அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jul 28, 2012

சிலுவை சம்பவத்தில் ஆள் மாறாட்டம் நிகழ்ந்ததா?


சிலுவை சம்பவத்தின் போது ஆள்மாறாட்டம் நிகழ்ந்ததாக முஸ்லிம்களில் பெரும்பாலோர் நம்புகின்றனர். ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களை சிலுவையில் அறைந்து கொல்ல முயன்றபோது, இறைவன் அவர்களைக் காப்பாற்றுவதற்காக வேறொரு நபருக்கு ஈசாநபி (அலை) அவர்களின் உருவத்தைக் கொடுத்தான் என்றும் அந்த நபரையே யூதர்கள் சிலுவையில் அறைந்து கொன்றார்கள் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

ஆனால் திருகுரானிலோ, நம்பகமான நபிமொழிகளிலோ இந்தக் கருத்துக்கு எந்தச் சான்றும் இல்லை. என்றாலும் அந்தக் காலத்து திருக்குர்ஆன் விரிவுரையாளரான தபரி முதல் இந்தக் காலத்து திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளரான ஆ. கா . அப்துல் ஹமீது பாகவி வரை பல்வேறு விரிவுரையாளர்களும். மொழி பெயர்ப்பாளர்களும் தம்முடைய நூல்களில் இந்தக் கட்டுக் கதையை கூறியுள்ளனர்.

இந்தக் கதை, ஆரம்பகாலத்தில் இஸ்லாத்திற்கு மதம் மாறிய யூதர்களாலோ, கிறிஸ்தவர்களாலோ புனையப்பட்டிருக்கவேண்டும். ஏனெனில் இந்தக் கதையை கூறுகின்றவர்கள் எல்லாம் இந்தக் கதைக்கு அறிவிப்பாளர்களாக மதம் மாறிய யூதர்களையோ, கிறித்தவர்களையோதான் குறிப்பிடுகின்றனர். தபரி என்ற திருக்குர்ஆன் விரிவுரையாளர் ஈசா நபிக்கு பகரமாக இன்னொருவர் சிலுவையில் அறையபெற்றார் என்ற கூற்றுக்கு அறிவிப்பாளராக ஹைப் என்ற யூதரையே குறிப்பிட்டுள்ளார். ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்கள் தமது பதினேழு சீடர்களுடன் ஓர் அறையில் இருந்ததாகவும் அதில் ஒருவர் ஈசா நபி போல் இறைவனால் உருமாற்றப்பட்டதாகவும். அவரையே யூதர்கள் சிலுவையில் அறைந்து கொன்றதாகவும் இந்த வஹப் கூறியுள்ளார்.

இந்தக் கட்டுக்கதை தோன்றுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

ஆரம்பக் காலத்தில் இஸ்லாத்தை தழுவிய யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும்,

...... அவர்கள் அவரைக் கொலை செய்யவுமில்லை சிலுவையில் அறைந்துகொள்ளவுமில்லை......." (4:158) 

என்ற திருக்குர்ஆன் வசனம் புரியாத புதிராக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ஈசா நபி சிலுவையில் அறையப்பட்டது நடந்தேறிய ஒரு உண்மை நிகழ்ச்சி. ஆனால் திருக்குரானோ ஈசா நபி சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை என்று கூறுகிறது. இந்தப் புதிருக்கு விடையாக மேற்கண்டகட்டுக்கதையை இவர்கள் புனைந்து கூறியுள்ளனர். சிலுவை சம்பவம் உண்மையில் நிகழ்ந்த ஓன்று. ஆனால் அறியப்பட்டது ஈசா நபி அல்ல. மாறாக அவர்களின் உருவத்தைப் பெற்ற இன்னொருவரே என இவர்கள் கூறினார். 

ஈசா நபிக்குப் பகரமாக அப்பாவியான இன்னொருவர் சிலுவையில் பலியிடப்பட்டாரா? ஈசா நபியை காப்பாற்ற இந்த நியாயமற்ற செயலை இறைவன் செய்தானா? என்ற கேள்வி சிந்திக்கின்ற எவருக்கும் எழும். 

இப்படிப்பட்ட கேள்விகள் எழுமே என்ற எண்ணம் இந்தக் கதையைப் புனைந்தவர்களுக்கும் ஏற்பட்டிருக்கவேண்டும். இதற்காக இன்னொரு துணைக் கதையையும் கூறியுள்ளார்கள். க அதா என்பவரின் கூற்றை ஆதாரமாகக் காட்டி தபரி கீழ்வருமாறு கூறுகிறார்:

"மரியமின் மகன் ஈசா நபி(அலை) அவர்கள் தங்களின் தோழர்களை நோக்கி எனது தோற்றத்தைப் பெற்று சிலுவையில் கொல்லப்பட உங்களில் யார் தயாராக இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்க்கு அவர்களில் தோழர்களில் ஒருவர் இறைவனின் தூதுவரே, நான் அதற்குத் தயார் என்று பதில் அளித்தார். இவ்வாறு அந்த நபர் கொல்லப்பட்டார் இறைவன் தனது தூதரைப் பாதுகாத்து தன்னளவில் உயர்த்திக்கொண்டான். (தி முஸ்லிம் வேர்ல்ட் வால்யும்70 எண், 2 பக்கம் 97 ) 

இப்னு இஷ்ஹாக் என்பவரும் தமது வரலாற்று நூலில் இந்த ஆள்மாறாட்ட கதையைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பலியானவர் ஈசா நபியின் தோழர்களில் ஒருவரன்று, மாறாக சர்கஸ் என்பவரே எனக் கூறுகின்றார். இதே இப்னு இஷ்ஹாக் இன்னோரிடத்தில் பலியானது யூதாஸ் எனக்குறிப்பிட்டு அதற்கு அறிவிப்பாளராக கிறிஸ்தவராக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய ஒருவரைக் கூறுகிறார். ஈசா நபியைப் பிடிக்க வந்த டி டியானஸ் என்பவரே சிலுவையில் பலியானார் என்று கூறுபவர்களும் உண்டு.

எது எப்படி இருப்பினும், இறைவன், ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களைக் காப்பாற்ற அவர்களின் தோழர்களில் ஒருவருக்கே எதிரிகளில் ஒருவருக்கோ ஈசா நபி அவர்களின் உருவத்தைக் கொடுத்து அந்த நபரையே சிலுவையில் மரணிக்கச் செய்தான் என்ற கூற்று சிந்திக்கின்ற எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இறைவன் இந்த நியாயமற்ற செயலை செய்தான் என்று இந்த ஆள் மாறாட்ட நாடகத்தை அரங்கேற்றினான் என்றோ கூறுவது அந்த இறைவனின் தூய தன்மைக்குக் களங்கம் கற்பிப்பதாகும். 

ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களுக்கு முன்னால் தோன்றிய நபிமார்களுக்கு இன்னல்கள் இடுக்கண்கள் ஏற்படாமல் இருக்கவில்லை. அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருந்ததுமில்லை. 

ஹஸ்ரத் இப்ராஹீம்(அலை) அவர்கள், அவர்களின் எதிரிகளால் நெருப்புக்குழியில் போடப்பட்டார்கள். அந்த ஆபத்தை அவர்களே சந்தித்தார்கள். அல்லாஹ் அவர்களை அந்த நெருப்புக் குழியிலிருந்து அற்புதமாகக் காப்பாற்றினான். அதுபோல ஹஸ்ரத் மூஸா(அலை) பிரௌனின் பிடியிலிருந்து காப்பாற்றினான். ஹஸ்ரத் யூனுஸ்(அலை) அவர்கள் கப்பலிலிருந்து கடலில் தள்ளப்பட்ட ஒரு மீனால் விழுங்கப்பட்ட நிலையிலும் இறைவன் அவர்களைக் காப்பாற்றினான். ஹஸ்ரத் யூசுப்(அலை) அவர்கள் சிறுவராக இருந்தபோது அவர்களின் சகோதரர்களாலேயே கிணற்றில் தள்ளப்பட்டார்கள். அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட அந்த தருணத்தில் இறைவன் அவர்களை ஒரு பயணக்குழு மூலம் காப்பாற்றினான். 

இந்த நபிமார்கள் எல்லாம் அவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்துகளை அவர்களே நேரிடையாகச் தந்தித்தார்கள் . இறைவன் அவர்களைத் தனது வல்லமையால் காப்பாற்றி மீண்டும் மக்கள் முன்னால் உலவச் செய்தான். 

அவ்வாறே ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்ட போதெல்லாம் அவர்களே அந்த ஆபத்துகளை சந்திக்க வைத்து அவற்றிலிருந்து இறைவன் காப்பாற்றினான்.

இவ்வாறிருக்க, ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டபோது அவர்களுக்குப் பகரமாக இன்னொருவரை அந்த ஆபத்தில் மாட்டி விட்டு ஈசா நபி அவர்களை இறைவன் உயர்த்திக் கொண்டான் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கமுடியும்? இத்தனை நபிமார்களுக்கு ஒரு நீதி, ஈசா நபி அவர்களுக்கு மட்டும் தனி நீதியா? 

உண்மையில், ஈசா நபி அவர்களும் அவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை அவர்களே சந்தித்தார்கள். அவர்களே சிலுவையில் அறையுண்டார்கள். ஆனால் இறைவன் ஏனைய நபிமார்களை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றியது போன்று ஈசா நபி அவர்களையும் சிலுவையிலிருந்து காப்பாற்றினான். அவர்கள் அதில் மரணமடையாது உயிர்தப்பினார்கள். 

ஈசா நபி அவர்கள் சிலுவையில் அறையப்பட்டார்கள், ஆனால் அவர்கள் அதில் இறக்கவில்லை. இறைவன் அவர்களை அந்த மோசமான மரணத்திலிருந்து காப்பாற்றினான். என்ற புதிய கருத்தை - பகுத்தறிவு ஏற்கின்ற கருத்தை அஹ்மதியா ஜமாத்தை தோற்றுவித்த ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்களே உலகுக்கு எடுத்துரைத்தார்கள்.

இந்தக்கருத்து திருக்குர்ஆன் வசனங்களுக்கோ, நபிமொழிகளுக்கோ எவ்வகையிலும் முரண்படவில்லை.

சிலுவை சம்பவம் தொடர்பான திருக்குர்ஆன் வசனத்தில் அதாவது 4:158 ஆம் வசனத்தில் 'ஸலப' என்ற சொல் காணப்படுகிறது இது வெறுமனே சிலுவையில் அறையப்படுவதை குறிக்காது மாறாக சிலுவையில் அறிந்துக் கொல்லப்படுவதையே குறிக்கும். ஏனெனில் 'ஸலப' என்ற சொல் அரபி மொழியில், சிலுவையில் ஏற்றி எலும்பை முறித்தல் என்ற பொருளில் பயன் படுத்தப்படுகிறது. எனவே இந்த வசனத்திற்கு 'வ மா சலபஹு' என்ற சொற்றொடர் சிலுவையில் அறையப்படவேயில்லை என்று பொருள் படாது மாறாக சிலுவையில் அறைந்து கொல்லபபடவில்லை என்ற பொருளையே தரும்.

அடுத்து இந்த வசனத்தில் காணப்படும் ஷுப்பிஹலஹும் என்ற சொற்றோடருக்குத் திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் பலர் இன்னொருவர் அவரைப்போன்று ஆக்கப்பட்டார் என்று பொருள் தருகின்றனர். இவ்வாறு பொருள் கொள்வது இலக்கணப்படி முற்றிலும் தவறானதேயாகும். இங்கு இன்னொருவரை நுழைக்க வழியேயில்லை 'ஷுப்பிஹலஹும்' என்ற சொற்றொடருக்கு அவர் அவ்வாறு (சிலுவையில் கொல்லப்பட்டவர் போன்று) ஆக்கப்பட்டார் என்றோ அது (அந்நிகழ்ச்சி) சந்தேகத்திற்குரியதாக ஆக்கப்பட்டது என்றோதான் பொருள் கொள்ளமுடியும்.

எனவே ஈசா(அலை) அவர்களுக்குப் பகரமாக இன்னொருவர் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்ற கூற்று அடிப்படையற்றதும் ஆதாரமற்றதும் ஆகும்.
Read more »

நூல்களை சுமக்கும் கழுதைகள் - அல்-ஜன்னத் ஏட்டிற்கு பதில்


'கழுதைக்கு தெரியுமா கர்ப்பூர வாசனை' என்பார்கள். ஒன்றைப் பற்றி அல்லது ஒருவரைப் பற்றி சரியாக மதிப்பீடு செய்ய இயலாத அறிவிலிகள் குறித்து இவ்வாறு கூறப்படுவதுண்டு.

தவ்ராத் சுமத்தப்பட்டு, ஆனால் அதன்படி செயல்படாதவர்களின் உவமை, புத்தகங்களை சுமக்கும் கழுதையின் உவமையைப் போன்றதாகும். அல்லாஹ்வின் அடையாளங்களை ஏற்க மறுக்கும் மக்களின் உவமை மிகக் கெட்டதே. அநீதி இழைக்கும் மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை (62:6)

என்று திருக்குரானில் இறைவன் கூறுகின்றான். இறை அடையாளங்களை மறுக்கின்றவர்களை இறைவன் இங்கு கழுதையோடு ஒப்பிடுகின்றான். அத்தகையோர் நூல்களைக் கட்டி மாரடிப்பார்களே தவிர அவற்றில் காணப்படும் கருத்துக்களை குறித்துச் சிந்திப்பது இல்லை. என்பதும் இதில் அடங்கியுள்ளது.

அல் ஜன்னத் மாத இதழின் ஆசிரியரும் இத்தகையோரில் ஒருவர் என்பதை அவருடைய அண்மைக்கால எழுத்துக்கள் பறைசாற்றுகின்றன.

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்திற்கு முன்னுள்ள வசனத்தில் பிற்காலத்தில், அரபியல்லாத மக்கள் மத்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோன்றுவது குறித்து கூறப்பட்டிருக்கிறது. இது குறித்து வியப்படைந்து அக்காலத்திலேயே வினவப்பட்ட கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள், ஈமான் கார்த்திகை நட்சத்திரமளவில் சென்று விடும் போது அதனை திரும்பக் கொண்டு வரும் ஒருவரைக் குறித்தே இங்கு கூறப்பட்டிருக்கிறது என்று விளக்கமளித்துள்ளார்கள். இந்த விளக்கமும் நிகழ்ச்சியும் சஹீஹுள் புகாரியில் இடம்பெற்றுள்ளது.

அதாவது, நபி (ஸல்) அவர்கள் அரபு மக்களிடையே தோன்றி உலகுக்கே வழி காட்டினார்கள். ஆனால் அவர்களைப் பின்பற்றிய சமுதாயம் பிற்காலத்தில் வீழ்ச்சியுறும். அவர்களிடமிருந்து ஈமான் அகன்று விடும். அப்போது ஒருவர் தோன்றுவார். முஸ்லிம்களிடம் இருந்து மறைந்து விட்ட ஈமானை மீண்டும் அவர் நிலைநாட்டுவார். அது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீண்டும் வந்தது போன்று இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக் காலமாக அமைந்து விடும்.

இறைவனின் இந்த வாக்குறுதியும் அதற்க்கு விளக்கமாக விளங்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பும் இக்காலத்தில் நிறைவேறியுள்ளன. இஸ்லாத்தின் எழுச்சியை மீண்டும் உலகில் நிலைநிறுத்த ஒருவர் தோன்றி அந்த மகத்தான பணிக்கு அடித்தள மிட்டுச் சென்றுள்ளார். அவர் தாம் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள்.

இந்த மகத்தான இறையடையாளத்தை மறுத்து தம் மனம் போன போக்கில் உளறிக் கொண்டிருப்பவர்களைக் குறித்தே நூல்களைச் சுமக்கும் கழுதைகள் என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். அதுவும் அவர்களை தவ்ராத் வழங்கப்பட்ட யூதர்களுடன் ஒப்பிட்டுச் சொல்கிறான். ஏனெனில் அவர்கள் இறைதூதரான ஈசா (அலை) அவர்களை மறுத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்புகள் தவ்ராத்தில் இடம் பெற்றிருந்தும் அந்த மாநபியை மறுத்தார்கள். அதனால் அந்த யூதர்கள் நூகளைப் பயனின்றிச் சுமக்கின்ற கழுதைகள் போலானார்கள்.

இதனை ஒரு பாடமாக இறைவன் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்துகின்றான். உங்களிடத்திலேயே திருக்குர்ஆன் உள்ளது. அதிலுள்ள வசனங்களைக் குறித்துச் சிந்தியுங்கள். அதிலுள்ள முன்னறிவிப்புகளைப் புரிந்து கொள்ளுங்கள். இறையடையாளன்களைக் கண்டு கொள்ளுங்கள். இறைவன் புறமிருந்து வந்தவரை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில், நீங்கள் திருக்குர்ஆன் எனும் அற்புத நூலை வெறுமனே சுமக்கும் கழுதைகள் ஆவீர்கள்.

இந்த எச்சரிக்கையைப் சிந்தித்து உணராத அல் ஜன்னத் ஆசிரியரைப் போன்றோர் இறைவன் புறமிருந்து வந்தவரையும் அவருக்குச் சான்றாக வெளிப்பட்ட இறையடையாளங்களையும் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். மறுப்பது மட்டுமே இவர்களின் வாடிக்கையான வழியாகி விட்டது. அடிக்கடி கோயம்புத்தூரில் அஹ்மதிகளுக்கும் இவர்களுக்கும் நடைபெற்ற விவாதம் பற்றி பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். வாழ்க்கையில் இவர்கள் நிகழ்த்திய மகத்தான சாதனை என அவர்கள் எண்ணுகிறார்கள். அதற்கும் களியக்காவிளை விவாதத்தில் சுன்னத்வல் ஜமாத்தினர் வேட்டு வைத்தார்கள். இவர்கள் அந்த விவாதத்தில் நாங்கள் காதியானிகளோடு விவாதம் செய்தோம் என்று கூறினார்கள். அதற்க்கு அஹ்மதியா ஜமாஅத்தின் விரோதிகளான சுன்னத்வல் ஜமாத்தினர் பதில் கொடுத்தனர். 

இவர்கள் எவ்வளவுதான் அஹமதிய்ய ஜமாத்திற்கு எதிராக செயல் பட்டாலும் உண்மை ஒருநாள் வெட்ட வெளிச்சமாகிவிடுகிறது.

ஆனால் அந்த விவாத அரங்கில் இவர்கள் என்ன செய்தார்கள்? மறுத்துக்கொண்டே இருந்தார்கள். இவர்களின் கொள்கைக்கு முறையான ஆதாரங்களைக் காட்டினார்களா? மனிதராகப் இம் மண்ணுலகில் பிறந்த ஈசா நபி, மரணத்தை வென்று இன்றும் உயிரோடு இருக்கின்றார்கள் என்ற இவர்களின் மூடநம்பிக்கைக்கு என்ன சான்றை எடுத்து வைத்தார்கள்? இறைவனுடை பண்பை ஈசா நபி அவர்களுக்கு கொடுத்து இணைவைக்கும் செயலில் ஈடுபட்டார்கள். உணவே உண்ணாத உடலை நாம் இறைத்தூதர்களுக்கு கொடுக்கவில்லை என்று இறைவன் திருக்குரானில் கூறியதற்கு நேர்மாற்றமாக ஈசா நபி அவர்கள் உணவே உண்ணாமல் வானத்தில் உயிரோடு இருக்கிறார்கள் என்று கூறினார்கள். இறைவன் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து "உமக்கு முன்னர் எந்த ஒரு மனிதருக்கும் நிலைத்து வாழக்கூடிய வாழவைக் கொடுக்கவில்லை என்று திருக்குரானில் கூறுகின்றான். ஆனால் இவர்கள் ஈசா நபி வானத்தில் நிலைத்து வாழ்கிறார்கள் என்று கூறி இறைவனுக்கு இணைவத்ததுமல்லாமல் நபி (ஸல்) அவர்களை கேவலப்படுத்தினார்கள். இதுதான் இவர்கள் கோவை விவாதத்தில் நிகழ்த்திய மிகப் பெரிய சாதனை.

இறையருளாக திருக்குர்ஆன் கூறும் நபித்துவம் முடிவுக்கு வந்துவிட்டது, அதுவும் உலகுக்கே இறையருளாக வந்த ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுடன் முற்றுப் பெற்று விட்டது என்ற இவர்களின் பேதமைத்தனமான கொள்கைக்கு ஏதேனும் ஒரு தெளிவான ஆதாரத்தை எடுத்து வைத்தார்களா? நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி என்று கூறிக்கொண்டு, இறுதி காலத்தில் ஈசா நபி வருவார்கள் என்று விவாதம் செய்து இறுதி நபிக் கொள்கையை அவர்களே மறுத்தார்கள்.

அஹ்மதிகள் அடுக்கிக் கொண்டு போன ஆதாரங்களை மறுத்துக் கொண்டே இருந்ததைத் தவிர கோயம்புத்தூர் விவாத அரங்கில் இவர்கள் என்ன சாதித்தார்கள்.

மறுப்பது சாதனையாகிவிடுமா? இப்படித்தானே யூதர்களும் கிருஸ்தவர்களும் நபி(ஸல்) அவர்களை மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தானே நாத்திகர்கள் இறைவனையே மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் திருக்குரானையும் நபி மொழிகளையும் தம்மிடம் வைத்துக்கொண்டு இறையடையாளன்களை மறுக்கும் இவர்களை, அந்த இறைமறையின் கருத்துக்கேற்ப 'நூல்களை சுமக்கும் கழுதைகள்' எனக் கூறுவதில் என்ன தவறிருக்க முடியும். 
Read more »

ஜின்னும் மனிதர்களே - சிராஜ் அப்துல்லாவுக்கு பதில்


ஜின் இனத்தைப் பற்றி முஸ்லிம்களிடையே யுகங்களின் அடிப்படையில் தவறான கருத்துகள் நிலவி வருகின்றன. இதற்க்கு திருக்குரானில் எவ்வித சான்றும் இல்லை. திருக்குர்ஆன் இவர்களின் தவறான கருத்துக்கு நேர் மாற்றமான வகையில் ஜின் இனத்தைப் பற்றி கூறுகிறது. திருக்குரானில் கூறப்படும் ஜின் எனப்படுவோர் யார்? என்பதை திருக்குர்ஆன் அடிப்படையில் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். ஜின் என்பதற்குப் பல அர்த்தங்கள் இருந்தாலும் திருக்குரானில் இந்தச் சொல் 'இன்ஸ்' என்ற சொல்லுடன் சேர்த்துக் கூறப்பட்ட இடங்களில் எல்லாம் மனிதரில் ஒரு பிரிவினர் என்ற நிலையிலேயே கூறப்பட்டுள்ளது என்பதும் அற்புதச் சக்தியுடைய கண்களுக்குப் புலப்படாத தனிப்பட்ட ஒரு படைப்பினத்தைக் குறித்துக் கூறப்பட்டதல்ல என்பதும் திருக்குரானை ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவர்களுக்கு விளங்கும்.
 

ஜின்களில்நபிமார்கள்:-
 

மறுமையில் இறைவன் "ஜின் இன்ஸ் கூட்டத்தாரே! உங்களுக்கு எனது வசனங்களை ஓதிக்காட்டவும், இறுதி நாளின் சந்திப்பைப் பற்றி எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே தூதர்கள் உங்களிடம் வரவில்லையா?" (6:131) என்று கேட்பான்.
இந்த வசனத்தில் ஜின், இன்ஸ் கூட்டத்திலிருந்து தூதர்கள் அவர்களிடம் வந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு ஜின் என்று கூறப்பட்டிருப்பது, கண்ணுக்கு புலப்படாத தனிப் படைப்பு என்றிருந்தால், அந்தப் படைப்புகளிலிருந்து தனியாகத் தூதர்கள் வந்திருக்க வேண்டியது பற்றியும், அவர்களின் செயல் முறைகள் பற்றியும் அவசியம் திருக்குரானில் ஓரிடத்திலாவது கூறப்பட்டிருக்கவேண்டும். ஆனால் மனிதர்களாகிய தூதர்களைப் பற்றிய விஷயங்களே திருமறையில் காணப்படுகிறது. எனவே ஜின் என்று கூறப்பட்டிருப்பது, மனிதர்களில் ஒரு பிரிவினரைக் குறித்தே கூறப்பட்டிருக்கிறது என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.
'இன்ஸ்' என்றால் சாதாரண நிலையில் வாழ்க்கை நடத்தும் மனிதர்களாவர். இன்ஸ் என்பதற்கு அன்பு, நேசம் எனபது பொருளாகும். ஜின் என்பது, சாதாரண மக்களிலிருந்து விலகி வாழைக் கூடிய, மற்ற மனிதர்களுக்கு இலேகுவாகக் காண்பதற்கும், கண்டு பழகுவதற்கும் முடியாத பெரியவர்களை, தலைவர்களைக் குறித்தே கூறப்பட்டிருக்கிறது. ஏனெனில் 'ஜின்' என்பதன் பொருள் 'மறைந்திருக்கக்கூடியது என்பது பொருளாகும்.
இவ்விதம் ஜின், இன்ஸ் என்று கூறப்பட்டிருப்பது அரசனும், குடிமக்களும், எஜமானும், வேலையாளும், முதலாளியும், தொழிலாளியும், சர்வாதிகாரியும், சாதாரண மக்களும், ஆகிய பிரிவினர்களையே குறிக்கும் இரண்டு குணப்பெயர்களாகும் மேற்படி திருக்குர்ஆன் வசனங்களை தொடர்ந்து 'தூதர்களை அனுப்பாதவரை எந்த ஓர் ஊரையும் நாம் அழிப்பதில்லை. (6:131) என்று இறைவன் கூறியுள்ளதும் இதற்க்குச் சான்றாகும். இங்குக் கூறப்பட்டுள்ள ஜின்னும் இன்சும் ஓர் ஊரில் வாழக்கூடியவர்கள் என்பதனால் ஜின் என்று கூறப்பட்டவர்கள் அந்த ஊர்களில் உள்ள மனிதர்களில் ஒரு பிரிவினரையே குறிக்கும் என்பதும், தெளிவாகிறது.

 

ஜின்கள் வலிமைவாய்ந்தவர்கள்:-
 

மறுமையில் அல்லாஹ் ஜின்களை நோக்கி, ஜின்கள் கூட்டத்தினரே! நீங்கள் மனிதர்களில் அநேகரை வசப்படுத்தி உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்கள் அல்லவா? என்று கேட்பான். அதற்க்கு 'இன்ஸ்' கூட்டத்தினர் கூறுவர். 'எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக் கொண்டு பலன் அடைந்திருக்கின்றோம்' என்று கூறுவர். (6:129)
இந்த வசனத்திலிருந்து ஜின், இன்சை விட வலிமையுடையவர்கள் என்றும் இன்ஸ்களை வசப்படுத்துபவர்கள் என்றும் இருவரும் ஒருவருக்கொருவர் பலனடைந்துள்ளனர் என்றும் விளங்குகிறது. எனவே ஜின் எனப்படுபவர் மனிதர்கள் அல்லாமல் வேறொரு படைப்பினமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் இந்த வசனத்திலிருந்து தெளிவாகிறது. எவ்வாறெனில் சாதாரண மக்களை வசப்படுத்தி அவர்களைக்கொண்டு காரியங்களைச் சாதிக்கக் கூடியவர்கள் அரசர்களும், பெரிய முதலாளிகளும், தலைவர்களுமாகவே இருக்கிறார்கள். கண்ணுக்குப் புலப்படாத வேறொரு தனிப் படைப்பினர் அல்ல என்பது தெளிவு. மனிதர்களைவிட உயர்ந்தவர்களும், மனிதர்களை தனது வலையில் விழவைத்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது வேறொரு படைப்பைச் சேர்ந்தவர்களல்ல என்பதும் தெளிவு. இங்கு ஜின் என்றும் இன்ஸ் என்றும் இரு பெயர்கள் கூறப்பட்டிருந்தாலும், அவர்களின் செயல், நடை முறைகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக உள்ளது என்பதை எளிதில் விளங்கிக் கொள்ளமுடியும்.

ஜின்களில் நபிமார்களின் விரோதிகள்:-
 

திருக்குரானில் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்: "இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும் மனிதர்களிலும் (இன்சிலும்), ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கி இருந்தோம். அவர்களில் சிலர் மற்றவர்களை ஏமாற்றும் பொருட்டு அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகக் கூறிக்கொண்டிருந்தனர்." (6:113) இந்த வசனத்தில் நபிமார்களின் எதிரிகள் இன்ஸ்களிலும், ஜின்களிலும் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மனிதர்களே நபிமார்களுக்கு விரோதிகளாக இருந்தார்கள்: அவர்களே பலவித அக்கிரமங்களும் அநியாயங்களும் துன்பங்களும் நபிமார்களுக்குக் கொடுத்து வந்துள்ளார்கள் என்றுமே திருக்குரானும் மற்ற கிரந்தங்களும் கூறுகின்றன. ஆனால் ஜின் என்றுக் கூறப்படக்கூடிய மறைவானப் படைப்பினங்கள் நபிமார்களுக்கு எதிராக யாதொரு தீங்கும் செய்ததாக எங்கும் கூறப்பட்டுள்ளதாகக் காண முடியவில்லை. ஜின்களும், இன்ஸ்களும் நபிமார்களுக் கெதிராக ஒருவருக்கொருவர் உதவி செய்து சதித் திட்டங்கள் தீட்டியதாகவும் ஏமாற்றும்பொருட்டு அலங்கார வார்த்தைகளை இரகசியமாகக் கூறிக்கொண்டிருந்ததாகவும் மேற்படி திருக்குர்ஆன் வசனத்தில் கூறப்பட்டுள்ளது. நபிமார்களின் எதிரிகளாகிய மனிதர்கள், ஜின்கள் என்ற கண்ணுக்குப் புலப்படாத ஒரு தனிப் படைப்போடு கூட்டு சேர்ந்து கொண்டு சதியாலோசனை செய்ததாகவோ அவர்களுடன் ஆலோசனை நடத்தி நபிமார்களுக்கு எதிராக வேலை செய்ததாகவோ எங்கும் கூறப்படவில்லை.
ஆதலால், நபிமார்களுக்கெதிராக சதி திட்டங்கள் தீட்டிய ஷைத்தான்கள் ஜின்னிலும் இன்சிலும் உட்பட்டவர்களாகிய மனிதர்கள் என்றே இவ்வசனத்திலிருந்தும் விளங்க முடிகிறது.
ஜின்களுக்கு உடலுண்டு:-
 

திருக்குரானில் இறைவன் ஓரிடத்தில் இவ்வாறு கூறுகிறான் : " இந்தக் குரானைப் போன்ற ஒன்றைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும்(இன்ஸ்) ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று) அவர்களில் சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும் இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வர முடியாது' என்று (நபியே!) நீர் கூறும். நிச்சயமாக இந்தக் குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் (மிகவும் தெளிவாக) விவரித்துள்ளோம். எனினும் மனிதர்களில் பெரும்பாலானவர்கள். (இதை) நிராகரித்திருக்கவில்லை". ( 17:88,89)
இங்கு ஜின்னும் இன்சும் ஒன்று சேர்ந்து திருக்குரானைப் போன்ற ஒரு தெளிவான வேதத்தைக் கொண்டு வருவதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு முயற்சி செய்து பார்க்கட்டும் என்று இறைவன் சவால் விட்டுள்ளான். அது மட்டுமல்ல அப்படி ஒன்றை உண்டாக்குவதற்கு எதிரிகளில் ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடியுமேயல்லாமல் கண்ணுக்குப் புலப்படாத தனிப் படைப்பாகிய ஜின்களிலிருந்து அவர்களுக்கு உதவி செய்ய முடியாது. மேற்படி வசனத்தின் மூலம் ஜின்களும், இன்ஸ்களும் ஒருவருக்கொருவர் உதவி செய்யக் கூடியவர்களாகவே இருக்கின்றனர் என்றே விளங்குகிறது. இந்த உதவி மனிதர்கள் ஒருவருக்கொருவர் செய்வதல்லாமல், கண்ணுக்குப் புலப்படாத வேறொரு படைப்பினத்திற்கும் மனிதர்களுக்கும் இடையில் நடக்க வாய்ப்பில்லை. ஆதலால் இங்கு ஜின், இன்ஸ் என்று கூறப்பட்டது மனிதர்களில் உள்ள இரண்டு பிரிவினரைக் குறித்தே கூறப்பட்டுள்ளது என்றே விளங்க்கிக் கொள்ள முடியும். அதாவது திருக்குரானை நேரடியாக எதிர்க்கக் கூடியவர்களும், மறைந்திருந்து அந்த எதிர்ப்புக்கு தலைமை தாங்குபவர்களுமாவார்கள் அந்த இரு பிரிவினர். திருக்குரானில் இந்த வசனத்தைத் தொடர்ந்து, மனிதர்களுக்குத் தேவையான அனைத்துப் போதனைகளும் இதில் அடங்கியுள்ளதென்றும் ஆனால் பெரும்பாலானவர்கள் அதனை நிராகரிக்கக் கூடியவர்களாகவே உள்ளனர் என்றும் கூறப்பட்டது இதற்க்குச் சான்றாகும். அந்தப் போதனைகள் மனிதர்களுக்கே உரியதென்றும் அதை நிராகரிப்பவர்களும் மனிதர்களே என்றும் கூறப்பட்டுள்ளது. திருக்குரானை இறைவசனமில்லை என்று நிராகரிப்பவர்களும் , அதனால் அந்த நிராகரிப்பவர்களை நோக்கி இதைப் போன்ற ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள் என்று சவால் விடப்பட்டவர்க்களுமாகிய ஜின், இன்ஸ் இருவரும் மனிதர்களேயல்லாமல் வேறொரு படைப்பினமாக இருக்க வாய்ப்பில்லை என்பதும் இந்த 17:88,89 வசனங்களிலிருந்து சிந்திப்பவர்களால் விளங்கிக் கொள்ள முடியும்.
திருக்குரானில் ஓரிடத்தில் இறைவன் கூறுகிறான்: ' நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும் மனிதர்கள் (இன்ஸ்) களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம். அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெறமாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளை ) பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நர்போதனைகளைக்) கேட்க மாட்டார்கள். இத்தகையோர் கால் நடைகளைப் போன்றவர்கள். இல்லை. அவற்றை விடவும் வழிக்டர்கள் இவர்கள் தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். (7:179)
இந்த வசனத்தில் ஜின்கள் அநேகர் கண்கள் இருந்தும் காணாதவர்கள், காதுகள் இருந்தும், கேட்காதவர்கள், புத்தி இருந்தும் சிந்திக்காதவர்கள். என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இங்கு ஜின்களுக்கும், இன்ஸ் களுக்கும் உள்ளதாகப் பொதுவாகக் கூறப்பட்டுள்ள குணங்கள் மனிதர்களுக்கு மட்டுமே உள்ள குணங்களாகும். ஆகவே ஜின்கள் என்று இங்கு கூறப்பட்டது வலிமைவாய்ந்த பெரியமனிதர்கள் என்று எண்ணப்படக் கூடியவர்களே இங்குக் கூறப்பட்டுள்ளது என்றே விளங்கிக்கொள்ளலாம். இந்த வசனத்தில் ஜின்களையும், இன்ச்களையும் மிருகங்களுடன் ஒப்பிட்டு உவமானமாகக் கூறப்பட்டுள்ளது. பகுத்தறிவும் சிந்தனை செய்யக்கூடிய சக்தியும் வழங்கப்பட்ட மனிதர்கள் அவற்றைப் பயன்படுத்தாமல் ஒதுக்கிவிட்டு பௌதீக இச்சைகளுக்கு ஆளாகி மிருகத்திற்கு நிகராக வாழும் போதுதான் அவர்களை மிருகங்களுக்கு உவமானமாகக் கூறப்படுவதுண்டு. ஜின்கள் மனிதர்களில்லாமல் மறைவான உடலைக் கொண்டவர்களும் இந்த பௌதீகத்துடன் தொடர்பில்லாதவர்க்களுமாக இருந்தார்களென்றால் அந்த தனிப் படைப்பினரைக் குறித்து மிருகத்துடன் உவமானப்படுத்திக் கூறப்பட்டது அறிவுக்குப் பொருந்தாத ஒன்றாகும். அல்லாஹ் ஆதமிலிருந்து அவர்களின் சந்ததிகளை வெளியாக்கி அவர்களை நோக்கிக் "நான் உங்களின் இறைவனல்லவா" (7:172) என்று கேட்ட வசனத்தைத் தொடர்ந்தே (7:179) வசனத்தில் இவ்விதம் கூறியுள்ளான். 

இவ்விதம் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளவேண்டும் என்ற போதனை மனிதர்களுக்கே வழங்கப்பட்டதென்றாலும் அவர்களில் பலர் அந்தப் போதனைகளுக்க் மேர்மாற்றமாக நடக்கிறார்கள், நடப்பார்கள் என்ற விஷயத்தையும் கூறியதைத் தொடர்ந்தே, ஜின்களிலிருந்தும், இன்ஸ்களிலிருந்தும் பலர் நரகத்திற்குரியவர்களாவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஜின்னும், இன்சும் ஆதமின் சந்ததிகளைச் சார்ந்தவர்களாக இருந்தால்தான் இறைக்கட்டளைகைப் புறக்கணித்தவர்கள் என்ற வசனத்திற்கு ஆளாகமுடியும். ஆகவே ஜின்கள் ஆதமின் சந்ததிகளே என்பதால் அவர்களும் மனிதர்களில் ஒரு பிரிவினர் என்பதையே இவ்வசனமும் நமக்குத் தெளிவு படுத்துகிறது. 

Read more »

கற்பனைக் கதைகளின் மணிமகுடம்


(பொய்யன் ஜைனுலாப்தீனுக்கு மறுப்பு)

"இஸ்லாத்தின் பெயரால் கற்பனைக் கதைகள்" என்ற தலைப்பில் ஒரு நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. "போலிகளை இனம் காண இந்த நூல் உதவும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது" என அதனுடைய ஆசிரியர் தனது அறிமுகத்தில் எழுதியுள்ளார்.

இன்றைய மார்க்க உலகில் பரவியுள்ள மூட நம்பிக்கைகளுக்கும், கற்பனைக் கதைகளுக்கும் மணிமகுடமாகத் திகழ்வது ஹஸ்ரத் ஈசா நபி (அலை) அவர்கள் இன்றளவும் பூத உடலோடு உயிர் வாழ்கிறார் என்பதாகும் என்ற பேருண்மையையும் அந்த நூல் தெளிவுபடுத்திக்காட்டுகிறது. இது போன்றதொரு கட்டுரை 1989 மே மாத நஜாத் இதழில் பக்கம் 50 முதல் 53 வரை இதே நடையில் இதில் காட்டப்பட்டுள்ள குரான் , ஹதீஸ் மேற்கோள்களையே ஆதாரங்களாகக் காட்டி தௌஹீது மௌலவி பிஜைனுல்ஆப்தீன் உலவி என்பவரால் எழுதப்பட்டிருந்தது. தற்போது தலைப்புதான் மாறியுள்ளதே தவிர கருத்தில் ஏதும் மாற்றமில்லாத நிலையில் புதுத்தலைப்பில் இந்தக் கட்டுரையின் ஆசிரியர் நூலை எழுதியுள்ளார். ஆகா தௌதீதுவாதிகளின் சிந்தனைத் திறனும் கதைகளின் அடிப்படையிலமைந்த கற்பனை நம்பிக்கையிலான ஈசா நபி (அலை) அவர்களின் நிலையை இவர்களின் எழுத்துக்களிலிருந்தே நாம் அலசி ஆராய்வோம்.

ஹஸ்ரத் ஈசா நபி (அலை) அவர்கள் இன்றளவும் மரணிக்காமல் உயிர் வாழகிறார் என்பது ஒரு கற்பனைக்கதை மட்டுமேயாகும் என்பதற்கு அந்த நூலில் அதன் ஆசிரியர் தரும் சான்றுகளையே கீழே தருகிறோம்:

முதலாவதாக அந்த நூலில் கூறப்பட்டுள்ள கற்பனைக் கதைகளுக்கு திருக்குரானிலோ நபிமொழிகளிலோ எந்த ஆதாரமும் இல்லாதது போலவே ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களும் மரணமடையாமல் பூத உடலோடு எங்கேயோ உயிர் வாழ்கிறார் என்பதற்கு திருக்குரானிலும் நபி மொழிகளிலும் எவ்வித ஆதாரமும் கிடையாது என்பதே உண்மையாகும். ஹிலுறு (அலை) சம்பந்தமாக மக்கள் கூறக்கூடிய கற்பனைக் கதையை மறுப்பதற்காக அந்த நூலில் ஆசிரியர் தரும் சான்றுகள் அனைத்தும் ஈசா நபி (அலை) அவர்களும் இறக்காமல் உயிர் வாழ்கிறார் என்ற நம்பிக்கையும் கற்பனைக் கதையேதான் எனத் தெளிவாகிறது, அந்த நூலில் பக்கம் 37l '(நபியே) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (என்றென்றும் இருக்கக்கூடிய) நித்திய வாழ்வை நாம் ஏற்படுத்தியதில்லை' (அல்குரான் 21;34) திருக்குரான் வசனத்தைக் குறிப்பிட்டு 'நபிகள் (ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த எவரும் நிரந்தரமாக இந்த உலகில் வாழ்கின்ற உரிமையை தரவில்லை என்று மனிதனைப் படைத்த அல்லா கூறுகின்றான்.

இந்த வசனத்திலிருந்து நபிகள் (ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த எவரும் நிரந்தரமாக இருக்கமுடியாது எனத் தெளிவாகின்றது. இந்தப் பொது விதியிலிருந்து விளக்கு அளிக்க வேண்டும் என்றால் அல்லாஹ்வோ அவனது தூதரோ அது பற்றிக் குறிப்பிட்டிருக்க வேண்டும். "ஈசா (அலை) மட்டுமே குரான் ஹதீஸ் மூலம் இந்த விதியிலிருந்து தற்காலிக் விளக்குப் பெறுகிறார்கள் " என்று ஆசிரியர் எழுதியுள்ளார்.

இந்த கூற்றில் கோடிட்ட வசனம் அதாவது 'ஈசா நபி (அலை) மட்டும் விதிவிலக்கு பெறுகிறார்' என்பது ஆசிரியரின் சொந்தக் கற்பனைக் கதையே அன்றி அதற்க்கு குரான் ஹதீஸில் எந்தச் சான்றும் கிடையாது. ஈசா (அலை) மட்டும் இந்த பொது விதியிலிருந்து விளக்களிக்கப்பட்டிருக்கிறார் என்று அல்லாஹ்வோ நபி (ஸல்) அவர்களோ எங்குமே கூறாததை ஆசிரியர் கற்பனையாகக் கூறியுள்ளார். அல்லாஹ் ஒரு விஷயத்திற்கு விதி விளக்களிப்பதாக இருந்தால் தெளிவாகக் கூறியுள்ளதாகவே திருகுரான் மூலமாக அறிய முடிகிறது. உதாரணத்திற்கு 'ஸ்ஃபாத்' தைப் பற்றி அதாவது சிபாரிசு பற்றி அல்லாஹ் கூறுகிறான் 'எவருடைய பரிந்துரையும் பயனளிக்காது என்று ஒட்டு மொத்தமாகக் கூறிவிட்டு 'எவருடைய பேச்சைக் கேட்க விரும்புவானோ அவருடைய பரிந்துரையை தவிர ' என்று விதி விளக்கு வழங்கியுள்ளான் . (பார்க்க அல்குரான் 20:109). அது போன்று ஹராம், ஹலால் விஷயத்தில் பொதுவாக ஒரு சட்டத்தை கூறிவிட்டு 'நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை' என்று விதி விளக்கு வழங்கியுள்ளான். இது போன்று எண்ணற்ற விதி விளக்குகளை அல்லாஹ்வே தெளிவுபடக் கூறியுள்ளதை நாம் திருகுரானில் காணலாம்.

அதுபோல் மனிதர்களுக்கென்று பல சட்டங்களையும் நியதிகளையும் வகுத்துள்ளதாகக் கூறக்கூட்டிய அல்லாஹ் எந்த இடத்திலுமே ஈசா (அலை) அவர்களைப பற்றி மட்டும் தனிமைப்படுத்தி அவர்களுக்கு மட்டும் இது பொருந்தாது, விதிவிலக்கு என்று கூறியுள்ளதாக எங்குமே காணமுடியாது உதாரணத்திற்கு திருக்குரானில் 7 வது அத்தியாயம் 26 வது வசனத்தில் அல்லாஹ் மனிதர்களுக்கென்று வகுத்துள்ள சட்டம் 'நீங்கள் பூமியிலேயே வாழ்வீர்கள், பூமியிலேயே மரணிப்பீர்கள் பூமியிலிருந்தே எழுப்பப்படுவீர்கள்' என்று கூறியுள்ளதாகும் இந்த இறை விதியிலிருந்து ஈசா (அலை) அவர்களை மட்டும் தனிமைப்படுத்திக் கூறியிருந்தால் அவருக்கு விதி விளக்கு என்று கூறலாம் , ஏற்கலாம். அவ்வாறு அல்லாஹ் கூறவில்லையே , எவ்வாறு ஏற்பது? ஆக இந்த கதையும் மாற்ற கற்பனைகதைகள் போல் இந்த ஆசிரியர்களைப் போன்றவர்களால் புனையப்பட்ட கற்பனையாகும் என்பது தெளிவாகிறது.

இதற்கு அந்த நூலின் ஆசிரியர் தரும் சான்றுகளைப் பாருங்கள் :அல்குரான் 3:81 வது வசனமாகிய 'நான் உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் தந்துள்ளேன்; உங்களிடம் இருப்பவற்றை மெய்ப்பிக்கும் தூதர் உங்களிடம் வந்தால் அவர் மீது நம்பிக்கை கொண்டு நிச்சயம் உதவியும் செய்ய வேண்டும் என்று நபிமார்களிடம் உறுதி மொழி எடுத்து, "நீங்கள் இதனை உறுதி படுத்துகின்றீர்களா?" என்னுடைய இந்த உடன்படிக்கைக்கு கட்டுப்படுகின்றீர்களா?' (நபிமார்களை நோக்கி) கேட்டான். "நாங்கள் உறுதிப்படுத்துகிறோம் என்று அவர்கள் கூறினார்கள் . (அல்குர்ஆண் 3:81) என்ற வசனத்தைக் குறிப்பிட்டு தொடர்ந்து எழுதுகிறார்: "இந்த வசனத்திலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மாற்ற நபிமார்கள் உயிருடன் வாழவேண்டிய நிலை ஏற்பட்டால் அவர்கள் கட்டாயம் நபி (ஸல்) அவர்கள் மீது நம்பிக்கை கொண்டு பக்கபலமாகவும் நிற்க வேண்டும் என்று எல்லா நபிமார்களிடமும் உடன்படிக்கை எடுத்ததை அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக மூசா (அலை) உயிருடனிருந்தால் என்னைப் பினபற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று நபி (ஸல்) கூறினார்கள் . அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) ஆதாரம்: அஹமது.

மேற்கண்ட திருவசனத்தின் கருத்தை இந்த நபிமொழி தெளிவாக்குகிறது. "மூஸா (அலை) உட்பட எவர் உயிருடன் இருந்தாலும் அவர் ரசூல் (ஸல்) அவர்கள் மீது ஈமான் கொள்ளவேண்டும், அவர்களுக்கு பக்கபலமாக உதவியும் செய்யவேண்டும் என்பது அவர்களின் கடமையாகும்" என்றும் எழுதியுள்ளார். (பார்க்க பக்கம் 37-33)

மேற்கண்ட விளக்கத்தை எழுதிவிட்டு என்னென்ன கேள்விகளையும் ஐயங்களையும் எழுப்பி ஹிளுறு (அலை) அவர்கள் உயிர் வாழ்கிறார் என்பது கற்பனை கதைதான் என்பதை நிருபிக்க ஆசிரியர் முர்பட்டிருக்கிராரோ அதே ஐயங்களும் கேள்விகளும் ஈசா நபி (அலை) அவர்கள் விஷயத்திலும் நமக்கு எழுகிறதல்லவா? அதாவது 'ஹிளுறு (அலை) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் உயிருடன் இருந்திருந்தால் கட்டாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து ஈமான் கொண்டிருக்க வேண்டும்' என்று கூறுகின்றாரே ஆசிரியர், அவரிடம் நாம் கேட்போம் ஹஸ்ரத் ஈசா நபி (அலை) மட்டும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் உயிருடன் இருந்ததாக நீங்கள் நம்புகிறீர்களே! அவர்கள் நபி (ஸல்) அவர்களை சந்தித்து ஈமான் கொண்டார்களா? ஆசிரியரின் கூற்றுப்படி ஈமான் கொண்டிருக்க வேண்டுமல்லவா? ஹிளுறு (அலை) அவர்களுக்கு மட்டும்தான் மேற்படி 3:81 வசனம் பொருந்தும் ! ஈசா நபி(அலை) அவர்களுக்கு மட்டும் பொருந்தாதா? இந்த ஆயத்திலாவது ஈசா நபி(அலை) அவர்கள் மட்டும் இந்த விதியிலிருந்து விளக்கு பெறுகிறார் என்று அல்லாஹ் கூறி உள்ளானா? அல்லாஹ் கூறாத ஒன்றைக் இட்டுக்கட்டி கூறுவதுதான் தௌஹீது சிந்தனையா ?

அடுத்து ஆசிரியர் கூறுகின்றார்:"இஸ்லாமிய பிரச்சாரத்திற்கு எண்ணற்ற சோதனைகள் வந்தபோதும் பல போர்க்களங்களில் உயிரைப் பணயம் வைத்து சகாபாக்கள் போராடிய போதும் ஹிளுறு (அலை) அவர்கள் அந்த போராட்டங்களில் பங்கெடுத்திருக்க வேண்டும். ஏனெனில் ஹிளுறு (அலை) உட்பட எல்லா நபிமார்களும் (ஈசா நபியும்) இந்த நபிக்கு (முஹம்மது (ஸல்) அவர்களுக்கு) உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளனர் . இந்த சோதனையான காலத்தில் அவர் ஏன் சத்தியத்திற்கு துணை செய்யவில்லை?" என ஹிளுறு (அலை) விசயத்தில் தனது வாதத்தை நிலை நாட்ட ஆசிரியர் இவ்வாறு கேட்கிறார் .(பக்கம் 39).

அப்படியானால் அவரிடம் நாம் கேட்போம். ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் உயிருடன் இருக்கிறாரல்லவா: அந்த போராட்டங்களில் அவராவது பங்கெடுத்திருக்க வேண்டாமா? உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ள நபிமார்களில் ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களும் உட்படுகிறார் அல்லவா? இந்த சோதனையான காலத்தில் அவர் ஏன் சத்தியத்திற்கு துணை செய்யவில்லை?" ஈசா நபிக்கு மட்டும் இதிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அல்லாஹ்வோ ரசூலோ கூறவில்லையே! அப்படியானால் அவராவது வந்து துணை செய்திருக்க வேண்டுமல்லவா!

அடுத்து ஆசிரியர் கூறுகிறார் : "உயிருடன் வாழ்ந்தும் அவர் இதனைச் செய்ய தவறியிருந்தால் அவர் கடமை தவறியவராகின்றார் [அல்லாஹ் அப்படி நினைப்பதை விட்டும் காப்பானாக.]" என்றும் கூறுகின்றார் . அப்படியானால் ஹஸ்ரத் ஈசா (அலை) மட்டும் கடமை தவறியவராகமாட்டாரா? [நிச்சயம் அவர் கடமை தவறியவராக இருக்கவில்லை. ஏனெனில் அவர் அந்த நேரத்தில் உயிருடன் இல்லை . உயிரோடு இருந்திருந்தால் கட்டாயம் வந்து உதவி செய்து கடமையை நிறைவேற்றியிருப்பார்].

மேலும் ஆசிரியர் எழுதுகிறார் : "எனவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஹிளுறு (அலை) அவர்கள் உயிருடன் இருந்திருக்கவில்லை என்பது தெளிவு. நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே ஹிளுறு (அலை) அவர்கள் உயிருடன் இருந்திருக்கவில்லை என்றால் 'நமது காலத்தில் உயிருடன் இருக்க முடியாது' என்று முடிவுக்கு நாம் உறுதியாக வரமுடிகின்றது." [பக்கம்:39]ஹிளுறு(அலை) பற்றி ஆசிரியர் வரும் உறுதியான முடிவுக்கே ஹஸ்ரத் ஈசா (அலை) நபி பற்றியும் அவர் கூறும் அனைத்து சான்றுகளின் அடிப்படையிலும் நாம் வரவேண்டியுள்ளது. அதாவது ஈசா நபி உயிரோடில்லை என்ற உறுதியான முடிவுக்கே நாம் வர வேண்டியுள்ளது .

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் உயிருடன் இருந்திருந்தால் " என்ற நபி வசனமும் "எல்லா நபிமார்களும் இந்த நபிக்கு (முஹம்மது (ஸல்) அவர்களுக்கு) உதவி செய்வதாக வாக்குருதியளித்துள்ளனர்." என்ற வசனமும் ஈசா நபி (அலை) யை 'இனிமேல் வந்து உதவுவார்' என்று இவர்கள் அவிழ்த்து விடும் புதுக்கதையைத் தடை செய்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
Read more »

Jun 19, 2012

அல் ஜன்னத்தின் இறுதி நபித்துவம்


அல் ஜன்னத் இதழில் ஒரு கேள்வியும் அதற்க்கான பதிலும் இடம் பெற்றுள்ளது. அந்தக் கேள்வி திருத்தப்பட வேண்டியதும் அதற்க்கான பதில் மறுக்கப்படவேண்டியதுமாகும்

"3:81, 33::7  வசனங்கள் நபிகள் நாயகத்துக்குப் பின் வேறு நபிமார்கள் வரமுடியும் எனக் கூறுவதாக என் நண்பர் வாதிடுகிறார் இது சரியா? என்பதுதான் கேள்வி.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் திருக்குர்ஆனுக்கும், ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மாற்றமான வேறு நபிமார்கள்  வரமுடியும் என எந்த முஸ்லிமும் நம்பவில்லை. ஆயினும் திருக்குர்ஆ னுக்கும், ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னத்திற்கும் உட்பட்டவராக இந்த முஸ்லிம் சமுதாயத்தில் ஈசா நபி தோன்றுவார்கள் என எல்லா முஸ்லிம்களும் நம்புகின்றனர். அது குறித்து முன்னறிவிப்புகள் திருக்குரானிலும். ஹதீஸிலும் நிறைய உள்ளன. இதனை எந்த முஸ்லிமும் மறுக்க முடியாது.

3:81, 33:7 வசனங்கள் இந்த கருத்தை வலியுறுத்துபவையாகவே உள்ளன. அதாவது உங்களுக்கு வேதமும் ஞானமும் வழங்கப்பட்ட பின் உங்களிடமுள்ள அந்த வேதத்தையும் ஞானத்தையும் மெய்ப்பிப்பவரான ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை ஏற்று அவருக்கு உதவி செய்ய வேண்டும் என எல்லா நபிமார்களிடமும் உறுதி மொழி வாங்கியதாக 3:81 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். அந்த உறுதிமொழியையே ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமும் வாங்கியதாக 33:7 வசனம் கூறுகிறது. எனவே திருக்குரானுக்கும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்பட்டவராக திருக்குரானையும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் மெய்ப்பிக்கின்றவராக இந்த உம்மத்தில் தோன்றுவார்கள் என முன்னறிவிக்கப்பட்ட ஈசா (நபி) வருகின்றபோது அவரை ஏற்றுக் கொண்டு அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தைத்தான் உணர்த்துகின்றன. 

ஈசா  நபி வருகின்ற போது அவரை ஏற்றுக் கொண்டு அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற போதனை இவ்வசனங்களில் இருப்பதை அல் ஜன்னத் தந்துள்ள பதிலில் மறுக்கவில்லை. ஆனால் இவ்வசனங்களுக்கு அல் ஜன்னத் தந்துள்ள விளக்கம் திருக்குரானுக்கும் நபி மொழிகளுக்கும் முரணானதாகும்.

"நபிமார்களே! உங்களை நான் நபியாக நியமித்து வேதத்தை வழங்கிய பின் உங்களிடம் மற்றொரு நபி வந்தால் அவரை நீங்கள் ஏற்று உதவ வேண்டும் என்பதுதான் இவ்வசனத்தின் சாராம்சம்' என்று எழுதியுள்ளது. அதாவது இந்த நபி உறுதி மொழி நபிமார்களுக்கு மட்டும்தான் பொருந்தும், நபிமார்களை ஏற்றுக் கொண்டவர்களுக்குப் பொருந்தாது. அல் ஜனனத்தின் இந்தக் கருத்து தவறானது என்பதைக் காட்டும் வகையில் தொடர்ந்து வரும் வசனம் எச்சரிக்கிறது. அதாவது 'எனவே இதன் பின்னரும் எவரேனும் புறக்கணித்து விடுவார்களேயானால் நிச்சயமாக அவர்கள் தீயவர்கள்தாம்' (3:82) இதிலிருந்து 3:81- இல் கூறப்பட்ட உறுதிமொழி நபிமார்களுக்கு மட்டும்தான் பொருந்தும் எனக் கூறினால் நபிமார்களிடையேயும் இறைக் கட்டளையைப் புறக்கணிப்பவர்கள் இருப்பார்கள் அவர்களும் தீயவர்களாகிவிடுவார்கள் (அவ்வாறு நினைப்பதைவிட்டும் அல்லாஹ் காப்பாற்றுவானாக) என்று பொருளாகிவிடும்.

"நபிகள் நாயகம் (ஸல்) வாழும் காலத்திலேயே இன்னொரு நபி வந்திருந்தால் அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்க வேண்டும்' என 33:7 வசனத்திற்கு அல் ஜன்னத் விளக்கம் தந்துள்ளது. இது முற்றிலும் பேதமைத்தனமான ஒரு விளக்கமேயாகும். இவர்களின் கூற்றுப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்த நபியும் தோன்ற வாய்ப்பில்லை என்றால் அல்லாஹ் அவர்களிடம் உறுதிமொழி வாங்குவதில் என்ன அர்த்தம் இருக்கமுடியும்?  இல்லாத ஊருக்கு வழி சொல்வதைப் போலல்லவா அது அமைந்துவிடும்.

அல் ஜனனத்தின் இந்தக் கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) தெளிவாக மறுத்துள்ளார்கள். அதனை அல் ஜன்னத்தே தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குச் சென்ற போது, அலியே! மூஸாவுக்கு ஹாரூன் இருந்ததுபோல் நீ எனக்கு இருக்கிறாய். ஆயினும் எனக்குப் பின் நபியில்லை என்று கூறியதற்கு, "நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவதால் ஹாரூன் போல் அலியும் நபியாக இருப்பாரோ என்ற சந்தேகம் வந்துவிடுமோ என்பதற்காக எனக்குப் பின் எந்த நபியும் இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்கள் " என அல் ஜன்னத் விளக்கம் தந்துள்ளது . எனவே "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே இன்னொரு நபி வந்தால் அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்க வேண்டும்' என்றுதான் 33:7-க்கு பொருள் என்ற அல் ஜனனத்தின் கருத்து முழுக்க முழுக்க அபத்தமானது. ஏனெனில் தமது வாழ்நாளில் இன்னொரு நபி வரமாட்டார், வர வாய்ப்பே இல்லை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தெளிவுபடுத்திவிட்டார்கள்.  இந்நிலையில் 'வாழும் காலத்திலியே இன்னொரு நபி வந்திருந்தால்' என்ற பேச்சிற்கே இடமில்லை.

எனவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு திருக்குரானையும் அதன் ஞானத்தையும் மெய்ப்பிக்கக் கூடிய ஒரு தூதரைப் பற்றியே இந்த வசனம் கூறுகிறது. அவ்வகையாக தூதர்கள் வரமாட்டார்கள் என்றால் இறைவன் மேற்கண்ட உறுதி மொழியை வாங்கி இருக்கமாட்டான். மேலும் ஈசா நபியின் வருகையைப் பற்றிய தெளிவான முன்னறிவிப்புகள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன. அவற்றிற்கேற்ப ஈசா நபி தோன்றினால் அவரை ஏற்றுக் கொள்ளவேண்டும் என முஸ்லிம் உம்மத்திற்கு அல்லாஹ் வலியுறுத்துவதாகவே அந்த வசனத்தை நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். 

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களுக்கு ஒரு தவறான விளக்கம் தந்த பின் அல் ஜன்னத் "ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் இறுதி நபி. அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமுடியாது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன" எனக் கூறுகிறது.

ஹஸ்ரத் ஈசா நபி வருவார்கள் என நம்பும் எந்த முஸ்லிமும் இதனை ஏற்றுக் கொள்ளமாட்டார். வரக்கூடிய ஈசா நபியாக இருக்க மாட்டார்கள் என எவரேனும் கூறினால் அது கற்பனையும் சுய விளக்கமுமாகும். மேலும் அது நபிமொழிகளுக்கு முரணான கூற்றுமாகும்.

வரக்கூடிய ஈசா நபியைப் பற்றிக் குறிப்பிடுகையில் 'நபியுல்லாஹிஹி ஈசா' அல்லாஹ்வின் நபியாக ஈசா அவர்கள் வருவார்கள் என்றே முஸ்லிம் ஹதீஸில் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 
"எனக்கும் அவருக்கும் (ஈஸாவுக்கும்) இடையில் நபியில்லை. அவர் வருவார்." (முஸ்னத் அஹ்மத்) அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் ஈசா நபி வரையிலுமான காலத்தில் வேறு நபி வரமாட்டார்கள். இதுவும் வரக்கூடிய ஈசா அவர்கள் நபியாகவே இருப்பார் எனத் தெரிவிக்கிறது.

"அவர்கள்தான் இறுதி நபி என்று கூறப்படும்போது 'இறுதி நபி' என்பது ஏதோ மாபெரும் பதவி எனத் தோன்றும். உண்மையில் காலத்தால் இறுதி என்ற பொருளில் 'இறுதி நபி' என்று தமிழில் மொழிபெயர்க்கக் கூடிய அரபுச் சொல் திருக்குரானிலோ, ஹதீஸிலோ எங்கேயும் வரவில்லை. எவரும் காட்டவும் முடியாது. 'அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமுடியாது' என்ற தவறான கருத்திற்கு அல் ஜன்னத் தரும் சான்றுகளைப் பார்ப்போம்.

முதலாவதாக காத்தமுன்னபியீன் என்ற சொல்லிற்கு நபிமார்களின் முத்திரை என மொழிபெயர்த்துவிட்டு அதற்கு அகராதிகளை ஆய்வு செய்வதை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமே ஏற்கப்படவேண்டுமென அல் ஜன்னத் கூறுகிறது. இதிலிருந்து காத்தமுன்னபியீன் என்ற சொல்லிற்கு அகராதியைப் புரட்டிப் பார்த்தால் இவர்கள் தரும் தவறான அர்த்தம் அவற்றில் இல்லை. என்ற உண்மையை இவர்கள் ஒப்புக் கொள்கிறார் எனத் தெரிகிறது. 'காத்தமுன்னபியீன்' என்ற சொற்றொடருக்கு இவர்கள் தரும் பொருளில் அதனை நபிகள் நாயகம் (ஸல்) எங்குமே பயன் படுத்தவில்லை. அப்படி பயன்படுத்தியதாகக் கூறுவது இவர்களின் சுய விளக்கமேயாகும்.

அல் ஜன்னத் ஆறு ஹதீஸ்களைக் குறிப்பிட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார்கள் என்ற கருத்தை அந்த ஹதீஸ்களும் கூறவில்லை என்பதை அந்த ஹதீஸ்களைக் கூர்ந்து கவனித்தாலே புரியவரும். முதலாவதாக இந்த உம்மத்தில் தோன்றுவார்கள் என ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவித்துள்ள ஈசா நபியின் வருகைக்கு வேறு எந்த ஹதீஸும் எதிராகவே இருக்க முடியாது.

முதல் ஹதீஸ்: 'எனது சமுதாயத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். அனைவரும் தங்களை நபி என்று வாதிடுவார்கள். நான் நபிமார்களின் முத்திரை ஆவேன். எனவே எனக்குப் பின் எந்த நபியும் இல்லை."

இந்த ஹதீஸில் எனக்குப் பின் நபியென்று வாதிடும் எல்லோரும் பொய்யர்கள் ஆவார்கள் எனக் கூறவில்லை. மாறாக நபி(ஸல்) அவர்களுக்கும் வரவிருக்கும் ஈசா நபிக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றக் கூடிய பொய்வாதிகளின் எண்ணிக்கையைத்தான் குறிப்பிட்டுள்ளார்கள் எனப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பொய்யர்கள் தோன்றி மறைந்து விட்டார்கள் என இஸ்லாமிய வரலாறும் கூறுகிறது. முஸ்லிம் ஹதீஸுக்கு விளக்கமாக எழுதப்பட்டுள்ள இக்மாலுள் இக்மால் என்ற நூலில், "இந்த ஹதீஸ் தனது உண்மையை நிரூபித்துவிட்டது. ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்திலிருந்து நம் காலம் வரையில் நபியென்று வாதிட்ட பொய்யர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் இந்த எண்ணிக்கை முடிவடைகிறது. வரலாற்றைப் படித்தவர்கள் இதனை அறிவர்" (தொகுதி 7 பக்கம் 258) இந்த நூலின் ஆசிரியர் ஹிஜ்ரி 828இல் மறைந்தார். எனவே ஹிஜ்ரி 8ஆம் நூற்றாண்டிற்குள்ளாகவே அந்தப் பொய்யர்கள் தோன்றி மறைந்து விட்டனர்.

இரண்டாவது ஹதீஸ்: ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குச் செல்கின்ற போது அலியே! மூஸாவுக்கு ஹாரூன் இருததுபோல் நீ எனக்கு இருக்கிறாய். ஆயினும் எனக்குப் பின் எந்த நபியுமில்லை" என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸில் மூஸா நபியின் காலத்தில் அவர்களுடன் ஹாரூனும் நபியாக இருந்ததைப்போல் அலி(ரலி) நபியாக இல்லை என்ற கருத்தையே தருகிறது என்பதை அல் ஜன்னத்தே தெளிவுபடுத்தியுள்ளது. எனவே இந்த ஹதீஸும் ஹஸ்ரத் ஈசா நபியின் வருகைக்குத் தடைஇல்லை என்பது மட்டுமின்றி இனிமேல் எந்த நபியும் வர முடியாது என்ற கருத்தையும் தரவில்லை.

மூன்றாவது ஹதீஸ்: " நான் இறுதி நபியாவேன் அதாவது எனக்குப் பின் எந்த நபியும் இல்லை." அறிவிப்பவர் ஜுபைர் பின் முத்இம் (ரலி). இப்படி ஒரு ஹதீஸ் இல்லை. இருந்தால்தால் ஆதாரத்துடன் அரபி மூலத்துடன் அல் ஜன்னத் வெளியிடட்டும். இது அல் ஜன்னத் இட்டுக்கட்டியுள்ள நபி மொழியாகவே இருக்க முடியும்.

நான்காவது ஹதீஸ்: இஸ்ரவேலர்களுக்கு நபிமார்கள் தலைமை தாங்கி வழி நடத்தி வந்தனர். ஒரு நபி மரணித்து விட்டால் அந்த இடத்திற்கு இன்னொரு நபி வழி நடத்துவார். ஆனால் நிச்சயமாக எனக்குப் பின் எந்த நபியும் கிடையாது. எனது கலீபாக்கள்தான் தோன்றுவார்கள்.

இஸ்ரவேலர்களிடையே ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து நபிமார்கள் வந்ததைப் போல் இந்த உம்மத்தில் தொடர்ந்து நபிமார்கள் வரமாட்டார்கள். மாறாக தொடர்ந்து உடனே வரக்கூடியவர்கள் கலீபாக்களாகேவே இருப்பார்கள் என்றுதான் இந்த ஹதீஸ் கூறுகிறது. ஈசா நபி வரமாட்டார் என்றோ, எந்த நபியும் வர முடியாது என்றோ கூறவில்லை.

ஐந்தாவது ஹதீஸ் : "தூதுத்துவமும் நுபுவத்தும் முடிந்து விட்டன. எனக்குப் பின் எந்த ரசூலும் எந்த நபியும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அனஸ்பின் மாலிக் (ரலி) நூல் : திர்மிதி."

இந்த ஹதீஸில் அறிவிப்பாளர் வரிசையில் அனஸ் பின் மாலிக்கைத் தவிர உள்ள நான்கு அறிவிப்பாளர்களும் பலவீனமானவர்கள். மேலும் ஈசா நபி வருவார்கள் என்பது உறுதியானதாக இருப்பதால் இந்த ஹதீஸை சொற்பொருளில் ஏற்க முடியாது.

ஆறாவது ஹதீஸ் : "இறைவா! இந்த இஸ்லாமிய கூட்டத்தை நீ அழித்துவிட்டால் நீ ஒருபோதும் வணங்கப்படமாட்டாய்' எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

'ஹஸ்ரத் ஈசா நபி வருவார் என்பதை இந்த ஹதீஸ் மறுப்பதாகவோ இனிமேல் எந்த நபியும் வரமுடியாது என்றோ இந்த ஹதீஸ் கூறுவதாக அறிவுள்ள எவரும் கூறமாட்டார்கள்.

சுருக்கமாகக் கூறுவதானால் இன்றைய உலகில்  இல்லாத ஒரு வாதத்தை முன்வைத்து அது சரியா என அல் ஜன்னத்திடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அக்கேள்வியில் குறிப்பிட்டிருந்த வசனங்களுக்கு, திருக்குரானுக்கும் நபி மொழிகளுக்கும் எதிரான விளக்கத்தை அல் ஜன்னத் முன்வைக்கிறது.

அடுத்து உலகில் எல்லா முஸ்லிம்களும் நம்பும் ஒரு கொள்கையாகிய ஈசா நபி அவர்களின் வருகையை மறுக்கும் வகையிலான கருத்தை அல் ஜன்னத் கூறுகிறது.

அதற்கு சான்று எனக்கூறி அல் ஜன்னத் காட்டியுள்ள ஹதீஸ்களுள் எதுவும் அல்  ஜனனத்தின் கருத்தை உண்மைபடுத்தவில்லை.

கற்பனைக் கொள்கைகளைக் கைவிட்டு திருக்குர்ஆன், நபிமொழி அடிப்படியிலான உண்மைகளைத் தெரிந்து, உணர்ந்து, அவற்றின்படி தமது நம்பிக்கைகளை அமைத்துக் கொள்ள எல்லோருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக 
Read more »

May 29, 2012

ஈசா(அலை) அவர்களின் மரணத்தை உறுதி செய்யும் திருக்குர்ஆன் வசனங்கள்.


ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களை நேரடியாக சுட்டிக்காட்டி மரணித்துவிட்டார் என்று காட்டும் திருக்குர்ஆன் வசனத்தைப் பார்ப்போம்.

" மரியமின் மகன் ஈஸாவே, அல்லாஹ்வைத் தவிர என்னையும் எனது தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று மக்களிடம் நீர் கூறினீரா என்று அல்லாஹ் கேட்பான். அவர் கூறுவார். நீ தூய்மையானவன், எனக்குத் தகாததை நான். கூறியதில்லை. அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய். உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக மறைவானவற்றை நீயே நன்கு அறிந்தவனாவாய் என்று கூறுவார். (மேலும்) நீ எனக்கு கட்டளை இட்டபடி என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதையே நான் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களோடு இருந்த காலம் அவரை அவர்களுக்கு நான் சாட்சியாக இருந்தேன். ஆனால், நீ என்னை மரணிக்க செய்த பின் நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய். மேலும் நீயே எல்லாவற்றிக்கும் சாட்சியாளனாக இருந்தாய்." (திருக்குர்ஆன் 5:117,118)

இந்த வசனத்தைப் படித்து சிந்தித்துப் பாருங்கள். நியாயத் தீர்ப்பு நாளில் அல்லாஹ் ஈசா(அலை) அவர்களிடம் அவரையும், அவரது தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளும்படி மனிதர்களுக்கு கூறினீரா எனக் கேட்பான் என்றும், அவர் பதிலளிக்கையில் அவ்வாறு நான் கூறவில்லை என்றும் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டுமென்றே கூறினேன் என்றும் அவர்கள் மத்தியில் வழ்ந்திருந்தவரையில் தம்மையும், தனது தாயாரையும் கடவுள்களாக தமது மக்கள் வணங்கவில்லை என்றும் அதற்க்கு அவரே சாட்சியாளன் என்றும், அவரை மரணிக்கச் செய்த பின் அவர்களின் நம்பிக்கைக்கு என்ன மாற்றம் ஏற்பட்டதென அவர் அறியமாட்டாரென்றும், அவர்களை கவனிப்பவனும் அவர்களின் செயல்களுக்கு சாட்சியாக இருப்பவனும் இறைவனே என்று அவர் பதில் சொல்லுவார் என்றும் இந்த இறைவசனத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதிலிருந்து நாம், தெரிந்து கொள்வது யாதெனின், ஈசா நபி மனிதர்கள் மத்தியில் இருந்தவரை, அவரை மக்கள் கடவுளாகவோ, கடவுளின் குமாரனாகவோ வணங்கவில்லை என்றும், மக்கள் ஈசா நபியை கடவுளாக வணங்கியது, அவர்களின் மரணத்திற்கு பிறகே என்றும் மிகத் தெளிவாக தெரிகிறது. ஆகவே, ஈசா நபியின் மரணம் முன்பும், மனிதர்கள் அவரை கடவுளாக வணங்க ஆரம்பித்தது பின்பும் என மேற்படி இறைவசனம் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

இப்னுமரியம், அதாவது மரியமின் மகன் ஈசா வருவார் என்ற சில நபி மொழியின்படி, சென்ற காலத்தில் யூதர்களுக்காக அனுப்பப்பட்ட ஈசா நபி மரணிக்காமல் வானத்தில் வாழ்ந்து வருகிறார் என்ற தவறான நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஆலிம்கள் நீண்ட காலமாக போதித்து வந்ததன் காரணமாக குரானுக்கு எதிரான இந்த நம்பிக்கையை உம்மத்தே முஹம்மதியாவாகிய முஸ்லிம்களின் உள்ளத்தில் நன்றாகப் பதிந்துவிட்டது. அந்த நம்பிக்கை பரிசுத்த குரானுக்கு எதிரானது என நிரூபிக்கும் பொறுப்பில் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் இருக்கிறது எனக் கூறிக் கொள்கிறேன். திருக்குரானுக்கு விளக்கம் கூறுவதற்கு முதல் தகுதி ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உண்டு என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். மேற்படி இறை வசனத்திற்கு விளக்கம் கூறுவதைப் போன்று ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தங்களுக்கு மறுமையில் நடக்கும் ஒரு சம்பவத்தை கூறுகிறார்கள். ஹஸ்ரத் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், மேற்படி இறை வசனத்திற்கு விளக்கமாக இந்த ஹதீஸை தங்கள் கிரந்தத்தில் எழுதியிருக்கிறார்கள்.

ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:- நியாயத் தீர்ப்பு நாளில் என் உம்மத்தாரிலிருந்து சிலர் நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவார்கள். அப்போது நான் என் இறைவனே இவர்கள் என் அருமைத் தோழர்கள் எனக் கூறுவேன். இதரிக்கு என்னிடம் உமக்குப் பிறகு இவர்கள் புதுமையாக என்ன செய்தார்கள் என்று நீர் அறிய மாட்டீர். என்று கூறப்படும். அப்பொழுது நான் அந்த நல்லடியார் (ஈசா நபி) கூறியது போல் நான் அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன். ஆனால் நீ என்னை மரணிக்கச் செய்த பிறகு நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறுவேன். அப்பொழுது நீர் இவர்களை விட்டு பிரிந்ததிலிருந்து இவர்கள் மார்க்கத்தை விட்டு திரும்பி போனார்கள் என்று கூறப்படும்." ( புகாரி கிதாபுத் தப்ஸீர்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இத்திருமொழியில் அந்த நல்லடியார் கூறியது போன்று என்று ஈசா நபியை சுட்டிக்காட்டி, அவர்கள் குர் ஆனின் எந்த சொற்களை உபயோகித்திருக்கிறார்களோ அதே சொல்லான 'வகுன்து அலைஹிம் ஷஹீதன் மாதும் துஃபீஹிம் பலம்ம தவஃப்பைத்தனீகுன்த அன்தர்ரகீப அலைஹிம், அதாவது அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன் ஆனால் நீ என்னை மரணிக்க செய்தபின் நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறியிருக்கிறார்கள். திருக்குரானில் ஈசா நபி (அலை) அவர்கள் கூறிய இந்த சொற்களில் ஒரு எழுத்துக் கூட மாற்றம் இல்லாத சொல்லாக ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மறுமையில் கூறுகிறார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பலம்ம தவஃபைத்தனீ என்று உபயோகித்த சொல்லிற்கு நீ என்னை மரணிக்க செய்தபின் என்று சரியான பொருள் கொடுத்திருக்கும் போது, ஈசா (அலை) அவர்கள் கூறும் அதே சொல்லான பலம்ம தவஃபைத்தனீ என்ற சொல்லுக்கு 'நீ என்னை ( உடலோடு வானத்திற்கு) கைப்பற்றிய பின்.' என்று விளக்கம் கொடுப்பது என்ன நியாயத்தில் இருக்கிறது. நீங்களே நன்கு சிந்தனை செய்துபாருங்கள்.

நபி (ஸல்) அவர்களுக்காக கொடுக்கப்பட்ட சரியான பொருளாகிய 'நீ என்னை மரணிக்க செய்தபின்' என்ற பொருளையே ஈசா(அலை) அவர்களுக்கும் கொடுத்து இந்த பூமியில் ஈசா நபி இறந்துவிட்டார்கள் என்றும், அவர்கள் இறந்த பின் அவர்களைப் பின்பற்றிய மக்கள் அவர்களை இறைவனாகவும், இறைவனின் குமாரனாகவும் வணங்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் உறுதியான நம்பிக்கைக் கொண்டு திருக்குரானுக்கு எதிரான நம்பிக்கையினால் ஏற்படும் குற்றத்திலிருந்து விலகிக் கொள்ளவேண்டும் என்று முஸ்லிம் சகோதரர்களுக்கு நினைவுறுத்துகிறேன்.

இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் லட்சக்கணக்கான கிருஸ்தவர்கள் முஸ்லிம்கலாகிவிட்டார்கள். அவர்களிடம் உள்ள பழைய நம்பிக்கையாகிய ஈசா நபி வானத்தில் உயிரோடு பூத உடலுடன் இருக்கிறார் என்ற கொள்கை, இஸ்லாம் மார்க்கத்தில் படிப்படியாக புகுந்து ஆக்கிரமித்துக் கொண்டது. அதற்க்கு காரணம் முல்லாக்களான ஆலிம்களே. இறுதி காலத்தில் மரியமின் மகன் ஈசா வருவார் என்று சில ஹதீதுகளை காட்டி திருக்குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமான பொருள் கொடுத்து முஸ்லிம்கள் அனைவரையும் திருக்குரானுக்கு எதிரான நம்பிக்கைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். அதைத்தான் மறுமையில் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) என் இறைவனே எனது சமுதாயத்தினர் இந்த குரானை முதுகுக்கு பின்னால் எறிந்து விட்டனர் என்று கூறுவார், என்ற வசனம் தெளிவாக தெரிவிக்கிறது
Read more »

May 28, 2012

ஈசா நபி (அலை) அவர்களின் மரணம் - P.J யின் அறியாமை


திருக்குர்ஆன் விளக்கம் - ஈசா (அலை) வருகை என்னும் தலைப்பில் பி. ஜைனுலாப்தீன், (16-11-2001) ஒற்றுமை இதழில் 45 ஆம் பக்கத்தில் எழுதப்பட்ட திருக்குரானின் தவறான விளக்கத்திற்கு இங்கு விளக்கம் தரப்படுகிறது.

மௌலவி பி.ஜைனுலாப்தீன்: "மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயையும் இரண்டு கடவுளர்களாக ஆக்கிக் கூளுங்கள் என்று நீர்தான் மக்களுக்கு கூறினீரா? என்று அல்லாஹ் கூறும்போது, நீ தூயவன். எனக்கு உரிமை இல்லாததை நான் கூறுவது எனக்குத் தகாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக நீ அறிவாய். என் மனதில் உள்ளதை நீ அறிவாய். உன் மனதில் உள்ளதை நான் அறியமாட்டேன் நீயே மறைவானவற்றை எல்லாம் நன்கு அறிபவன்! எனது இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என நீ எனக்கு ஆணையிட்டதைத் தவிர (வேறு) எதனையும் அவர்களிடம் நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்தபோதெல்லாம் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்னை நீ கைப்பற்றிய போது நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய். நீ ஒவ்வொரு பொருளையும் பார்க்கக்கூடியவனாக இருக்கின்றாய் ......... என்று திருக்குர் ஆனின் (5:116,117,118) வசனங்களுக்குப் பொருள் எழுதியுள்ளார். மேலும், மரணிக்க செய்தல் என்பது எவ்வாறு தவஃபா வின் பொருளாக இருக்கிறதோ அதுபோலவே கைப்பற்றுதல் என்பதும் அச்சொல்லுக்குரிய பொருள் தான்.

"உயிர்கள் மரணிக்கும்போதும், மரணிக்காதவைகளை அவற்றின் உறக்கத்தின்போதும் கைப்பற்றுகிறான்." (39:42) இந்த இடத்தில் கைப்பற்றுகிறான் என்றுதான் அதே சொல்லுக்கு பொருள் கொள்கிறோம். மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்வதில்லை. (பக்கம் 47) அவன்தான் உங்களை இரவில் கைப்பற்றுகிறான். (6:60)

இவ்வசனத்தில் அதே சொல் இடம் பெற்றாலும் மரணிக்கச் செய்தல் என்று பொருள் இல்லை தூக்கத்தில் ஒருவரைக் கைப்பற்றுதல் என்பதே இதன் பொருளாக உள்ளது. (பக்கம்,47) என்றும் எழுதியுள்ளார்.

என் விளக்கம்: திருக்குரானின் வசனத்தைப் பாருங்கள்,

"அல்லாஹ் மக்களின் உயிர்களை அவர்களின் மரணத்தின் போதும், மரணமடையாதவர்களின் உயிர்களை அவர்களின் தூக்கத்தின் போதும் கைப்பற்றுகிறான்."

மக்களின் உயிர்கள் இரண்டு வகைகளில் கைப்பற்றப்படுகிறது. என்று இவ்வசனம் கூறுகிறது.

மரணத்தின்போது


தூக்கத்தின்போது

உயிர்களை நிரந்தரமாக கைப்பற்றுதலுக்கு மரணம் என்றும், ரூஹை தற்காலிகமாக கைப்பற்றுதலுக்கு உறக்கம் என்றும் இவ்வசனம் கூறுகிறது.

எனவேதான் இவ்வசனத்தில் தொடர்ந்து "பின்னர் மரணம் முடிவாகிவிட்டவற்றை தன்னிடம் நிறுத்திக் கொள்கிறான். மற்றவற்றை (அதாவது தூக்கத்தில் கைப்பற்றப் பட்டவற்றை) குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு திருப்பி அனுப்பிவிடுகின்றான். சிந்தனை செய்யும் மக்களுக்கு நிச்சயமாக இதில் அடையாளங்கள் உள்ளன" என்று கூறியுள்ளான்.

இவ்வாறு அல்லாஹ் ஒருவனை தவப்பா செய்தான் என்றால் அதற்க்கு ரூஹை(உயிரை) கைப்பற்றிக் கொண்டான். - அவனை மரணமடையச் செய்தான் என்றுதான் பொருள். இவ்வாறே அல்லாஹ் ஒரு மனிதனை தூக்கத்தில் - இரவில் தவப்பா செய்தான் என்றால், அவனுடைய ரூஹை - உயிரை தற்காலிகமாக கைப்பற்றிக் கொண்டான் என்றுதான் பொருள்.

இவ்விரு பொருள்களைத் தவிர வேறு பொருள் இல்லை. அதாவது பி.ஜே தவறாக எழுதியிருப்பது போல் உடலோடு உயிரைக் கைப்பற்றுதல் என்ற ஒரு வினோதமான பொருள் இல்லவே இல்லை என்பதை இவ்வசனம் தெளிவாக விளக்குகிறது.

ஒரு வசனத்தில் தூக்கம், இரவு, என்ற சொற்கள் வராமல் ஒருவரை இறைவன் தவப்பா செய்தான் என்றால் அதற்க்கு அவரை மரணிக்க செய்தான் என்ற பொருளைத் தவிர வேறு எந்த பொருளும் கொடுக்கவே முடியாது. இதை நாங்கள் சவாலாகவே விடுகிறோம்.

பி.ஜே போன்றவர்கள் இவ்வாறு கூறுவார்கள் என்று தெரிந்துதான் எல்லாம் அறிந்த அல்லாஹ் அதற்கு இடம் வைக்காமல் நபி (ஸல்) அவர்கள் மூலம் 5:117,118 வது வசனத்திற்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளான் போலும். அந்த நபி மொழியின் படி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தன் மக்கள் மத்தியில் வாழ்ந்தகாலம், பின்னர் அங்கிருந்து ரூஹ் மட்டும் கைப்பற்றபடுதல், பின்னர் தன் மரணத்திற்குப் பிறகு தன் தோழர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியாத மறுமை வாழ்வு ஆகியவை தனக்கு நடந்தது போன்று ஈஸா நபிக்கும் நடந்தது என்று நபி (ஸல்) அவர்கள் உறுதியாகக் கூறியுள்ளார்கள்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ ، أَخْبَرَنَا سُفْيَانُ ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ النُّعْمَانِ ، قَالَ : حَدَّثَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ ، عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ :
إِنَّكُمْ مَحْشُورُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا ، ثُمَّ قَرَأَ كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ سورة الأنبياء آية 104 وَأَوَّلُ مَنْ يُكْسَى يَوْمَ الْقِيَامَةِ إِبْرَاهِيمُ ، وَإِنَّ أُنَاسًا مِنْ أَصْحَابِي يُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ فَأَقُولُ : أَصْحَابِي ، أَصْحَابِي ، فَيَقُولُ : إِنَّهُمْ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ فَأَقُولُ كَمَا ، قَالَ : الْعَبْدُ الصَّالِحُ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِيإِلَى قَوْلِهِ الْعَزِيزُ الْحَكِيمُ سورة المائدة آية 117 - 118

ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:- நியாயத் தீர்ப்பு நாளில் என் உம்மத்தாரிலிருந்து சிலர் நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவார்கள். அப்போது நான் என் இறைவனே இவர்கள் என் அருமைத் தோழர்கள் எனக் கூறுவேன். இதரிக்கு என்னிடம் உமக்குப் பிறகு இவர்கள் புதுமையாக என்ன செய்தார்கள் என்று நீர் அறிய மாட்டீர்.என்று கூறப்படும். அப்பொழுது நான் அந்த நல்லடியார் (ஈசா நபி)கூறியது போல் நான் அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்குசாட்சியாக இருந்தேன். ஆனால் நீ என்னை மரணிக்கச் செய்த பிறகு நீயேஅவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறுவேன்.அப்பொழுது நீர் இவர்களை விட்டு பிரிந்ததிலிருந்து இவர்கள்மார்க்கத்தை விட்டு திரும்பி போனார்கள் என்று கூறப்படும்." ( புகாரிகிதாபுத் தப்ஸீர் 3349)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இத்திருமொழியில் அந்த நல்லடியார் கூறியது போன்று என்று ஈசா நபியை சுட்டிக்காட்டி, அவர்கள் குர் ஆனின் எந்த சொற்களை உபயோகித்திருக்கிறார்களோ அதே சொல்லான'வகுன்து அலைஹிம் ஷஹீதன் மாதும் துஃபீஹிம் பலம்ம தவஃப்பைத்தனீகுன்த அன்தர்ரகீப அலைஹிம், அதாவது அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன் ஆனால் நீ என்னை மரணிக்க செய்தபின் நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறியிருக்கிறார்கள். திருக்குரானில் ஈசா நபி (அலை) அவர்கள் கூறிய இந்த சொற்களில் ஒரு எழுத்துக் கூட மாற்றம் இல்லாத சொல்லாக ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மறுமையில் கூறுகிறார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பலம்ம தவஃபைத்தனீ என்று உபயோகித்த சொல்லிற்கு நீ என்னை மரணிக்க செய்தபின் என்று சரியான பொருள் கொடுத்திருக்கும் போது, ஈசா (அலை) அவர்கள் கூறும் அதே சொல்லான பலம்ம தவஃபைத்தனீ என்ற சொல்லுக்கு 'நீ என்னை ( உடலோடு வானத்திற்கு) கைப்பற்றிய பின்.'என்று விளக்கம் கொடுப்பது என்ன நியாயத்தில் இருக்கிறது.

நபி (ஸல்) அவர்களுக்காக கொடுக்கப்பட்ட சரியான பொருளாகிய 'நீ என்னை மரணிக்க செய்தபின்' என்ற பொருளையே ஈசா(அலை) அவர்களுக்கும் கொடுத்து இந்த பூமியில் ஈசா நபி இறந்துவிட்டார்கள் என்றும், அவர்கள் இறந்த பின் அவர்களைப் பின்பற்றிய மக்கள் அவர்களை இறைவனாகவும், இறைவனின் குமாரனாகவும் வணங்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் உறுதியான நம்பிக்கைக் கொண்டு திருக்குரானுக்கு எதிரான நம்பிக்கையினால் ஏற்படும் குற்றத்திலிருந்து விலகிக் கொள்ளவேண்டும்

பி.ஜே கொடுக்கும் பொருளை நாம் கொடுத்தால் (பலம்ம தவபைத்தனி என்ற சொல்லுக்கு உடலோடு உயிரைக் கைப்பற்றுதல்) நபி (ஸல்) அவர்களும் வானத்தில் உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்ப வேண்டி வரும். இவர் நம்ப தயாரா?

நபி (ஸல்) அவர்களே இந்த வசனத்திற்கு தெளிவான விளக்கம் தந்த பிறகு. அந்த வசனத்திற்கு வேறொரு விளக்கத்தை இந்த இவர் கொடுக்கிறார் என்றால் இவரை நாம் எப்படி நபி(ஸல்) அவர்களை பின்பற்றுபவர் என்று சொல்லமுடியும். இவர் தன்னை திருத்திக்கொள்ளவேண்டும்.
இல்லையென்றால் இவர் மக்கள் மத்தியில் அவமானப்படப்போவது உறுதி.
Read more »

May 23, 2012

73 பிரிவுகளில் நேர்வழிபெற்ற பிரிவு எது?


நபி (ஸல்) அவர்கள் இறுதிகாலத்தில் தமது சமுதாயம் எவ்வாறு இருக்கும் என்பதைக் கீழ்வருமாறு முன்னறிவித்துள்ளார்கள்:-

"ஒரு ஜோடி காலனிகளுள் ஒன்றோடொன்று ஒத்திருப்பது போன்று இஸ்ரவேல் சமுதாயத்திற்கு நிகழ்ந்தது அனைத்தும் எனது சமுதாயத்திற்கும் நிகழும். இஸ்ரவேலர்கள் எழுபத்துஇரண்டு பிரிவுகளாகப் பிரிந்தனர். எனது சமுதாயமோ எழுபத்துமூன்று பிரிவுகளாகப் பிரியும் (அவற்றுள்) ஒரு பிரிவாரைதவிர ஏனைய பிரிவினர் அனைவரும் 'நரகை அடைவர்' இறை தூதரே! அந்த பிரிவு எது? என்று வினவப்பட்டபோது நானும் எனது சஹாபாக்களும் எவ்வாறிருப்பார்களோ அந்தப் பிரிவு என நபிபெருமானாரவர்கள் பதிலளித்தார்கள்"

இந்த நபிமொழியின் இறுதிப்பகுதியை அஹ்மத், அபூதாவூத் ஆகியோர் கீழ்வருமாறு அறிவித்துள்ளார்கள்:- 

'எழுபத்து இரண்டு கூட்டமும் நரகிலும், ஒரு கூட்டம் சுவர்க்கத்திலும் நுழைவார்கள். அந்த ஒரு பிரிவு ஜமாத்தாக இருக்கும்" (மிஷ்காத்)

இந்த நபிமொழி இப்போது சில முஸ்லிம் பத்திரிகைகளில் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அனாச்சாரங்களிலிருந்தும், ஆலிம்சாக்களின் பிடியிலிருந்தும் தம்மை சிறிது விடுவித்துக் கொண்ட சிலர் தாமே இந்த வெற்றிக்குரிய பிரிவு என தம்பட்டம் அடித்துக்கொள்ளவும் மற்றவர்கள் அதற்க்கு அருகதையற்றவர்கள் என்பதற்கு 'ஆதாரங்கள்' காட்டவும் முயல்கின்றனர். இது இவர்களின் அறியாமையையே பறைசாற்றுகிறது. 

அந்-நஜாத் ஏடு, வெற்றிக்குரிய அந்தப் பிரிவு எது என்பதை ஆய்வு செய்வதற்க்குப் பகரமாக அந்தப் பிரிவைச் சாராதவர்கள் யார் என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. அந்-நஜாத் இதழில் இவ்வாறு காணப்படுகிறது:-

"நபி (ஸல்) அவர்களிடம் மன்ஹும் யாரசூலுல்லாஹ் என்றே கேட்கப்பட்டது, அதாவது அவர்கள் யார் என்றே கேட்கப்பட்டது. அவர்களின் பெயர் என்ன என்றோ? அவர்கள் என்ன அகீதாவில் இருப்பார்கள் என்றோ கேட்கப்படவில்லை. எனவே இஷ்டப்பட்ட பெயரை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்பவர்கள் விதண்டா வாதம் செய்கிறார்கள் என்பதே உண்மையாகும்" 

மேற்கண்ட நபிமொழியில் "மன்ஹும்" (அவர்கள் யார்) என்று கேட்டதாக இல்லை. மாறாக மன்ஹிய (அது எது?) அதாவது அந்தப் பிரிவு எது என்றே கேட்கப்பட்டது. நஜாத் ஆசிரியர் தமது இஷ்டம்போல் ஹதீஸை மாற்றுகிறாரா? 

முஸ்லிம் சமதாயத்தில் நபி(ஸல்)அவர்களையும் சஹாபாப் பெருமக்களையும் பின்பற்றுபவர்கள் வெற்றிக்குரியவர்கள் என்று இங்கு குறிப்பிடப்படவில்லை. அவ்வாறென்றால் எழுபத்துமூன்று பிரிவுகளிலும் அவ்வாறு நடப்பவர்கள் இருக்கலாம். இங்கு 'மன்ஹிய' - அந்தப் பிரிவு எது? என்று கேட்கப்பட்டு தாமும் தமது சஹாபாக்களும் இருப்பது போன்று இருப்பவர்களே என்று நபி(ஸல்) அவர்களால் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது. எனவே அவ்வாறு இருக்கும் ஒரு பிரிவாறே வெற்றிக்குரிய பிரிவார் என்றும் அப்படி ஒரு பிரிவார் இருந்தால் அவர்கள் தம்மை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்ட தமக்கு ஒரு பெயரை வைத்துக் கொள்ளவே வேண்டும் என்பதும் தெளிவாகிறது. 

"நபி (ஸல்) அவர்களே எனது உம்மத்து எழுபத்துமூன்று பிரிவினர்களாகப் பிரிவார்கள் என்று சொல்லப்பட்டபின் அதை எப்படி நாம் மறுக்க முடியும்"(பக்கம் 13)

என்று கூறி முஸ்லிம் சமுதாயத்தில் பிரிவுகள் உண்டு என்பதை ஒப்புக் கொள்ளும் அந்-நஜாத் வெற்றிக்குரியவர்கள் ஒரு தனிப் பிரிவாறே என்பதை உணர்ந்துக் கொள்ளத் தவறுவது ஏன்? 

மேலே குறிப்பிட்ட படி இந்த நபிமொழியில் மற்றொரு அறிவிப்பில் 'அந்தப் பிரிவு ஜமாத்தாக இருக்கும்" என்று கூறப்பட்டிருக்கிறது. இதிலிருந்து வெற்றிக்குரியவர்கள் தனி நபர்கள் அல்ல மாறாக அது ஒரு ஜமாஅத் என்பது புலனாகவில்லையா? 

இஸ்லாம் தனிநபர் மார்க்கமன்று, அது கூட்டாகச் செயல் படுத்தப்படவேண்டிய மார்க்கம். இயக்கம் இல்லாமல் இஸ்லாம் இல்லை. இதனை 'நஜாத்' புரிந்துக் கொள்ளவேண்டும். 

இனி வெற்றிக்குரிய அந்தப் பிரிவு எது என்பதை ஆராய்வோம். அந்தப் பிரிவுக் குரிய இலக்கணம் இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலோரிடத்தில் காணப்பட வில்லை. என்பதை அவர்களின் தலைவர்களே கூறுகின்றனர். 

மௌலானா மௌதூதி சாகிப் இவ்வாறு கூறுகிறார்:- 

பெயரளவிலான இன்றைய முஸ்லிம் சமுதாயத்தை காணுகின்ற போது அதில் விதவிதமான முஸ்லிம்களைக் காணமுடியும். முஸ்லிம் சமுதாயம் இன்று ஒரு மிருகக் காட்சி சாலையாக காட்சி தருகின்றது. அதிலே பருந்து, காகம், கழுகு போன்ற ஆயிரக்கணக்கான பறவைகளையும் மிருகங்களையும் காணலாம். இன்று முஸ்லிம்களென்று சொல்லப்படும் மக்களின் நிலை எவ்வாறென்றால் அவர்களில் 1000 பேரில் 999 பேர் மார்க்க அறிவில்லாதவர்களாகவும் உண்மைக்கும் பொய்யிற்கும் உள்ள வேறுபாட்டினை உணராதவர்களாகவும் உள்ளனர். அவர்களின் எண்ணங்கள் இஸ்லாத்திற்கு முரண்பாடானவை. பரம்பரை பரம்பரையாக முஸ்லிம் என்ற பெயரை அவர்கள் பெற்றிருக்கிறார்களேயொழிய வேறொன்றும் அவர்களிடத்தில் இல்லை. (முஸல்மான் அவர் மௌஜூதா ஸியாசி கஷ்மகஷ் பக்கம் 44, 105-106)

மௌலானா அதாவுல்லா ஷாஹ் புகாரி இவ்வாறு கூறிறார் - 

நாம் இஸ்லாத்தின் பெயரால் செய்வதனைத்தும் வெளிப்படையான குப்ராகும். நமது இதயங்கள் மார்க்க அறிவு இல்லாதவையாகவும் கண்கள் அகப்பார்வை (ஆன்மீகப் பார்வை) அற்றவையாயும் காதுகள் உண்மையை கேட்க மறுப்பவையாகவும் இருக்கின்றன. சிலைகள் (கப்ருகள்) மீது உங்களுக்குள்ள நம்பிக்கையும் அல்லாஹ் மீதுள்ள அவ நம்பிக்கையும் குப்ர் அல்லாமல் வேறென்ன? நாம் ஏற்றிருப்பது நபி (ஸல்) அவர்கள் கொண்டுவந்த இஸ்லாமா? நமது அமைப்புகள் அனைத்தும் குப்ரியத் ஆகும்........ (ஆஸாத், லாகூர்) 

இப்படி ஒட்டு மொத்தமாக முஸ்லிம் சமுதாயம் - நபி பெருமானாரின் சீர்கெட்டு விட்டதென்றால் வெற்றிக்குரிய அந்தப் பிரிவுதான் எது? அதனை நபி(ஸல்) அவர்களே கோடிட்டுக் காட்டுகிறார்கள்:

"இந்தச் சமுதாயத்தின் சிறந்த காலக்கட்டங்கள் அதன் ஆரம்பத்திலும் இறுதியிலும் உள்ளவையாகும். ஆரம்பக் கட்டத்தில் நானும் இறுதி கட்டத்தில் வாக்களிக்கப்பட்ட மஸீஹும் இருப்பார்கள்." (கன்சுல் உம்மால்)

"நான் ஆரம்பத்திலும் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் இறுதியிலும் உள்ள ஒரு சமுதாயம் எவ்வாறு அழியும்" (இப்னு மாஜா) 

இவற்றிலிருந்து வாக்களிக்கப்பட்ட மஸீஹை ஏற்பவர்களே அந்தச் சீர்கேட்டிலிருந்து தப்பியவர்கள் என்பதும் அவர்களே அந்த வெற்றிக்குரிய பிரிவார் என்பதும் புலனாகும். 

அடுத்து வெற்றிக்குரிய அந்த பிரிவார் ஒரு "ஜமாஅத்" ஆக விளங்கும் என மேற்கண்ட ஹதீதிலிருந்து தெளிவாகிறது. இங்கு ஜமாஅத் என்பது வெறும் கூட்டத்தைக் குறிக்காது.

"லைசல் ஜமாஅது இல்லா பி இமாமின்" 

இமாம் இல்லாமல் ஜமாஅத் இல்லை. 

என்பது நபி(ஸல்) அவர்களின் வாக்காகும். ஜமாஅத் என்றால் அது ஒரு தலைமையின் கீழ் இயங்கக்கூடியதொன்றாகும். இஸ்லாமிய சமுதாயம் தலைமையின் கீழ் இயங்கக்கூடியதாகும். தலைமை இல்லாத எந்தக் கூட்டமும் இஸ்லாமிய சமுதாயமாக அழைக்கப்பட இயலாது. அந்த அளவுக்கு தலைமை முக்கியத்துவம் வாய்ந்தது. 

ஹஸ்ரத் இப்னு உமர் அவர்களின் ஓர் அறிவிப்பு இவ்வாறு காணப்படுகிறது:- யாராவது ஜமாத்திலிருந்து விலகி நிற்கிறார்கள் என்றால் அவர் இஸ்லாமிய வளையத்திலிருந்து வெளியேற்றப்படுவார். (திர்மிதி) ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் பையத் செய்தது எப்போது என ஹஸ்ரத் யாகூபிப்னு இப்ராஹிமிடம் வினவப்பட்டபோது, நபி(ஸல்) அவர்கள் மறைந்த அன்றே! ஹஸ்ரத் அபூபக்கர் அவர்களை இமாமாக ஏற்றார்கள். சஹாபாக்கள் ஒரு நாளில் ஒரு பகுதி கூட ஜமாத்தாக இல்லாமலிருக்க விரும்பவில்லை. என்றார்கள். (திப்ரி பாகம் 3 பக்கம் 301) 

இவற்றிலிருந்து "ஜமாஅத்" "இமாம்" ஆகியன எத்துனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணரலாம். 

இந்த 'ஜமாஅத்" தும் இமாமும் தம்மிடத்தில் இல்லை என்பதை இக்கால முஸ்லிம் அறிஞர்கள் உணர்ந்தே இருக்கின்றனர். 

அல்லாமா சித்திக் ஹசன் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்:-

"இன்றைய முஸ்லிம்களுக்கு ஒரு ஜமாத்தோ இமாமோ இல்லை. மாறாக இது இவர்கள் சின்னாபின்னமாயிருக்கும் காலகட்டமாக இருக்கிறது.(இக்திராபுஸஆ , பக்கம் 56) 

ஜம்மியத்துல் உலமாயே ஹிந்தின் ஏடான அல்ஜம்மியத் (டெல்லி) தில் இவ்வாறு காணப்படுகிறது:- 

"முஸ்லிம்சமுதாயமென்பது ஒரு சரடில் கோர்க்கப்பட்ட மாலை போன்ற கட்டுப்பாடுமிக்க ஓர் அமைப்பென்றால் இன்று முஸ்லிம் சமதாயம் என்ற ஒன்று இல்லவே இல்லை! சிதறிக் கிடக்கும் மணிகள் போலவும் இடையனில்லாத ஆடுகள் போலவும் முஸ்லிம்கள் இருக்கின்றனர்." (அல் - ஜம்மிய்யத் 14-4-31) 

லாஹூரிலிருந்து வெளிவரும் ஸம்ஸம் எனும் ஏட்டில் இவ்வாறு காணப்படுகிறது. 

அந்தோ பரிதாபம், உயிருள்ள ஓர் இமாம் இல்லாத சமுதாயம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதை காண்கிறோம். சொர்கத்திற்குரிய வழி என்று எதனை எண்ணிக்கொண்டிருக்கிரார்களோ அது நரகத்தின் பாதையே யாகும். தலைமையற்ற ஒரு சமூகத்தின் தலை மீது வீழ்ச்சியின் மேகங்களே காணப்படும். (ஸம்ஸம் 11-5-39)

நம்பிக்கையிலும் நடைமுறையிலும் திருமறையின் கட்டளை பேணியும் அண்ணல் நபிபெருமாநாரை முழுக்க முழுக்க பின்பற்றியும் ஒரு இமாமின் கீழ் ஒன்றுபட்டு அல் ஜமாத்தாக இயங்கி வருவது இன்றைய உலகில் அஹ்மதியா இயக்கம் மட்டுமே 

இத்தகைய ஒரு உன்னத ஜமாஅத் உருவாகுமென்றும் அதுவே நபிபெருமானார் முன்னறிவித்த அந்த வெற்றிக்குரிய பிரிவு என்றும் இஸ்லாமிய நல்லறிஞர்களும் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்துள்ளார்கள்.

மேற்கண்ட நபிமொழிக்கு விளக்கமாக ஹஸ்ரத் முஹிய்யுத்தீன் இப்னு அரபி (ரஹ்) அவர்கள் தமது மிர்காத் ஷரஹ் மிஷ்காத் எனும் ஹதீது விளக்கவுரை நூலில் இவ்வாறு வரைந்துள்ளார்கள்:

"எழுபத்திரண்டு பிரிவுகளும் நரகத்திற்காளாவார்கள். சுவர்க்கம் செல்லும் அந்த ஒரு ஜமாஅத் நபிபெருமானார் (ஸல்) அவர்களின் நடைமுறைகளைப் பேணும் 'அத்தரீத்துன் நக்கிய்யதுல் அஹ்மதிய்யது" புனித அஹ்மதிய்யா இயக்கத்தை சார்ந்தவர்களாக இருப்பார்கள். (மிர்காத் பாகம் 1 பக்கம் 201)

ஹஸ்ரத் முஜத்திது அல்பிஸானி (ரஹ்) அவர்கள் இவ்வாறு வரைந்துள்ளார்கள்: அக்காலத்தில் ஹக்கீகத்து முஹம்மதியாவின் பெயர் ஹக்கிகத்து அஹ்மதிய்யா என்றிருக்கும். அது (அஹமதிய்யத்) அல்லாஹ்வின் அஹத் (ஏகத்துவம்) எனும் குணயியல்பை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும். (ரிஸாலா மப்தக்மா ஆத் பக்கம் 58) 

அஹ்மதியா இயக்கம் தோன்றுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னே அதன் பெயரை இந்த இஸ்லாமிய அறிஞர்கள் தெரிவித்திருப்பது அற்புதமும் இறைசெயலும் ஆகும். தனிப் பெயர் கொண்டவர்கள் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்தை கூறி மறைமுகமாக அஹ்மதிய்யா இயக்கத்தை தாக்க விழைகின்றவர்கள் இதனை தெரிந்துகொள்ளவேண்டும். இவர்களின் 'நஜாத்'திற்க்காகவும் இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காகவும் முஸ்லிம் சமுதாயத்தின் எழுச்சிக்காகவும் திறக்கப்பட்ட ஒரே வழி அஹமதிய்யா இயக்கமே என்பதையும் இவர்கள் உணரவேண்டும்.
Read more »

May 12, 2012

ஈசா நபி (அலை) அவர்களின் மரணமும் 'நஜாத்' ஏட்டின் மூடநம்பிக்கையும் - 2


திருக்குர் ஆனின் பல்வேறு சிறப்பம்சங்களில் ஒன்று, அதன் வசனங்கள் ஒன்றை ஒன்று தெளிவுபடுத்தும் வண்ணம் அமைந்திருப்பதுதான். விவாதத்துக்குரிய திருமறை வசனமான "அல்லாஹ் அவரை (ஈசா நபியை) தன்னளவில் உயர்த்திக் கொண்டான்." என 4:159 இல் காணப்படுவதை 3:56 ஆம் வசனம் தெளிவு படுத்துகிறது. இந்த வசனம் இவ்வாறு அமைந்துள்ளது.

"ஈசா நான் உம்மை மரணிக்கச் செய்வேன் மேலும் என்னளவில் உயர்த்திக் கொள்வேன் என அல்லாஹ் கூறிய பொது ........"

இந்தத் திருக்குர் ஆன் வசனம் ஈசா நபி இறைவனளவில் உயர்த்தப்படுவதற்கு முன் அவருக்கு மரணம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்திவிடுகிறது. ஏனெனில் இங்கு மரணம் முதலிலும் உயர்த்துதல் அடுத்தும் இடம்பெற்றிருக்கிறது.

ஆனால் நஜாத் ஆசிரியரோ முதலில் உயர்த்துதல் நிகழ்ந்துவிட்டது மரணம் பின்னால் நிகழும் என்கிறார். இந்த தலை கீழ் பாடத்தை அறிவுள்ள எவரும் ஏற்க்கமாட்டார். இப்படி திருமறை வசனத்தை புரட்டுவதோடு நின்றுவிடாது அதன் சொற்களுக்கு தவறான அர்த்தமும் நஜாத் ஆசிரியர் தருகிறார். மேற்கண்ட வசனத்திற்கு இவர் தரும் அர்த்தத்தை பாருங்கள். "ஈஸாவே நான் உம்மைக் கைப்பற்றுவேன் இன்னும் என்னளவில் உயர்த்திக் கொள்வேன்" என அவ் வசனத்தை இவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் மட்டுமல்ல இப்போதுள்ள திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பாளர்களும் இவ்வாறே மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் கடந்த காலத்தில் உள்ள இமாம்களும் இஸ்லாமிய நல்லறிஞ்சர்களும் நாம் மொழி பெயர்த்துள்ள வண்ணமே மொழி பெயர்த்துள்ளனர்.

இந்த திருவசனத்தில் இடம் பெற்றுள்ள 'முதவபீக' என்ற சொல்லுக்கு 'நான் உம்மை மரணிக்க செய்வேன்' என்பதே சரியான பொருளாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்தச் சொல்லுக்கு 'முமீதுக' அதாவது, நான் உம்மை மரணிக்க செய்வேன் என்ற பொருள் தந்துள்ளதாக ஸஹீஹுல் புகாரியில் காணப்படுகிறது. எல்லா அறபி மொழி வல்லுனர்களும் இந்தச் சொல் மேற்கண்ட வசனத்தில் கையாளப்பட்டிருப்பது போல் கையாளப்பட்டிருந்தால் அதன் பொருள் 'மரணிக்கச் செய்தல்' என்பதல்லாமல் அதற்க்கு வேறு எந்த அர்த்தமும்கொள்ளயியலாது என தெளிவு படுத்துயுள்ளனர். எடுத்துக்காட்டாக அல்லாமா அபுல் பகா அவர்கள் தமது 'குல்லிய்யாத்' எனும் அகராதியில் கீழ் வருமாறு குறிப்பிட்டுள்ளதை கூறலாம்.

"தவப்பீ' யின் பொருள் மரணிக்கச் செய்வதும் உயிரை வாங்குவதுமாகும். இவ்வினைப் பெயர் 'வபாத்' எனும் மூலச் சொல்லிலிருந்து உருவானதாகும்"

மேலும் 'தவப்பீ' என்ற சொல்லுக்கு மரணிக்கச் செய்தல் என்ற பொருளைத் தவிர வேறு பொருளில்லை என்பதை இமாம் மாலிக் (ரஹ்) , இமாம் புகாரி (ரஹ்) போன்றோர் உறுதி செய்துள்ளனர். (ஸஹீஹுல் புகாரி - அத்தியாயங்கள் 'தப்ஸீர்' மற்றும் 'பதல் கல்க்' )

திருக்குரானில் இந்த தவப்பா என்ற சொல் இருபத்தைந்து இடங்களில் காணப்படுகிறது. (3"194. 4:16, 7:127, 8:51, 10:47, ஆகியன காண்க) இதில் இருபத்து மூன்று இடங்களில் இச் சொல் மரணத்தைக் குறிப்பதற்காக பயன்படுத்தப் பட்டுள்ளது. எஞ்சிய இரண்டு இடங்களில் கூட "ரூஹை (உயிரைக்) கைப்பற்றுதல் " என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறிருக்க இந்தச் சொல்லுக்கு உடலோடு உயிரைக் கைப்பற்றுதல் என்றதொரு வினோதமான அர்த்தத்தை இவர்கள் எதன் அடிப்படையில் கூறுகின்றார்கள்?

பதஹுல் பயான் எனும் விரிவுரை நூலில் காணப்படுவது போன்று உண்மையில் இது, ஈஸா நபி வானத்தில் உயிருடன் இருக்கிறார் என்ற மூட நம்பிக்கையை தமது உள்ளத்தில் வளர்த்துக் கொண்ட கிறிஸ்தவ வழி வந்த முல்லாக்கள் உருவாக்கிய அனர்த்தமேயொழிய அந்தச் சொல்லுக்கு இவர்கள் தரும் அர்த்தம் இல்லவேயில்லை!

'ரஃப அ' என்ற சொல்லுக்கு உடலுடன் உயர்த்துதல் என்ற பொருள் உண்டு என்பதற்கோ 'தவஃப்பி' eன்ற சொல்லுக்கு 'உடலைக் கைப்பற்றுதல்' என்ற பொருள் உள்ளது என்பதற்கோ அரபி மொழி இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டையோ அகராதியிலிருந்து ஆதாரத்தையோ தராது வெறும் குதர்க்க வாதங்களால் குட்டையை குழப்புகிறார் நஜாத் ஆசிரியர்.

'ரஃப அ' என்ற அரபிச் சொல் குரானிலும் ஹதீதிலும் வேறு பல இடங்களிலும் பதவி உயர்வு குறித்து பிரயோகப் படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் மறுக்கவில்லை " என (பக்கம் 16 இல்) கூறும் அவர், ஈசா (அலை) வர்களைப் பொறுத்தவரை அச் சொல் "உடல் உயர்வு" என்று பொருள் படும் என்று கூறுகிறார். இதை யார்தான் ஏற்க்க முடியும்? ஏனையோரைப் பற்றி ஏன், எம்பெருமானார் (ஸல்) வர்களைப் பற்றி கூட குறிப்பிடப்படும் போது அந்தச் சொல்லுக்கு ஒரு அர்த்தமாம். ஈசா நபியைப் பற்றி வரும் போது மட்டும் அதற்க்கு தனி அர்த்தமாம். இது போன்ற வாதத்தை படிப்பற்றவன் கூட நம்பமாட்டானே !

ஈசா நபி உடலுடன் உயர்த்தப்பட்டார்கள் என்பதை நிரூபிக்க வழியில்லாத காரணத்தால் ஈசா நபி அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்பதற்கு நாம் காட்டிவரும் ஆதாரங்களை நஜாத் ஆசிரியர் மறுக்க முயல்கிறார். முதலில் இவர் தமது நம்பிக்கைக்கு தெளிவான ஆதாரங்களால் நிரூபிக்க வேண்டும். அதன் பிறகே நம்மால் காட்டப்படும் ஆதாரங்களை மறுக்க முயல வேண்டும். ஆனால் அவரோ ஆதாரம் 2,3 என தலைப்பிட்டு நம்முடைய ஆதாரங்களை தன் மனம் போல் மறுக்கின்றார். இது விவாத முறையன்று.

என்றாலும் இல்லாத சான்றை இவரிடம் கேட்பதில் என்ன பயன்? எனவே இவரின் மறுப்புகளை இனி பார்ப்போம்.

ஈசா நபி (அலை) அவர்களின் இயற்க்கை மரணம் குறித்து திருக்குரானில் காணப்படும் வசனங்களில் ஒன்று இவ்வாறு அமையப்பற்றுள்ளது :-

மர்யமின் மைந்தர் மஸீஹ் ஒரு தூதரே அன்றி வேறில்லை நிச்சயமாக (அவரைப் போன்ற) தூதர்கள் அவருக்கு முன்னால் காலஞ்சென்று போனார்கள். மேலும் அவருடைய தாயார் ஓர் உண்மைமிக்கப் பெண்ணாவார். அவர்கள் இருவரும் உணவருந்திக் கொண்டிருந்தார்கள். (இவற்றிலிருந்து) அவர்கள் (ஈசா நபியை இறைவனாகக் கருதுபவர்கள்) எவ்வளவு தூரம் விலகி இருக்கிறார்கள் என்பதை காண்பீராக. (5:76)

நஜாத் ஆசிரியர் மறுப்பதற்காக எடுத்துக் கொண்டுள்ள நூலான "ஈசா நபி (அலை) அவர்களின் மரணம்" என்ற நூலில் இத் திருக்குர்ஆன் வசனத்திற்கு இவ்வாறு விளக்கம் தரப்பட்டுள்ளது. :-

இந்த ஆயத்தில் ஈசா நபியின் இறப்பு பற்றி மிகத் தெளிவாக கூறப்பட்டிருப்பதை பாருங்கள். இங்கு முதலாவதாக ஈசா நபி ஓர் இறைத்தூதறேயன்றி வேறில்லை என்று கூறியதற்குப் பிறகு அவருக்கு முன் தோன்றிய எல்லா நபி மார்களும் காலஞ்ச சென்று போனார்கள் என்று கூறப்படுகிறது. இது ஈசா நபியின் மரணத்தை உறுதி செய்யும் மறுக்கயியலாத ஒரு சான்றாகும். திருக்குரானின் இந்த நடைக்கு ஓர் உதாரணம் கூறுகின்றேன். ஸைத் ஒரு மனிதனேயன்றி வேறில்லை. எல்லா மனிதர்களும் மண்ணினால் படைக்கப்பட்டவர்கள் என்று கூறினால் ஸைத்தும் மண்ணினால் படைக்கப்பட்டவர் என்பதே அதற்குப் பொருள். அது போன்று ஈசா நபியின் மரணம் மேற்கண்ட ஆயத்தில் விளக்கப்பட்டுள்ளது. அவ்வாறில்லை என்றால் ஈசா நபியை ஏனைய இறைத் தூதர்களிலிருந்து வேறுபட்டவராக இங்கு காட்ட வேண்டும்.

திருக்குர்ஆன் தொடர்ந்து, ஈசா நபியின் தாயார் புனிதவதியாக இருந்தார். எனவும் அவர்களிருவரும் உணவருந்தி கொண்டிருந்தார்கள் எனவும் விளக்குகின்றது.

இங்கு சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஈசா நபி மரணிக்காது உயிருடன் இருக்கிறார் என்பது உண்மையானால் அவரைப் பற்றி அவர் உணவருந்திக்கொண்டிருந்தார் என இறந்த காலத்தில் ஏன் கூறப்பட்டிருக்கிறது? அவ்வாறில்லாமல் அவரையும் அவரது தாயாரையும் இவ் விஷயத்தில் வேறு படுத்தியல்லவா கூற வேண்டும். அதாவது மர்யம் (அலை) அவர்கள் உணவருந்தியிருந்தார்கள் என்றும் ஈசா நபி உணவருந்திக் கொண்டிருக்கிறார் என்றுமல்லவா கூறப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு கூறப்படவில்லை. அவர்கள் இருவரும் உணவருந்தியதை கடந்த கால நிகழ்ச்சியாகவே இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த தெளிவான விளக்கத்திற்கு நஜாத் ஆசிரியரின் விமர்சனத்தைப் பாருங்கள்.

"காதியானிகளின் இந்த வினோதமான விளக்கத்திற்கு காரணம் ஒன்று அவகளின் விவேகமின்மையாக இருக்கவேண்டும்: அன்றி அறிந்தும் மக்களை மடையர்களாக்கி தங்களின் சுய நலத்தைப் பேணிக்கொள்ளும் வேடமாக இருக்க வேண்டும். ஈசா (அலை) இறந்தது விட்டார்கள் என்றால் அல்லாஹ் அதை தெளிவாக சந்தேகத்திற்கிடமின்றி அறிவித்திருக்கலாமே! இப்படி சுற்றி வளைத்துச் சொல்லி காதியானிகளை திண்டாட விட்டிருக்க்வேண்டியதில்லையே!"

நஜாத் ஆசிரியர் இறைவனுக்கே கட்டளையிடுவார் போலிருக்கிறது. யூத இனமான இஸ்ரவேலருக்குத் தூதராக வந்த ஒருவர் இறக்காமல் இருக்கிறார் என இவர் முட்டாள்தனமாக நம்புவாராம். அவ்வாறு இல்லையென்று தெளிவாக, சந்தேகத்திற்கு இடமின்றி சுற்றி வளைக்காமல் இறைவன் அறிவிக்க வேண்டுமாம். மனிதானாகப் பிறந்த எவனுக்கும் ஒரு குறுகிய வாழ்விற்குப் பிறகு இறப்பு ஏற்ப்படும் என்பது மடையனுக்கு கூட சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. ஈசா நபி ஓர் இறைத்தூதர் என்றாலும் அவரும் ஒரு மனிதரே எனவே அவர் இறந்துவிட்டார் எனக் கூறவேண்டிய அவசியமில்லை. நஜாத் ஆசிரியர் பேதமைத்தனமாக நம்புவது போன்று ஈசா நபி உயிருடன் இருந்தால்தான் 'அந்த அற்புதமான விஷயம் பற்றி அல்லாஹ் திருக்குரானிலே தெளிவாக அறிவித்திருக்க வேண்டும்.

நம்மிடம் வந்து ஈசா நபி அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதற்கு ஆதாரம் கேட்பவர்களிடம் நாம் இவ்வாறு கூறுவது வழக்கம். மனிதன் இறப்பதென்பது இயற்க்கை நியதி அதற்க்கு ஆதாரம் காட்டவேண்டியதில்லை. ஆனால் மனிதராகிய ஈசா நபி ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இறக்காது இருக்கிறார் என்று நீங்கள் கூறுவதென்றால் அதுவே வினோதம். அதற்க்கு நீங்கள்தான் ஆதாரம் காட்டவேண்டும்.

எனவே நஜாத் ஆசிரியரிடம் கேட்போம் ஈசா நபி உயிருடன் உள்ளார்கள் என்பதற்கு சந்தேகத்திற்கிடமில்லாத சுற்றிவளைக்காத தெளிவான ஆதாரத்தைத் தாருங்கள். இவ்வாறு அவரைக் கேட்க நஜாத் ஏட்டின் ஒவ்வொரு வாசகரும் கடமைப் பட்டவராவார்.

ஏனெனில், ஈசா நபி உயிருடன் உள்ளார்கள் என்ற கொள்கை தவ்ஹீதிற்கு எதிரானது. எவ்வாறெனில் மேற்கண்ட இறைவசனத்திலும் இன்னும் பல வசனங்களிலும் இறைவன் தனக்கு இணையாக வணங்கப்படுபவர்கள் எல்லாம் மரணித்துப் போனவர்கள் என்பதை விளக்கி தனது "தவ்ஹீத்" நிலையை எடுத்துக் காட்டுகின்றான். மேற்கண்ட வசனத்தில் இறைவன் ஈசா நபியை ஒரு தீர்க்கதரிசியாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்த ஒரு மனிதராக - உணவு உண்டு வாழ்ந்த ஒருவராக தெளிவாக எடுத்துக் காட்டுகின்றான். மேலும் அவர்ட் சாதாரண மனிதரைப் போன்று "உணவருந்திக் கொண்டிருந்தார்"என்று கூறி அவர் இறந்து போனார் என்பதை மீண்டும் உறுதி செய்து அவர் கடவுள் இல்லை என்பதை தெளிவு படுத்தியிருக்கின்றான்.

திருக்குரானில் இறைவன் இவ்வாறும் அறிவித்துள்ளான் :-

அல்லாஹ்வைத் தவிர்த்து யாரை அவர்கள் (இணைவைப்பவர்கள்) அழைக்கின்றார்களோ அவர்கள் எதையும் படைக்கவில்லை ஆனால் அவர்கள் தாம் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் மரணித்துப் போனவர்கள்: உயிருள்ளவர்கள் அல்ல மேலும் அவர்கள் எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதைக் கூட அவர்கள் அறிய மாட்டார்கள். (16:21,22)

இந்த வசனத்தில் இறைவன் தனது ஏகத்துவ நிலைக்குச் சான்றாக கடவுளாக அழைக்கப்படுகின்றவர்களின் மரணத்தையே கூறுகின்றான். இன்று பெரும் பான்மை மக்களால் கடவுளாக அழைக்கப்படுகின்றவர் ஈசா நபி ஆவார், அப்படி அழைக்கப்படுகின்றவர், மரணித்துப் போனவர் என்றும் மரமண்டைகளில் ஏறும் வண்ணம் உயிருள்ளவர்கள் அல்ல என்றும் இறைவன் கூறுகின்றான். ஆனால் நஜாத் ஆசிரியரைப் போன்றவர்கள், இல்லை இல்லை ஈசா நபி உயிருடன் இருக்கிறார்கள் என்று கூறி இறைவனின் இந்த வார்த்தைகளை மறுக்கின்றனர். இது தவ்ஹீதிற்கு இறைவன் தரும் சான்றை மறுப்பது மட்டுமல்ல தவ்ஹீதையே மறுப்பதாகும். எனவே ஈசா நபி உயிருடன் இருக்கிறான் என்று கூறுவது இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கின்ற ஒன்றாகும். ஈசா நபி பிரச்சனை அவசியமற்றது என்று கூறுபவர்கள் இதனை எண்ணிப்பார்க்கவேண்டும். நஜாத் ஆசிரியர்கள் இந்த விஷயத்தில் முடிவு காண நஜாத் ஆசிரியரை வற்புறுத்த வேண்டும். இல்லையெனில் அவர்கள் தம்மை தவ்ஹீது வாதிகள் என்று வாதிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லாமல் போய்விடும்.

அடுத்து நஜாத் ஆசிரியர் இவ்வாறு வரைகிறார்:- "இந்த இறை வசனம் மூலம் ஈசா (அலை) அவர்கள் மரணிக்காமல் தூய உடலுடன் அல்லாஹ்வின் அளவில் உயர்த்தப்பட்டுள்ளதால் அவர்கள் மரணமற்றவர்களா? மரணமற்றவர்களாயின் அல்லாஹ்விற்கு இணையாகுமே என காதியானிகள் கூறுவது போலவே அன்றும் சிலர் வினவி இருக்கலாம்." இவ்வினாவிற்கு விளக்கமாகவே, "ஈசா (அலை) அல்லாஹ்வின் அளவில் உயர்த்தப்பட்டுள்ளதால் அவருக்கு மரணமில்லை என்று எண்ணுகிறீர்களா? மற்ற நபிமார்கள் இறந்ததுபோல் ஈசா(அலை) அவர்களும் மரணிப்பவர்களே."

நாம் தந்துள்ள தெளிவான சான்றை இவர் எப்படியெல்லாம் குதர்க்கவாதம் செய்து மறுக்கிறார் பாருங்கள். ஈசா நபி உடலுடன் உயர்த்தப்பட்டார்கள் என ஆரம்பகால முஸ்லிம்கள் நம்பியிருந்தால்தானே அவர் மரணித்துப் போவாரா மாட்டாரா? என்ற சந்தேகம் அவர்களுக்கு இருக்க முடியும்? எனவே ஈசா நபி உடலுடன் உயர்த்தப்பட்டார்கள் என்ற நம்பிக்கை ஆரம்பகால முஸ்லிம்களிடம் இருந்தது என்பதற்கு முதலில் இவர் ஆதாரம் காட்ட வேண்டும் அதன் பிறகே இதுபோன்று வாதிக்கவேண்டும்.

மேற்கண்டவாறு கூறுவதன் மூலம் ஆம் திருவசனம் ஈசா நபியின் மரணம் பற்றியது என்பதை நஜாத் ஆசிரியர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அந்த மரணம் நிகழ்ந்துவிட்டது என்று நாம் கூறுகின்றோம் அவரோ இன்மேல் தான் நிகழும் என்கிறார். இந்த கருத்து வேறுபாட்டிற்கு திருக்குர்ஆன் என்ன தீர்ப்பளிக்கிறது பார்ப்போம்.

முஹம்மது ஒரு தூதரேயன்றி வேறில்லை அவருக்கு முன்னுள்ள தூதர்கள் காலஞ்சென்று போனார்கள் (3:145)

ஈசா நபி நபி(ஸல்) அவர்களுக்கு முன் தோன்றிய ஒரு நபி, அத்தகு நபிமார்கலேல்லாம் காலஞ்சென்று போனார்கள் என தெளிவுபடுத்துகிறது இந்தத் திருவசனம். இந்த வசனத்தைப் படித்த, அறிவுள்ள எவரும் ஈசா நபி மரணித்துவிட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், நஜாத் ஆசிரியரைப் போன்ற குழப்பவாதிகளோ திருக்குர்ஆன் ஆயத்தை திரித்துக் கூறி மக்களை ஏமாற்றவே செய்வர். ....."தூதர்கள் காலஞ்சென்று போனார்கள்." என்று இருப்பதை "தூதர்கள் பலர் சென்று போனார்கள்" என்று இல்லாததை இட்டுக் கட்டி நஜாத் ஆசிரியர் (பக்கம் 24 இல்) கூறுகிறார். இந்த ஆயத்தில் 'பலர்' என்று பொருள்படும் பஃள என்ற சொல் இல்லவே இல்லை. இதிலிருந்து யார் மக்களை ஏமாற்ற நினைக்கிறார் என்பதை வாசகர்கள் தெளிவாகவே புரிந்துகொள்ளலாம்.

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்திலிருந்து ஈசா நபி அவர்கள் இறந்து போனது சந்தேகத்திற்க்கிடமின்றி தெளிவாகியிருக்கையில் அதனை ஏற்காது, இந்த 3:144 வசனம் இறங்கும் போது நபிபெருமானார் (ஸல்) அவர்கள் உயிர் வாழ்ந்திருந்தது போலவே 5:75 வசனம் இறங்கும் போது ஈசா நபி உயிரோடு இருந்தார் என்ற ஒரு அபத்தமான ஒரு வாதத்தை நஜாத் ஆசிரியர் எடுத்து வைக்கிறார். ஈசா நபிக்கு முன்னால் உள்ள தூதர்கள் காலஞ்சென்று போனார்கள் என்ற திருவசனத்தை படித்த பிறகும் ஈசா நபி இறந்தார்களா என்ற சந்தேகம் எழுமானால், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னாலுள்ள தூதர்கள் காலஞ்சென்று போனார்கள் என்ற திருவசனம் அந்தச் சந்தேகத்தை அடியோடு போக்கிவிடுகிறது.

இது குறித்து அல்லாஹ் மீண்டும் தெளிவு படுத்தியிருப்பதை பாருங்கள்.

மனிதர்களேயன்றி வேறெவரையும் நாம் உமக்கு முன்னர் (தூதர்களாக) அனுப்ப வில்லை, அவர்களுக்கே வஹீ அனுப்பியிருந்தோம் .......... ......... மேலும் உணவருந்தாததும் நிலைத்து வாழக்கூடியதுமான உடலை நாம் அவர்களுக்கு தரவில்லை. (21:8,9)

இதிலிருந்து ஈசா நபி உணவருந்தாது ஒரு நீண்ட காலம் உயிர் வாழ்கிறார் என்ற நஜாத் ஆசிரியரின் வாதம் முழுக்க முழுக்க தவறானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த வசனத்தையும் இதற்க்கு முன்னால் குறிப்பிட்டுள்ள இரண்டு வசனங்களையும் படித்தறிந்த பிறகும் ஒருவர் ஈசா நபி மரணிக்கவில்லைஎன வாதிப்பாரேயானால் அவர் ஈசா நபியை இறைதூதர் என்ற நிலைக்குமேல் உயர்த்துகிறார் என்பதே அதற்குப் பொருள். அவ்வாறு செய்கின்றவர் அல்லாஹ்வின் வார்த்தைகளை மறுப்பவரும் அண்ணல் மாநபி (ஸல்) அவர்களை அவமதிப்பவருமேயாவார். அத்தகைய ஒருவராகவே நஜாத் ஆசிரியர் காணப்படுகிறார்.

"உமக்கு முன்னர் நாம் எந்த மனிதருக்கும் நீண்ட கால வாழ்வு அளிக்கவில்லை. (முஹம்மது நபியே) நீர் மரணித்து இவர்கள் நெடுங்காலம் வாழ்வதா?" (21:25)

என இறைவன் கேட்கிறான். ஆனால் நஜாத் ஆசிரியரோ மானமும், வெட்கமும் இல்லாமல் நபி (ஸல்) அவர்கள் மரணித்திருக்க ஈசா நபி இன்னும் உயிரோடு இருப்பதாக வாதிடுகிறார். இப்படி வாதிடுபவர்கள் ஒரு வேளை கிறிஸ்தவத்திலிருந்து மதம் மாறி இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது கிறிஸ்தவர்களின் கைக்கூலியாக இருக்கவேண்டும்.

நாம் இதனை மிகைப்படுத்திக் கூறவில்லை. நமக்கு எழுந்துள்ள சந்தேகம் நியாயமானதுதான். நஜாத் ஆசிரியர் இது குறித்து எழுதியிருப்பதை நீங்கள் படித்தல் உங்களுக்கும் அந்த சந்தேகம் எழும். அவர் கூறியிருப்பதைப் பாருங்கள்:-

"தூதர்களில் சிலரைச் சிலரைவிட மேன்மையாக்கியிருக்கிறோம்." என்று தான் அல்லாஹ் நவின்றுள்ளானே அல்லாமல் நபி (ஸல்) அவர்களை மற்றெல்லா நபி மார்களையும் விட எல்லா விஷயங்களிலும் உயர்த்தியிருப்பதாகச் சொல்லவில்லை. "

இதிலிருந்து நஜாத் ஆசிரியரின் ஈமானில் கோளாறு உள்ளதை உணரலாம். அண்ணல் மாநபி (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களையும் விட எல்லாவகையிலும் உயர்ந்தவர்கள் மட்டுமல்ல அந்த மானபியை முழுமையாகப் பின்பற்றிய மக்கள் எல்லா மக்களையும் விட உயர்ந்தவர்கள் என்பதையும் திருக்குர்ஆன் தெளிவு படுத்தியிருக்கிறது. கீழ்வருவன அதற்க்கு சான்றுகளாகும்.

காத்தமுன் முன்னபிய்யீன் - எல்லா நபிமார்களையும் விடச் சிறந்தவர்கள்- (சூரா அஹ்சாப்)

யாசீன் - தலைவரே -(சூரா யாசீன்)

புகழக்கூடிய இடத்துக்கு உரியவர் (மக்காமே மஹ்மூத்) - (சூரா பனி இஸ்ராயீல்)

உலக முழுவதிற்கும் ஒரு அருட்கொடை (சூரா அன்பியா)

உலக மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட ஒரே இறைத்தூதர். (சூரா அக்ராப்)

இவ்வாறெல்லாம் நபி(ஸல்) அவர்களை மேன்மைப் படுத்திக் கூறியுள்ளபோது இந்த மேதாவி அதிலும் சந்தேகத்தைக் கிளப்புகிறார். இவர்கள் தான் மக்களை ஆலிம்களாக்குகிறவர்களா?
Read more »