அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Mar 26, 2012

அஹ்மதிய்யா ஜமாஅத்தின் கலிமா - பொய்யர்களின் அட்டூழியம் தொடர்கிறது.


ஆன்லைன் பொய்யனின் ஆதரவு தளமான ABUMUZAIN என்ற தளத்தில் அஹ்மதிய்யா ஜமாத்தின் கலிமா 'லா இலாஹா இல்லல்லாஹ் அஹ்மதூர் ரசூலுல்லாஹ்' என்பதுதான் என்ற அப்பட்டமான ஒரு பொய்யை வெளியிட்டிருக்கிறது. மக்கள் மத்தியில் அஹ்மதிய்யா ஜமாத்தை பற்றி தவறான எண்ணத்தைப் பரப்பும் ஆன்லைன் பொய்யனின் ஆதரவு தளங்கள் ஏராளம் இருக்கிறது. இந்தப் பொய்யர்களுக்கு இறைவனைப்பற்றியோ, மறுமையைப் பற்றியோ எந்த அச்சமும் இல்லை என்பதற்கு இவர்களின் எழுத்துக்களே சான்றாக இருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் நயவஞ்சகனின் செயலாக கூறுகிறார்கள் ஒரு செய்தியை கேட்டவுடன் அதைப் பற்றி விசாரிக்காமல் பரப்புவது. இதை இந்தப் பொய்யர்கள் தங்களுடைய தொழிலாகவே செய்துவருகின்றனர். இதற்கு ஆதாரமாக இவர் வெளியிட்டிருக்கும் படத்தைப் பாருங்கள். அஹ்மதியா ஜமாஅத்திற்கெதிராக மக்களை தூண்டுவதுதான் இவர்களின் முக்கிய பணியாகும். இந்தப் பொய்யர்கள் alhafeez.org என்ற இணைய தளத்திலிருந்து இதை திருடி வெளியிட்டிருக்கிறார்கள். அஹ்மதியா ஜமாஅத்தின் சார்பாக alislam.org என்ற இணைய தளத்தில் இதற்க்கு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Abdul Hafeez also accuses the Ahmadiyya Muslim Community of altering Islamic fundamentals and the first allegation he makes is in relation to the Islamic credo, the Kalimah:
    Laa 'ilaaha 'il-lal-laah Muhammadur-Rasuu-lullaah', i.e., There is none worthy of worship but God, and Muhammad is His Messenger.
He asserts that Ahmadi Muslims have changed the Kalimah1 by substituting the name of the Holy Prophet of Islam, Hadhrat Muhammadsa with that of Hadhrat Ahmadas, the Founder of the Ahmadiyya Muslim Community.2 Hence he alleges that, God forbid:
    'The kalimah of Qadianis is There is no God but Allah and Ahmad is His messenger. Note: Ahmad has been substituted for Muhammad. The illustrated booklet AFRIKA SPEAKS issued on the occasion of the tour of Africa by Mirza Nasir Ahmad Qadiani contains a photograph of Ahmadiyya central mosque, Nigeria, which has this Kalima written on it.'3




The author of Two in One also includes an alleged photo of the mosque at Ijebuode in Nigeria on which this altered Kalimah is stated by him to have been written.
Now, any intelligent man who studies this photograph with honesty would agree that the disputed word in the context of this Kalimah is Muhammadsa and not Ahmadas. It is an established fact that Arabic calligraphy has adopted numerous forms throughout the length and breadth of the Islamic world and the Islamic credo at the entrance of the Ahmadiyya Central Mosque at Ijebuode, Nigeria has been written in a traditional style of calligraphy adopted by the people of the local area which requires the first alphabet mim, the equivalent of the alphabet to be lengthened. This system of lengthening alphabets is a perfectly normal practice in the system of Arabic calligraphy adopted by Muslims of this region, as for instance, one also observes the taller than normal lines to teeth of the alphabet sn in the letter Rasul.
In this particular instance, the first alphabet mim or has thus been first lengthened upwards and then brought down to join the second alphabet ha or to make and when these two are joined to the third and fourth alphabets  mim and dal, it reads , i.e., Muhammadsa.
A honest person with even a meager knowledge of Arabic writing would never express an opinion that the disputed word in the above credo does not represent Muhammadsa on account of the fact that in Ahmad, the first two alphabets  Alif or and ha or are not joined together but stand separately and hence, the name Ahmad is written thus . This is evident from Abdul Hafeez's own book where he states that the Kalimah of the Ahmadi Muslims is, God forbid:




PHOTOCOPY OF ALLEGED KALIMAH OF AHMADI MUSLIMS WRITTEN IN ARABIC BY ABDUL HAFEEZ. VIDE. TWO IN ONE, P.22
One would observe that in this Arabic version of the alleged Kalimah of Ahmadi Muslims, the first alphabet of the name Ahmad, i.e.,  Alif is separated from the second alphabet, ha. Now, if the first two alphabets, i.e., mim and ha in the picture of the Kalimah written on the Ahmadiyya Central Mosque at Ijebuode, Nigeria were to be separated and, for the sake of an argument, it was accepted that the first alphabet in the picture is not  mim for Muhammad but  Alif for Ahmad, then the word would read  i.e., Al Hamd and not Ahmad. This credo would then, God forbid, read:




SLIGHTLY ENLARGED COPY OF THE PICTURE IN ABDUL HAFEEZ'S PUBLICATION TWO IN ONE, P.23 WITH THE FIRST TWO ALPHABETS OF THE DISPUTED WORDS SEPARATED

In English Transliteration, this would read as, God forbid: Laa 'ilaaha 'il-lal-laah al Hamd-Rasuu-lullaah. A Kalimah of this nature would not make any sense at all since the Arabic word at Hamd means all praise and Hamd, praise of God.
Other evidence contained within this photograph establishes that the name here is Muhammad and not Ahmad, as for instance, the placing of the diacritical marks and also the existence of above min of Muhammad. If the name in the above photograph was Ahmad, then this particular diacritical mark would have been absent because it is not used in writing Ahmad. It is, therefore, thoroughly dishonest of Abdul Hafeez to attempt to manipulate this perfectly Islamic credo written on the entrance of the Ahmadiyya Muslim mosque in question to allege that it reads.
If Ahmadi Muslims had changed their Kalimah and substituted Ahmad for Muhammad, then they would not have the Kalimah with Muhammad written on their mosques throughout the world. Nor would the Pakistan Government have to employ its police to erase the Kalimah ,with Muhammad an integral part of it, from the fascia of numerous Ahmadiyya Muslim mosques in Pakistan in the wake of Ordinance XX of 1984 after Ahmadi Muslims had refused to erase it with their own hands. An evidence of one such desecration of the Islamic Kalimah by the Pakistan Police under instructions of Zia ul Haq's junta is presented below.




A PAKISTANI POLICE CONSTABLE ERASING THE NAME OF HADHRAT MUHAMMADsa FROM THE KALIMAH ON THE FASCIA OF THE AHMADIYYA MOSQUE AT SIR SHAMSHEER ROAD, FAISALABAD IN PAKISTAN
The fact that Ahmadi Muslims have never ever recited any other Kalimah except 'Laa 'ilaaha 'il-lal-laah Muhammadur-Rasuulullaah' is also evident from the number of cases registered against them in Pakistan, the charge sheet of every one of which specifies the alleged offense as recitation of or wearing the badge of the Kalimah 'Laa 'ilaahaa 'il-lal-laah Muhammadur-Rasuulullaah.' If the Kalimah of the Ahmadiyya Muslim Community had, God forbid, substituted Muhammad with Ahmad then there would be absolutely no reason for these Ahmadi Muslims to be charged under Ordinance XX of 1984 enacted by the military regime of the Zia ul Haq. Nor any reason for them to be punished under Amendment of the Pakistan Penal Code [Act XLV of 1860], Additions of New Section 298C. One states that because the Ordinance requires that any member of the Ahmadiyya Muslim Community
    'who, directly or indirectly, poses himself as a Muslim, or calls, or refers to his faith as Islam' and who 'by words, either spoken or written, or by visible representation, or any manner whatsoever outrages the religious feelings of Muslims, shall be punished.'
There would, however, be absolutely no reason for these Muslims to feel outraged if Ahmadi Muslims so charged in Pakistan did not recite the Kalimah of which 'Muhammadur-Rasuu-lullaah' is an integral part since in reciting any other Kalimah except that of 'Muhammadur-Rasuu-lullaah,' they cannot be deemed to pose as Muslims.
In view of these facts which are a part of Pakistani history, one would ask Abdul Hafeez as to why should Ahmadi Muslims substitute their Kalimah and demonstrate it outside their mosque in Nigeria where the government does not penalize it for its beliefs and yet, in a country like Pakistan where they are threatened with severe penalization, they insist on proclaiming the Islamic Kalimah to which the government takes exception? The Kalimah written at the Ahmadiyya Central Mosque, Ijebuode in Nigeria is positively 'Laa 'ilaaha 'il-lal-laah Muhammadur-Rasuu-lullaah.' and irrespective of how Abdul Hafeez proposes to beguile his readers into believing otherwise, the fact will remain that Ahmadi Muslims know and recite the only Kalimah taught to them by Hadhrat Muhammadsa which is: 'Laa 'ilaaha 'il-lal-laah Muhammadur-Rasuu-lullaah.' Any reasonable man who considers this false charge against them to the effect that they have substituted the name of Hadhrat Muhammadsa with that of Hadhrat Ahmadas, would - in the light of the persecution being suffered by them in Pakistan for reciting and wearing the Islamic Kalimah badges - seriously think about the wisdom of them publicizing such a substituted Kalimah in a country where they command extraordinary respect as Muslims of the first order. In fact, people like Abdul Hafeez have often demanded that 'Ahmadis stop calling themselves Muslims and others would begin to be tolerant towards them.'5 In view of such offers of tolerance in Pakistan, if Ahmadi Muslims can, as falsely alleged, publicize any other Kalimah other than 'Laa 'ilaaha 'il-lal-laah Muhammadur-Rasuulullaah' in a country where they are not persecuted for reciting their credo of faith, then what possible reluctance could they have in not declaring the same in Pakistan and rid themselves of the severe hardship to which they are being subjected?
The irony of this entire controversy is that while Ahmadi Muslims have, do and will continue to recite the Kalimat: 'Laa 'ilaaha 'il-lal-laah Muhammadur-Rasuu-lullaah,' there exists ample evidence within Islamic literature to suggest that many a Muslim saints have substituted the name of Hadhrat Muhammadsa with that of other saints of Islam in the Kalimah. For instance, it is reported that such a Kalimah was pronounced with the name of Hadhrat Abu Bakr Shiblirh which read:
    'Laa 'ilaaha 'il-lal-laah Shibli-Rasuu-lullaah,' i.e., 'There is no god but Allah, and Shibli is His Messenger.'6
A Kalimah with the name of Hadhrat Muhammadsa substituted with that of Hadhrat Mu’in ud Din Chishtirh has also been pronounced to read as:
    'Laa 'ilaaha 'il-lal-laah Chishti-Rasuu-lullaah,' i.e., 'There is no god but Allah, and Chishti is His Messenger.'7
This Kalimah has been recorded in a different manner in another instance where it has been substituted to read:
    'Laa 'ilaaha 'il-lal-laah Mu'in ud Din-Rasuu-lullaah' i.e., 'There is no god but Allah, and Mu'in ud Din is His Messenger. '8
It is also recorded that once a man came to enter into the discipleship of Hadhrat Khawaja Mu'in ud Din Chishtira and Hadhrat Khawaja Ajmerira asked him to recite the Kalimah but when the man recited the Islamic Kalimat:
    'The Khawaja said to him: Say it like this, There is no god but Allah and Chishti is the Messenger of Allah. The man did so, and the Khawaja accepted the pledge from him and invested him with the robe of honor.'9
Such substitution has also been made in relation to Hadhrat Khawaja Habib Ullah Attarra who instructed a disciple:
    'Lengthen your saying of Ia ilaha, and efface the thought of all others, other than God from the heart. After that, ill-Allah should be stressed, and you should consider me the messenger of Allah.'10
Abdul Hafeez's own spiritual predecessor Maulvi Ashraf Ali Thanvi of the Deoband fame had a Kalimah concocted in his name by one of his disciples which read:
    'Laa 'ilaaha 'il-lal-laah Ashraf Al-Rasuu-lullaah,' i.e., There is no go but Allah, and Ashraf Ali is His Messenger.'11
Similarly, an Indian saint Sheikh Sadiq Gangohi told a disciple to pronounce his name in the Kalimah as a messenger of Allah.
He commanded his disciple to say:
    'There is no go but Allah and Sadiq is the messenger of Allah.'12
One would now leave it to Abdul Hafeez to either deny that any such Kalimah with the names of Hadhrat Abu Bakr Shiblirh; Hadhrat Mu'in ud Din Chishtirh and Hadhrat Khawaja Habib Ullah Attarra as well as the Indian saint Sheikh Sadiq Gangohi and the Deoband leader Maulvi Ashraf Ali Thanvi exist in literature published by the non Ahmadiyya Muslim publication houses or else pass his judgement on the people who substituted the name of Hadhrat Muhammadsa in these versions of their Kalimah.
Finally, the author of Two in One begs a question of the Ahmadi Muslims as to whether they recite Ahmad instead of Muhammad in the Kalimah.13 If, as it behove a Muslim, he is prepared to accept the sworn statement of every Ahmadi Muslim, then one can assure him that the official Kalimah of the Ahmadiyya Muslim Community is:
    'Laa 'ilaaha 'il-lal-laah Muhammadur-Rasuu-lullaah.'
Therefore, there is absolutely no reason for Ahmadi Muslims to recite Ahmad instead of Muhammad in their Kalimah. They have never, in their entire history, recited Ahmad instead of Muhammad in the Kalimah nor do they now recite Ahmad instead of Muhammad and Inshallah, they shall never recite Ahmad instead of Muhammad in the Kalimah. It is now up to Abdul Hafeez to believe what he chooses to believe. But if he rather not accept this assurance as a statement of truth, then one suggest that he stop taking exception to the appellation of the title of a disbeliever and an enemy being applied to him.




REFERENCE

  1. Shah, Syed Abdul Hafeez. Two in One, p.5
  2. Ibid., p.22
  3. Ibid.
  4. Ibid., 23
  5. Shah, Syed Abdul Hafeez. Two in One, p.89
  6. Hasan, Maulana Shah Gul, Tadhkira Ghausiyya, p.315
  7. Attar, [Hadhrat] Farid ud Din, Fawa’id e Faridiyya, p.83
  8. Haft Aktalab, p.167. vide. Kitab e Mahfooz, p.22
  9. vide. Fawa'id as Salikeen, p.18
  10. Attar, [Hadhrat] Khawaja Habib Ullah. vide. Masnavi Bahr al Irfan, vol.1, p.179
  11. Al Imdad, Safar, 1336 AH, circa. 1918, p.35
  12. Gangohi, Shaikh Sadiq. vide. Al Takashaf an Mahmat al Tasawwuf, p.594
  13. Shah, Syed Abdul Hafeez. Two in One, p.36
Read more »

Mar 21, 2012

இந்திய சுந்தந்திரமும் அஹ்மதிய்யா ஜமாத்தும் - 1


சுதந்திரம் என்பது மனிதனின் பிறப்புரிமையாகும். இஸ்லாம் மனித இயல்புக்கேற்ற மார்க்கமாகும் எனவே இஸ்லாம் மனிதனின் இந்த உரிமையையும் பாதுகாத்துள்ளது. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் சுதந்திரமும் ஒன்றாகும் மார்க்க உரிமைக்காகவும், மனசாட்சி உரிமைக்காகவும், நாட்டுரிமைக்காகவும் குரல் கொடுத்த ஒரே மார்க்கம் இஸ்லாம்தான். இஸ்லாத்தின் எதிரிகளோ தமது கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மற்றவர்கள் மீது திணிக்க முயன்றார்கள். அந்த எதிரிகள் பலவந்ததினாலும், பெரும்பான்மை என்ற ஆனவத்தினாலும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழித்தொழிக்கும் முயற்சியில் எந்தக் குறையையும் விட்டுவைக்கவில்லை.

அத்தகைய காலத்தில் இஸ்லாத்தின் ஸ்தாபகர் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் இறை கட்டளைக்கிணங்க 'மார்கத்தில் எந்த பலவந்தமும் இல்லை' (2:258) என்பதையும், 'இந்த உண்மை உங்கள் இறைவனிடமிருந்துள்ளதாகும். எனவே எவர் விரும்புகிறாரோ அவர் ஏற்றுக் கொள்ளட்டும். எவர் விரும்புகிறாரோ ஏற்றுக் கொள்ளட்டும் எவர் விரும்புகிறாரோ மறுக்கட்டும்' (18:30). அது அவருடைய விருப்பத்தைப் பொறுத்தது என்பதையும் அறிவித்தார்கள். ஆனால் அத்துடன் நாட்டுப்பற்று ஈமானை (இறை நம்பிக்கையை) ச் சார்ந்தது என்ற போதனையும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் மார்க்கம் சுதந்திரம், மனசாட்சி சுதந்திரம், நாட்டு சுதந்திரம் ஆகியவற்றை ஒப்புக்கொள்வதுடன் வெளிப்படையான அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காகவும் எத்தகைய செயல்முறை திட்டத்தை எடுத்துரைத்துள்ளதென்றால், அதன் விளைவாக அடிமைகளுக்குப் படிப்படியாக சுதந்திரம் கிடைத்துக் கொண்டே சென்றது. கடைசியில் தனிநபர் அடிமைத்தனமும் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இஸ்லாம் தனிநபர் அடிமைத்தனத்தை ஒழித்தது மட்டுமல்லாமல், மனித சமூகத்தை சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற அடிமைத்தனத்திலிருந்தும் விடுவித்துள்ளது. உண்மையான தூய தௌஹீதில் மக்களை நிலை நிறுத்த செய்வதும், தௌஹீதின் மூலமாக எல்லா மனித குலத்தையும் ஒற்றுமை சகோதரத்துவம் என்ற மணியில் கோர்ப்பதும் முழு உலகிலும் எலாவிதமான அடிமைத்தனத்தின் சங்கிலியை உடைத்தெறிந்து, சுதந்திரத்தையும், மனிதனுக்கு சம உரிமையையும் நிலை நாட்டுவதற்காகவும், எல்லா விதமான ஆதிக்கத்தின் வழியினை மூடுவதற்காகவும் பாடுபட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம்தான்.

அஹ்மதிய்யா ஜமாத்தின் தோற்றுனர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் தோற்றத்திற்கும், அஹ்மதிய்யா ஜமாஅத்தை நிலை நாட்டியதற்கும் உள்ள காரணம் இஸ்லாத்தைப் புதுப்பிப்பதும், மார்க்கத்தை உயிரூட்டுவதுமாகும். அன்னார் கூறுகிறார்கள்:

"இறைவன் இந்த காலத்தை இருளடைந்ததாகக் கண்டு, உலகம் அறிவீனத்திலும், இறை மறுப்பிலும், இணை வைப்பதிலும் மூழ்கியதாகக் கண்டு, இறை நம்பிக்கை, இறையச்சம், நேர்வழி ஆகியவை அழிந்து போயிருப்பதைக் கண்டு, திரும்பவும் உலகில் அந்த இறைவன் ஞானத்தின் செயலின், நல்லொழுக்கத்தின், இறை நம்பிக்கையின் உண்மையை நிலைநாட்டுவதற்காக என்னை அனுப்பியுள்ளான்." (ஆயினே கமாலாத்தே இஸ்லாம் பக்கம் : 251)

அவ்வாறே அவர்கள் இன்னோரிடத்தில் கூறுகிறார்கள்:

"நான் இந்த எல்லா தவறுகளையும் அகற்றி, உண்மையான இஸ்லாத்தை நான் மீண்டும் உலகில் நிலை நாட்டவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இறைவன் என்னை நியமித்துள்ளான்" (அஹ்மதி, கைர் அஹ்மதி மேன் கியா பர்க் ஹே. பக்கம் :16)

இமாம் மஹ்தியாகவும், வாக்களிக்கப்பட்ட மசீஹாகவும் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் இஸ்லாத்திற்கு உயிரூட்டுவதற்காகவும், இஸ்லாமிய ஷரியத்தை நிலை நாட்டுவதற்காகவும் இறைவனால் நியமிக்கப்ப்பட்டிருக்கும் போது, இஸ்லாம் எடுத்துரைக்கும் சுதந்திரம் பற்றிய கொள்கைக்கு எதிராக அவர்கள் வேலை செய்வது சத்தியமே இல்லை. எனவே இன்று எவராவது, அஹ்மதிய்யா ஜமாஅத்தின் ஸ்தாபகர் மீதோ அல்லது அஹ்மதிகள் மீதோ, இவர்கள் இந்திய சுதந்திரக் கொள்கைக்கு எதிரானவர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் என்றால், அது அவருடைய முட்டாள்தனமாகும். இவ்வாறு குற்றம் சாட்டுபவர்கள் தம் முகத்திரை கிழிந்துவிடக் கூடாது என்ற பயத்தினால் கூறுகிறார்கள்.

இதை நாம் ஏன் தெளிவுபடக் கூறுகிறோம் என்றால், 1974 இல் 'ராபிததுல் ஆலமில் இஸ்லாமியா' மாநாட்டில் அஹ்மதி முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு, அஹ்மதிய்யா ஜமாஅத் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு கட்டுப் பட்டிருந்த காரணத்தால் அது இந்திய சுதந்திரக் கொள்கைக்கு எதிராக நின்றது என்ற குற்றச்சாட்டு இந்தியாவிலுள்ள முஸ்லிம் பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறப்பட்டது. இந்தியாவை அடிமைத்தனத்தில் பூட்டிவைப்பதையும், எப்பொழுதும் ஆங்கிலேயர்களே இந்தியாவை ஆல்வதியுமே அஹ்மதிய்யா ஜமாஅத் விரும்பியது என்ற தவறான ஒரு கருத்தை இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய பொது மக்களுக்கும் எடுத்துரைப்பதே இந்த முஸ்லிம் தலைவர்களின் நோக்கமாகும்.

ஆனால் இந்தக் கருத்து முற்றிலும் தவறானதும், இட்டுக்கட்டுமாகும். அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் நூல்களைப் படிக்காத, அதன் கொள்கை கோட்பாடுகளை அறவே தெரியாதவர்களாக இருக்கும் பத்திரிகையாளர்கள்தான் இவ்வாறு கூறுகிறார்கள். அல்லது அஹ்மதிய்யத்தின் எதிரிகள் கூறும் எமாட்டுகளை கொண்ட தலையங்கங்களினால் அவர்கள் எடுத்த தவறான முடிவாகும். இன்னும் சிலர் பொதுமக்களை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்திற்கெதிராகத் தூண்டி விடுவதற்காகவும் அவ்வாறு உண்மைக்கு மாறான கருத்துகளை எழுதுகின்றனர்:

1974- க்குப் பிறகு இன்று வருடங்கள் ஆகின்றன. இந்திய ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி அஸ் அத்மதனி இந்தப் பிரச்னையை மீண்டும் கிளப்பியுள்ளார். காரணம், இந்தியாவில், அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் வளர்ச்சி அவருக்கு பயத்தை தந்துள்ளது. எனவே அவர் சென்றகால ஆலிம்களின் அடிச்சுவற்றைப் பின்பற்றியவாறு, அஹ்மதியா ஜமாத்தின் வளர்ச்சியை தடுக்க முனைகிறார். அதற்காக அவர் மஜ்லிசே தஹபுஸே கதமே நுபுவத்', அமைப்பின் ஏற்பாட்டில் தில்லி ஜாமியா மஸ்ஜித் வளாகத்தில் பெரிய மாநாடு ஒன்றைக் கூட்டினார். இந்த மாநாட்டைச் சாக்காக வைத்து அதனை அவர் அரசியலாக்க முயன்றார். ஆனால் அதன் படுதோல்வியை உலகம் கண்டுகொண்டது. முஸ்லிம் பத்திரிகையாளர் கூட்டத்தில் தன்மானமுள்ள, உண்மையை நாடும் பத்திரிகையாளர்கள் அதற்கு எதிராக விமர்சனம் செய்தார்கள்; இது பொருத்தமற்ற, முட்டாள்தனமான நடவடிக்கையாகும் எனக் குறிப்பிட்டார்கள்.

இதில் நூதனமான விஷயம் என்னெவென்றால், அஹ்மதிய்யா ஜமாத்தை 'முஸ்லிம் சிறுபான்மையினர்' என அறிவிக்க வேண்டும். என்ற ஒரு முட்டாள்தனமான கோரிக்கையை இந்த மாநாட்டில் இவர்கள் வைத்தனர்.

இந்தக் கோரிக்கையைப் படித்ததும். நம்மையுமறியாமல் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. அதில் அவர் இவ்வாறு கூறுகிறார். "குறுகிய மனத்தைக் கொண்ட முஸ்லிம் என்னை காபிராகக் கருதுகிறார். பொதுவானக் காபிர்கள் (மாற்று மதத்தினர்) என்னை முஸ்லிமாகக் கருதுகிறார்கள்."

அவர்களின் இந்தக் கோரிக்கையே அவர்களின் தோல்விக்கு சான்றாகும். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு ஐம்பது ஆண்டு காலக் கட்டத்தில், அஹ்மதியா ஜமாத்திற்கெதிரான ஆதாரங்களை எடுத்து வைப்பதிலும், சான்றுகளைத் தருவதிலும், இஸ்லாமிய நடத்தைகளை எடுத்துக் காட்டுவதிலும் அவர்கள் திராணியற்ற நிலையில் இருக்கின்றார்கள். எனவே பாமர முஸ்லிம்களை அஹ்மதிகளுக்கு எதிராக இவர்கள் தூண்டிகொண்டிருக்கிரார்கள். ஆயினும் அல்லாஹ்வின் அருளினால் ஒவ்வொரு ஆண்டிலும் இலட்சக்கணக்கான மக்கள் அஹ்மதிய்யா ஜமாத்தில் இணைந்து வருகிறார்கள்.

இந்தத் தோல்வியை அவர்கள் மறைப்பதற்காக அஹ்மதியா ஜமாஅத் இந்தியக் கொள்கைக்கு எதிராக இருந்தது என்று குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் ஒருபுறம் அரசாங்கத்திற்கு அஹ்மதியா ஜமாதிற்கெதிரான தப்பெண்ணங்களை உருவாக்குகிறார்கள். மறுபுறம், பெரும்பான்மையாக விளங்கும் இந்துக்களை தூண்டிவிடுகிறார்கள். ஆனால் இவர்களுடைய இந்த முயற்சியும் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் அஹ்மதியா ஜமாஅத் ஒரு கொள்கைக்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற ஜமாஅத் என்பதையும், அஹ்மதி முஸ்லிம்களின் ஒழுக்கம் மிகவும், தூய்மையானதும் கலங்கமற்றதாகும் என்பதையும் இந்திய அரசாங்கமும் பெரும்பாலான இந்தியர்களும் நன்கு அறிவார்கள்.

ஆங்கிலேய அரசாங்கத்திற்கு கட்டுப் பட்டு நடக்க வேண்டுமென அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் ஸ்தாபகர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் ஏன் அறிவுரை வழங்கினார்கள் என்றால் அதற்குரிய பதில் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் குரானின் கட்டளைக்கேற்ப அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்குமாறு கூறுவதுடன், ஆட்சியில் உள்ளவருக்கும் கட்டுப்பட்டு நடக்குமாறு கூறுகிறது, திருக்குரானின் இந்தக் கட்டளைப்படி அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் ஆரம்பத்திலிருந்தே செயல்பட்டுவருகிறது. இனியும் செயல்பட்டு வரும். இன்ஷா அல்லாஹ். இது வெறும் வாயளவில் சொல்லப்படும் கொகையல்ல. அஹமதிய்யா ஜமாஅத் 125 ஆண்டுகளும் இதற்கு சாட்சியாக விளங்குகின்றது. (international) அளவில் வளர்ந்துள்ளது. உலகில் ஒவ்வொரு நாட்டிலும் காணப்படும் அஹ்மதி முஸ்லிம்கள், சட்டப்படி தமது அரசுக்கு கட்டுப்படுபவர்கலாகத் திகழ்கின்றார்கள்.

இதே கொள்கையும், செயல்பாடும்தான் ஆங்கிலேய அரசாங்கம் இருந்த நேரத்திலும் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தில் இருந்தது. இந்தய சுதந்திரத்திற்குப் பிறகும் அவ்வாறே இருக்கிறது. அஹ்மதி முஸ்லிம்கள் மற்ற முஸ்லிம்களைப் போன்று ஒரு போதும் இரட்டை வேடமாக நடந்துகொள்வதில்லை.

அந்நியர்கலிடமிருந்து தமது நாட்டை விடுவிப்பதும், தமக்கு ஆகுமான உரிமைகளைப் பெறுவதும், அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் பார்வையில் மிகவும் முக்கியமானதுதான். அவ்வாறு விடுதலை பெறுவது, சமுதாயத்தின் நல்லொழுக்க, ஆன்மீக முன்னேற்றங்களுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும், தற்காப்புடன் வாழ்வதற்கும் காரணமாக அமையலாம். ஆயினும் அதற்காக நாட்டில் கூச்சல், குழப்பம், சமுதாய சொத்துக்களுக்கு நஷ்டம் போன்றவை ஏற்பட வழிவகுத்துவிடக் கூடாது என்பதே அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் போதனையும், கலீபாவின் போதனையுமாக இருந்தது.

இந்தக் கொள்கைப் பற்றி அக்கால பத்திரிகையாளர் ஜிஸ்வந்த் சிங் என்பவர் இவ்வாறு கூறுகிறார்:

"தாம் அரசாங்கத்துடன் ஒத்துழைப்புத் தர வேண்டுமென்பதும், எவ்விதத்திலும் போராட்டம் செய்வதோ, ஒத்துழையாமை, வரம்புமீறுதல், சட்ட விரோதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது என்பதும் அஹ்மதிகளின் அடிப்படைக் கொள்கைகளிலும், மார்க்க கோட்பாடுகளிலும் உள்ள ஒன்றாகும்."(ஹிந்துஸ்தான் டைம்ஸ் கல்கத்தா 25 டிசம்பர் 1951)

தில்லியை சார்ந்த டாக்டர் சங்கரதாஸ் கூறினார்:

"சட்டத்தைப் பேணி நடப்பதுதான் அஹமதிய்யா முஸ்லிம் ஜமாத்தின் கொள்கையும் செயல்முரையுமாகும். நீதிமன்றத்தின் ஆதாரத்தின் படி குற்றத்திலிருந்து தூய்மையானதாக நிரூபணமாகியுள்ளது அஹ்மதிய்யா ஜமாஅத் மட்டும்தான். சென்ற குழப்பங்களிலும் (1947 - இல் நடந்தவை) அஹ்மதிகள் (கொலை, கொள்ளை ஆகியவற்றிலிருந்து) தமது கைகளைத் தூய்மையாக வைத்துள்ளார்கள்." (ஸ்டேட்ஸ் மேன் நாளிதழ் 2 டிசம்பர் 1949)

ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை பெரும் விஷயத்திலும் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் இதே செயல் முறையைத்தான் கையாண்டது. நிச்சயமாக சுதந்திரம் பெறுவது ஒவ்வொரு மனிதனின் பிரப்புரிமையாகும். ஆயினும் சட்டத்திற்குள் இருந்துகொண்டு அந்த உரிமையைப் பெறவேண்டும்: இல்லைஎன்றால், நமக்கு சுதந்திரம் கிடைத்தப் பிறகு, சுதந்திர இந்தியாவின் பொதுமக்களும், தமது கோரிக்கைகளை ஒப்புக் கொள்ள செய்வதற்காக இதே மாதிரியான போராட்டங்களை நடத்துவார்கள் என்பதை அஹ்மதி முஸ்லிம்கள் அன்றைய காலத்தில் இந்திய மக்களிடம் எடுத்துக் கூறினார்கள்.

இன்று நாம் அதன் விளைவுகளை நம் கண்களால் கண்டு வருகிறோம். தினசரி போராட்டங்கள், கடையடைப்புகளால் நாட்டிற்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் நஷ்டம் ஏற்படுகின்றன. மேலும் அந்த நஷ்டங்களின் சுமையும் பொது மக்கள் மீதே விழுகின்றது. இந்த வழிமுறையைத்தான் இந்தியா சுதந்திரம் பெரும் போதும் அஹ்மதிய்யா ஜமாஅத் விரும்பவில்லை. மற்றபடி, இந்திய சுதந்திரம் விஷயத்தில் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத், எந்த இயக்கத்தை விடவும், அரசியல் பிரிவை விடவும் பின்தங்கியிருக்கவில்லை.

அஹமதிய்யா ஜமாஅத்தின் ஸ்தாபகர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹமத் (அலை) அவர்கள், சுதந்திரத்தைப் பெறுவதற்காக, இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து தமது தமது குறிக்கோளைப் பெறவேண்டுமென அறிவுரை கூறினார்கள். முஸ்லிம்கள் காங்கிரசுடன் சேராமல், முஸ்லிம் லீக் என்று தனக்கென தனிப்பட்ட அரசியல் பிரிவை ஏற்படுத்தியபோது ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் இதனை விரும்பவில்லை. இவ்வாறு ஒன்று சேர்ந்த சக்தி பிரிந்துவிடும். மேலும் அமைதி, சமாதானம் பற்றிய விஷயத்தில் விரும்பத்தகாத பிரச்சனைகள் உருவாகிவிடும் என்பதால்தான் அன்னார் இதனை விரும்பவில்லை.

இதன்படி 1908 ஆம் ஆண்டில், பை காமே ஸுல்ஹ என்ற பெயரில் ஒரு நூல் எழுதினார்கள். (இந்த நூல் 'சமாதானத் தூது') என்ற பெயரில் தமிழிலும் வெளிவந்துள்ளது) அதைப் படிக்கும் போது, இந்தியாவில் 39 வருடங்களுக்குப் பிறகு ஏற்படப்போகும் நிலைமைகளை ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத்(அலை) அவர்கள் அன்றே தமது தொலை நோக்குப் பார்வையினால் புரிந்திருந்தார்கள் என்பதை நம்மால் கணிக்க முடிகிறது. இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காக ஒருவன் இன்னொருவரின் சான்றோர்களை மதிப்போம். எனவும் அந்தப் பெரியவர்களின் உண்மைத்தன்மையை ஒப்புக்கொள்வோம் எனவும் உடன்படிக்கை செய்து கொள்ளுமாறு அந்நூலில் வலியுறுத்திக் கூறும்போது இவ்வாறுக் குறிப்பிட்டார்கள்:

"அன்பிற்குரியவர்களே! சமாதானத்தைப் போன்று எதுவுமில்லை. வாருங்கள் நாம் இந்த உடன்படிக்கையின் மூலம் ஒன்றுபடுவோம். ஒரு சமுதாயமாக மாறுவோம். ஒருவருகொருவரை மறுப்பதனால் எந்த அளவுக்கு பிரிவினை ஏற்பட்டுவிட்டது என்பதையும், நாட்டுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்பதையும் நீங்கள் பார்கிறீர்கள். வாருங்கள் ஒருவரையொருவர் உண்மைப்படுத்துவதில் எந்த அளவுக்கு அருள்கள், அபிவிருத்திகள் இருக்கின்றன என்பதையும் இப்போது சோதித்துப் பாருங்கள்." (பைகாமே ஸுல்ஹ பக்கம் 17, 18)
முஸ்லிம்களிடம் ஏற்பட்ட தவறு என்னவென்றால், இந்துக்களின்  இந்த முயற்சியில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. மேலும் , நாம் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறோம் என எண்ணினார்கள். மேலும் இந்த எல்லாமுயற்சிகளுக்கும் என்தாவது பலன் இருக்கிறதென்றால். அது இந்துக்களுக்குத்தான் கிடைக்கும்: முஸ்லிம்களுக்குக் கிடைக்காது எனக் கருதினார்கள். எனவே, முஸ்லிம்கள் கலந்துகொல்வதிளிருந்து விலகி இருந்ததுமட்டுமல்லாமல் அதற்கு எதிர்ப்பும் தெரிவித்து, இந்துக்களின் முயர்த்திகளுக்கு தடைக்கல்லாக நின்றார்கள். அதனால் சீர்குலைவு அதிகமாகிவிட்டது. 

அன்னார் தொடர்ந்து கூறுகின்றார்கள்:
'முஸ்லிம்கள், தமக்கு ஆகுமான உரிமைகளைக் கோரும் விஷயத்தில் இந்துக்களுடன் சேர்ந்துகொள்ள என் பயப்படுகிறார்கள்? என்பதையும், இன்றுவரை காங்கிரசுடன் இணைவதிளிருந்து முஸ்லிம்கள் என் மறுத்துவருகிறார்கள் என்பதையும், பிறகு கடைசியில் ஏன் இந்துக்களின் கருத்தை சரியானது என உணர்ந்து அவர்களைப் பின்பற்றினார்கள் - ஆயினும் தனித்து நின்றார்கள் என்பதையும், அவர்களுக்குப் போட்டியாக ஏன் முஸ்லிம் லீக் என்ற கட்சியை உருவாக்கினார்கள். ஆயினும் (இந்துக்களாகிய) அவர்களின் தீங்குகளை ஒப்புக்கொள்ளவில்லை என்பதையும் ஒவ்வொரு நபரும் மிக எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ( பைகாமே ஸுல்ஹ பக்கம் 12 ) 

எனவே, இந்தியாவுக்கு உண்மையான கண்ணியத்திற்குரிய சுதந்திரம் வேண்டும் என்பதுதான் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் விருப்பமாக இருந்தது. ஏனெனில் எந்த ஒரு நாடு அல்லது சமுதாயம் பல வருடங்களாக அடிமை என்ற சங்கிலியால் பினைக்கப்பட்டிருக்குமோ அதில் அநியாயங்களும், தீய நடத்தைகளும் உருவாகிவிடுகின்றன என்பதை அன்னார் நன்கு அறிந்திருந்தார்கள். இதன்படி யூதர்கள் அடிமையாக இருந்த காலத்தை உதாரணமாக குறிப்பிடும்போது கூறுகிறார்கள்: 


"அவர்கள் (யூதர்கள்) 400 வருடங்களாக அடிமைத்தனத்தில் இருந்தனர். அதனால் அவர்களிடம் தரங்கெட்ட நிலையம், அநியாயமும் அதிகமாக உருவாகியிருந்தன." ( பைகாமே ஸுல்ஹ பக்கம் 32) 

இனி இந்திய விடுதலைக்காக ஹஸ்ரத் மிர்ஸா பசீருத்தீன் (ரலி) அவர்கள் தியாகங்கள் பற்றி பார்க்கலாம்.
Read more »

Mar 8, 2012

இறைவனே எங்களுடைய திட்டங்களின் நடுத்தூணாக இருக்கின்றான். ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள்.


உண்மையிலேயே நீங்கள் இறைவனுக்காக ஆகிவிடுவதென்றால் அந்த இறைவனும் உங்களுக்காகவே ஆகிவிடுவான் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் உறங்குகின்றபோது அவன் உங்களுக்காக விழித்திருப்பான். நீங்கள் உங்களுடைய எதிரிகளைப் பற்றி கவனமற்றிருக்கும்போது உங்களுடைய இறைவன் அவர்களைக் கண்காணித்து அவர்களுடைய சதித்திட்டங்களை முறியடிப்பான். உங்களுடைய இறைவன் எவ்வளவு வல்லமை மிக்கவன் என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லை. நீங்கள் அதனை உணர்ந்திருந்தால் உலகிற்காக கவலைப்படக்கூடிய ஒருநாள் கூட உங்களுக்கு இராது. தன்னிடத்திலே ஒரு பெரும் பொக்கிஷத்தைக் கொண்டுள்ள ஒரு மனிதன் அவனிடமிருந்து ஒரு காசு காணாமற் போனால் அதற்காக அழுது புலம்புவானா? அதற்காக தன்னை மாய்த்துக் கொள்ள துணிவானா? உங்களுடைய எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்கின்ற ஒரு பெரும் பொக்கிஷமான இறைவனைப் பற்றிய அறிவு உங்களுக்கு இருக்குமாயின் உலகப் பொருட்களிலே நீங்கள் ஏன் பெரும் பற்றுக் கொள்ள போகின்றீர்கள்? இறைவன் கிடைப்பதர்க்கரிய பெரும் பொக்கிஷமாக இருக்கின்றான். அதன் உண்மையான மதிப்பை உணருங்கள். நீங்கள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு காலடியிலும் அவன் உங்களுக்கு உதவிபுரிகின்றவனாகவே இருக்கின்றான் அவனில்லாமல் நீங்கள் ஒரு பொருளுமல்ல? உங்களுடைய பொருள்களும் திட்டங்களும் உங்களுக்கு உதவாது, உலகப் பொருட்களின் மீது முழுக்க முழுக்க சார்ந்துள்ள ஏனைய சமுதாயங்களைப் பின்பற்றாதீர்கள். பாம்பு மண்ணைத் திண்பதுபோல் அவர்கள் உலகின் அற்பப் பொருட்களின் மீது பெரிதும் சார்ந்து நிற்கின்றார்கள். கழுகுகளும் நாய்களும் பிணங்களை விரும்பி திண்பதுபோல் இவர்கள் உலக இச்சையிலே மூழ்கிக்கிடக்கின்றார்கள். இவர்கள் இறைவனிடமிருந்து வெகுதூரம் சென்றுவிட்டவர்கள். இவர்கள் மனிதனை கடவுளாக வணங்குகின்றவர்கள். பன்றியைத் தின்று மதுவைத் தண்ணீரைப் போல் அருந்துகின்றார்கள். இவர்கள் உலகப் பொருட்களிலே எல்லையற்ற நம்பிக்கை வைத்து இறைவனிடம் எதற்கும் உதவி தேடாத காரணத்தினால் என்றோ மரணித்துப் போய்விட்டார்கள். ஒரு புறா தனது கூட்டிலிருந்து பறந்து செல்வதைப் போல் ஆன்மீக ஆவி இவர்களிடமிருந்து பறந்து போய்விட்டது. உலக செல்வங்களை வணங்குகின்ற குஷ்டரோகம் இவர்களைப் பீடித்திருக்கின்ற காரணத்தால் இவர்களுடைய ஆன்மீக அவயங்கள் செல்லரித்துப் போய்விட்டன. நீங்கள் இந்த குஷ்டரோகத்திற்கு அஞ்சுங்கள். ஒரு வரம்பிற்குள் நின்றுகொண்டு பொருளைத் தேடுவதையும், அதைச் செலவிடுவதையும் நான் தடுக்கவில்லை ஆனால் ஏனைய சமுதாயத்தைப் போன்று உலகப் பொருட்களுக்கு அடிமையாகி விடுவதைத்தான் நான் தடுக்கின்றேன். இந்தப் பொருட்களையெல்லாம் தந்த இறைவனை மறந்து விடுவதைத்தான் நான் தடை செய்கின்றேன். (கிஷ்தி நூஹ்)
Read more »

Mar 7, 2012

மௌலானாவின் கலப்பட மார்க்கம் - பிரிட்டீஸ் ஆட்சியும் அஹ்மதியா இயக்கமும்


அஹ்மதியா இயக்கத்திற்கெதிராக பொய்யானதும், மக்களை ஏமாற்றுவதற்கும் அடிக்கடி எதிரிகளால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் அஹ்மதியா இயக்கம் ஆங்கிலேயர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்பதும் ஆகும். 

"இஸ்மி" இதழின் "மௌலானா" இதே குற்றச்சாட்டை இவ்வாறு வெளிப்படுத்துகின்றார்:-

"ஆங்கிலேயர் தேசத்தைக் கைப்பற்றிய போது இந்துக்கள் ஆங்கிலேயருக்கு உடனே அடங்கிப் போய்விட்டனர். முஸ்லிம்களோ பணிந்து அடிமை வாழ்வு வாழ விரும்பவில்லை. ஆங்கிலேயரை எதிர்த்து போராடுவதற்கு என்ற நோக்கில் முஸ்லிம்களிடையே பல இயக்கங்கள் தோன்றின. முஸ்லிம்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்பட்டுவிட்டது என்பதற்கு இது எடுத்துக் காட்டாக இருந்தது"........................

"இப்படியான நிலையில் ஆங்கிலேயருக்கு ஒரு புத்தி தோன்றியது. தங்களுக்கு முஸ்லிம்களை அடிமைப்படுத்துவதற்கும் ஒரு நபியை தோன்றுவிக்க முனைந்தனர். ஒரு நபியின் வார்த்தை மட்டுமே முஸ்லிம் சமுதாயத்தில் செல்லுபடியாகும் என ஆங்கிலேய அரசு நம்பியது..... அதைத் தொடர்ந்து அஹ்மதியா - காதியானி இயக்கம் ஆங்கிலேயரின் முழு ஆதரவுடன் உண்டாக்கப்பட்டது."

இஸ்மி மௌலானாவின் இந்த அற்புதமான வரலாற்று ஆராய்ச்சியைப் பற்றி வரலாற்று அறிஞ்சர்களும் சிந்தனையாளர்களும்தான் போற்றி பாராட்ட வேண்டும்.

"இந்துக்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டுவிட்டார்களாம்! முஸ்லிம்கள் இந்துக்கள் போல் அடிமை வாழ்வு வாழ விரும்பவில்லையாம்." 

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு விடுதலை பெற தங்களது உயிர், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து போராடி வெற்றி பெற்ற இந்திய தேசீய காங்கிரசும் மற்றும் விடுதலை இயக்கங்களும்தான் இந்த ஆராய்ச்சிக்கு பதிலளிக்க வேண்டும்.

கட்டுரை ஆசிரியருடைய இந்த வரலாற்று அறிவிலிருந்தும் அவருடைய அறிவும் உண்மையை மறைத்து திரித்துக் காட்டக் கூடிய திறமையும் எப்படிப்பட்டது என்பதை உணர முடிகிறது. மீண்டும் அவரது மகத்துவமிக்க ஒப்பற்ற ஆராய்ச்சி இவ்வாறு தொடர்கிறது:-

"முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட விழிப்புணர்ச்சியைப்போக்கி அவர்களைத் தூங்க வைப்பதற்கு ஒரு நபியால்தான் இயலும், எனவே மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களை ஒரு நபியாக தோன்ற வைத்து அஹ்மதியா இயக்கத்தை தோற்றுவித்தனர்.

இந்த வரலாற்று ஆராய்ச்சியைப் புகழ்ந்து இவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க மறந்துவிட்ட பல்கலைக்கழகங்கள் அவர் அறிவுத்திறனுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க முன்வருமாறு வேண்டுகிறேன்.

இறுதி நபிக் கொள்கையை தவறான முறையில் அடிப்படைக் கொள்கையாக கடைபிடித்துவரும் முஸ்லிம்களை ஒரு நபியின் வார்த்தைகளின் மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். எனவே அவர்களை திசை திருப்ப ஒரு நபியை ஆங்கிலேயர்கள் தோற்றுவித்தார்கள் என்று கூறுவது "மௌலானாவுடைய மடத்தனத்தையும் அறியாமையையும் படம் பிடித்துக் காட்டுகின்றது.

ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்கள் எதற்காக ஆங்கிலேய ஆட்சியைப் புகழ்ந்தார்கள்?

ஆங்கிலேயர் ஆட்சி ஏற்படுவதற்கு முன் இந்தியாவில் குறிப்பாக பஞ்சாபில் முஸ்லிம்கள் மிகவும் அவதிக்குள்ளாகியிருந்தனர். பஞ்சாபில் அப்போது சீக்கியர்களுடைய ஆட்சி நடைபெற்றது. அவர்கள் முஸ்லிம்களை கொன்று குவித்தனர். பள்ளிவாயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. பஞ்சாபில் பாங்கு சொல்லக்கூட அனுமதி இருந்ததில்லை.

சீக்கிய ஆட்சியில் முஸ்லிம்கள் அனுபவித்துக் கொண்டிருந்த பயங்கரமான கொடுமைகளை பற்றி இந்து அறிஞ்சர் துளசிராம் என்பவர் 1872 இல் வெளியிட்ட தமது 'ஷேரே பஞ்சாப்' என்னும் நூலில் இவ்வாறு வரைந்துள்ளார்:- 

"ஆரம்ப காலத்தில் சீக்கியர்கள் மிகவும் பயங்கரமான கொலைகளும் கொள்ளைகளும் செய்துவந்தனர். தங்களது கைகளுக்கு கிடைத்த எல்லாவற்றையும் கொள்ளையடித்து தங்களுக்கிடையே பங்கு போட்டுக் கொண்டிருந்தனர். சீக்கியர்கள் முஸ்லிம்கள் மீது கடுமையான பகைமை கொண்டிருந்தனர். முஸ்லிம்கள் பாங்கு சொல்வதற்கு அவர்கள் அனுமதியளிக்கவில்லை. மஸ்ஜித்களை ஆக்கிரமித்துக் கொண்டு அவற்றில் தம்முடைய குருகிரந்த் எனும் நூலைப் படித்துக் கொண்டிருந்தனர்."

மேற்கண்ட நூலில் கூறப்பட்ட நிலைமைகளிலிருந்து ஆங்கிலேயர்கள்தான் முஸ்லிம்களைக் காப்பாற்றினர்.

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் ஆங்கிலேய ஆட்சியைப் தாம் பாராட்டியுள்ளதற்கான காரணங்களை கீழ்க்கண்டவாறு தெளிவு படுத்தியுள்ளார்கள்:-

"நான் ஆங்கிலேய அரசை மகிழ்விப்பதற்காக எதுவும் கூறவில்லை. எனினும் இந்த ஆட்சி, முஸ்லிம்கள் தமது கடமைகளை செய்வதில் எவ்விதத்தடையும் செய்வதில்லை. தமது மார்க்கத்தை இறைவனுக்காக மட்டும் அர்ப்பணம் செய்யும் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த ஆட்சி வாளெடுக்கவில்லை. இவ்வாறான ஆட்சியை வாளெடுத்து யுத்தம் செய்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. நான் ஆங்கிலேய ஆட்சியை மகிழவைக்கவோ அல்லது நான் பயனடையவேண்டும் என்ற எண்ணத்துடனோ இவ்வாறு கூறவில்லை" 

அஹ்மதிகளை பிரிட்டிஷ் ஆட்சியின் ஏவலர்கள் என்று புளுகும் 'மௌலான' தான் சார்ந்திருக்கும் ஜமாத்துகளையும் தங்களுடைய மதிப்பிற்குரிய ஆலிம்சாக்களையும் பற்றி ஆராய்ந்து பார்த்தால் பிரிட்டிஷ் ஆட்சியின் ஏவலர்கள் அவர்கள்தாம் என புரிந்து கொள்ள முடியும்.

தாருல் உலூம் நத்வதுல் உலமாவின் மாதப்பத்திரிகையான 'அன்னத்வா' இவ்வாறு எழுதியிருந்தது.

"இந்த தாருல் உலூமிலிருந்து வெளிவரும் ஆலிம்களுடைய மிகப் பெரிய கடமை ஆங்கிலேய ஆட்சியின் குணங்களையும் அருட்களையும் நன்குணர்ந்து நாட்டுமக்களுக்கு அதனுடைய குணங்களை எடுத்துக்காட்டி அதற்கு கீழ்படிய வேண்டியதன் அவசியத்தை பரவசெய்யவேண்டும் என்பதாகும்." (அந் நத்வா : லக்னோ ஜூலை 1908)

அஹ்ராரி இயக்கத்தின் தலைவர் மௌலான சபர் அலி கான் தன்னுடைய பத்திரிகையான ஜமீந்தார் இல் இவ்வாறு எழுதியுள்ளார்:-

"ஜமீந்தார் பத்திரிகையும் அதனைச் சார்ந்தவர்களும் பிரிட்டிஷ் ஆட்சியை இறைவனுடைய நிழல் என்று நினைக்கிறார்கள். ஒரு வினாடி கூட இந்த அரசாங்கத்திற்கெதிராக முஸ்லிம்களால் தப்பெண்ணம் கொள்ளவே முடியாது. துர்பாக்கியமான எந்த ஒரு முஸ்லிமும் இந்த அரசாங்கத்திற்கெதிராக செயலாற்ற நினைத்தால் அவனொரு முஸ்லிமே அல்ல வென்று முரசு கொட்டி நாங்கள் அறிவிப்போம் நம்முடைய அரசின் நெற்றியிலிருந்தும் வடியும் ஒருதுளி வேர்வைக்குப் பதிலாக முஸ்லிம்கள் தங்களுடைய உடலின் இரத்தத்தை சிந்தத்தயாராக இருக்கின்றனர் இந்தியாவிலுள்ள எல்லா முஸ்லிம்களின் நிலையம் இதுவேயாகும். ( ஜமீந்தர் 11-11-1911)

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தின் பெரும் விரோதியான முஹம்மது ஹுசைன் பட்டாலவி ஆங்கிலேய ஆட்சி பற்றி கீழ்வருமாறு எழுதியுள்ளார்:-

"முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் பிரிட்டிஷ் ஆட்சி பெருமைக்குரியதாகத் திகழ்கிறது. குறிப்பாக அஹ்லே ஹதீஸிற்கு இந்த அரசு தற்போதைய எல்லா இஸ்லாமிய அரசுகளை விடவும், ரோம், ஈரான், குரோசான் ஆகியவற்றிலுள்ள அரசுகளை விடவும் மிகவும் அருளுக்குரியதாக உள்ளது. இவ்வரசாங்கத்தின் சமாதானக் கொள்கைகள் காரணமாக இவ்வரசாங்கம் தங்களுக்கு அருளப்பட்ட ஒரு இறையருள் என்றே அஹ்லே ஹதீஸ் பிரிவினர் கருதுகின்றனர். இந்த அரசாங்கத்தின் கீழ் குடிமக்களாக வாழ்வது இஸ்லாமிய அரசின் கீழ் குடிமக்களாக வாழ்வதைவிடவும் மேலானதென்று கருதுகின்றனர். இஷா அதுஸ் ஸுன்னா பாகம் : 6, பக்கம் 10 )

அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் பெரும் விரோதியான தேவ்பந்தி அஹ்லே ஹதீஸ் என்னும் பிரிவினரின் தலைவராக இருந்த மௌலவி நதீர் அஹ்மத் கீழ்க்கண்டவாறு வரைந்துள்ளார்:-

"இந்திய மக்கள் மீது ஆட்சி புரிவதற்கு இந்துவோ, முஸ்லிமோ அல்லாத வெளிநாட்டரசர் ஒருவர்தான் வரவேண்டும். அதில்தான் இந்த மக்களுக்கு நன்மை இருக்கிறது. ஐரோப்பாவில் உள்ள அரசுதான் இங்கு ஆட்சி புரிய வேண்டும். இங்கு ஆங்கிலேய அரசு ஆண்டுகொண்டிருப்பது இறைவனுடைய மாபெரும் கிருபையாகும். இந்த ஆங்கிலேய ஆட்சி தாயை விடவும். மேலான அன்பும் இரக்கமும் கொண்டதாகும். பர்மா, நேபாளம், ஆப்கானிஸ்தான், எகிப்து, அரபு நாடுகள் ஆகியவற்றிலுள்ள அரசர்களுள் எவரும் இந்தியாவை ஆளுவதற்குரிய தகுதிபடைத்தவர்கள் என நான் கருதவில்லை. இந்தியாவை ஆளத் தகுதிபெற்றவர்கள் ஆங்கிலேயர் மட்டும்தான. இந்த ஆட்சி நீண்ட காலம் இருக்கவேண்டும் என்பதுதான் எனது துஆவும் விருப்பமுமாகும்."

'மௌலான' அவர்கள் மிகவும் பெருமையுடன் எடுத்துக் காட்டியிருக்கும் கவிஞ்சர் அல்லாமா இக்பால் ஆங்கிலேய ஆட்சிபற்றி என்ன கூறியிருக்கிறார் என்று பாருங்கள்.

விக்டோரியா மகாராணியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அவர் இவ்வாறு கவிதை எழுதியுள்ளார். "மகாராணியின் சடலம் பெருமதிப்புடன் செல்கிறது. நான் பறந்து சென்று அந்த சடலம் செல்லும் வழியில் என்னையே நான் அர்ப்பணம் செய்ய நாடுகிறேன். இவர் மரணமடைந்த இந்த மாதத்திற்கு நான் முஹர்ரம் என்று பெயர் சூட்டுகிறேன். இன்று பெருநாளாக இருக்கிறது. ( ஒரு பெருநாளன்றுதான் அரசி மரணமடைந்தார்.) ஆனால் இந்த பெருநாள் வருவதைவிட மரணம் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். இந்திய துணைக்கண்டமே! உனது மீதிருந்த இறைவனுடைய நிழல் மறைந்துவிட்டது. மகாராணியே! உங்களது மறைவால் இறைவனுடைய சிங்காசனமே நடுங்கிக்கொண்டிருக்கிறது.

பாருங்கள் இன்று அஹ்மதியா ஜமாத்தைப் பற்றி குற்றம் சாட்டுகின்ற மௌலானாவின் முன்னோர்களும், தலைவர்களும் ஆங்கிலேய அரசாங்கத்திடம் வைத்திருந்த நம்பிக்கையின் ஒருசில உதாரணங்கள் மட்டும்தான் இங்கு தரப்பட்டுள்ளன. 

அஹ்மதியா ஜமாஅத் ஆங்கிலேய அரசாங்கத்திடமிருந்து சலுகைகள் பல பெற்றுக் கொண்டிருந்தது என்று குற்றம் சாட்டும் மௌலானாவினால் இதனை நிரூபித்துக் காட்டவே முடியாது.

வாக்க்களிக்கப்பட்ட மசீஹின் இரண்டாவது கலீபாவாகிய ஹஸ்ரத் மிர்ஸா பசீருத்தீன் மஹ்மூத் அஹ்மத் அவர்கள் அஹ்மதியா ஜமாஅத் பிரிட்டிஷ் அரசிடமிருந்து ஒரு சல்லிக்காசாவது பெற்றதாக எவராலும் நிரூபித்துக் காட்ட முடியுமா என்று சவால் விட்டார்கள் இந்த சவாலை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எவராலும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

இறுதிநாள் வரை எந்த மௌலானாவும் எந்தக் கூட்டத்தினரும் இதனை நிரூபிக்க முடியாது?

ஆனால் மௌலானாவின் முதியோர்களும், முன்னோர்களும், அவர்களுடைய ஜமாத்துகளும் ஆங்கிலேய அரசிடமிருந்து என்னென்ன சலுகைகள், நன்கொடைகள் பெற்றார்கள் என்பதற்கான சான்றுகள் எம்மிடம் உள்ளன.
Read more »