அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jul 28, 2012

சிலுவை சம்பவத்தில் ஆள் மாறாட்டம் நிகழ்ந்ததா?


சிலுவை சம்பவத்தின் போது ஆள்மாறாட்டம் நிகழ்ந்ததாக முஸ்லிம்களில் பெரும்பாலோர் நம்புகின்றனர். ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களை சிலுவையில் அறைந்து கொல்ல முயன்றபோது, இறைவன் அவர்களைக் காப்பாற்றுவதற்காக வேறொரு நபருக்கு ஈசாநபி (அலை) அவர்களின் உருவத்தைக் கொடுத்தான் என்றும் அந்த நபரையே யூதர்கள் சிலுவையில் அறைந்து கொன்றார்கள் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

ஆனால் திருகுரானிலோ, நம்பகமான நபிமொழிகளிலோ இந்தக் கருத்துக்கு எந்தச் சான்றும் இல்லை. என்றாலும் அந்தக் காலத்து திருக்குர்ஆன் விரிவுரையாளரான தபரி முதல் இந்தக் காலத்து திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளரான ஆ. கா . அப்துல் ஹமீது பாகவி வரை பல்வேறு விரிவுரையாளர்களும். மொழி பெயர்ப்பாளர்களும் தம்முடைய நூல்களில் இந்தக் கட்டுக் கதையை கூறியுள்ளனர்.

இந்தக் கதை, ஆரம்பகாலத்தில் இஸ்லாத்திற்கு மதம் மாறிய யூதர்களாலோ, கிறிஸ்தவர்களாலோ புனையப்பட்டிருக்கவேண்டும். ஏனெனில் இந்தக் கதையை கூறுகின்றவர்கள் எல்லாம் இந்தக் கதைக்கு அறிவிப்பாளர்களாக மதம் மாறிய யூதர்களையோ, கிறித்தவர்களையோதான் குறிப்பிடுகின்றனர். தபரி என்ற திருக்குர்ஆன் விரிவுரையாளர் ஈசா நபிக்கு பகரமாக இன்னொருவர் சிலுவையில் அறையபெற்றார் என்ற கூற்றுக்கு அறிவிப்பாளராக ஹைப் என்ற யூதரையே குறிப்பிட்டுள்ளார். ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்கள் தமது பதினேழு சீடர்களுடன் ஓர் அறையில் இருந்ததாகவும் அதில் ஒருவர் ஈசா நபி போல் இறைவனால் உருமாற்றப்பட்டதாகவும். அவரையே யூதர்கள் சிலுவையில் அறைந்து கொன்றதாகவும் இந்த வஹப் கூறியுள்ளார்.

இந்தக் கட்டுக்கதை தோன்றுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

ஆரம்பக் காலத்தில் இஸ்லாத்தை தழுவிய யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும்,

...... அவர்கள் அவரைக் கொலை செய்யவுமில்லை சிலுவையில் அறைந்துகொள்ளவுமில்லை......." (4:158) 

என்ற திருக்குர்ஆன் வசனம் புரியாத புதிராக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ஈசா நபி சிலுவையில் அறையப்பட்டது நடந்தேறிய ஒரு உண்மை நிகழ்ச்சி. ஆனால் திருக்குரானோ ஈசா நபி சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை என்று கூறுகிறது. இந்தப் புதிருக்கு விடையாக மேற்கண்டகட்டுக்கதையை இவர்கள் புனைந்து கூறியுள்ளனர். சிலுவை சம்பவம் உண்மையில் நிகழ்ந்த ஓன்று. ஆனால் அறியப்பட்டது ஈசா நபி அல்ல. மாறாக அவர்களின் உருவத்தைப் பெற்ற இன்னொருவரே என இவர்கள் கூறினார். 

ஈசா நபிக்குப் பகரமாக அப்பாவியான இன்னொருவர் சிலுவையில் பலியிடப்பட்டாரா? ஈசா நபியை காப்பாற்ற இந்த நியாயமற்ற செயலை இறைவன் செய்தானா? என்ற கேள்வி சிந்திக்கின்ற எவருக்கும் எழும். 

இப்படிப்பட்ட கேள்விகள் எழுமே என்ற எண்ணம் இந்தக் கதையைப் புனைந்தவர்களுக்கும் ஏற்பட்டிருக்கவேண்டும். இதற்காக இன்னொரு துணைக் கதையையும் கூறியுள்ளார்கள். க அதா என்பவரின் கூற்றை ஆதாரமாகக் காட்டி தபரி கீழ்வருமாறு கூறுகிறார்:

"மரியமின் மகன் ஈசா நபி(அலை) அவர்கள் தங்களின் தோழர்களை நோக்கி எனது தோற்றத்தைப் பெற்று சிலுவையில் கொல்லப்பட உங்களில் யார் தயாராக இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்க்கு அவர்களில் தோழர்களில் ஒருவர் இறைவனின் தூதுவரே, நான் அதற்குத் தயார் என்று பதில் அளித்தார். இவ்வாறு அந்த நபர் கொல்லப்பட்டார் இறைவன் தனது தூதரைப் பாதுகாத்து தன்னளவில் உயர்த்திக்கொண்டான். (தி முஸ்லிம் வேர்ல்ட் வால்யும்70 எண், 2 பக்கம் 97 ) 

இப்னு இஷ்ஹாக் என்பவரும் தமது வரலாற்று நூலில் இந்த ஆள்மாறாட்ட கதையைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பலியானவர் ஈசா நபியின் தோழர்களில் ஒருவரன்று, மாறாக சர்கஸ் என்பவரே எனக் கூறுகின்றார். இதே இப்னு இஷ்ஹாக் இன்னோரிடத்தில் பலியானது யூதாஸ் எனக்குறிப்பிட்டு அதற்கு அறிவிப்பாளராக கிறிஸ்தவராக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய ஒருவரைக் கூறுகிறார். ஈசா நபியைப் பிடிக்க வந்த டி டியானஸ் என்பவரே சிலுவையில் பலியானார் என்று கூறுபவர்களும் உண்டு.

எது எப்படி இருப்பினும், இறைவன், ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களைக் காப்பாற்ற அவர்களின் தோழர்களில் ஒருவருக்கே எதிரிகளில் ஒருவருக்கோ ஈசா நபி அவர்களின் உருவத்தைக் கொடுத்து அந்த நபரையே சிலுவையில் மரணிக்கச் செய்தான் என்ற கூற்று சிந்திக்கின்ற எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இறைவன் இந்த நியாயமற்ற செயலை செய்தான் என்று இந்த ஆள் மாறாட்ட நாடகத்தை அரங்கேற்றினான் என்றோ கூறுவது அந்த இறைவனின் தூய தன்மைக்குக் களங்கம் கற்பிப்பதாகும். 

ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களுக்கு முன்னால் தோன்றிய நபிமார்களுக்கு இன்னல்கள் இடுக்கண்கள் ஏற்படாமல் இருக்கவில்லை. அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருந்ததுமில்லை. 

ஹஸ்ரத் இப்ராஹீம்(அலை) அவர்கள், அவர்களின் எதிரிகளால் நெருப்புக்குழியில் போடப்பட்டார்கள். அந்த ஆபத்தை அவர்களே சந்தித்தார்கள். அல்லாஹ் அவர்களை அந்த நெருப்புக் குழியிலிருந்து அற்புதமாகக் காப்பாற்றினான். அதுபோல ஹஸ்ரத் மூஸா(அலை) பிரௌனின் பிடியிலிருந்து காப்பாற்றினான். ஹஸ்ரத் யூனுஸ்(அலை) அவர்கள் கப்பலிலிருந்து கடலில் தள்ளப்பட்ட ஒரு மீனால் விழுங்கப்பட்ட நிலையிலும் இறைவன் அவர்களைக் காப்பாற்றினான். ஹஸ்ரத் யூசுப்(அலை) அவர்கள் சிறுவராக இருந்தபோது அவர்களின் சகோதரர்களாலேயே கிணற்றில் தள்ளப்பட்டார்கள். அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட அந்த தருணத்தில் இறைவன் அவர்களை ஒரு பயணக்குழு மூலம் காப்பாற்றினான். 

இந்த நபிமார்கள் எல்லாம் அவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்துகளை அவர்களே நேரிடையாகச் தந்தித்தார்கள் . இறைவன் அவர்களைத் தனது வல்லமையால் காப்பாற்றி மீண்டும் மக்கள் முன்னால் உலவச் செய்தான். 

அவ்வாறே ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்ட போதெல்லாம் அவர்களே அந்த ஆபத்துகளை சந்திக்க வைத்து அவற்றிலிருந்து இறைவன் காப்பாற்றினான்.

இவ்வாறிருக்க, ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டபோது அவர்களுக்குப் பகரமாக இன்னொருவரை அந்த ஆபத்தில் மாட்டி விட்டு ஈசா நபி அவர்களை இறைவன் உயர்த்திக் கொண்டான் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கமுடியும்? இத்தனை நபிமார்களுக்கு ஒரு நீதி, ஈசா நபி அவர்களுக்கு மட்டும் தனி நீதியா? 

உண்மையில், ஈசா நபி அவர்களும் அவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை அவர்களே சந்தித்தார்கள். அவர்களே சிலுவையில் அறையுண்டார்கள். ஆனால் இறைவன் ஏனைய நபிமார்களை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றியது போன்று ஈசா நபி அவர்களையும் சிலுவையிலிருந்து காப்பாற்றினான். அவர்கள் அதில் மரணமடையாது உயிர்தப்பினார்கள். 

ஈசா நபி அவர்கள் சிலுவையில் அறையப்பட்டார்கள், ஆனால் அவர்கள் அதில் இறக்கவில்லை. இறைவன் அவர்களை அந்த மோசமான மரணத்திலிருந்து காப்பாற்றினான். என்ற புதிய கருத்தை - பகுத்தறிவு ஏற்கின்ற கருத்தை அஹ்மதியா ஜமாத்தை தோற்றுவித்த ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்களே உலகுக்கு எடுத்துரைத்தார்கள்.

இந்தக்கருத்து திருக்குர்ஆன் வசனங்களுக்கோ, நபிமொழிகளுக்கோ எவ்வகையிலும் முரண்படவில்லை.

சிலுவை சம்பவம் தொடர்பான திருக்குர்ஆன் வசனத்தில் அதாவது 4:158 ஆம் வசனத்தில் 'ஸலப' என்ற சொல் காணப்படுகிறது இது வெறுமனே சிலுவையில் அறையப்படுவதை குறிக்காது மாறாக சிலுவையில் அறிந்துக் கொல்லப்படுவதையே குறிக்கும். ஏனெனில் 'ஸலப' என்ற சொல் அரபி மொழியில், சிலுவையில் ஏற்றி எலும்பை முறித்தல் என்ற பொருளில் பயன் படுத்தப்படுகிறது. எனவே இந்த வசனத்திற்கு 'வ மா சலபஹு' என்ற சொற்றொடர் சிலுவையில் அறையப்படவேயில்லை என்று பொருள் படாது மாறாக சிலுவையில் அறைந்து கொல்லபபடவில்லை என்ற பொருளையே தரும்.

அடுத்து இந்த வசனத்தில் காணப்படும் ஷுப்பிஹலஹும் என்ற சொற்றோடருக்குத் திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் பலர் இன்னொருவர் அவரைப்போன்று ஆக்கப்பட்டார் என்று பொருள் தருகின்றனர். இவ்வாறு பொருள் கொள்வது இலக்கணப்படி முற்றிலும் தவறானதேயாகும். இங்கு இன்னொருவரை நுழைக்க வழியேயில்லை 'ஷுப்பிஹலஹும்' என்ற சொற்றொடருக்கு அவர் அவ்வாறு (சிலுவையில் கொல்லப்பட்டவர் போன்று) ஆக்கப்பட்டார் என்றோ அது (அந்நிகழ்ச்சி) சந்தேகத்திற்குரியதாக ஆக்கப்பட்டது என்றோதான் பொருள் கொள்ளமுடியும்.

எனவே ஈசா(அலை) அவர்களுக்குப் பகரமாக இன்னொருவர் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்ற கூற்று அடிப்படையற்றதும் ஆதாரமற்றதும் ஆகும்.
Read more »

நூல்களை சுமக்கும் கழுதைகள் - அல்-ஜன்னத் ஏட்டிற்கு பதில்


'கழுதைக்கு தெரியுமா கர்ப்பூர வாசனை' என்பார்கள். ஒன்றைப் பற்றி அல்லது ஒருவரைப் பற்றி சரியாக மதிப்பீடு செய்ய இயலாத அறிவிலிகள் குறித்து இவ்வாறு கூறப்படுவதுண்டு.

தவ்ராத் சுமத்தப்பட்டு, ஆனால் அதன்படி செயல்படாதவர்களின் உவமை, புத்தகங்களை சுமக்கும் கழுதையின் உவமையைப் போன்றதாகும். அல்லாஹ்வின் அடையாளங்களை ஏற்க மறுக்கும் மக்களின் உவமை மிகக் கெட்டதே. அநீதி இழைக்கும் மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை (62:6)

என்று திருக்குரானில் இறைவன் கூறுகின்றான். இறை அடையாளங்களை மறுக்கின்றவர்களை இறைவன் இங்கு கழுதையோடு ஒப்பிடுகின்றான். அத்தகையோர் நூல்களைக் கட்டி மாரடிப்பார்களே தவிர அவற்றில் காணப்படும் கருத்துக்களை குறித்துச் சிந்திப்பது இல்லை. என்பதும் இதில் அடங்கியுள்ளது.

அல் ஜன்னத் மாத இதழின் ஆசிரியரும் இத்தகையோரில் ஒருவர் என்பதை அவருடைய அண்மைக்கால எழுத்துக்கள் பறைசாற்றுகின்றன.

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்திற்கு முன்னுள்ள வசனத்தில் பிற்காலத்தில், அரபியல்லாத மக்கள் மத்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோன்றுவது குறித்து கூறப்பட்டிருக்கிறது. இது குறித்து வியப்படைந்து அக்காலத்திலேயே வினவப்பட்ட கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள், ஈமான் கார்த்திகை நட்சத்திரமளவில் சென்று விடும் போது அதனை திரும்பக் கொண்டு வரும் ஒருவரைக் குறித்தே இங்கு கூறப்பட்டிருக்கிறது என்று விளக்கமளித்துள்ளார்கள். இந்த விளக்கமும் நிகழ்ச்சியும் சஹீஹுள் புகாரியில் இடம்பெற்றுள்ளது.

அதாவது, நபி (ஸல்) அவர்கள் அரபு மக்களிடையே தோன்றி உலகுக்கே வழி காட்டினார்கள். ஆனால் அவர்களைப் பின்பற்றிய சமுதாயம் பிற்காலத்தில் வீழ்ச்சியுறும். அவர்களிடமிருந்து ஈமான் அகன்று விடும். அப்போது ஒருவர் தோன்றுவார். முஸ்லிம்களிடம் இருந்து மறைந்து விட்ட ஈமானை மீண்டும் அவர் நிலைநாட்டுவார். அது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீண்டும் வந்தது போன்று இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக் காலமாக அமைந்து விடும்.

இறைவனின் இந்த வாக்குறுதியும் அதற்க்கு விளக்கமாக விளங்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பும் இக்காலத்தில் நிறைவேறியுள்ளன. இஸ்லாத்தின் எழுச்சியை மீண்டும் உலகில் நிலைநிறுத்த ஒருவர் தோன்றி அந்த மகத்தான பணிக்கு அடித்தள மிட்டுச் சென்றுள்ளார். அவர் தாம் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள்.

இந்த மகத்தான இறையடையாளத்தை மறுத்து தம் மனம் போன போக்கில் உளறிக் கொண்டிருப்பவர்களைக் குறித்தே நூல்களைச் சுமக்கும் கழுதைகள் என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். அதுவும் அவர்களை தவ்ராத் வழங்கப்பட்ட யூதர்களுடன் ஒப்பிட்டுச் சொல்கிறான். ஏனெனில் அவர்கள் இறைதூதரான ஈசா (அலை) அவர்களை மறுத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்புகள் தவ்ராத்தில் இடம் பெற்றிருந்தும் அந்த மாநபியை மறுத்தார்கள். அதனால் அந்த யூதர்கள் நூகளைப் பயனின்றிச் சுமக்கின்ற கழுதைகள் போலானார்கள்.

இதனை ஒரு பாடமாக இறைவன் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்துகின்றான். உங்களிடத்திலேயே திருக்குர்ஆன் உள்ளது. அதிலுள்ள வசனங்களைக் குறித்துச் சிந்தியுங்கள். அதிலுள்ள முன்னறிவிப்புகளைப் புரிந்து கொள்ளுங்கள். இறையடையாளன்களைக் கண்டு கொள்ளுங்கள். இறைவன் புறமிருந்து வந்தவரை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில், நீங்கள் திருக்குர்ஆன் எனும் அற்புத நூலை வெறுமனே சுமக்கும் கழுதைகள் ஆவீர்கள்.

இந்த எச்சரிக்கையைப் சிந்தித்து உணராத அல் ஜன்னத் ஆசிரியரைப் போன்றோர் இறைவன் புறமிருந்து வந்தவரையும் அவருக்குச் சான்றாக வெளிப்பட்ட இறையடையாளங்களையும் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். மறுப்பது மட்டுமே இவர்களின் வாடிக்கையான வழியாகி விட்டது. அடிக்கடி கோயம்புத்தூரில் அஹ்மதிகளுக்கும் இவர்களுக்கும் நடைபெற்ற விவாதம் பற்றி பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். வாழ்க்கையில் இவர்கள் நிகழ்த்திய மகத்தான சாதனை என அவர்கள் எண்ணுகிறார்கள். அதற்கும் களியக்காவிளை விவாதத்தில் சுன்னத்வல் ஜமாத்தினர் வேட்டு வைத்தார்கள். இவர்கள் அந்த விவாதத்தில் நாங்கள் காதியானிகளோடு விவாதம் செய்தோம் என்று கூறினார்கள். அதற்க்கு அஹ்மதியா ஜமாஅத்தின் விரோதிகளான சுன்னத்வல் ஜமாத்தினர் பதில் கொடுத்தனர். 

இவர்கள் எவ்வளவுதான் அஹமதிய்ய ஜமாத்திற்கு எதிராக செயல் பட்டாலும் உண்மை ஒருநாள் வெட்ட வெளிச்சமாகிவிடுகிறது.

ஆனால் அந்த விவாத அரங்கில் இவர்கள் என்ன செய்தார்கள்? மறுத்துக்கொண்டே இருந்தார்கள். இவர்களின் கொள்கைக்கு முறையான ஆதாரங்களைக் காட்டினார்களா? மனிதராகப் இம் மண்ணுலகில் பிறந்த ஈசா நபி, மரணத்தை வென்று இன்றும் உயிரோடு இருக்கின்றார்கள் என்ற இவர்களின் மூடநம்பிக்கைக்கு என்ன சான்றை எடுத்து வைத்தார்கள்? இறைவனுடை பண்பை ஈசா நபி அவர்களுக்கு கொடுத்து இணைவைக்கும் செயலில் ஈடுபட்டார்கள். உணவே உண்ணாத உடலை நாம் இறைத்தூதர்களுக்கு கொடுக்கவில்லை என்று இறைவன் திருக்குரானில் கூறியதற்கு நேர்மாற்றமாக ஈசா நபி அவர்கள் உணவே உண்ணாமல் வானத்தில் உயிரோடு இருக்கிறார்கள் என்று கூறினார்கள். இறைவன் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து "உமக்கு முன்னர் எந்த ஒரு மனிதருக்கும் நிலைத்து வாழக்கூடிய வாழவைக் கொடுக்கவில்லை என்று திருக்குரானில் கூறுகின்றான். ஆனால் இவர்கள் ஈசா நபி வானத்தில் நிலைத்து வாழ்கிறார்கள் என்று கூறி இறைவனுக்கு இணைவத்ததுமல்லாமல் நபி (ஸல்) அவர்களை கேவலப்படுத்தினார்கள். இதுதான் இவர்கள் கோவை விவாதத்தில் நிகழ்த்திய மிகப் பெரிய சாதனை.

இறையருளாக திருக்குர்ஆன் கூறும் நபித்துவம் முடிவுக்கு வந்துவிட்டது, அதுவும் உலகுக்கே இறையருளாக வந்த ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுடன் முற்றுப் பெற்று விட்டது என்ற இவர்களின் பேதமைத்தனமான கொள்கைக்கு ஏதேனும் ஒரு தெளிவான ஆதாரத்தை எடுத்து வைத்தார்களா? நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி என்று கூறிக்கொண்டு, இறுதி காலத்தில் ஈசா நபி வருவார்கள் என்று விவாதம் செய்து இறுதி நபிக் கொள்கையை அவர்களே மறுத்தார்கள்.

அஹ்மதிகள் அடுக்கிக் கொண்டு போன ஆதாரங்களை மறுத்துக் கொண்டே இருந்ததைத் தவிர கோயம்புத்தூர் விவாத அரங்கில் இவர்கள் என்ன சாதித்தார்கள்.

மறுப்பது சாதனையாகிவிடுமா? இப்படித்தானே யூதர்களும் கிருஸ்தவர்களும் நபி(ஸல்) அவர்களை மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தானே நாத்திகர்கள் இறைவனையே மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் திருக்குரானையும் நபி மொழிகளையும் தம்மிடம் வைத்துக்கொண்டு இறையடையாளன்களை மறுக்கும் இவர்களை, அந்த இறைமறையின் கருத்துக்கேற்ப 'நூல்களை சுமக்கும் கழுதைகள்' எனக் கூறுவதில் என்ன தவறிருக்க முடியும். 
Read more »

ஜின்னும் மனிதர்களே - சிராஜ் அப்துல்லாவுக்கு பதில்


ஜின் இனத்தைப் பற்றி முஸ்லிம்களிடையே யுகங்களின் அடிப்படையில் தவறான கருத்துகள் நிலவி வருகின்றன. இதற்க்கு திருக்குரானில் எவ்வித சான்றும் இல்லை. திருக்குர்ஆன் இவர்களின் தவறான கருத்துக்கு நேர் மாற்றமான வகையில் ஜின் இனத்தைப் பற்றி கூறுகிறது. திருக்குரானில் கூறப்படும் ஜின் எனப்படுவோர் யார்? என்பதை திருக்குர்ஆன் அடிப்படையில் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். ஜின் என்பதற்குப் பல அர்த்தங்கள் இருந்தாலும் திருக்குரானில் இந்தச் சொல் 'இன்ஸ்' என்ற சொல்லுடன் சேர்த்துக் கூறப்பட்ட இடங்களில் எல்லாம் மனிதரில் ஒரு பிரிவினர் என்ற நிலையிலேயே கூறப்பட்டுள்ளது என்பதும் அற்புதச் சக்தியுடைய கண்களுக்குப் புலப்படாத தனிப்பட்ட ஒரு படைப்பினத்தைக் குறித்துக் கூறப்பட்டதல்ல என்பதும் திருக்குரானை ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவர்களுக்கு விளங்கும்.
 

ஜின்களில்நபிமார்கள்:-
 

மறுமையில் இறைவன் "ஜின் இன்ஸ் கூட்டத்தாரே! உங்களுக்கு எனது வசனங்களை ஓதிக்காட்டவும், இறுதி நாளின் சந்திப்பைப் பற்றி எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே தூதர்கள் உங்களிடம் வரவில்லையா?" (6:131) என்று கேட்பான்.
இந்த வசனத்தில் ஜின், இன்ஸ் கூட்டத்திலிருந்து தூதர்கள் அவர்களிடம் வந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு ஜின் என்று கூறப்பட்டிருப்பது, கண்ணுக்கு புலப்படாத தனிப் படைப்பு என்றிருந்தால், அந்தப் படைப்புகளிலிருந்து தனியாகத் தூதர்கள் வந்திருக்க வேண்டியது பற்றியும், அவர்களின் செயல் முறைகள் பற்றியும் அவசியம் திருக்குரானில் ஓரிடத்திலாவது கூறப்பட்டிருக்கவேண்டும். ஆனால் மனிதர்களாகிய தூதர்களைப் பற்றிய விஷயங்களே திருமறையில் காணப்படுகிறது. எனவே ஜின் என்று கூறப்பட்டிருப்பது, மனிதர்களில் ஒரு பிரிவினரைக் குறித்தே கூறப்பட்டிருக்கிறது என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.
'இன்ஸ்' என்றால் சாதாரண நிலையில் வாழ்க்கை நடத்தும் மனிதர்களாவர். இன்ஸ் என்பதற்கு அன்பு, நேசம் எனபது பொருளாகும். ஜின் என்பது, சாதாரண மக்களிலிருந்து விலகி வாழைக் கூடிய, மற்ற மனிதர்களுக்கு இலேகுவாகக் காண்பதற்கும், கண்டு பழகுவதற்கும் முடியாத பெரியவர்களை, தலைவர்களைக் குறித்தே கூறப்பட்டிருக்கிறது. ஏனெனில் 'ஜின்' என்பதன் பொருள் 'மறைந்திருக்கக்கூடியது என்பது பொருளாகும்.
இவ்விதம் ஜின், இன்ஸ் என்று கூறப்பட்டிருப்பது அரசனும், குடிமக்களும், எஜமானும், வேலையாளும், முதலாளியும், தொழிலாளியும், சர்வாதிகாரியும், சாதாரண மக்களும், ஆகிய பிரிவினர்களையே குறிக்கும் இரண்டு குணப்பெயர்களாகும் மேற்படி திருக்குர்ஆன் வசனங்களை தொடர்ந்து 'தூதர்களை அனுப்பாதவரை எந்த ஓர் ஊரையும் நாம் அழிப்பதில்லை. (6:131) என்று இறைவன் கூறியுள்ளதும் இதற்க்குச் சான்றாகும். இங்குக் கூறப்பட்டுள்ள ஜின்னும் இன்சும் ஓர் ஊரில் வாழக்கூடியவர்கள் என்பதனால் ஜின் என்று கூறப்பட்டவர்கள் அந்த ஊர்களில் உள்ள மனிதர்களில் ஒரு பிரிவினரையே குறிக்கும் என்பதும், தெளிவாகிறது.

 

ஜின்கள் வலிமைவாய்ந்தவர்கள்:-
 

மறுமையில் அல்லாஹ் ஜின்களை நோக்கி, ஜின்கள் கூட்டத்தினரே! நீங்கள் மனிதர்களில் அநேகரை வசப்படுத்தி உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்கள் அல்லவா? என்று கேட்பான். அதற்க்கு 'இன்ஸ்' கூட்டத்தினர் கூறுவர். 'எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக் கொண்டு பலன் அடைந்திருக்கின்றோம்' என்று கூறுவர். (6:129)
இந்த வசனத்திலிருந்து ஜின், இன்சை விட வலிமையுடையவர்கள் என்றும் இன்ஸ்களை வசப்படுத்துபவர்கள் என்றும் இருவரும் ஒருவருக்கொருவர் பலனடைந்துள்ளனர் என்றும் விளங்குகிறது. எனவே ஜின் எனப்படுபவர் மனிதர்கள் அல்லாமல் வேறொரு படைப்பினமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் இந்த வசனத்திலிருந்து தெளிவாகிறது. எவ்வாறெனில் சாதாரண மக்களை வசப்படுத்தி அவர்களைக்கொண்டு காரியங்களைச் சாதிக்கக் கூடியவர்கள் அரசர்களும், பெரிய முதலாளிகளும், தலைவர்களுமாகவே இருக்கிறார்கள். கண்ணுக்குப் புலப்படாத வேறொரு தனிப் படைப்பினர் அல்ல என்பது தெளிவு. மனிதர்களைவிட உயர்ந்தவர்களும், மனிதர்களை தனது வலையில் விழவைத்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது வேறொரு படைப்பைச் சேர்ந்தவர்களல்ல என்பதும் தெளிவு. இங்கு ஜின் என்றும் இன்ஸ் என்றும் இரு பெயர்கள் கூறப்பட்டிருந்தாலும், அவர்களின் செயல், நடை முறைகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக உள்ளது என்பதை எளிதில் விளங்கிக் கொள்ளமுடியும்.

ஜின்களில் நபிமார்களின் விரோதிகள்:-
 

திருக்குரானில் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்: "இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும் மனிதர்களிலும் (இன்சிலும்), ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கி இருந்தோம். அவர்களில் சிலர் மற்றவர்களை ஏமாற்றும் பொருட்டு அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகக் கூறிக்கொண்டிருந்தனர்." (6:113) இந்த வசனத்தில் நபிமார்களின் எதிரிகள் இன்ஸ்களிலும், ஜின்களிலும் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மனிதர்களே நபிமார்களுக்கு விரோதிகளாக இருந்தார்கள்: அவர்களே பலவித அக்கிரமங்களும் அநியாயங்களும் துன்பங்களும் நபிமார்களுக்குக் கொடுத்து வந்துள்ளார்கள் என்றுமே திருக்குரானும் மற்ற கிரந்தங்களும் கூறுகின்றன. ஆனால் ஜின் என்றுக் கூறப்படக்கூடிய மறைவானப் படைப்பினங்கள் நபிமார்களுக்கு எதிராக யாதொரு தீங்கும் செய்ததாக எங்கும் கூறப்பட்டுள்ளதாகக் காண முடியவில்லை. ஜின்களும், இன்ஸ்களும் நபிமார்களுக் கெதிராக ஒருவருக்கொருவர் உதவி செய்து சதித் திட்டங்கள் தீட்டியதாகவும் ஏமாற்றும்பொருட்டு அலங்கார வார்த்தைகளை இரகசியமாகக் கூறிக்கொண்டிருந்ததாகவும் மேற்படி திருக்குர்ஆன் வசனத்தில் கூறப்பட்டுள்ளது. நபிமார்களின் எதிரிகளாகிய மனிதர்கள், ஜின்கள் என்ற கண்ணுக்குப் புலப்படாத ஒரு தனிப் படைப்போடு கூட்டு சேர்ந்து கொண்டு சதியாலோசனை செய்ததாகவோ அவர்களுடன் ஆலோசனை நடத்தி நபிமார்களுக்கு எதிராக வேலை செய்ததாகவோ எங்கும் கூறப்படவில்லை.
ஆதலால், நபிமார்களுக்கெதிராக சதி திட்டங்கள் தீட்டிய ஷைத்தான்கள் ஜின்னிலும் இன்சிலும் உட்பட்டவர்களாகிய மனிதர்கள் என்றே இவ்வசனத்திலிருந்தும் விளங்க முடிகிறது.
ஜின்களுக்கு உடலுண்டு:-
 

திருக்குரானில் இறைவன் ஓரிடத்தில் இவ்வாறு கூறுகிறான் : " இந்தக் குரானைப் போன்ற ஒன்றைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும்(இன்ஸ்) ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று) அவர்களில் சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும் இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வர முடியாது' என்று (நபியே!) நீர் கூறும். நிச்சயமாக இந்தக் குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் (மிகவும் தெளிவாக) விவரித்துள்ளோம். எனினும் மனிதர்களில் பெரும்பாலானவர்கள். (இதை) நிராகரித்திருக்கவில்லை". ( 17:88,89)
இங்கு ஜின்னும் இன்சும் ஒன்று சேர்ந்து திருக்குரானைப் போன்ற ஒரு தெளிவான வேதத்தைக் கொண்டு வருவதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு முயற்சி செய்து பார்க்கட்டும் என்று இறைவன் சவால் விட்டுள்ளான். அது மட்டுமல்ல அப்படி ஒன்றை உண்டாக்குவதற்கு எதிரிகளில் ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடியுமேயல்லாமல் கண்ணுக்குப் புலப்படாத தனிப் படைப்பாகிய ஜின்களிலிருந்து அவர்களுக்கு உதவி செய்ய முடியாது. மேற்படி வசனத்தின் மூலம் ஜின்களும், இன்ஸ்களும் ஒருவருக்கொருவர் உதவி செய்யக் கூடியவர்களாகவே இருக்கின்றனர் என்றே விளங்குகிறது. இந்த உதவி மனிதர்கள் ஒருவருக்கொருவர் செய்வதல்லாமல், கண்ணுக்குப் புலப்படாத வேறொரு படைப்பினத்திற்கும் மனிதர்களுக்கும் இடையில் நடக்க வாய்ப்பில்லை. ஆதலால் இங்கு ஜின், இன்ஸ் என்று கூறப்பட்டது மனிதர்களில் உள்ள இரண்டு பிரிவினரைக் குறித்தே கூறப்பட்டுள்ளது என்றே விளங்க்கிக் கொள்ள முடியும். அதாவது திருக்குரானை நேரடியாக எதிர்க்கக் கூடியவர்களும், மறைந்திருந்து அந்த எதிர்ப்புக்கு தலைமை தாங்குபவர்களுமாவார்கள் அந்த இரு பிரிவினர். திருக்குரானில் இந்த வசனத்தைத் தொடர்ந்து, மனிதர்களுக்குத் தேவையான அனைத்துப் போதனைகளும் இதில் அடங்கியுள்ளதென்றும் ஆனால் பெரும்பாலானவர்கள் அதனை நிராகரிக்கக் கூடியவர்களாகவே உள்ளனர் என்றும் கூறப்பட்டது இதற்க்குச் சான்றாகும். அந்தப் போதனைகள் மனிதர்களுக்கே உரியதென்றும் அதை நிராகரிப்பவர்களும் மனிதர்களே என்றும் கூறப்பட்டுள்ளது. திருக்குரானை இறைவசனமில்லை என்று நிராகரிப்பவர்களும் , அதனால் அந்த நிராகரிப்பவர்களை நோக்கி இதைப் போன்ற ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள் என்று சவால் விடப்பட்டவர்க்களுமாகிய ஜின், இன்ஸ் இருவரும் மனிதர்களேயல்லாமல் வேறொரு படைப்பினமாக இருக்க வாய்ப்பில்லை என்பதும் இந்த 17:88,89 வசனங்களிலிருந்து சிந்திப்பவர்களால் விளங்கிக் கொள்ள முடியும்.
திருக்குரானில் ஓரிடத்தில் இறைவன் கூறுகிறான்: ' நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும் மனிதர்கள் (இன்ஸ்) களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம். அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெறமாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளை ) பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நர்போதனைகளைக்) கேட்க மாட்டார்கள். இத்தகையோர் கால் நடைகளைப் போன்றவர்கள். இல்லை. அவற்றை விடவும் வழிக்டர்கள் இவர்கள் தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். (7:179)
இந்த வசனத்தில் ஜின்கள் அநேகர் கண்கள் இருந்தும் காணாதவர்கள், காதுகள் இருந்தும், கேட்காதவர்கள், புத்தி இருந்தும் சிந்திக்காதவர்கள். என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இங்கு ஜின்களுக்கும், இன்ஸ் களுக்கும் உள்ளதாகப் பொதுவாகக் கூறப்பட்டுள்ள குணங்கள் மனிதர்களுக்கு மட்டுமே உள்ள குணங்களாகும். ஆகவே ஜின்கள் என்று இங்கு கூறப்பட்டது வலிமைவாய்ந்த பெரியமனிதர்கள் என்று எண்ணப்படக் கூடியவர்களே இங்குக் கூறப்பட்டுள்ளது என்றே விளங்கிக்கொள்ளலாம். இந்த வசனத்தில் ஜின்களையும், இன்ச்களையும் மிருகங்களுடன் ஒப்பிட்டு உவமானமாகக் கூறப்பட்டுள்ளது. பகுத்தறிவும் சிந்தனை செய்யக்கூடிய சக்தியும் வழங்கப்பட்ட மனிதர்கள் அவற்றைப் பயன்படுத்தாமல் ஒதுக்கிவிட்டு பௌதீக இச்சைகளுக்கு ஆளாகி மிருகத்திற்கு நிகராக வாழும் போதுதான் அவர்களை மிருகங்களுக்கு உவமானமாகக் கூறப்படுவதுண்டு. ஜின்கள் மனிதர்களில்லாமல் மறைவான உடலைக் கொண்டவர்களும் இந்த பௌதீகத்துடன் தொடர்பில்லாதவர்க்களுமாக இருந்தார்களென்றால் அந்த தனிப் படைப்பினரைக் குறித்து மிருகத்துடன் உவமானப்படுத்திக் கூறப்பட்டது அறிவுக்குப் பொருந்தாத ஒன்றாகும். அல்லாஹ் ஆதமிலிருந்து அவர்களின் சந்ததிகளை வெளியாக்கி அவர்களை நோக்கிக் "நான் உங்களின் இறைவனல்லவா" (7:172) என்று கேட்ட வசனத்தைத் தொடர்ந்தே (7:179) வசனத்தில் இவ்விதம் கூறியுள்ளான். 

இவ்விதம் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளவேண்டும் என்ற போதனை மனிதர்களுக்கே வழங்கப்பட்டதென்றாலும் அவர்களில் பலர் அந்தப் போதனைகளுக்க் மேர்மாற்றமாக நடக்கிறார்கள், நடப்பார்கள் என்ற விஷயத்தையும் கூறியதைத் தொடர்ந்தே, ஜின்களிலிருந்தும், இன்ஸ்களிலிருந்தும் பலர் நரகத்திற்குரியவர்களாவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஜின்னும், இன்சும் ஆதமின் சந்ததிகளைச் சார்ந்தவர்களாக இருந்தால்தான் இறைக்கட்டளைகைப் புறக்கணித்தவர்கள் என்ற வசனத்திற்கு ஆளாகமுடியும். ஆகவே ஜின்கள் ஆதமின் சந்ததிகளே என்பதால் அவர்களும் மனிதர்களில் ஒரு பிரிவினர் என்பதையே இவ்வசனமும் நமக்குத் தெளிவு படுத்துகிறது. 

Read more »

கற்பனைக் கதைகளின் மணிமகுடம்


(பொய்யன் ஜைனுலாப்தீனுக்கு மறுப்பு)

"இஸ்லாத்தின் பெயரால் கற்பனைக் கதைகள்" என்ற தலைப்பில் ஒரு நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. "போலிகளை இனம் காண இந்த நூல் உதவும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது" என அதனுடைய ஆசிரியர் தனது அறிமுகத்தில் எழுதியுள்ளார்.

இன்றைய மார்க்க உலகில் பரவியுள்ள மூட நம்பிக்கைகளுக்கும், கற்பனைக் கதைகளுக்கும் மணிமகுடமாகத் திகழ்வது ஹஸ்ரத் ஈசா நபி (அலை) அவர்கள் இன்றளவும் பூத உடலோடு உயிர் வாழ்கிறார் என்பதாகும் என்ற பேருண்மையையும் அந்த நூல் தெளிவுபடுத்திக்காட்டுகிறது. இது போன்றதொரு கட்டுரை 1989 மே மாத நஜாத் இதழில் பக்கம் 50 முதல் 53 வரை இதே நடையில் இதில் காட்டப்பட்டுள்ள குரான் , ஹதீஸ் மேற்கோள்களையே ஆதாரங்களாகக் காட்டி தௌஹீது மௌலவி பிஜைனுல்ஆப்தீன் உலவி என்பவரால் எழுதப்பட்டிருந்தது. தற்போது தலைப்புதான் மாறியுள்ளதே தவிர கருத்தில் ஏதும் மாற்றமில்லாத நிலையில் புதுத்தலைப்பில் இந்தக் கட்டுரையின் ஆசிரியர் நூலை எழுதியுள்ளார். ஆகா தௌதீதுவாதிகளின் சிந்தனைத் திறனும் கதைகளின் அடிப்படையிலமைந்த கற்பனை நம்பிக்கையிலான ஈசா நபி (அலை) அவர்களின் நிலையை இவர்களின் எழுத்துக்களிலிருந்தே நாம் அலசி ஆராய்வோம்.

ஹஸ்ரத் ஈசா நபி (அலை) அவர்கள் இன்றளவும் மரணிக்காமல் உயிர் வாழகிறார் என்பது ஒரு கற்பனைக்கதை மட்டுமேயாகும் என்பதற்கு அந்த நூலில் அதன் ஆசிரியர் தரும் சான்றுகளையே கீழே தருகிறோம்:

முதலாவதாக அந்த நூலில் கூறப்பட்டுள்ள கற்பனைக் கதைகளுக்கு திருக்குரானிலோ நபிமொழிகளிலோ எந்த ஆதாரமும் இல்லாதது போலவே ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களும் மரணமடையாமல் பூத உடலோடு எங்கேயோ உயிர் வாழ்கிறார் என்பதற்கு திருக்குரானிலும் நபி மொழிகளிலும் எவ்வித ஆதாரமும் கிடையாது என்பதே உண்மையாகும். ஹிலுறு (அலை) சம்பந்தமாக மக்கள் கூறக்கூடிய கற்பனைக் கதையை மறுப்பதற்காக அந்த நூலில் ஆசிரியர் தரும் சான்றுகள் அனைத்தும் ஈசா நபி (அலை) அவர்களும் இறக்காமல் உயிர் வாழ்கிறார் என்ற நம்பிக்கையும் கற்பனைக் கதையேதான் எனத் தெளிவாகிறது, அந்த நூலில் பக்கம் 37l '(நபியே) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (என்றென்றும் இருக்கக்கூடிய) நித்திய வாழ்வை நாம் ஏற்படுத்தியதில்லை' (அல்குரான் 21;34) திருக்குரான் வசனத்தைக் குறிப்பிட்டு 'நபிகள் (ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த எவரும் நிரந்தரமாக இந்த உலகில் வாழ்கின்ற உரிமையை தரவில்லை என்று மனிதனைப் படைத்த அல்லா கூறுகின்றான்.

இந்த வசனத்திலிருந்து நபிகள் (ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த எவரும் நிரந்தரமாக இருக்கமுடியாது எனத் தெளிவாகின்றது. இந்தப் பொது விதியிலிருந்து விளக்கு அளிக்க வேண்டும் என்றால் அல்லாஹ்வோ அவனது தூதரோ அது பற்றிக் குறிப்பிட்டிருக்க வேண்டும். "ஈசா (அலை) மட்டுமே குரான் ஹதீஸ் மூலம் இந்த விதியிலிருந்து தற்காலிக் விளக்குப் பெறுகிறார்கள் " என்று ஆசிரியர் எழுதியுள்ளார்.

இந்த கூற்றில் கோடிட்ட வசனம் அதாவது 'ஈசா நபி (அலை) மட்டும் விதிவிலக்கு பெறுகிறார்' என்பது ஆசிரியரின் சொந்தக் கற்பனைக் கதையே அன்றி அதற்க்கு குரான் ஹதீஸில் எந்தச் சான்றும் கிடையாது. ஈசா (அலை) மட்டும் இந்த பொது விதியிலிருந்து விளக்களிக்கப்பட்டிருக்கிறார் என்று அல்லாஹ்வோ நபி (ஸல்) அவர்களோ எங்குமே கூறாததை ஆசிரியர் கற்பனையாகக் கூறியுள்ளார். அல்லாஹ் ஒரு விஷயத்திற்கு விதி விளக்களிப்பதாக இருந்தால் தெளிவாகக் கூறியுள்ளதாகவே திருகுரான் மூலமாக அறிய முடிகிறது. உதாரணத்திற்கு 'ஸ்ஃபாத்' தைப் பற்றி அதாவது சிபாரிசு பற்றி அல்லாஹ் கூறுகிறான் 'எவருடைய பரிந்துரையும் பயனளிக்காது என்று ஒட்டு மொத்தமாகக் கூறிவிட்டு 'எவருடைய பேச்சைக் கேட்க விரும்புவானோ அவருடைய பரிந்துரையை தவிர ' என்று விதி விளக்கு வழங்கியுள்ளான் . (பார்க்க அல்குரான் 20:109). அது போன்று ஹராம், ஹலால் விஷயத்தில் பொதுவாக ஒரு சட்டத்தை கூறிவிட்டு 'நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை' என்று விதி விளக்கு வழங்கியுள்ளான். இது போன்று எண்ணற்ற விதி விளக்குகளை அல்லாஹ்வே தெளிவுபடக் கூறியுள்ளதை நாம் திருகுரானில் காணலாம்.

அதுபோல் மனிதர்களுக்கென்று பல சட்டங்களையும் நியதிகளையும் வகுத்துள்ளதாகக் கூறக்கூட்டிய அல்லாஹ் எந்த இடத்திலுமே ஈசா (அலை) அவர்களைப பற்றி மட்டும் தனிமைப்படுத்தி அவர்களுக்கு மட்டும் இது பொருந்தாது, விதிவிலக்கு என்று கூறியுள்ளதாக எங்குமே காணமுடியாது உதாரணத்திற்கு திருக்குரானில் 7 வது அத்தியாயம் 26 வது வசனத்தில் அல்லாஹ் மனிதர்களுக்கென்று வகுத்துள்ள சட்டம் 'நீங்கள் பூமியிலேயே வாழ்வீர்கள், பூமியிலேயே மரணிப்பீர்கள் பூமியிலிருந்தே எழுப்பப்படுவீர்கள்' என்று கூறியுள்ளதாகும் இந்த இறை விதியிலிருந்து ஈசா (அலை) அவர்களை மட்டும் தனிமைப்படுத்திக் கூறியிருந்தால் அவருக்கு விதி விளக்கு என்று கூறலாம் , ஏற்கலாம். அவ்வாறு அல்லாஹ் கூறவில்லையே , எவ்வாறு ஏற்பது? ஆக இந்த கதையும் மாற்ற கற்பனைகதைகள் போல் இந்த ஆசிரியர்களைப் போன்றவர்களால் புனையப்பட்ட கற்பனையாகும் என்பது தெளிவாகிறது.

இதற்கு அந்த நூலின் ஆசிரியர் தரும் சான்றுகளைப் பாருங்கள் :அல்குரான் 3:81 வது வசனமாகிய 'நான் உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் தந்துள்ளேன்; உங்களிடம் இருப்பவற்றை மெய்ப்பிக்கும் தூதர் உங்களிடம் வந்தால் அவர் மீது நம்பிக்கை கொண்டு நிச்சயம் உதவியும் செய்ய வேண்டும் என்று நபிமார்களிடம் உறுதி மொழி எடுத்து, "நீங்கள் இதனை உறுதி படுத்துகின்றீர்களா?" என்னுடைய இந்த உடன்படிக்கைக்கு கட்டுப்படுகின்றீர்களா?' (நபிமார்களை நோக்கி) கேட்டான். "நாங்கள் உறுதிப்படுத்துகிறோம் என்று அவர்கள் கூறினார்கள் . (அல்குர்ஆண் 3:81) என்ற வசனத்தைக் குறிப்பிட்டு தொடர்ந்து எழுதுகிறார்: "இந்த வசனத்திலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மாற்ற நபிமார்கள் உயிருடன் வாழவேண்டிய நிலை ஏற்பட்டால் அவர்கள் கட்டாயம் நபி (ஸல்) அவர்கள் மீது நம்பிக்கை கொண்டு பக்கபலமாகவும் நிற்க வேண்டும் என்று எல்லா நபிமார்களிடமும் உடன்படிக்கை எடுத்ததை அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக மூசா (அலை) உயிருடனிருந்தால் என்னைப் பினபற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று நபி (ஸல்) கூறினார்கள் . அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) ஆதாரம்: அஹமது.

மேற்கண்ட திருவசனத்தின் கருத்தை இந்த நபிமொழி தெளிவாக்குகிறது. "மூஸா (அலை) உட்பட எவர் உயிருடன் இருந்தாலும் அவர் ரசூல் (ஸல்) அவர்கள் மீது ஈமான் கொள்ளவேண்டும், அவர்களுக்கு பக்கபலமாக உதவியும் செய்யவேண்டும் என்பது அவர்களின் கடமையாகும்" என்றும் எழுதியுள்ளார். (பார்க்க பக்கம் 37-33)

மேற்கண்ட விளக்கத்தை எழுதிவிட்டு என்னென்ன கேள்விகளையும் ஐயங்களையும் எழுப்பி ஹிளுறு (அலை) அவர்கள் உயிர் வாழ்கிறார் என்பது கற்பனை கதைதான் என்பதை நிருபிக்க ஆசிரியர் முர்பட்டிருக்கிராரோ அதே ஐயங்களும் கேள்விகளும் ஈசா நபி (அலை) அவர்கள் விஷயத்திலும் நமக்கு எழுகிறதல்லவா? அதாவது 'ஹிளுறு (அலை) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் உயிருடன் இருந்திருந்தால் கட்டாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து ஈமான் கொண்டிருக்க வேண்டும்' என்று கூறுகின்றாரே ஆசிரியர், அவரிடம் நாம் கேட்போம் ஹஸ்ரத் ஈசா நபி (அலை) மட்டும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் உயிருடன் இருந்ததாக நீங்கள் நம்புகிறீர்களே! அவர்கள் நபி (ஸல்) அவர்களை சந்தித்து ஈமான் கொண்டார்களா? ஆசிரியரின் கூற்றுப்படி ஈமான் கொண்டிருக்க வேண்டுமல்லவா? ஹிளுறு (அலை) அவர்களுக்கு மட்டும்தான் மேற்படி 3:81 வசனம் பொருந்தும் ! ஈசா நபி(அலை) அவர்களுக்கு மட்டும் பொருந்தாதா? இந்த ஆயத்திலாவது ஈசா நபி(அலை) அவர்கள் மட்டும் இந்த விதியிலிருந்து விளக்கு பெறுகிறார் என்று அல்லாஹ் கூறி உள்ளானா? அல்லாஹ் கூறாத ஒன்றைக் இட்டுக்கட்டி கூறுவதுதான் தௌஹீது சிந்தனையா ?

அடுத்து ஆசிரியர் கூறுகின்றார்:"இஸ்லாமிய பிரச்சாரத்திற்கு எண்ணற்ற சோதனைகள் வந்தபோதும் பல போர்க்களங்களில் உயிரைப் பணயம் வைத்து சகாபாக்கள் போராடிய போதும் ஹிளுறு (அலை) அவர்கள் அந்த போராட்டங்களில் பங்கெடுத்திருக்க வேண்டும். ஏனெனில் ஹிளுறு (அலை) உட்பட எல்லா நபிமார்களும் (ஈசா நபியும்) இந்த நபிக்கு (முஹம்மது (ஸல்) அவர்களுக்கு) உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளனர் . இந்த சோதனையான காலத்தில் அவர் ஏன் சத்தியத்திற்கு துணை செய்யவில்லை?" என ஹிளுறு (அலை) விசயத்தில் தனது வாதத்தை நிலை நாட்ட ஆசிரியர் இவ்வாறு கேட்கிறார் .(பக்கம் 39).

அப்படியானால் அவரிடம் நாம் கேட்போம். ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் உயிருடன் இருக்கிறாரல்லவா: அந்த போராட்டங்களில் அவராவது பங்கெடுத்திருக்க வேண்டாமா? உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ள நபிமார்களில் ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களும் உட்படுகிறார் அல்லவா? இந்த சோதனையான காலத்தில் அவர் ஏன் சத்தியத்திற்கு துணை செய்யவில்லை?" ஈசா நபிக்கு மட்டும் இதிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அல்லாஹ்வோ ரசூலோ கூறவில்லையே! அப்படியானால் அவராவது வந்து துணை செய்திருக்க வேண்டுமல்லவா!

அடுத்து ஆசிரியர் கூறுகிறார் : "உயிருடன் வாழ்ந்தும் அவர் இதனைச் செய்ய தவறியிருந்தால் அவர் கடமை தவறியவராகின்றார் [அல்லாஹ் அப்படி நினைப்பதை விட்டும் காப்பானாக.]" என்றும் கூறுகின்றார் . அப்படியானால் ஹஸ்ரத் ஈசா (அலை) மட்டும் கடமை தவறியவராகமாட்டாரா? [நிச்சயம் அவர் கடமை தவறியவராக இருக்கவில்லை. ஏனெனில் அவர் அந்த நேரத்தில் உயிருடன் இல்லை . உயிரோடு இருந்திருந்தால் கட்டாயம் வந்து உதவி செய்து கடமையை நிறைவேற்றியிருப்பார்].

மேலும் ஆசிரியர் எழுதுகிறார் : "எனவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஹிளுறு (அலை) அவர்கள் உயிருடன் இருந்திருக்கவில்லை என்பது தெளிவு. நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே ஹிளுறு (அலை) அவர்கள் உயிருடன் இருந்திருக்கவில்லை என்றால் 'நமது காலத்தில் உயிருடன் இருக்க முடியாது' என்று முடிவுக்கு நாம் உறுதியாக வரமுடிகின்றது." [பக்கம்:39]ஹிளுறு(அலை) பற்றி ஆசிரியர் வரும் உறுதியான முடிவுக்கே ஹஸ்ரத் ஈசா (அலை) நபி பற்றியும் அவர் கூறும் அனைத்து சான்றுகளின் அடிப்படையிலும் நாம் வரவேண்டியுள்ளது. அதாவது ஈசா நபி உயிரோடில்லை என்ற உறுதியான முடிவுக்கே நாம் வர வேண்டியுள்ளது .

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் உயிருடன் இருந்திருந்தால் " என்ற நபி வசனமும் "எல்லா நபிமார்களும் இந்த நபிக்கு (முஹம்மது (ஸல்) அவர்களுக்கு) உதவி செய்வதாக வாக்குருதியளித்துள்ளனர்." என்ற வசனமும் ஈசா நபி (அலை) யை 'இனிமேல் வந்து உதவுவார்' என்று இவர்கள் அவிழ்த்து விடும் புதுக்கதையைத் தடை செய்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
Read more »