும் வாதிடலாம்......

என்று எழுதியுள்ளார்.

உண்மையில் திருக்குர்ஆனின் எந்த வசனத்தில் எந்தச் சமூகம் செய்த தவறு சுட்டிக் காட்டப்பட்டிருந்தாலும் அந்தத் தவறை முஸ்லிம்களும் கண்டிப்பாகச் செய்யக்கூடாது. மீறிச் செய்தால் அந்தச் சமூகத்தினர் அடைந்த தண்டனையை இவர்களும் அடைய வேண்டி வரும் என்று குறிப்பிடப்பட்டிருப்பது சரியானதே! தெளிவான கருத்தே!

இப்போது எமது கேள்வி என்னவென்றால் திருக்குர்ஆனில் அல்மூமின் அதிகாரத்தில் 34 வது வசனம்.

"இதற்க்கு முன்னர் யூசுப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனால் அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் சந்தேகத்தில் இருந்தீர்கள். அவர் மரணமடைந்தபோது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்பமாட்டான் என்று நீங்கள் கூறினீர்கள். "இவ்வாறே அல்லாஹ் வரம்புமீறுபவர்களையும், (இறை அடையாளங்களில்) சந்தேகம் கொள்பவர்களையும் வழிகேடர்கள் என்று தீர்மானித்து விடுகின்றான்". ( 40:35 )

"(வழி கேடர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் தொடர்பாக (அல்லாஹ்விடமிருந்து) தங்களிடம் வந்த எந்தச் சான்றுமின்றி வாக்குவாதம் செய்கின்றனர். இது அல்லாஹ்விடமும் நம்பிக்கை கொண்டவர்களிடமும் மிக வெறுக்கத்தக்கதாகும். இவ்வாறே ஆணவமும், அகங்காரமும் கொண்ட ஒவ்வொரு உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரைடுகின்றான்". (40:36 )

இந்த வசனத்தில் ஹஸ்ரத் யூஸுப்(அலை) அவர்களின் சமுதாயத்தினர், யூஸுப் நபி மரணமடைந்தபோது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒரு போதும் அனுப்பமாட்டான் என்று கூறியதாகச் சுட்டிக்காட்டி அவ்வாறு கூறுபவர்களை வழிதவறியவர்கள் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது: இது ஒரு படிப்பினை.

அந்நஜாத் ஏட்டில் குறிப்பிட்டபடி “திருக்குரானில் எந்த சமூகம் செய்த தவறு சுட்டிக் காட்டப்பட்டிருந்தாலும் அந்தத் தவறை முஸ்லிம்களும் கண்டிப்பாகச் செய்யக்கூடாது.” அதாவது யூஸுப் நபியின் சமுதாயம் “அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒரு போதும் அனுப்பமாட்டான்” என்று கூறியது தவறு என்று மேற்சொன்ன திருக்குர்ஆன் வசனம் கூறுகிறது. இந்தத் தவறை அந்நஜாத் உட்பட முஸ்லிம்கள் பலர் செய்கின்றனரே! ஒரு சமுதாயம் செய்த தவறை முஸ்லிம்கள் கண்டிப்பாக செய்யக் கூடாது என அந்நஜாத் ஏடே குறிப்பிட்டுவிட்டு அவர்களே இந்தத் தவறை செய்யலாமா! யூசுப் நபியின் சமுதாயம் கூறியது போல், முஸ்லிம்களும் எந்தத் தூதரையும் அல்லாஹ் இனி ஒருபோதும் அனுப்ப மாட்டான் என்று கூறுவது திருக்குர்ஆன் கூற்றின்படி தவரல்லவா! அந்நஜாத்தின் உபதேசம் ஊருக்கு மட்டும்தானா! அவர்களுக்கு இல்லையா??

இவ்வாறு எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்பமாட்டான் என்று கூறுபவர்களை வழி தவறியவர்கள் என்று மேற் சொன்ன திருக்குர்ஆன் வசனம் கூறுகிற போது அவ்வாறு கூறி, (அதாவது நபிக்கு பின் இனியொரு நபியை இறைவன் அனுப்பமாட்டான் என்று கூறி) மேற்சொன்ன நிலைக்கு ஆளாக வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறுவது தவறு என்பதை அந்நஜாத் உணரட்டும்.

மேற்சொன்ன திருக்குர்ஆன் வசனம் (40:34) முஸ்லிம்களுக்குப் பொருந்தாது என்று அந்நஜாத் கூறுமேயானால் அவர்கள் எழுதியதற்கு அவர்களே முரண்படுகிறார்கள் என்றே பொருள். அந்நஜாத் சிந்திக்கட்டும்; தெளிவு பெறட்டும்.
Read more »

May 11, 2014

இஸ்லாமிய குற்றயியல் சட்டம் (மௌலவி முஹம்மது உமர் H.A)


இவ்வுலக வாழ்வில் மனிதன் இரண்டு விதமான தீமைகளிலும், பாவச் செயல்களிலும் ஈடுபடுகின்றான். ஒன்று ஆன்மீகரீதியான பாவச் செயல்கள். வெளிப்படையான விதத்தில் நிரூபிக்கப்படும் குற்றங்களுக்கு இவ்வுலகத்திலேயே தண்டனை கிடைக்கிறது. ஆனால் யாருக்குமே தெரியாமல் செய்யப்படும் பாவங்களுக்கும், ஷரியத்தின் கட்டளைகளுக்கு எதிராக செய்யப்படும் தீமைகளுக்கும் இறைவனே தண்டனை கொடுக்கிறான். 

இவ்வுலகில் இதுவரை தோன்றியுள்ள எல்லா அரசாங்கங்களிலும், அவற்றின் சட்டங்களிலும் பல்வேறு குற்றங்களுக்கேற்ற விதத்தில் தண்டனை முறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பொதுவான நன்மைகளையும், மக்களின் நலனையும் கருத்தில் கொண்டுமே இந்தத் தண்டனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. 1400 ஆண்டுககளுக்கு முன்னர் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் உலகிற்கு வழங்கப்பட்ட விதிமுறைகள் குற்றத்திற்கான தண்டனைகள் என்பது மட்டுமல்லாது, அவற்றைக் களையும் சிகிச்சையாகவும் திகழ்கின்றன. குற்றத்தையும் பாவச் செயல்களையும் ஒரு நோயாகக் கருதி அவற்றைப் போக்கும் சிகிச்சையாக தண்டனை அமைந்துள்ளது. 

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இஸ்ரவேலர்களின் நிலையை அனுசரித்து, அவர்களுடைய கடின மனப்பான்மையை கருத்திற்கொண்டு ஹஸ்ரத் மூஸா நபி (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட தௌராத் நியாயப் பிரமாணத்தில் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்தன. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், காதுக்குக் காது என்பன போன்ற கடுமையான தண்டனை முறைகள் அதில் அடங்கி இருந்தன. ஆனால் காலம் செல்லச் செல்ல கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் மக்கள் முதிர்ச்சி அடைந்து, எல்லாத் துறைகளிலும் முன்னேறியபோது இறுதி காலம் வரையுள்ள நிரந்தரமான ஒரு ஷரியத்தை எம்பெருமானார் (ஸல்)அவர்கள் கொண்டுவந்தார்கள். 

“நிச்சயமாக நாம் தௌராத்தை இறக்கினோம். அதில் நேர்வழியும், பிரகாசமும் இருந்தது. இறைத்தூதர்கள் அதனைக் கொண்டே யூதர்களுக்குக் கட்டளையிட்டு வந்தார்கள். ....(தௌராத்தில்) உயிருக்குப் பகரமாக உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குகாது, பல்லுக்குப்பல் என்றும் காயங்களுக்கு அவற்றிக்கு தகுந்த பழிவாங்குதல்களும் விதிக்கப்பட்டிருந்தன.” (5:45-46) 

ஆனால் திருக்குர்ஆன் சட்டம் இதற்கு மாறுபட்டதாக விளங்கியது. இஸ்லாம் போதிக்கும் தண்டனையின் நோக்கம் குற்றவாளியின் சீர்திருத்தமே ஆகும். பாவமோ குற்றமோ புரிந்த ஒருவருக்கு மன்னிப்பு வழங்கினால் அவர் திருந்திவிடுவாரென்றால், அவருக்கு மன்னிப்பு வழங்கவேண்டும். ஆனால் தண்டனை தந்தால் மட்டுமே திருந்துவாரென்றால், அவருக்குத் தண்டனை வழங்கவேண்டும். அதாவது எல்லாநேரங்களிலும் மன்னிப்போ, அதே போன்று எல்லா நேரங்களிலும் தண்டனையோ வழங்குவதை இஸ்லாமியச் சட்டம் ஆதரிக்கவில்லை. இந்தச் சட்டம் எல்லாக்காலங்களுக்கும், எல்லா இடங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாக அமையப் பெற்றிருக்கிறது. 

இஸ்லாம் கட்டளையிடும் சில தண்டனை முறைகளையும், அவற்றின் நோக்கங்களையும் நன்கரியாத காரணத்தால், இன்று சில இஸ்லாமிய அரசாங்கங்கள் தவறான முறையில் தண்டனைகளை நிறைவேற்றி அதன் மூலம் இஸ்லாத்தின் எதிரிகளின் ஏளனத்திற்கும், எதிர்ப்புக்கும். இஸ்லாத்தை உட்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

உதாரணமாக திருட்டுக் குற்றத்திற்கு கைகளை வெட்டும் தண்டனையும் இஸ்லாமிய ஷரியத் ஏற்படுத்தியிருக்க வேண்டிய சில நிபந்தனைகளையும் அது குறிப்பிட்டுள்ளது. வாழ்க்கையின் முதன் முதலில் சந்தர்ப்பவசத்தால் ஒருவன் திருடி விடுகிறான் என்றால் உடனே அவனைப் பிடித்து அவனது கைகளை வெட்டவேண்டும் என்பது அச்சட்டத்தின் பொருளல்ல: மாறாக எப்போதும் கொள்ளையிலும் கொலையிலும் ஈடுபட்டு மக்களை பயத்தில் ஆழ்த்தித் திருட்டை மட்டுமே தன் வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு சமூகத்தையே சீரழித்து வரும் ஒரு திருடன் பிடிபட்டால் அவனுக்கு அந்த தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு செய்வது மற்ற திருடர்களுக்கு ஒரு படிப்பினையாக அமையும். 

ஐ.நா சபை நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி (அஹமதிய்யா ஜமாத்தை சார்ந்த ஸர் முஹம்மது ஸபருல்லாகான் ஸாஹிப்) இந்த தண்டனை முறை குறித்துப் பின்வருமாறு எழுதுகிறார்கள். 

ஐதி (கைகள்) என்று திருக்குர்ஆன் கூறுவதற்கு ஓர் உட்பொருள் உண்டு. உதாரணமாக ஹஸ்ரத் இப்ராஹீம், இஸ்ஹாக், யாகூப் முதலிய இறை தூதர்களைப் பற்றிக் குறிப்பிடும்போதும் அவர்கள் ‘ஊரில் ஐதி வல் அப்ஸார் (கைகளும் கண்களும் உள்ளவர்கள்) என்று திருக்குர்ஆன் (38:46) கூறுகிறது. இதற்கு (சக்தியும், செயல்படுதிறனும்) அகப்பார்வை கொண்டவர்கள் என்றுதான் பொருள். இதிலிருந்து ‘ஐதி’ (கைகள்) எனபதற்கு சக்தி, தகுதி, செயல்படுதிறன் என்ற உட்பொருளும் உண்டு என்பது புலனாகிறது அதே போன்று ‘கத்அ’ (அறுத்தல், முறித்தல்) என்ற சொல்லுக்கும் உட்பொருள் உண்டு. உதாரணமாக ‘கத் உல்லிஸான்’ (நாக்கை அறுத்தல்) என்பதற்கு மவுனமாகுதல் பேச்சை அடைத்தல் என்று பொருள் தரப்படுகிறது. அதே போன்று, ‘கத் உல் ஐதி’ கைகளை முறித்தல், என்பதற்கு கைகளைக் கட்டுப்படுத்துதல், கைகளை கட்டிப் போட்டு செயலிழக்க செய்தல் என்று பொருள்படுகிறது (இஸ்லாமிய மனித உரிமைகள் என்ற நூலில்) 

மேலே கூறப்பட்ட விளக்கத்தின்படி ஒரு திருடனைப் பிடித்தால், அவன் எதற்க்காக திருடுகிறான் என்பதையறிந்து அந்தக் காரணத்தைப் போக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். ஆனால் அவன் மேலும் மேலும் திருடவேண்டும் என்ற எண்ணம் கொண்டவனாக இருந்தால் அவனை ஒரு குறிப்பிட்ட காலம்வரை சிறை தண்டனைக்கு உட்படுத்தினால் அவனது கைகளைச் செயலற்றவையாக்குவதற்குகொப்பான நடவடிக்கையாக அது அமையும். 

உண்மையில் ஒரு திருடன் ஒருபோதும் திருந்தமாட்டான் என்றால் அவனது கைகள் நிச்சயமாக வெட்டப்படத்தான் வேண்டும். அப்போதுதான் மக்களின் உயிரும், உடமைகளும் பாதுகாக்கப்படும் பிறருக்கு படிப்பினைத் தரக்கூடிய அடையாளமாகவும் அது அமையும். 

ஆரம்ப காலத்தில் மக்கள் காட்டுமிராண்டிகளாய் வாழ்க்கை நடத்தியபோது அதற்கேற்றவாறு தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றுதான் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்பதாகும். இதைப் பற்றி பைபிளில் பின்வருமாறு காணப்படுகிறது. ஸ்திரியோடு ஒருவன் சயனிக்கக் கண்டு பிடிக்கபட்டால் அந்த ஸ்திரியோடே சயனித்த மனிதனும் அந்த ஸ்திரியும் இருவரும் சாகவேண்டும்....... இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்கு முன் கொண்டு போய் அவர்கள் மேல் கல்லெறிந்து கொல்லக் கடவீர்கள். இப்படியே உன் தீமையை உன் நடுவிலிருந்து விலக்ககடவாய். ஒருவனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து அவளோடு சயனித்தானேயாகில் அவளோடு சயனித்த மனிதன் மாத்திரம் சாகக்கடவன்.” (உபாகமம் 22:22-25) 

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அளிக்கப்பட ஷரியத்தில் மேலே கூறப்பட்ட சட்டம் முற்றிலும் திருத்தி அமைக்கபப்ட்டிருக்கிறது. கல்லெறிந்து கொல்லும் தண்டனை திருக்குரானில் எங்கேயும் கூறப்படவில்லை. 

விபச்சாரக் குற்றத்திற்கு திருக்குர்ஆன் கூறம் தண்டனை பின்வருமாறு அமைந்திருக்கிறது. 

விபச்சாரம் செய்யும் ஆண், பெண் இருவருக்கும் ஆளுக்கு நூறு கசையடி வீதம் கொடுக்கப்பட வேண்டும். அல்லாஹ் விதித்த இந்தக் கட்டளையை நிறைவேற்றுவதில் இவ்விருவருடைய விஷயத்தில் உங்களுக்கு எந்தவிதமான இரக்கமும் இருக்க வேண்டாம். (24:3) 

திருக்குர்ஆன் கூறும் இந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கு நான்கு சாட்சிகள் ஆஜர் படுத்தவேண்டும். அது மட்டுமன்று: அது ஒரு பொய்க் குற்றச்சாட்டென்று நிரூபிக்கப்பட்டால், அவ்வாறு பொய்க் குற்றம் சாட்டியவருக்கு 80 கசையடிகள் கொடுக்கவேண்டும். என திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது. 

எவர் கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறி, அதை நிரூபிப்பதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வருவதில்லையோ அவருக்கு என்பது கசையடிகள் கொடுக்கவேண்டும். அதன்பின் அப்படிப்பட்டவரின் சாட்சியத்தை ஒருபோதும் ஒப்புக் கொள்ளக்கூடாது. ஏனென்றால அவர்கள் வரம்புமீறும் தீயவர்களாவார்கள். (24:5) ‘

இவ்வாறு திருக்குர்ஆன் கூறும் ஷரியத் சட்டங்களை அலசி ஆராய்ந்தால், அதிலுள்ள ஒவ்வொரு சட்டமும் மனிதனுடைய ஆன்மீக நோயை அகற்றக் கூடிய ஒரு நிரந்தர விளைவுள்ள சிகிச்சையாக அமைந்திருப்பதைக் காணமுடியும். திருமணம், பலதாரமணம், விவாகரத்து, விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு கொடுக்கப்படும் ஜீவனாம்சம் போன்றவைகளைப் பற்றி இஸ்லாமிய ஷரியத் கூறும் கட்டளைகளை அலசி ஆராய்ந்தால் அவற்றின் மேன்மையான தன்மையைப் புரிந்து கொள்ளமுடியும். இஸ்லாமிய ஷரியத்தே முழுமையான இறுதியான ஷரியத்தாக இருக்கிறது.
Read more »

May 10, 2014

நோபல் பரிசு பெற்ற முதல் முஸ்லிம் டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை.


நோபல் பரிசு பெற்ற முதல் முஸ்லிம் என்றப் பெருமையைப் பெற்றுத்தந்த அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தின் ஒப்பற்ற தொண்டர் டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் வாழ்க்கையின் சில குறிப்புகளை இங்கு காண்போம். 

பிறப்பு: 

டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் பாகிஸ்தானில் சாஹிவால் (Sahiwal) என்னும் இடத்திலுள்ள சன்டோக்டாஸ் (Santokdas) என்னும் ஊரில் சௌதிரி முஹம்மது ஹுஸைன் அவர்களுக்கும் ஹாஜிரா பேகம் அவர்களுக்கும் 1926 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள், 29ம் நாள் பிறந்தார்கள். டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் பிறப்பதற்கு முன்பே அதாவது 1914 ஆம் ஆண்டே அவர்களது தந்தை அஹ்மதிய்யத்தை ஏற்றுக் கொண்டார்கள். 

கல்வி: 

அப்துஸ் ஸலாம் அவர்கள் பிறந்தவுடன் அவர்களுடைய தந்தையார், அவர்களுக்குச் சிறந்த கல்வி அளிப்பதில் தங்களின் முழுக் கவனத்தையும் செலுத்தினார்கள். அப்துஸ் ஸலாம் அவர்களுக்கு இரண்டு வயது ஆகும் போதே அவர்கள் வசித்த நகரமான ஜங்கின் மிக ஆரோக்கியமான குழந்தைக்குரிய பரிசினைப் பெற்றார்கள். 

அப்துஸ் ஸலாம் அவர்கள் தங்களது ஆறரை வயதிலேயே நான்காவது வகுப்பில் சேர்ந்து படித்தார்கள். அந்த வகுப்பிலேயே அவர்கள் 40 ஆவது வாய்ப்பாடு வரை மனப்பாடமாக படித்திருந்தார்கள். அவர்கள் எட்டாவது வகுப்பு படிக்கும்போது மாவட்டத்திலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்று ஸ்காலர்ஷிப்பாக மாதம் ஆறு ரூபாய் பெற்றார்கள். 

அஹ்மதிய்யா ஜமாஅத் தனது ஐம்பதாம் ஆண்டின் நிறைவினையொட்டி 1939 இல் சிறந்த மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்குவதாக அறிவித்தது. 1940 ஆம் ஆண்டு அந்த ஸ்காலர்ஷிப் பெற்ற முதல் மாணவர் அப்துஸ் ஸலாம் ஆவார்கள். அவர்கள் 1942 ஆம் ஆண்டு லாகூர் அரசு கல்லூரி (Lahore Government College) யில் சேர்ந்தார்கள் அவர்கள் அந்தக் கல்லூரி நடத்திய பத்திரிக்கையின் ஆசிரியராகவும் கல்லூரி யூனியன் தலைவராகவும் பணியாற்றினார்கள். அவர்கள் B.A தேர்வில் பஞ்சாப் பல்கலைக்கழகத்திலேயே மிக அதிகமான மதிப்பெண்களைப் பெற்று முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார்கள். அவர்கள் தங்கள் M.A பரீட்சையிலும் முதல் மாணவராகக் கணிதத்தில் தேர்ச்சி பெற்று , கேம்பிரிட்ஜ் (Cambridge) ல் படிப்பதற்காகப் பஞ்சாப் அரசாங்கத்தால் மாதம் ரூபாய் ஐந்நூற்றைம்பது ஸ்காலர்ஷிப் பெற்றார்கள். 1943 ஆம் ஆண்டில் அவர்களின் முதல் கணிதக் கட்டுரை பத்திரிகையில் வெளியிடப்பட்டது. 

அப்துஸ் ஸலாம் அவர்கள் கேம்பிரிட்ஜிலேயே தங்கி படிக்கும்போது அவர்கள் படிப்பிற்காக ஒரு நாளைக்குப் பதினான்கு முதல் பதினாறு மணிநேரம் செலவழித்தார்கள். அவர்கள் கணிதத்தில் மட்டுமல்லாமல் இயற்பியல் பாடத்திலும் கவனம் செலுத்தினார்கள். மேலும் பல மத நூல்களையும் கற்றார்கள். தங்கள் மூன்றாண்டு படிப்பை இரண்டு வருடத்திலேயே முடித்துவிட்ட அவர்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய சிறப்புத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றார்கள். அவர்கள் தங்களது இரண்டாம் ஆண்டில் கதிர் இயக்கவியல் (Quantum Mechanics) மற்றும் சார்பியல் கோட்பாடு (Relativity) ஆகிய பாடங்களைப் படிக்கத் தொடங்கினார்கள். இவையே அவர்களது விசேஷ பாடங்களாக ஆனது. 

டாக்டர் பட்டம்: 

1949 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் திருமணம் முடித்துவிட்டு அவர்கள் மீண்டும் கேம்பிரிட்ஜிற்கு திரும்பினார்கள். Meson Theory யில் அவர்கள் ஆற்றிய பனி அவர்களுக்கு ‘டாக்டர்’ பட்டத்தை பெற்றுத் தந்தது. அவர்கள் இயற்பியல் (Physics) க்கு ஆற்றிய மகத்தான சேவைக்காக 1950ஆம் ஆண்டு ஸ்மித் பரிசு (Smith’s Prize) கேம்பிரிட்ஜில் இருந்து வழங்கப்பட்டது. 

1951 ஆம் ஆண்டில் அவர்கள் லாகூர் அரசு கல்லூரியில் கணிதத் துறை தலைவராக சேர்ந்தார்கள். 1953 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் அஹ்மதிய்யதிற்கெதிரான கிளர்ச்சியின் போது அவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி 1954 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்கள். இதன் மூலம் அந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் முஸ்லிம் பேராசிரியர் என்ற சிறப்பையும் பெற்றார்கள். 1957 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் அவர்கள் இம்பீரியல் காலேஜ் ஆப் ஸயின்ஸ் அன்ட் டெக்னாலஜி யில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்கள். அவர்கள் அந்தக் கல்லூரியில் இருந்த முதல் எட்டு ஆண்டுகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்சிக் கட்டுரைகளை வெளியிட்டார்கள். அவர்கள் தங்கள் முப்பத்துமூன்றாம் வயதிலேயே (Royal Society of Scientist) என்ற அமைப்பின் பல்கலைகழக ஆட்சி உறுப்பினராக தெரிந்தெடுக்கப்பட்டார்கள். 1959 ஆம் ஆண்டு “சிதாரா-யே-பாகிஸ்தான்” என்ற பட்டம் அளிக்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். 

டாக்டர் அப்துஸ் ஸலாம் பெற்ற விருதுகள். 

டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்களின் ஆராய்ச்சிகள் வெளிவரத் தொடங்கி பல விருதுகளும் பட்டங்களும் அவர்களைச் தேடி வந்தன. அவர்கள் பெற்ற விருதுகளில் சில. 

Hopkins Prize of Cambridge University, 1957, Adams Prize, 1958, Maxwell Medal and award, 1961, Hughes Medal, 1964, Atom for Peace Medal, 1968, Oppenheimer Memorial Medal, 1971, Guthrie Medal, 1976, Sir Devaprasad Servadhikary Medal, 1977, Matteuci Medal, 1978, John Torrence Tate Medal, 1978, Royal Medal, 1978, Nobel prize, 1979, Einstein Prize, 1979, Shiri R.D Birla Award, 1979, Joseph Stephen Medal, 1980, Czechoslovak Academy of Sciences Medal 1981, Lomonosov Medal 1983, Dayemi International Peace Award, 1986. 

டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் அறிவியலுக்கு ஆற்றிய பணிக்காகக் கிடைத்த பரிசுகள், விருதுகள், பட்டங்கள் ஆகியவற்றின் பட்டியல் மிக நீண்டதாகும். அவற்றை இந்தச் சிறு கட்டுரையில் அடக்கிவிட முடியாது. ஆனால் அவர்கள் அறிவியல் உலகிற்கு ஆற்றிய மகத்தான சாதனைகளுள் சிலவற்றையாவது இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். 

I.C.T.P யின் நிறுவுநர்


டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் தங்களுடைய இளம் வயதிலேயே தியரிடிகள் பிஸிக்ஸ் (Theoretical Physica) இல் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாய் திகழ்ந்தார்கள். இதனால் அவர்களுக்குப் பல விருதுகள் கிடைத்தன. ஆனால் இவை எல்லாவற்றையும் விட வளரும் நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அவர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டார்கள். இதன் காரணமாக அவர்கள் 1960 ஆம் ஆண்டு “இன்டர் நேஷனல் பார் தியரிடிகள் பிஸிக்ஸ் (Internatinal Centre for Theoretical Physics) என்ற அமைப்பை நிறுவ முன் மொழிந்தார்கள். அவர்கள் தங்களுடைய விடா முயற்சியினால் தங்களது நீண்ட நாள் கனவுடன் நினைவாக்கும்வகையில் இத்தாலியில் அத்தகைய அமைப்பை நிறுவி 1964 ஆம் ஆண்டு அதன் இயக்குநராக பொறுப்பேற்றார்கள். வளரும் நாடுகளிலுள்ள நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளுக்கு ஒளிவிளக்காக விளங்கிய இந்த அமைப்பு, தற்போது உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகள் கூட அதனுடன் தொடர்பு கொள்வது தங்களுக்குக் கௌரவத்தை அளிக்கும் என்று என்னும் வகையில் உயர்ந்த – சிறந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளது. 

நோபல் பரிசு பெற்ற முதல் முஸ்லிம். 

லண்டன் டைம்ஸ் (London Times) என்ற பத்திரிகையின் கணிப்பின்படி டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் பௌதீக துறையில் நிகழ்த்திய மகத்தான சாதனைகளுக்காக அவர்களுக்கு 1957ஆம் ஆண்டிலேயே நோபல் பரிசு கிடைத்திருக்கவேண்டும். அன்று அவர்களுக்கு மறுக்கப்பட்ட இந்த அறிவியல் உலகின் மகத்தான சிறப்பு, இறுதியில் 1979ஆம் ஆண்டு அவர்களுக்கு கிடைத்தது. நோபல் பரிசு பெற்ற முதல் முஸ்லிம் என்ற சிறப்பு அவர்களுக்குக் கிட்டியது. 

1981 ஆம் ஆண்டு அவர்கள் இந்தியா வந்தபோது, பம்பாயில் பத்திரிகையாளர் ஒருவர் இவ்வாறு கேட்டார்: ‘நோபல் பரிசு கிடைத்த செய்தி உங்களுக்கு அறிவிக்கப்பட்ட போது அதை எப்படி பிரதிபலித்தீர்கள்? இதற்கு டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் கூறிய பதில் “அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன். செய்தி கேட்ட உடனேயே என்னுடைய இடத்திலிருந்து ஒரு மைல் தொலைவில் இருந்த மசூதிக்கு சென்று இறைவனுக்கு நன்றி செலுத்தித் தொழுதேன் என்று கூறினார்கள். 

ஸலாம் அவார்டு துவக்கம். 

நோபல் பரிசுக்கான தொகை 60,000 டாலர்கள் ஆகும். இந்தத் தொகை ஒருவருக்குள்ள பல நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றப் போதுமானதாகும். ஆனால் டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்களுக்கு இருந்த ஒரே ஆசை என்னவென்றால் முஸ்லிம் விஞ்ஞானிகள், தாம் இழந்து விட்ட பெருமைகளை மீண்டும் அடைவதைக் காண்பதே ஆகும். அதற்காகவே அவர்கள் ‘இன்டர்நேஷனல் சென்டர் பார் ஸயின்ஸ் (International Centre for Science) என்ற அமைப்பை ஏற்படுத்த ஒபெக் (OPEC) மாநாட்டில் யோசனை கூறினார்கள். அவர்கள் தங்களுக்குக் கிடைத்த நோபல் பரிசு தொகையான 60,000 டாலர்களையும் இந்த அமைப்பிற்குக் கொடுத்துவிட்டார்கள். இப்பொழுது அதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும், பாகிஸ்தானில் சிறந்த இயற்பியல் ஆய்வு துறை மாணவருக்கான ‘ஸலாம் அவார்டு” (Salam Award) என்னும் விருது வழங்கப்படுகிறது. 

பாகிஸ்தான் அரசின் பிரதம அறிவியல் ஆலோசகர். 

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி அய்யூப்கான் ஆட்சிகாலத்திலும் பின்னர் சுல்பிகார் அலி பூட்டோவின் ஆட்சிக் காலத்திலும் பாகிஸ்தானிய அரசின் பிரதம அறிவியல் ஆலோசகராக டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் இருந்து வந்தார்கள். 1974 ஆம் ஆண்டு பூட்டோ, அஹ்மதிகளை முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினர் எனப் பிரகடனப்படுத்திய பின்னர் அப்பதவியை ராஜினாமா செய்தார்கள். தமது தாய்நாட்டை அறிவியல் துறையில் முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்த டாக்டர் அப்துஸ் ஸலாம், தாம் சார்ந்ததுள்ள அஹ்மதிய்யா ஜமாத்தை முஸ்லிம் அல்லாதவர்கள் என்று பாகிஸ்தான் நேஷனல் அசம்பிலி பிரகடனப்படுத்திய போது தமது பதவியை துச்சமென மதித்து துறந்தார்கள். பதவியை துறந்தது மட்டுமல்லாமல், அந்த நாட்டை விட்டு வெளியேறி உலக அறிவியல் அரங்கில் மகத்தான சேவை புரிந்தார்கள். அவர்கள் சார்ந்துள்ள அஹ்மதிய்யா ஜமாத்தை முஸ்லிம் அல்லாதவர்கள் என்று பிரகடனப்படுத்திய பூட்டோ, 1979 ஆம் ஆண்டு நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு தூக்கிலிடப்பட்டார், அதே ஆண்டு அவரால் முஸ்லிம் அல்லாதவர் என்று கூறப்பட்ட அப்துஸ் ஸலாம் அவர்கள் உலகிலேயே சிறந்த பரிசான நோபல் பரிசைப் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்களின் சென்னை வருகை. 

டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் 12-1-1981 அன்று சென்னை அஹ்மதிய்யா பிரசார நிலையத்திற்கு வருகை தந்தார்கள். கூட்டத்தில் அவர்கள் உரை நிகழ்த்துகையில் கூறியது மறக்க முடியாத ஒன்று. அவர்கள் தமது உரையில், “அமதிய்யத்தே தாம் பெற்ற பரிசுகளில் எல்லாம் மிக மேலானது” என்று கூறினார்கள். மேலும் அவர்கள் தனது உரையில், கடந்த ஆண்டு தனக்கு நோபல் பரிசு கிடைத்ததைப் பாராட்டி ஸுவீடன் அரசின் தலைமையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், 

“இறைவனது படைப்பில் உம்மால் எந்தக் குறைபாட்டையும் காண இயலாது. மீண்டும் பார்ப்பீராக! (அதில்) ஏதேனும் குறைபாடு உமக்குத் தெரிகிறதா? 

பின்னர் நீர் மீண்டும் மீண்டும் (துருவித் துருவிப்) பார்ப்பீராக; இறுதியில் உமது பார்வை தோல்வியடைந்து களைப்படைந்தவாறு உம்மிடமே திரும்பிவிடும்.(திருக்குர்ஆன் 67:4,5) 

என்ற திருக்குர்ஆன் வசனங்களை எடுத்துக் காட்டி விளக்கினேன். திருக்குர்ஆன் இந்த வசனங்கள் இயற்கையின் இரகசியங்களையும் சட்டங்களையும் ஆராய்ந்தறிந்து அவற்றை மக்களுக்கு எடுத்துரைத்து இறைவன் இருக்கின்றான் என்பதையும் அவனது மகத்துவத்தையும் பொறுப்பு, விஞ்ஞானிகளுக்கு உண்டு என்பதை உணர்த்துகின்றன என்று கூறினேன்” என்று குறிப்பிட்டார்கள். 

டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் அறிவியல் துறையில் ஆற்றிய சாதனைகள் பல புரிந்திருந்தாலும் மார்க்கத் துறையிலும் ஆழ்ந்த கவனம் செலுத்தி வந்தார்கள். திருக்குர்ஆன் அல்லாஹ்வின் சொல்லும், விஞ்ஞானமும் அவனுடைய செயலும் ஆகும் என்றும், திருக்குரானும் விஞ்ஞானமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையல்ல என்றும் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காட்டி வந்துள்ளார்கள். 

டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் அஹமதிய்யா ஜமாஅத்தின் தூய ஸ்தாபகர் இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்குக் கிடைத்த இறையறிவிப்புகளை உண்மைப்படுத்துபவராக விளங்கினார்கள். ஹஸ்ரத் இமாம் மஹ்தி(அலை) அவர்கள், 

“என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் உலகக் கல்வியில் உயர்ந்த இடத்தைப் பெறுவார்கள். மேலும் இறைவனைப் பற்றிப் புரிந்துக் கொள்வதில் மிகுந்த தேர்ச்சியையும் பெறுவார்கள். இதன் விளைவாக அவர்கள் உண்மையின் ஒளியை பெற்றவர்களாக ஆதாரங்கள் என்ற ஆயுதங்கள் தரித்தவர்களாக – இறை அடையாளங்களுடன் மற்றவர்களின் வாயை அடைத்து விடுவார்கள். இவர்கள் பெற்ற அறிவுத்திறன் என்ற இந்த ஊற்றிலிருந்து மற்ற தேசத்தவர்களும் நீர் அருந்துவார்கள்” என்று கூறியுள்ளார்கள். 

இந்த வாக்கை அஹ்மதிய்யத்தின் புதல்வர் டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் உலகின் உயர்ந்த பரிசான நோபல் பரிசினைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், மற்றும் பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்று மேற்கத்திய உலகமும் அவர்களை தலைசிறந்த விஞ்ஞானி என்று ஏற்றுக் கொள்ளும்படி செய்து நிறைவேற்றியுள்ளார்கள். 

இறைவன் அவர்களுக்கு மறுமையில் பேரின்ப வாழ்வு அளிக்க நாம் பிராத்தனை செய்வோம்.
Read more »