அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Sep 30, 2011

முஜாஹிதா முனாபிக்கா?

அவதூறுகளும், குற்றச்சாட்டுகளும் அஹ்மதிகள் மீது கூறப்படுவது புதிதானதன்று.

எனினும் அஹ்மதிய்யா ஜமாஅத்திற்கெதிராக கூறப்படும் நச்சுக் கருத்துக்களை மறுப்பதும் மக்களுக்குத் தப்பெண்ணம் ஏற்பட்டுவிடாது தடுப்பதும் எங்கள் கடமையாகும்.

அலட்டலுக்கும் வெறும் ஆவேசப் பேச்சுகளுக்கும் பேர் போன முன்னால் அரசியல்வாதி ஒருவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் ஓர் ஏடு நம்மைப் பற்றி புதிதாக ஒரு புரளியை ஏற்படுத்தியுள்ளது.

ராமர் கோயில் கட்டுவதற்கு அஹ்மதி இளைஞர்கள் துணை போனார்கள் என்ற அப்பட்டமான ஒரு பொய்யை அது வெளியிட்டுள்ளது.

அஹ்மதிய்யா ஜமாத்தின்மீது இது போன்ற அவதூறுகளை கூறி முஸ்லிம்களின் இதயத்தில் அது பற்றிய தப்பெண்ணத்தை விதைத்து அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்திவிடலாம் என இறையச்சமற்ற சில குழப்பக்கார கும்பல்கள் மனப்பால் குடிக்கலாம்.

ஆனால், அஹ்மதியா ஜமாஅத் இத்தகைய எதிர்ப்புகளுக்கிடையேயும் 194 நாடுகளில் வேரூன்றி இருபது கோடி அங்கத்தினர்களை கொண்டு வேகமாக பரவி வருவதையும், படித்த பண்பட்ட மக்களின் நல்லாதரவைப் பெற்று வருவதையும் இவர்களின் குருட்டுக் கண்கள் காண்பதே இல்லை!

அதுமட்டுமன்று. பொய்யும், புரட்டும் நிலைப்பதில்லை, அது அழிவையே அடையும் பொய்யர்களை அல்லாஹ்வின் சாபம் தொடரும் என்பன போன்ற திருக்குரானின் நியதிகளுக்கேற்ப இவர்கள் தோல்வியையும் அழிவையுமே இறுதியில் சந்திக்கின்றனர்.

அஹ்மதிய்யா ஜமாத்தின் வெற்றிப் பாதையில் இவர்களின் கல்லறைகளே மைல் கற்கள்
அடுத்தவர்கள் மீது அநியாயமாகப் பழிசுமத்துவது உண்மை முஸ்லிம்களின் இயல்பன்று. 'முஹ்மின்கள், முஜாஹித்கள் இவர்களின் செயலுமல்ல. மாறாக அது 'முனாபிக்' எனும் நயவஞ்சகர்களின் செயலேயாகும். ஆதாரமின்றி பிறர்மீது அவதூறு கூறுவது அல்லாஹ்வின் ஆக்கினைக்கு வழிவகுக்கும்! அக்கிரமக்காரர்களாக, காலம் அவர்களை அடையாளம் காட்டும்!!

'எரிகிற வீட்டில் பிடிங்கியது லாபம்' என்பது போல முஸ்லிம்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் எழும்போது தாம் தான் சமுதாயக் காவலர்கள் எனத் தம்பட்டம் அடித்து அதன் மூலம் தம்மை வளர்த்துக் கொள்ளும் கும்பல்கள், அடையாளம் கண்டு கொள்ளப்படும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

உண்மையில் முஸ்லிம்களின் காவலன் அல்லாஹ்வேயாகும். உறுதியான ஈமானும் நன்னடத்தையுமே அவர்களைக் காக்கும் கவசன்ப்கள்! இதயத்தின் ஆழத்திலிருந்து எழுகின்ற 'துஆ' க்களே எதிரிகளை அழிக்கின்ற அவர்களின் ஆயுதங்கள்! எல்லாம் வல்ல இறைவனுடன் தொடர்புள்ள தலைமையின் கீழ் ஒன்றுபட்டிருப்பதே அவர்களின் பலம்! 'தக்வா' என்னும் வாலேந்தியவர்களே அவர்களின் படை!

இதை விடுத்து கருப்புச்சட்டையும், காட்டுக் கத்தலும், கையில் வாளும் அவர்களுக்கு பயன்தராது! மாறாக இவையனைத்தும் கலகக்காரர்களின் பட்டியலில்தான் அவர்களை இடம்பெற செய்யும்.

தூய இஸ்லாமே அஹ்மதி முஸ்லிம்களின் உயிர்மூச்சு ! அதன் உலகளாவிய வெற்றியே அவர்களின் இலக்கு! அண்ணல் மாநபி (ஸல்) அவர்களுக்காக மக்களின் உள்ளங்களை வெல்லுவதே அவர்களின் செயல் திட்டம்! முஸ்லிம்களின் எழுச்சியும் சமுதாயத்தின் மறுமலர்ச்சியுமே அவர்களின் குறிக்கோள்!!

அஹ்மதிகள் இந்தியாவில் வாழ்ந்தாலும், இஸ்ரேலில் வாழ்ந்தாலும் இஸ்லாதிற்க்ககவே வாழ்கிறார்கள்!

இஸ்லாமியச் சமுதாயத்திற்கு ஓர் இம்மியளவு இழப்பு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் செயல்பட்டதாக யாராலும் எந்த ஆதாரத்தையும் காட்டிட இயலாது! பாகிஸ்தானில் பல ஆண்டுகள் பல்வேறு கொடுமைகளுக்கு இலக்காகி இருந்தும் அவர்கள் அங்கு, அந்த நாட்டு அரசுக்கு எதிராக எப்போதும் செயல்பட்டதில்லை.

முஸ்லிம்களின் உரிமைகள் எங்கேயாவது பறிக்கப்பட்டால் அதற்கெதிராக முறையாக முதலில் குரல் எழுப்புவது அஹ்மதிகலேயாகும். ஆனால் ஆர்ப்பட்டமும் அலட்டலும் அடுத்தவரின் பாராட்டுதலுக்காகச் செய்வதும் அஹ்மதிகள் அறியாதது!

இனத்துரோகம் என்பது பணத்திற்குப் பல்லிளிப்பவர்களிடம் இருக்குமேயொழிய இறைவனுக்காக இருந்ததையெல்லாம் விட்டு வந்த அஹ்மதிகளிடம் இருக்க வாய்ப்பில்லைஅப்பழுக்கற்ற உள்ளங்கள் இதனை நிச்சயம் உணரவே செய்யும்!
Read more »

ஆதம் நபி முதல் மனிதரா?


ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களே உலகில் தோன்றிய முதல் மனிதர் என முஸ்லிம்களில் பெரும்பாலாரும் கிறிஸ்தவர்களும் நம்புகின்றனர். ஆதம் நபி முதல் மனிதெரென்று பைபிளில் கூறப்பட்டிருக்கிறதோ இல்லையோ திருக்குரானிலோ நபிமொழிகளிலோ அவ்வாறு கூறப்படவே இல்லை. எனவே ஆதம் நபி முதல் மனிதர் என்ற தவறான நம்பிக்கை, ஈஸா(அலை) அவர்களைப் பற்றிய தவறான நம்பிக்கைகள் போன்று கிறிஸ்தவர்களிடம் இருந்து இந்த முஸ்லிம்களுக்குத் தொற்றியிருக்க வேண்டும்.

திருக்குரானில் 2:31 ஆம் வசனத்தில் ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களைக் 'கலீபா' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 'கலீபா' என்ற சொல், பிரதிநிதி, பின்தொடருபவர், தலைவர், ஆட்சியாளர் என்று பொருள்படும். மக்கள் இருந்தால்தான் பிரதிநிதியை, தலைவரை, ஆட்சியாளரை நியமிக்க முடியும். கலீபா என குறிப்பிடப்பட்டிருப்பதால் அவர்களுக்கு முன்பே இவ்வுலகில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று புலனாகிறது.

அடுத்து திருக்குர்ஆன் 7:12 இல் "நிச்சயமாக நாம் உங்களைப் படைத்தோம். பின்னர் உங்களை வடிவமைத்தோம். பின்னர் வானவர்களிடம் ஆதமுக்குக் கீழ்படியுங்கள் என்றோம்',...... என்று காணப்படுகிறது. இந்த வசனத்தில் "உங்களைப் படைத்தோம்" "உங்களை வடிவமைத்தோம்" எனக் குறிப்பிட்டிருப்பது மனித இனத்தையேயாகும். இமாம் ராகிபு (ரஹ்) அவர்கள் தமது 'முப்ரதாத்எனும் நூலில், 'உங்களை வடிவமைத்தோம்' என்ற வசனத்திற்கு மனிதனுக்கு அறிவும் சிந்தனைத்திறனும் அளிக்கப்பட்டதையே இது குறிக்கும் என விளக்கம் தந்துள்ளார்கள். இதன் அடிப்படையில், இறைவன் மக்களை முதலில் படைதான், பின்னர் அறிவையும் சிந்தனைத் திறனையும் அவர்களுக்கு வழங்கினான். அதன் பிறகே ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களைத் தனது பிரதிநிதியாக நியமித்தான் என்பது திருக்குர்ஆன் வசனத்திற்கு விளக்கமாகும்.

திருக்குர்ஆன் 2:37 இல் இறைவன் ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களை நோக்கி "உங்களுள் சிலர் சிலருக்குப் பகைவராகி விட்டீர்கள்" எனக் கூறுகின்றான். இதிலிருந்து ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களும் அவர்களுடைய மனைவியும் மட்டுமல்லாமல் வேறு மக்களும் அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

அண்மைக்கால ஆய்வுகளின்படி மனிதஇனத்தில் வயது பத்து லட்சம் ஆண்டுகளாகும். (என்சைக்ளோபிடியா பிரிட்டானிக 14 ஆம் பதிப்பு) இதிலிருந்து 6000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கூறப்படும் ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்கள் முதல் மனிதராக இருக்க வாய்ப்பில்லை. எனவே. திருக்குரானின் அடிப்படையிலும் நவீன ஆய்வுகளின் அடிப்படையிலும் ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்கள் முதல் மனிதர் என்ற முஸ்லிம், கிறிஸ்தவ நம்பிக்கை அடித்தளமற்றது என திட்டவட்டமாகக் கூறலாம்.

இது தொடர்பாக, அஹ்மதிய்யா முஸ்லிம் ஜாமத்தை தோற்றுவித்த ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்கள் கீழ்வருமாறு கூறியுள்ளார்கள்.

"ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்கள் தோன்றிய நாளிலிருந்து உலகம் ஆரம்பமாகியது என்ற பைபிளின் கூற்றை நாம் ஏற்கவில்லை அதற்க்கு முன்னால் ஒன்றுமே இருக்கவில்லை. இறைவன் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்தான் என்று நாங்கள் நம்பத் தயாராக இல்லை. இன்று உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் அனைவருமே ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகள் என்று நம்புவதற்கும் நாம் தயாராக இல்லை. இதற்க்கு மாறாக இந்த ஆதம் நபி முதல் மனிதர் அல்ல என்று நாம் கூறுவோம். அவருக்கு முன்னாலும் மனித இனம் உலகில் இருந்தது இதனைத் திருக்குர்ஆன் உறுதிப்படுத்துகிறது. 'நான் எனது கலீபாவை உலகில் ஏற்படுத்தப் போகிறேன்' என இறைவன் ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களைக் குறித்துக் கூறுகின்றான். 'கலீபா' என்பது பின்தொடருபவரைக் குறிக்கும். இதிலிருந்து ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களுக்கு முன்னாலும் இவ்வுலகில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது" (அல்-ஹகம் மே 30, 1908 இதழ்)

ஆதம் நபியின் மனைவி 

இறைவன் ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களைப் படைத்த பின் ஹவ்வா எனும் அவர்களின் மனைவியை அவர்களின் விலா எலும்பிலிருந்து படைத்ததாகவும் ஒரு கதை நிலவுகிறது இதுவும் அடிப்படையற்றதாகும். 

"பெண்கள் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். நிச்சயமாக விலா எலும்பின் மிகக் கோணலானப் பகுதி அதன் உயர்ந்த பகுதியாகும். நீங்கள் அதை நேராக்க முயன்றால் அது உடைந்து விடும்." (புகாரி - நிக்காஹ் அதிகாரம்) 

பெண்களுக்கு நற்போதனை செய்யுங்கள் ஏனெனில் பெண்கள் வளைந்த எழும்பினால் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். (முஸ்லிம் - பாகம், 2) 

ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்களின் விலா எலும்பிலிருந்து ஹவ்வா படைக்கப்பட்டார்கள் என்ற தவறான கருத்து மேற்கண்ட நபிமொழிகளைத் தவறாகப் புரிந்து கொண்டதால் உருவாகியிருக்கலாம். ஆனால், இந்த நபிமொழிகளில் ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்கள் பற்றியோ அவர்களின் மனைவி பற்றியோ எந்தக் குறிப்பும் இல்லை. இந்த நபிமொழிகளுக்கு சொற்பொருள் தந்தால், பெண்கள் எல்லோருமே விலா எலும்பால் படைக்கப்பட்டார்கள் என்று கூற வேண்டிவரும். உண்மையில், பெண்களிடத்தில் கோணலான தன்மை இயல்பாகவே இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டவே இந்த நபிமொழிகளில் விலா எலும்பு உருவகமாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த நபிமொழிகளை கருத்தூன்றிப் படித்தால் இதனைப் புரிந்து கொள்ளலாம்.
Read more »

ஆதம் நபி சொர்க்கத்தில் வாழ்ந்தார்களா?

அந்-நஜாத் ஆசிரியர் கூறுகிறார் ஆதம் (அலை) அவர்கள் சொர்கத்திளிருந்துதான் இவ்வுலகிற்கு வந்தார்கள் என்று குரான் (2:35, 7:20,22, 20:121)ஆகிய ஐந்து இடங்களிலும் ஆதாரப்பூர்வமான பல ஹதீதுகளிலும் தெளிவாகக் குறிப்ப்பிடப்பட்டிருக்கிறது".
இதற்க்கு விளக்கம் எழுதுவதற்கு முன் ஆசிரியர் எடுத்துக்காட்டிய ஐந்து திருக்குர்ஆன் வசனங்களை ஆராய்ந்து பார்ப்போம்.

இந்த ஐந்து வசனங்கள், ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்களையும் அவரது மனைவியையும் ஒரு தோட்டத்தில் வாழச்செய்து, அங்கு ஒரு குறிப்பிட்ட மரத்தை அணுகக் கூடாது என்றும், அதைத்தவிர அவர்கள் இருவரும் விரும்பும் இடத்தில் எல்லாம் விரும்பியவற்றைப் புசிக்கலாம் என்றும், ஆனால் ஆதம் (அலை) அவர்கள் விலக்கப்பட்ட மரத்தை அணுகியதால், இறைவன் அவர்களை நோக்கி நீங்கள் எல்லோரும் இந்த இடத்திலிருந்து வெளியேற வேண்டுமென்றும், உங்களுக்குப் பூமியில் வேறிடத்தில் தங்குவதற்கு இடமும் வசதியும் உண்டென்றும் கூறியிருப்பதை காண்கிறோம்.

இந்த வசனங்களில் குறிப்பிட்ட ஜன்னத் என்ற அரபிச் சொல்லுக்கு, மறுமையில் கிடைக்கும் சொர்க்கம் என அந்நஜாத் பொருள் கூறுகிறது. அதாவது ஆதம் (அலை) அவர்களையும் அவரது மனைவியையும் இறைவன் சொர்க்கத்தில் வாழச்செய்தான். அங்குள்ள எல்லா மரத்தின் கனிகளையும் புசிக்க அனுமதித்தான் ஆனால் ஒரு மரத்தை மட்டும் அணுகவேண்டாம் என்று இறைவன் கூறியிருந்தான் என்று விளக்கம் தருகிறது.

ஆனால் இறைவன் தனது திருமறையின் பிறிதொரு இடத்தில் ஆதம் நபி பற்றி 'நான் எனது பிரதிநிதியை பூமியில் ஏற்படுத்தப்போகிறேன்.(2:30) என்று கூறுகிறான். இதிலிருந்து ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களை இறைவன் பூமியில் தான் படைத்தான் என்று தெளிவாகிறது. அதாவது ஆதம் (அலை) அவர்கள் வாழ்ந்த இடம் பூமியிலுள்ள ஒரு தோட்டமேயன்றி, மறுமையில் கிடைக்கும் சொர்க்கமல்ல.

முபரதாத் எனும் அரபி அகராதியில் 'ஜன்னத்' என்பதற்கு கீழ்வருமாறு விளக்கம் தரப்பட்டுள்ளது.

"ஜன்னா என்ற சொல்லுக்கு ஒன்றை மூடக்கூடியது என்றும் ஜன்னா ஹுல்லைலு என்றால் இரவு அதை மூடியது என்றும், ஜன்னத் என்றால் பூமியை மறைக்கக்கூடிய அளவுக்கு அதிகமான மரங்கள் உள்ள தோட்டம் என்றும் பொருளாகும்.

அதாவது 'ஜன்னத்' என்ற சொல் மரங்கள் அடங்கிய தோட்டத்தைக் குறிக்கும். திருக்குரானில் பல்வேறு தமிழாக்கங்களில் எல்லாவற்றிலும் ஜன்னத் என்பதற்கு சோலை, தோட்டம் என்று பொருள்தான் கொடுக்கப்பட்டிருந்தன.
  • மரணத்திற்குப் பின் கிடைக்கும். சொர்க்கத்தின் அடையாளங்களைப் பற்றி இறைவன் திருமறையில் இவ்வாறு கூறியுள்ளான். சொர்கத்தில் நுழைந்தவர்கள் அதிலிருந்து ஒரு போதும் வெளியேற்றப்படமாட்டார்கள். (15:49)
ஆதம் (அலை) அவர்கள் தமது இடத்தை விட்டு வெளியேற கட்டளையிடப்பட்டார்.
  • சொர்கத்தில் உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் கேட்டதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும்.(41:32)
ஆதம் (அலை) ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனியை புசித்ததின் காரணத்தால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
  • சொர்கத்தில் நாங்கள் விரும்பிய இடத்தில் தங்கியிருப்போம் என்று சொர்க்கவாசிகள் கூறுவார்கள் என்று திருமறை கூறுகிறது. (40:75)
ஆதம் (அலை) அவர்களுக்கு அத்தகைய சுதந்திரம் அளிக்கப்படவில்லை.
சொர்கத்தில் சைத்தானுக்கு அனுமதி கிடையாது. ஆனால் ஆதம் நபி வாழ்ந்த சொர்கத்தில் சைத்தான் இருந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது. இவைகளிலிருந்து ஆதாமும் அவரது மனைவியும் சொர்கத்தில் வசிக்கவில்லை என்பதும். அவர்கள் இப்பூமியிலுள்ள ஒரு தோட்டத்திலேயே வாழ்ந்திருந்தார்கள் என்பதும் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது.
பிரவ்னையும், அவனது கூட்டத்தாரையும் நாம் ஜன்னத்திலிருந்து வெளியேற்றினோம் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இந்த திருக்குர்ஆன் வசனதிருக்கு பிரவ்னும் அவனை சார்ந்தவர்களும் சொர்கத்தில் வாழ்ந்தார்கள் என்று நாம் பொருள் கொடுக்க முடியுமா?

மேலும் அந்த இடத்திலிருந்து ஆதமையும் அவரது மனைவியையும் மட்டுமின்றி 'நீங்கள் எல்லோரும் இங்கிருந்து சென்று விடுங்கள் என்று கூறியதிலிருந்து ஆதம்(அலை) அவர்களை ஒப்புக்கொண்ட அனைவருக்குமுள்ள கட்டளைதான் இது என்றும், சொர்கத்தில் வசிப்பவர்களுக்க இடப்பட்ட கட்டளையல்ல என்றும் தெரிகிறது.

நவீன கண்டுபிடிப்புகளிலிருந்து இந்த தோட்டம் பாபிலோனியாவுக்கு அருகாமையிலுள்ள ஒரு தோட்டம் என தெரியவந்துள்ளது.
Read more »

இறைவனின் வல்லமையை நம்பாதவர்களா அஹ்மதிகள்?

ஈசா நபி மரணித்துவிட்டார்கள் என்று திருக்குர்ஆன், நபிமொழி அடிப்படையில் ஆதாரங்களைக் காட்டி நிரூபித்துவரும் அஹ்மதி முஸ்லிம்களின் வாதத்தை மறுக்க முடியாத சில மௌலவிகள் தற்போது குரான், நபிமொழியை ஒருபுறம் வைத்துவிட்டு ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களை உடலுடன், உயிருடன் வானத்திற்கு உயர்த்துவதற்கு இறைவனுக்கு வல்லமை இருக்கிறது: அஹ்மதிகள் இறைவனின் வல்லமையை மறுக்கின்றனர்: அவர்களுடன் பேசாதீர்கள் என்று கூற ஆரம்பித்துள்ளனர். அது மட்டுமல்ல ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக மரணிக்காமல் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறி வந்தவர்கள் இப்போது அவர் சூன்யமாகி விட்டார் என்று கூறத்தொடக்கி விட்டனர்.

திருச்சியிலிருந்து வெளிவரும் நஜாத் என்ற இதழ் இவ்வாறு கூறுகிறது.

எதனையும் உருவாக்க, உண்டாக்க "குன்" ஆகுக! என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு மட்டுமுள்ள தனி விதி அல்லாஹ்வின் தனிப்பெரும் வல்லமையை குறிக்கும் விதி.
இது நமது பகுத்தறிவு, அறிவியல் ஞானங்களுக்கு அப்பாற்பட்டது. இவ்விதி முடிந்து விட்டதல்ல. முடிவுற்றது. பிறந்து, வளர்ந்து, மறித்து, மண்ணாகி விட்டவனையோ, அல்லாஹ் தனது தனிப்பெரும் வல்லமையைக் கொண்டு இவ்விதிப்படி "குன்" = ஆகுக! என உயிப்பிக்க முடியும் என்பதை அனைவரும் அறிவோம். அதேப்போல் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து அல்லாஹ்வின் தனிப்பெரும் சக்தியால் உயர்த்தப்பட்டு விட்ட அல்லது சூன்யமாகிவிட்ட ஈசா (அலை) அவர்களையும் இத்தனிப் பெரும் வல்லமையைக் கொண்டு-இவ்விதிப்படி - "குன்"- ஆகுக! என உருவாக்க முடியும் என்பதை காதியானிகள் கவனிக்கக் கோருகிறோம். என்று எழுதியுள்ளது.

ஹஸ்ரத ஈசா (அலை) அவர்கள் சூன்யமாகி விட்டார் என்று எழுதும் அந்-நஜாத் திருக்குர்ஆன், நபிமொழி அடிப்படையில் ஆதாரங்களைக் காட்டி அதனை நிரூபிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் குரான், ஹதீஸ் ஆதாரங்கள் இருக்கிறதா? என்று கேட்கும் இவர்கள். இதற்க்கு ஏன் குரான் ஹதீஸ் ஆதாரம் காட்டவில்லை. "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்." என்று சொல்வார்கள். இவர்கள் நிலையம் இப்படித்தான் இருக்கிறது. திருக்குர்ஆன், நபிமொழி அடிப்படையில் ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் இன்றும் மரணிக்காமல் உடலுடன் வாழ்கிறார்கல் என்பதை நிரூபிக்க முடியாதவர்கள் இப்போது அவர் சூன்யமாகி விட்டார் என்று புதுக்கதையை அவிழ்த்து விட ஆரம்பித்திருக்கிறார்கள். ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களின் மரணம் குறித்து நாம் வைக்கும் அடுக்கடுக்கான வலுவான ஆதாரங்களை மறுக்க முடியாததனால் தான் இந்தப் புதுக் கதையைக் கூறத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் இன்றைய இளைஞர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். திருக்குர்ஆன், நபிமொழிப்படி ஹஸ்ரத் ஈசா (அலை) மரணித்து விட்டார்கள் என்பதற்கு நாம் காட்டுகின்ற ஆதாரங்களைச் சிந்திக்க தொடக்கி விட்டனர். இஸ்ரவேல் சமுதாயத்தினருக்கு மட்டும் வந்த அதே ஈசா மீண்டும் வருவதாகக் கூறுவது திருக்குர்ஆன் நபிமொழி கூற்றுக்கு மாற்றமானதும் அறிவுக்கு அப்பாற்பட்டதும் பகுத்தறிவுக்குப் பொருந்தாததுமாகும். என்று கூற ஆரம்பித்துவிட்டனர். சிந்திக்க இளைஞர்கள் மத்தியில் இவர்களின் சூன்யக் கதை எடுபடாது.
'காதியானிகள் கவனிக்கக் கோருகிறோம்.' என்று எழுதும் அந்-நஜாத், தனது அடுத்த ஈசா நபி சூன்யமாகிவிட்டார் என்ற கூற்றுக்கு சரியான ஆதாரம் காட்ட வேண்டும். இல்லையெனில் மூடநம்பிக்கைகல் உங்களின் மூலையில் குடிகொண்டிருக்கின்றன என்றே உங்கள் வாசகர்கள் முடிவு செய்வார்கள்.

இறைவன் வல்லமைமிக்கவன், தான் நாடியதை செய்யக்கூடியவன், படிக்கக் கூடியவன், ஆற்றல் மிக்கவன் என்பதை நாங்கள் மறுக்கவில்லை ஆனால் இறைவன் தனது செயல் முறைக்கு (சுன்னத்துல்லாஹ்வுக்கு) மாற்றமாக எதனையும் செய்யமாட்டான். இதனையே திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:

"அல்லாஹ்வின் செயல் முறையில் எந்த மாற்றத்தையும் உம்மால் ஒருபோதும் காண முடியாது. (33:63;48:24)

"அல்லாஹ்வின் செயல் முறையில் எந்த வேற்றுமையையும் நீர் ஒருபோதும் காணமாட்டீர்" (35:44)

"நம் நடைமுறையில் எந்த வேறுபாட்டையும் நீர் காணமாட்டீர்." (17:78)

மேற் கூறப்பட்ட வசனங்களிலிருந்து அல்லாஹ்வின் செயல் முறையில் ஒரு போதும் மாற்றமில்லை என்று தெரிகிறது. அல்லாஹ்வின் செயல் முறைகளுள் ஒன்றைத் திருக்குர்ஆன் கீழ்க்காணுமாறு கூறுகிறது.

"இதே பூமியில் நீங்கள் வாழ்வீர்கள். இதிலேயே நீங்கள் மரணிப்பீர்கள், இதிலிருந்தே நீங்கள் எழுப்பப்படுவீர்கள்." (7:26,20:56,71:18,19)

இந்த வசனத்தில் எம்மனிதனும் இந்த பூமியை விட்டு வெளியே சென்று வாழமுடியாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் வானத்திற்குச் சென்று அங்கே வாழ்ந்து வருகிறார்கள் என்ற தவறான கருத்தை ஏற்ப்பதாயின் ஒன்று இவ்வசனம் தவறு என்று கூற வேண்டும். அல்லது ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் மனிதர் அல்ல என்று கூறவேண்டும். ஏனெனில் மனிதரைக் குறித்துதான் இங்கேயே வாழ்ந்து, இங்கேயே மரணித்து, இங்கிருந்தே எழுப்பப்படுவர் என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இது அல்லாஹ்வின் செயல் முறை இதற்க்கு ஹஸ்ரத் ஈசா (அலை) உட்பட எவரும் விதிவிலக்கல்ல.

அன்றைய மக்கத்து நிராகரிப்பாளர்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் பின்வருமாறு கூறியதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது:

"நீர் வானத்திற்கு ஏறிச் செல்ல வேண்டும், நாங்கள் படிக்கத்தக்க ஒரு நூலை எங்களுக்கு கொண்டு வராதவரை நீர் வானத்திற்கு சென்றதை நாங்கள் நம்பமாட்டோம்." என்றனர்.
நீர் கூறுவீராக: "ஏன் இறைவன் தூயவன். நான் ஒரு மனித தூதரேயன்றி வேறில்லை."

மேற்கூறப்பட்ட வசனம் உணர்த்துவது என்னவென்றால் ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பார்த்து, நீர் இறைவனால் அனுப்பப்பட்ட உண்மையான தூதர் என்றால் நீர் உடலுடன் வானத்திற்குப் போய் நாங்கள் படிக்கத்தக்க ஒரு நூலை கொண்டுவந்தால்தான் நாங்கள் உம்மை நம்புவோம் கூறியபோது, அவ்வாறு உடலுடன் வானத்திற்குப் போய் ஒரு நூலை கொண்டுவராமல், அந்த நிராகரிப்பாளர்களின் கேள்விக்கு விடையாக, "நான் ஒரு மனிதனாகிய தூதரே அன்றி வேறு இல்லை" என்ற பதிலைச் சொல்லுமாறு இறைவனே ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு கட்டளையிட்டான் இறைவனால் ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை வானத்திற்கு உயர்த்துவதற்கு வல்லமையுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவன் தனது செயல் முறைக்கு மாற்றமாக எதனையும் செய்ய மாட்டான். எவரையும் உடலுடன் வானத்திற்கு கொண்டு போவது இறைவனது செயல் முறையில் உள்ளதல்ல எனபதைப் புரிய வைப்பதற்காகவே அவன் " நான் மனிதனாகிய தூதரேயன்றி வேறு அல்லன்" என்று கூறுமாறு கட்டளையிட்டான். எவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரு மனிதராகிய தூதராதலால் வானத்திற்கு உடலுடன் செல்ல முடியவில்லையோ, அவ்வாறே ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களும் ஒரு மனிதராகிய தூதராதலால் அவராலும் நிச்சயமாக வானத்திர்க்குச் செல்ல முடியாது. இது இறைவனுடைய வல்லமையைப் பொறுத்த விஷயமல்ல. மாறாக அவனுடைய செயல் முறையைப் பொறுத்த விஷயம். அவனது செயல் முறைக்கு மாற்றமாக வானத்திற்கு உடலுடன் உயர்த்துவது அவனது பரிசுத்த தன்மைக்கு மாற்றமானது என்பதாலேயே இவ்வசனத்தில் "சுப்ஹான ரப்பி - இறைவன் தூய்மையானவன்" என்று கூறுமாறு கூறினான்.

எனவே இறைவனுடைய செயல் முறைக்கு மாற்றமாக ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் உடலோடு உயர்த்தப்பட்டார்கள் அல்லது சூன்யமாகி விட்டார்கள் என்று கூறும் நஜாத், மற்றும் தௌஹீது வாதிகள் என்றுக் கூறிக்கொள்பவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
Read more »

'லா நபிய்ய பஃதீ' - ஓர் ஆய்வு

நான் சொன்னதாக ஓர் அறிவிப்பு (உங்களுக்கு)க் கிடைத்தால் அதைக்குரானுடன் ஒத்துப் பாருங்கள். குரானுக்கு இணக்கமாக அது இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில் (நான் சொன்னதாக இருக்காது என்று) அதைத் தள்ளி விடுங்கள்' (1.பைஹகீ, 2.தாருல் குத்னீ) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நினைவில் வைத்துக் கொண்டு, 'லா நபிய்ய பஃதீ' என்ற ஹதீஸைக் குர் ஆனுடன் ஒத்துப் பார்க்க வேண்டும்.

அல்லாஹ் திருக்குரானில் பல வசனங்களில் நபிமார்கள் வரலாம் என்று கூறியிருக்கும் போது, அதற்க்கு மாற்றமாக இந்த ஹதீசுக்கு பொருள் கொடுப்பது தவறு.

'லா' என்ற சொல் இடம்பெற்றுள்ள ஹதீஸ்களில் அந்தச் சொல் எந்தப் பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

  1. 'லா ஹிஜ்ரத பஃதல் ஃபத்ஹி - வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் இல்லை
  2. 'லா தீன லிமன் லா அமானத லஹூ'. - அமானத் இல்லாதவர்க்கு மார்க்கமில்லை
  3. 'லா ஸைஃப இல்லா துல்ஃபிகார்' - துல்ஃபிகார் தவிர வேறு வாளில்லை
  4. 'லா பஃத இல்லா அலீ - அலி இன்றி வேறு இளைஞர் இல்லை.

'அலி இன்றி வேறு இளைஞர் இல்லை' என்பதன் பொருள் அலியைப் போல் இளமையில் எல்லாக் குணங்களும் பொருந்திய வேறு இளைஞரில்லை என்பதே அன்றி, உலகில் அவரையன்றி எந்த ஒரு இளைஞரும் இல்லை என்பது அதன் பொருளன்று.

அதுபோல 'துல்ஃபிகாரைத் தவிர வேறு வாளில்லை' என்பதன் பொருள் அது போன்ற ஒரு வாளில்லை என்பதல்லாது, வேறு வாளே இல்லை என்பதன்று.

அது போல 'அமானத் இல்லாதவனுக்கு மார்க்கமில்லை' என்பதன் பொருள் அவன் எந்த ஒரு மார்க்கத்தையும் சேர்ந்தவனல்ல என்பதன்று. மாறாக, அவன் மார்க்கத்தை முழுமையாகப் பேணவில்லை என்பதே அதன் பொருள்.

அது போல் 'வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் இல்லை' என்பதன் பொருள் மக்கா வெற்றிக்குப் முன் நிகழ்ந்ததுபோல மகத்துவமிக்க சிறப்பான ஹிஜ்ரத் இனி ஏற்ப்படாது. அல்லது இனி மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்ய வேண்டிய நிலை ஏற்ப்படாது என்பதே தவிர, இனி ஒருபோதும் எத்தகைய ஹிஜ்ரத்தும் இல்லை என்பதன்று.

இவற்றிலிருந்து மேற்ப்படி ஹதீஸ்களில் வந்துள்ள 'லா' என்ற சொல், ஒன்றன் தனிப்பட்ட குணத்தை மட்டும் 'அது கிடையாது' எனக் குறிப்பதற்கு பயன்பட்டுள்ளதே தவிர, முழுமையாக அறவே கிடையாது என்று கூறுவதற்கு அல்ல என்பது புலப்படுகின்றது. இது போல் தான், 'லா' என்ற சொல் மேற்குறிப்பிட்ட 'லா நபிய்ய பஃதீ' என்ற ஹதீஸிலும் பயன் படுத்தப்பட்டுள்ளது.

இதைப் போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈரான். ரோமானியப் பேரரசர்களைக் குறித்து கீழ் வருமாறு கூறியதாக ஒரு ஹதீஸ் காணப்படுகிறது.

'இதா ஹலக கிஸ்ரா ஃபலா கிஸ்ரா பஃதஹு, வ இத ஹலக கைஸரு ஃபலா கைஸர பஃதஹு' - கிஸ்ரா இறந்தால் அவருக்குப் பிறகு கிஸ்ரா இல்லை கைஸர் இறந்தால் அவருக்குப் பிறகு கைஸர் இல்லை (புகாரி)

இதன் பொருள் அன்றுள்ள கிஸ்ரா, கைஸர் பேரரசர்களைப் போன்ற பலசாலிகள், திறமைசாலிகள் இனி தோன்ற மாட்டார்கள் என்பதன்றி வேறில்லை.

ஸஹீஹ் புகாரியின் விளக்கவுரையாகிய 'ஃபத்ஹுல் பாரி' யில் அல்லாமா அஸ்கலானி அவர்கள் மேற்படி ஹதீஸைப் பற்றி கீழ் வருமாறு கூறியுள்ளார்கள்.

'அவருக்குப் பிறகு கைஸரில்லை' என்று கூறியதன் பொருள், அவரைப் போல் ஆட்சி செய்யக் கூடிய கைஸர் தோன்ற மாட்டார் என்பதாக கத்தாபி கூறியுள்ளார்கள்.' மேலும் அந்த நூலில் கூறப்பட்டுள்ளதாவது:

'அவர்கள் இவருக்குப் பிறகு வேறு கிஸ்ராவும் கைசரும் வந்தார்களல்லவா என்று நீங்கள் கேட்பீர்களானால், பின் வந்தவர்கள் முன் வந்தவர்களைப் போன்று செல்வாக்கு உடையவர்களில்லை என்று நான் கூறுகிறான்.'

இவற்றைப் போன்று 'லா நபிய்ய பஃதீ' எனக்குப் பிறகு நபியில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதன் பொருள், அவர்களைப் போன்ற சிறப்பு மிக்க ஷரியத்துடைய நபி தோன்ற மாட்டார்கள் என்பதே அன்றி வேறில்லை.

இனி பஃதீ என்ற சொல் எந்தெந்த இடத்தில் எவ்விதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று நாம் பார்ப்போம். பஃதி என்ற சொல் பல பொருள்களில் அரபு மொழியில் கையாளப்படுகிறது. அச்சொல் 'பிறகு' என்ற பொருளில் மட்டுமின்றி 'உடன்', 'பகரமாக', 'எதிராக', 'போன்ற', என்ற பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

'அக்ரபுல் மவாரிது', 'தாஜுல் உரூஸ்' என்ற அகராதிகளில் கீழ்வருமாறு பொருள் கூறப்பட்டுள்ளது:

'பஃது' enpathu 'கப்லு' என்பதன் எதிச்சொல்லாகும். சில சமயங்களில் அது 'மஅ' (உடன்) என்ற அர்த்தத்திலும் வரும்.

'மீஸானுல் அரப்' என்ற அகராதி நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

'பஃத' என்ற சொல் 'உடன்' என்ற அர்த்தத்திலும் வரும். உதாரணமாக 'ஃமனிஃததா பஃததாலிக' என்பதில் வந்துள்ள 'பஃது'க்கு 'உடன்' என்றே பொருள்,

'மிஸ்பாஹ்' என்ற அகராதியில் 'உதுல்லின் பஃத தாலிகஸனீம்' என்பதில் வந்துள்ள 'பஃத என்ற சொல்லிற்கு 'உடன்' என்றே பொருள்.

Read more »

ஈசா(அலை) அவர்களின் மரணமும் அந்-நஜாத் ஏட்டின் மூடநம்பிக்கையும்.

திருக்குர்ஆன் ஹதீஸ் ஆதாரமின்றி மார்க்க விஷயத்தில் மனித அபிப்ராயம் எதையும் நம்ப மாட்டோம் என கொட்டி முழக்கி வருபவர்கள் நஜாத் குழுவினர்.

ஆனால் ஈசா நபி உயிருடன் இன்று வரை வாழ்ந்த கொண்டிருக்கிறார்கள் என்று ஏனைய மூட முல்லாக்கள் நம்புவது போன்றே இவர்களும் நம்புகின்றனர். இந்த நம்பிக்கைக்கு திருக்குரானிலும் ஆதாரமில்லை. ஹதீஸிலும் ஆதாரமில்லை. இது முழுக்க முழுக்க மனித அபிப்ராயமே!

திருக்குர்ஆன், ஹதீஸ் ஆதாரமின்றி மார்க்க விஷயத்தில் எதையும் ஏற்றதில்லை, ஏற்க்கவும் மாட்டோம் என நஜாத் குழுவினர் கூறுவது உண்மை என்றால்.

  1. ஈசா நபி ஈராயிரம் ஆண்டுகளாக உயிருடன் உள்ளார்கள் என்பதற்கு திருக்குரானிலிருந்தும், நம்பகமான ஹதீஸில் இருந்தும் ஆதாரம் தர வேண்டும்.
  2. ஈசா நபி உடலோடு உயர்த்தப்பட்டார்கள் என்பதற்கு திருக்குரானில் இருந்தும், ஹதீஸில் இருந்தும் தெளிவான சான்று தர வேண்டும்.
  3. ஈசா நபி வானத்திலிருந்து மீண்டும் வருவார்கள் என்பதற்கு திருகுரானில் இருந்தும், ஹதீஸில் இருந்தும் ஆதாரம் தர வேண்டும்.

இப்படி பல முறை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் இவர்களைக் கேட்டு விட்டது. இவர்களின் இந்த நம்பிக்கைக்கு இவர்கள் ஆதாரம் காட்டவேயில்லை.

இதிலிருந்து, இவர்களும் மார்க்க விஷயத்தில் முன்னோர்களின் தவறான கருத்துகளைக் கண்மூடித்தனமாக ஏற்பவர்கள் மேலும் மூடநம்பிக்கைகளைக் கைக்கொள்பவர்கள் என்ற முடிவிற்கே நாம் வர வேண்டியுள்ளது.

இவர்களின் இந்த பலகீனத்தை மறைப்பதர்க்ககவும் அது அம்பலமாகிவிடாமல் தடுப்பதற்காகவும் அவ்வப்போது நஜாத் இதழில் அஹ்மதியா ஜமாத்தை சாடுவது உண்டு.

1991 ஏப்ரல், மே அந்-நஜாத் இதழில், 'விமர்சனங்கள் விளக்கங்கள்' பகுதியில் "ஈசா (அலை) அவர்கள் மரணிக்கவில்லை, ஆயினும் ஆயினும் அவர்களும் மரணிப்பவர்களே என்பதற்கு குரான், ஹதீஸ் அடிப்படையில் தெளிவு படுத்தி இருந்தோம்" என நஜாத் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இது அப்பட்டமான பொய்யாகும் .

ஈசா(அலை) அவர்கள் இறக்கவில்லை என்ற மூட நம்பிக்கைக்கு ஏனைய ஆலிம்கள் காட்டும் அந்த ஒரே திருக்குர்ஆன் வசனத்தைதான் ஐவரும் காட்டி இருந்தார். ஆனா, அந்த வசனம் இவர்களின் கூற்றுக்கு எந்த வகையில் ஆதாரமாகும் என்பதை இவர் தெளிவு படுத்தவே இல்லை.

திருக்குரானில் 4:159 ஆம் வசனத்தில் "பல் ரபா அவுல்லாஹு இலைஹி" என்றிப்பதை எடுத்துக் காட்டி, அது ஈசா நபி உயிருடன் இருப்பதற்கு ஆதாரமாகும் என்று இவர்கள் கூறுகின்றனர்.

இந்த இறை வசனத்தில், ஈசா நபி அவர்களை இறைவன் உயிருடனும், உடலுடனும் உயர்த்திக் கொண்டான் என்று எங்கே கூறப்பட்டிருக்கிறது? உண்மையில் இந்த இறை வசனத்திற்குரிய சரியான பொருள், அல்லாஹ், அவருக்கு தன்னிடம் உயர்வைக் கொடுத்தான், என்பதேயாகும்.

மேலும், அல்லாஹ் ஈசா நபியைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று அந்த வசனத்திற்கு பொருள் கொண்டாலும் அவ்வாறு அவர்கள் உயர்த்தப்படுவதற்கு முன் அவர்களின் மரணம் நிகழ்ந்து விட்டது என்பதைத் திருக்குர்ஆன் 3:56- ஆம் வசனம் உறுதிப் படுத்துகிறது. இதில், ஈசா நபி அவர்களை மரணிக்கச் செய்து தன்னளவில் உயர்த்துவதாகவே இறைவன் ஈசா நபியிடம் கூறி இருந்ததாகக் காணப்படுகிறது.

மேலும், இந்த இரு வசனங்களிலும் கூறப்பட்டுள்ள "உயர்த்துதல்" என்பது உயிருடனும், உடலுடனும் ஒருவரை உயர்த்துவதாகாது. மாறாக, அது ஆன்மீக உயர்வையே குறிக்கும்.

நற்செயல்கள் மனிதனை உயர்த்தும் எனத் திருக்குர்ஆன் 35:11 இல் காணப்படுகிறது.

"இறைவனின் கட்டளையால் சில வீடுகள் உயர்த்தப்படும் எனத் திருக்குர்ஆன் 24:37 இல் காணப்படுகிறது.

"இறைவனுக்காக உண்மையிலேயே தழ்மைக் குணத்தைக் கைக் கொள்பவரை அல்லாஹ் ஏழாம் வானத்திற்கு உயர்த்துகிறான்" என ஒரு ஹதீஸ் உள்ளது. (கன்சுல் உம்மால், பாகம் 2, பக்கம் 25)

நாம் ஒவ்வொரு தொழுகையிலும் இரண்டு சஜ்தாவிற்கு இடையில் கூறும் வர்பஹ்ணீ (என்னை உயர்த்துவாயாக) என்ற துவா ஆன்மீக உயர்வையே குறிக்கும்.

இறைவன் திருக்குரானில் இத்ரீஸ் நபியைப்பற்றி கூறும்போது "வரபஹ்னாஹு மக்கானன் அளிய்யா" "நாம் இத்ரீஸ் நபியை மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தினோம்"

ஈசா நபிக்கு பயன்படுத்திய வினை சொல்லான 'ரபா ஆ' என்ற சொல்தான் இத்ரீஸ் நபிக்கும் அல்லாஹ் திருக்குரானில் பயன்படுத்தியுள்ளான். இந்த முல்லாக்கள் எந்த சொல்லின் அடிப்படையில் ஈசா நபி வானத்தில் உயிருடன் இருக்கிறார்கள் என்று நம்புகிறார்களோ அதே சொல்லின் அடிப்படையில் இத்ரீஸ் நபியும் வானத்தில் உயிருடன் இருக்கிறார்கள் என்று நம்ப வேண்டும். இந்த மூட முல்லாக்கள் நம்புவார்களா?

இவற்றிலிருந்து உயர்த்துதல் என்பது மார்க்க மரபுப்படி ஆன்மீக உயர்வையே குறிக்கும் எனத் தெளிவாக புலனாகிறது.

ஆனால் இந்த முல்லாக்கள் உண்மையை மறைத்து மக்களை குழப்புவதையே தனது தொழிலாக கொண்டுள்ளனர். அஹ்மதிகளை நயவஞ்சகர்கள் என்றும், வழிகேடர்கள் என்றும் குறிப்பிடுவதை தனது வாடிக்கையாகக் கொண்டிருந்ததுமல்லாமல் அவர் குறிப்பிட்டுள்ள அந்-நஜாத் நவம்பர் இதழில் எழுதுகிறார்:-

"உலகத்தில் நபி(ஸல்) அவர்கள் முதல் வேறு எந்த நபிக்கும், வேறு எந்த மனிதனுக்கும் கொடுக்கப்படாத தனிச் சிறப்புகளை ஈசா நபி (அலை) அவர்கள் பெற்றுள்ளார்கள் என்று குர் ஆனே சான்று பகர்கின்றது"

என்று எழுதி இருந்தார். அதாவது அகில உலகினுக்கும் ஓர் அருட்கொடையாக மனிதருள் மாணிக்கமாகவும், நபிமார்களுள் தலை சிறந்தவர்களாகவும் விளங்கிய அண்ணல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை விட ஈசா (அலை) உயர்ந்தவர் என்று இவர் குறிப்பிட்டிருந்தார். இவர் கிறிஸ்தவர்களின் கைக்கூலியோ என்று ஐயப்படும் அளவுக்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைத் தாழ்த்தியும் ஈசா (அலை) அவர்களை உயர்த்தியும் எழுதி இருந்த இவரை சாடாமல் போற்றி புகழவா முடியும்?

இஸ்லாத்தின் அடிப்படைக்கே குழிபறிக்கும் இத்தகைய அக்கிரமக்காரர்களை தங்களின் தலைவராக ஏற்று நடக்கும் இஸ்லாமியர்கள் சிந்திக்கவேண்டும்.

Read more »

Sep 17, 2011

அந்-நஜாத்தும் புரோகிதமே !



மவ்லவி O.M. முஸ்ஸம்மில் அஹ்மத் H.A

ஹஸ்ரத் ஈஸா (அலை) 2000 ஆண்டுகளாக பௌதீக உடலுடன் வானத்தில் உயிருடன் இருக்கிறார்கள். அதே ஈஸா நபியே மீண்டும் இந்த உலகிற்கு இறங்கிவருவார் என்ற புரோகிதக் கொள்கையை திருக்குர்ஆன்,ஹதீஸ்களிலிருந்து நிரூபிக்க முடியுமா? என்று மௌலவிP.M. முஹம்மது அலி H.A அவர்கள் கேட்டிருந்த கேள்விக்கு அந்நஜாத் மே2011 இதழில் கொடுத்த பதிலை திருக்குர்ஆன் ஹதீஸ்களின் ஒளியில் அலசி ஆராய்வது இக் கட்டுரையின் நோக்கம்.

வழிகேடு என திருக்குர்ஆன் வர்ணித்துக் கூறும் இறுதி நபிக் கொள்கையை (40:35) ஆமோதித்து அந்நஜாத் எடுத்துவைக்கும் சான்று இதுதான்:

திருக்குர்ஆன் 2:4 - வது இறைவாக்கு உமக்கு அருளப்பட்ட அல்குர்ஆன் மீதும், முந்தைய நபிமார்களுக்கு அருளப்பட்டவை மீதும் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்று அறிவிக்கிறதே அல்லாமல் உமக்கு பின்னர் அருளப்படுபவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள் என்று அறிவிக்கவில்லை.....

முத்திரை நபிக்குப் பிறகு ஒரு நபி வந்து, அந்த நபியை ஏற்று அவரது அறிவுரைகளின்படி நடப்பது மார்க்கமாக இருந்தால், முந்தைய நபிமார்களுக்கு அருளப்படுபவையையும் நம்பி ஏற்று நடக்க வேண்டும் என்று கட்டளையிடாமல் விட்டிருப்பானா? (அந்நஜாத் மே 2011 பக்கம்25)

இந்த வசனத்தின் படி இனி இறைவன் புறமிருந்து எவரும் வர முடியாது என்றால் ஈஸா நபியின் வருகையும் அடிபட்டுபோகின்றது. முத்திரை நபிக்கு பிறகு ஈஸா நபி வந்து அவரது அறிவுரையின் படி நடப்பது மார்க்கம் என்ற நம்பிக்கையும் உங்கள் கோணத்தில் அபத்தமானதாகிவிடுகின்றது. நஜாத்தில் அபத்தமாகிவிடுகின்றது. நஜாத்தின் கொள்கைப்படி ஈஸா நபி மீண்டும் வருவதாக இருந்தால் அவரை ஏற்று நடக்கவேண்டும் என்றால் அதைப் பற்றியும் இங்கு சொல்லாமல் விட்டிருப்பானா? என்பதையும் சிந்திக்கவேண்டும். ஈஸா நபி2000 ஆண்டுகளாக உயிருடன் இருக்கின்றார் என்ற ஷிர்க்கான கிறிஸ்தவக் கொள்கையை நஜாத் பிரிவினர் சிறிது நேரம் வெளியே எடுத்து வைத்து நடுநிலைமையோடு உள்வாங்கி சிந்தித்தால் அவர்களாலும் இந்த உண்மையை விளங்கிக் கொள்ள முடியும்.

இரண்டாவது நஜாத் பத்திரிக்கை திரித்துக் வளைத்து கூற முற்பட்டிருப்பது போன்று, 2:5 வசனத்தில் நபியின் வருகையைப்பற்றி அல்லாஹ் இங்கு கூறியிருந்தால் பின்னர் ஒரு நபி வருவதைப் பற்றியும் கூறியிருப்பான். ஆனால் அல்லாஹ் அந்த வசனத்தில், அவர்கள் உமக்கு அருளப்பட்டதன் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டதன் மீதும் நம்பிக்கை கொள்வார்கள் எனக் கூறுகின்றன் . ஆக அல்லாஹ் இங்கு முந்தைய நபிமார்களுக்கு இறக்கப்பட்ட வேதத்தையும் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதத்தையும் பற்றிக் கூறுகின்றானே தவிர நஜாத் கூறுவதுபோல் நபியின் வருகையைப் பற்றி அல்ல என்பதை நஜாத்தை இடைத்தரகராகவோ, புரோகிதராகவோ நம்பாமல் சுயமாக சிந்திப்பவர்கள் புரிந்து கொள்ளமுடியும்.

ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்தவொரு புதிய வேதமோ ஷரியத்தோ வரப்போவதில்லை என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லாதபோது, இனி ஒரு வேதம் இறக்கப்படுவதைப் பற்றி இங்கு குறிப்பிடவில்லையே எனக்கூறுவது நஜாத்தின் அறிவீனத்தையே காட்டுகிறது.

அவ்வாறே, இன்று நான் உங்களுக்குகாக உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கியுள்ளேன் (5:4), நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (உண்மையான) மார்க்கம் இஸ்லாமாகும். இஸ்லாம் அல்லாத வேறு (ஏதாவது) மார்க்கத்தை (மேற்கொள்ள) விரும்புபவரிடமிருந்து (அது) ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது (3:86) ஆகிய வசனங்களை நஜாத் எடுத்தெழுதி இதன் மூலம் இனி எந்த நபியும் வர முடியாது என்ற சுயகருத்தை நிலைநாட்ட முற்பட்டிருக்கிறது. இந்த வசனங்களிலும் மார்க்கம் முழுமை அடைந்துவிட்டது. அது இஸ்லாம் தான் என்பதும்,எனவே இஸ்லாம் அல்லாத ஒரு புது மார்க்காத்தையோ, ஒரு புது ஷரியத்தையோ இனி எவரும் கொண்டு வர முடியாது என்பதுதான் நிரூபிக்கப்பட்டுள்ளதே

அல்லாமல் இறுதி நபிக் கொள்கை அல்ல என்பதையும் ஒருவரால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். இறுதி நபிக்கொள்கையின் மோகத்தினால் இனி எவரும் இறைவனிடமிருந்து வரவேண்டிய தேவை இல்லை என்று இதற்குப் பொருள் கொடுத்தால் ஈஸா நபியின் வருகையும் தேவையற்றது என்பதை நஜாத்தை இடைத்தரகராகக் கொள்ளாதவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

மிர்ஸா குலாம் அஹ்மது தன்னை ஒரு போதும் நபி என வாதிடவில்லை,அவரது இறப்பின் பொது சிறுவராக இருந்த மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மதே அவர் கலீபாவாக ஆனா பின்னர் தன் தந்தை தன்னை நபி என சொன்னார் என லாஹூர் பிரிவை ஏற்படுத்திய முஹம்மது அலி M.A. LLBகூறியுள்ளார் என நஜாத் குறிப்பிட்டுள்ளது. (நஜாத் மே 2011 பக்கம் 26)

முஹம்மது அலி அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தை விட்டுப் பிரிந்து, லாகூர் பிரிவை ஏற்படுத்தினார் என்பதை உணர்ந்த அபூ அப்தில்லாஹ் அவரது கூற்றை சான்றாக எடுத்து வைத்திருப்பது எவ்வளவு பெதமைத்தனமானது! ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு கிலாபத் பதவி அலி (ரலி) அவர்களுக்குதான் கிடைக்க வேண்டும் என்ற ஷியாவின் கொள்கையை சான்றாக வைத்து ஹஸ்ரத் அபூபக்கர், உமர், உஸ்மான்(ரலியல்லாஹு அன்ஹும்) அவர்களின் கிலாபத்தை மறுக்கத் துணியும் மூடர்களைப் போன்ற செயலைத்தான் அபூ அப்தில்லாஹ் கையாண்டுள்ளார். புரோகிதர்களைப் புறக்கணிக்காதவரை முஸ்லிம்களுக்கு எழுச்சி இல்லை: நஜாத் இல்லை என வாய் கிழிய பேசும் அபூஅப்தில்லாஹ் புரோகிதப் பண்பை ஏன் கையாண்டார் என்பது எமக்குப் புரியவில்லை. ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் நபி என வாதிக்கவில்லை என்பது அபூஅப்தில்லாஹ்வின் வாதம் என்றால் அதனை அவர் அன்னாரின் நூலிலிருந்து எடுத்து வைத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் மாற்றுக் கருத்துக் கொண்ட ஒருவரின் கூற்றை எடுத்து வைத்திருப்பது நஜாத் ஆசிரியரின் கையாலாகாதத்தனத்தையே காட்டுகின்றது. ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

"தற்போது முஹம்மதிய்ய நுபுவத்தைத் தவிர எல்லா நுபுவ்வத்துகளும் அடைக்கப்பட்டு விட்டது. ஷரீஅத்துடைய நபி எவரும் வரமாட்டார். ஷரீஅத் இல்லாமல் நபி தோன்றலாம். ஆயினும் எவர் முதலில் உம்மத்தீ ஆக இருக்கின்றாரோ அவர்தான் ஆக முடியும். எனவே இந்த வகையில் உம்மத்தீயுமாவேன், நபியுமாவேன்." (ரூஹானீ கஸாயின் தொகுதி20பக்கம் 412)

ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நுபுவ்வத் எனும் அந்தஸ்தைப் பெற முடியும். அதற்க்கு அவர் முதலில் உம்மத்தீயாக இருக்க வேண்டும் என்ற கருத்தை ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) தெளிவாக தமது நூல்களில் இடங்களில் குறிப்பிட்டிருக்கும்போது நஜாத் பிரிவினர் அதை மறைத்துவிட்டு லாஹுர் பிரிவினரின் கூற்றை சான்றாக வைத்திருப்பது அறிவீனமாகும்!

அடுத்து, திருக்குர்ஆன் எளிதாக்கப்பட்டுள்ளது. அதில் கோணல்களோ,முரண்பாடுகளோ, புரிய முடியாதவைகளோ, நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு மனிதர்களில் யாரும் மேல் விளக்கம் கொடுக்கும் நிலையோ இல்லை என நஜாத் ஆசிரியர் எழுதியுள்ளார். அப்படியானால் அவர் ஈஸாவின் வருகை எதற்கு? உங்கள் விளக்கத்தின்படி ஈஸாவின் வருகை மனிதர்களில் மேல் விளக்கம் கொடுக்கும் நிலையில் அவர் இருக்கிறார் என்றாகிவிட்டதா?

திருக்குரானில் முரண்பாடுகளோ, புரியமுடியாதவைகளோ நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு மனிதர்களில் யாரும் மேல் விளக்கம் கொடுக்கும் நிலையோ இல்லை என்றால் திருக்குர்ஆனையே அறியாத ஈஸா நபி என்ன மேல் விளக்கம் கொடுப்பதற்காக வர இருக்கிறார்? அல்லது ஈஸாவை மனிதர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு படைப்பாக நஜாத் கூறப்போகிறதா? என்பதை வாசகர்கள் சிந்திக்கவேண்டும்.

அடுத்து 3:55 - ல் உம்மைக் கைப்பற்றுவேன் என்று அல்லா கூறுவதை மரணிக்க செய்து என காதியானிகள் திரித்துச் சொல்கிறார்கள் என நஜாத் சாடியுள்ளது. அந்த வசனத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

"ஈஸாவே! நிச்சயமாக உம்மை மரணிக்கச் செய்வேன். மேலும் உம்மை என்னளவில் உயர்த்துவேன்." (3:56)

இங்கு வந்துள்ள முத்தவப்பீக (உமக்கு வபாத்தை கொடுப்பேன்) என்ற சொல்லுக்கு எல்லா புரோகிதர்களையும் போன்று உம்மைக் கைப்பற்றுவேன் என அபூஅப்தில்லாஹ்வும் திரித்து வளைத்து சுயவிளக்கம் கொடுத்து தன் கருத்தை நிலைநாட்ட முற்பட்டிருக்கின்றார். மதகுருமார்களை சாடிப் பேசியும், எழுதியும் வரும் இவரும் மதகுருமார்களின் அதே பாணியையே பின்பற்றிவிட்டார்.

தவப்பா என்ற இந்தச் சொல் திருக்குரானில் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி 3:56, 5:118 ஆகிய இரு இடங்களில் வருகின்றது. அதற்கு ரூஹை கைப்பற்றுதல், மரணத்தைக் கொடுத்தல் என்ற பொருள் தானே தவிர முல்லாக்கள் கூறுவது போன்று உடலோடு உயர்த்துதல் என்ற பொருள் ஒருபோதும் இல்லை. திருக்குரானில் இந்தச் சொல் ( பிஸ்மில்லாஹ்வையும் ஒரு வசனமாகக் கணக்கிடும்போது) பின்வரும் 23 இடங்களில் வருகின்றது:

2;235, 2:241, 3:194, 4:16, 4:98, 6:62, 7:38, 7:127, 8:51, 10:47, 10:105, 12:102, 13:41, 16:29, 16:71, 22:6, 32:12, 40:68, 40:78, 47:28, 6:61, 39:43

திருக்குரானில் அல்லாஹ் பயன்படுத்தியுள்ள இந்த வசனங்களில் ஈஸா (அலை) அவர்களுக்காக 3:56, 5:118 வசனங்களில் பயன்படுத்திய தவப்பீ என்ற அதே சொல்லையே பயன்படுத்தியிருக்கிறான். மேலும் இந்த இடங்களில் ரூஹைக் கைப்பற்றுதல் மரணத்தைக் கொடுத்தல் என்ற பொருளிலேயே பயன்படுத்தியிருக்கின்றான். கடைசியில் குறிப்பிட்ட 6:61, 39:43 ஆகிய வசனங்கள் இவ்வாறு வருகின்றன:

"அவனே இரவில் உங்கள் உயிரைக் கைப்பற்றுகின்றான். பகலில் நீங்கள் செய்ததை அறிகின்றான். பின்னர் குறிப்பிட்ட காலம் நிறைவு செய்யப்படுவதற்க்காக உங்களை மீண்டும் எழுப்புகின்றான்." (6:61)

"அல்லாஹ் உயிர்களை அவற்றின் மரணத்தின் போதும்,மரணிக்காதவற்றை அவற்றின் தூக்கத்தின் போதும் கைப்பற்றுகின்றான். பின்னர் மரணம் முடிவாகி விட்டவற்றை அவன் (தன்னிடமே) நிறுத்தி வைத்துக் கொள்கின்றான். மற்றவற்றை குறிப்பிட்ட ஒரு காலத்திற்குத் (திருப்பி) அனுப்பிவிடுகின்றான். சிந்தனை செய்யும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அடையாளங்கள் உள்ளன." (39:43)

இவ்விரு வசனங்களில் கூட நஜாத் நிரூபிக்க விரும்புவது போன்று உடலைக் கைப்பற்றுகின்றான் என்ற பொருளிலோ, உடலையும் உயிரையும் சேர்த்து கைப்பற்றுகின்றான் என்ற பொருளிலோ வரவில்லை.மாறாக உயிர்களை கைப்பற்றுகின்றான் என்ற பொருளில்தான் வந்துள்ளது 39:43 - ல் உயிர்களை என வெளிப்படையான சொல்லிலேயே அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். 6:61- ல் உங்களைக் கைப்பற்றுகின்றான் என வந்திருந்தாலும் ஈஸா விசயத்தில் மூட நம்பிக்கை கொண்டிருப்பது போன்று உடலோடு தூக்கிக் கொள்கின்றான் என அறிவுள்ள எவரும் இதற்கு பொருள் கொடுப்பதில்லை. தூக்கத்தின் போது உடல் இங்கே கிடப்பதுதான் அது தற்காலிக மரணம் என்பதற்கு சான்று,ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களால் நீதி தீர்ப்பவராக முன்னறிவிக்கப்பட்டவராகவும் வாக்களிக்கப்பட்ட மஸீஹாகவும் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் இதனை கீழ்வருமாறு தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள்.

"திருக்குரானில் எல்லா இடங்களிலும் தவப்பீ என்பதன் பொருள், மரணம் மற்றும் ரூஹை கைப்பற்றுதல் என்பதேயாகும். கடைசியாக குறிப்பிட்ட இரு வசனங்கள் வெளிப்படையில் தூக்கம் பற்றியதாக இருக்கின்றன என்றாலும், இந்த இரு வசனங்களிலும் தூக்கம் என்ற கருத்துதான் கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால், இந்த இடத்திலும் உண்மையான நோக்கமும் குறிக்கோளும் மௌத்(மரணம்) தான்: மரணத்தில் ரூஹ் கைப்பற்றப்படுகிறது என்பதை வெளிப்படுத்துவது நோக்கமாகும், ...... மற்றபடி சந்தேகமின்றி உறுதியான முறையில் ஆரப்பத்திளிருந்து கடைசி வரை திருக்குர்ஆனின் சொல்வழக்கில் எல்லா இடத்திலும் தவப்பீ என்ற சொல்லுக்கு மரணம் என்றே பொருள் இருப்பது நிரூபிக்கப் பட்டிருக்கின்றது. பிறகு விவாதத்திற்குரிய இரு வசனங்களில் (3:56, 5:118) மட்டும் த்ரிருக்குரானின் சொல் வழக்கிற்கு மாற்றமாக சுயமாக ஒரு பொருளை இட்டுக்கட்டி கூறுவது மார்க்கமிழந்த நிலையம் திரித்து கூறுவதும் அல்லாமல் வேறு என்ன?"(ரூஹானீ கஸாயின் தொகுதி3 பக்கம் 269)

தவப்பீ என்ற சொல்லுக்கு ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மரணத்தைக் கொடுத்தல் என்ற பொருளையே கொடுத்துள்ளார்கள். ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

"என் சமுதாயத்தில் சிலர் கொண்டு வரப்பட்டு, இடப்பக்கத் (திலுள்ள நரகத்) திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான், 'என் இறைவா! (இவர்கள்) என் தோழர்கள் எனக் கூறுவேன். அதற்க்கு,இவர்கள் உங்களு (டைய மரணத்து) க்குப்பின் என்ன புதுமையை உருவாக்கினார்கள் என்பது உமக்குத் தெரியாது' என்று கூறப்படும். அப்போது நான் நல்லடியாரான (ஈஸா அலை ஹிஸ்ஸலாம்) கூறியதைப் போன்று நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களைக் கண்காணித்தவனாக இருந்தேன்; நீ எனக்கு மரணத்தை தந்த போது நீயே அவர்களைக் கண்காணித்தவனாக இருந்தாய் என்று கூறுவேன். அப்போது (என்னிடம்) நீர் இவர்களை விட்டுப் பிரிந்ததிலிருந்து இவர்கள் தம் குதிக்கால்களின் வழியே மார்க்கத்தை விட்டு வெளியேறிவிட்டனர் எனக் கூறப்படும். ( புகாரி கிதாபுத் தப்ஸீர் 5:118)

இங்கு பலம்ம (நீ எனக்கு தவப்பைத்தனி மரணத்தை தந்த போது) என்ற வார்த்தையை ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் தமக்காகவும் பயன்படுத்திக் கூறியிருக்கிறார்கள். புகாரி தமிழ் மொழியாக்கம் பாகம் 5 பக்கம் 275 - ல்தவப்பைத்தனீ என்ற சொல்லுக்கு "நீ என்னை திரும்ப அழைத்துக் கொண்ட போது" என தவறாக திருத்திப் பொருள் கொடுத்துள்ளனர். இது திருக்குரானில் எங்குமே பயன்படுத்தாத ஒரு பொருளாகும்.

இங்கும் மரணத்திற்குப் பிறகுள்ள நிலைதான் என்பதற்கு சான்றே,உங்களு(டைய மரணத்து) க்குப் பின் என்ன புதுமையை உருவாக்கினார்கள் என்பது உமக்குத் தெரியாது என்ற வசனம்தான் இங்கு அனைவரும் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு என்றுதான் பொருள் கொடுக்கின்றனரே தவிர திரும்ப அழைத்துக் கொண்ட பிறகு என்று எவரும் பொருள் கொடுப்பதில்லை.

தவப்பீ (மரணத்தைக் கொடுத்தல்) என்ற இந்த சொல்லை அல்லாஹ் திருக்குரானில் நபிமார்களில் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்காகவும்(10:47, 13:41, 40:78), ஹஸ்ரத் யூசுப் (அலை) அவர்களுக்காகவும் (10:102)பயன்படுத்தியிருக்கின்றான். அங்கெல்லாம் அனைவரும் நாம் எடுத்துரைக்கும் மரணம் என்ற பொருளையே கொடுக்கும் போது ஈஸாவுக்கு மட்டும் உடலோடு தூக்குதல் என்ற பொருளை கொடுப்பது திரித்துக் கூறுவது இல்லையா? என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.

3:56- ல் வந்துள்ள முதவப்பீக்க என்பதற்கு முமீத்துக (உம்மை மரணிக்க செய்வேன்) என்ற பொருளையே ஹஸ்ரத் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் கொடுத்திருப்பது நம் கூற்றுக்கு மேலும் சேர்ப்பதாக உள்ளது. ( புகாரி தமிழாக்கம் பாகம் 5 பக்கம் 273 காண்க)

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒன்றுக்கு தீர்ப்பு வழங்கிவிட்டால், (அதன் பின்னர்) நம்பிக்கை கொண்ட எந்த ஆணுக்கும், நம்பிக்கை கொண்ட எந்த பெண்ணுக்கும் தங்கள் பிரச்னைக்கு தங்கள் விருப்பத்திற்கேற்ப தீர்ப்பளிப்பதற்கு உரிமையில்லை. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படாதவர் நிச்சயமாக மிகத் தெளிவான வழ்கேட்டில் சென்று விடுகின்றனர் என்ற (33:37) வசனத்தையே அந்நஜாத் பிரிவினருக்கு நாம் நினைவு படுத்துகிறோம்.

எனவே உம்மைக் கைப்பற்றுவேன் என்று அல்லாஹ் கூறுவதை மரணிக்கச் செய்வேன் என காதியானிகள் திரித்துச் சொல்கிறார்கள் என்று நஜாத் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது எவ்வளவு பேதமைத்தனமானது! இந்தக் குற்றச்சாட்டு அல்லாஹ்வின் மீதும் நபி(ஸல்) அவர்களின் மீதும் ஹஸ்ரத் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் மீதும் விழுகிறது என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்வார்கள்.

அடுத்து, அல்குர்ஆனில் (4:155-159) வசனங்களை மற்ற சிந்தனைகளிலிருந்து காலியாக வைத்து விட்டு பார்க்கச் சொல்கிறார் நஜாத் ஆசிரியர். நாம் கூறுகின்றோம், அந்த வசனங்களை (3:56) வசனத்தின் சிந்தனையிலிருந்து காலியாக வைத்து விட்டுப் பார்க்காதீர்கள்4:159 - ம் வசனத்தை 3:56 வசனத்துடன் ஒப்பாய்வு செய்து பாருங்கள். அதில் அல்லாஹ் முதவப்பீக்க (உம்மை மரணிக்க செய்வேன்) என்று கூறிய பிறகுதான் வராபிவுக்க (மேலும் நான் உம்மை உயர்த்துவேன்) என்று கூறுகிறான். எனவே பல் ரபஅஹுல்லாஹு இலைஹி (எனினும் அல்லாஹ் அவரை தன் அளவில் உயர்த்திக் கொண்டான்) என்பது மரணத்திற்குப் பிறகு (ரூஹை கைப்பற்றிய பிறகு,உடலை அல்ல) நடந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் புரியவில்லையா? எனவே அல்லாஹ் ஈஸாவை பௌதீக உடலுடன் கைப்பற்றி வைத்திருக்கின்றான் என்று அந்நஜாத் ஆசிரியர் எழுதியிருப்பதெல்லாம் அவருடைய சொந்த கைச்சரக்குகளாகும். இதற்குப் பெயர்தான் புரோகிதம், இந்த வகையில் அந்நஜாத்தும் புரோகிதம்தான் என்பதில் அணுவின் முனையளவும் சந்தேகமில்லை!

அடுத்து சும்ம இலைய்ய மர்ஜிவுக்கும் (3:56) என்பதற்கு, பின்னர் நீங்கள் அனைவரும் என்னிடமே திரும்பி வர வேண்டியதிருக்கிறது என்ற சொற்றொடரை வைத்து அது ஈஸாவின் திரும்புதளைக் குறிப்பிடுகிறது: எனவே ஈசா உயிருடன் இருக்கிறார். திரும்ப பூமிக்கு வருவார். பிறகு மரணிப்பார் அதன் பின்னர் அவர் அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதைத்தான் இது தெரிவிக்கிறது எனக்கூறி மேலப்பாளையத்தில் எம்முடன் நடைபெற்ற கருத்துப்பரிமாற்றத்தின் போது அபூ அப்தில்லாஹ் தன் அறியாமையை வெளிப்படுத்தினார். அப்போது நாம் கூறினோம்: மர்ஜிவுக்கும் என்பதற்கு நீர் திரும்ப வேண்டியதிருக்கிறது என நீங்கள் ஒருமையில் பொருள் கொடுத்தது உங்கள் அறிவீனம். அது ஈசாவைக் குறிப்பிடுவதற்க்காக வந்திருந்தாள் மர்ஜிவுக்க (உமது திரும்புதல் என ஒருமையில் வந்திருக்கும்: ஆனால் அல்லாஹ் இங்கு மர்ஜிவுகும் (உங்களின் திரும்புதல்) என பன்மையில் குறிப்பிட்டுள்ளான் என்பதை நாம் சுட்டிக்காட்டிய பிறகுதான் அரபி மொழியறிவின்று தாம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டோம் என்பதைப் புரிந்து அபூஅப்தில்லாஹ் அசடு வழிந்தார்.

ஆயினும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல,மர்ஜிவுகும் என்பதில் உள்ள உங்களின் திரும்புதல் என்பது பன்மைச் சொல் என்றாலும் அதில் ஈசாவும் அடங்குவார் என்ற ஒரு சுயவிளக்கத்தைக் கூறினார். ஆனால் என் பக்கமே உங்களின் திரும்புதல் உள்ளது (3:56) என்பதில் ஈசா அடங்கமாட்டார். என்பதை அன்றே நாம் நிரூபித்துக் காட்டியிருந்தோம். ஏனெனில் அந்த வசனத்தை தொடர்ந்து அல்லாஹ், 'அப்பொழுது நான், நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றவற்றில் உங்களிடையே தீர்ப்பு வழங்குவேன்' எனக் கூறுகின்றான் (3:56) . நஜாத் கூறுவது போல நீங்கள் அனைவரும் என்னிடமே திரும்பி வருவீர்கள் என்பதில் ஈஸாவையும் சேர்த்து பொருள் கொள்ள இங்கு இடமில்லை. காரணம் ஒன்று அனைவரும் என்ற வார்த்தை அந்த வசனத்தில் இல்லை: அது நஜாத்தின் கைச்சரக்கு. இரண்டாவது உங்களின் திரும்புதல் என்பது ஈசாவைக் குறித்து அல்ல: மாறாக 3:35 - ல் குறிப்பிட்டபடி ஈஸாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய பகைவர்களைக் குறித்து ஆகும். அதில் ஈஸா அடங்கமாட்டார். ஈஸாவையும் சேர்த்து என்றால் 'நீங்கள் கருத்துவேறுபாடு கொண்டிருக்கின்றவற்றில்' என்பதிலும் ஈஸாவை சேர்க்கவேண்டியது வரும். ஆனால் கருத்து வேறுபாடு கொண்டவர்களில் ஈஸா அடங்கமாட்டார் என்பதை அற்ப அறிவுள்ளவரும் புரிந்து கொள்ள முடியும்.

அடுத்து, ஹஸ்ரத் ஈஸா நபி (அலை) மீண்டும் வரும்போது நபி பதவியை இழந்து விட்டு வந்து நிற்பார் என்ற அபத்தமான புரோகிதக் கொள்கைதான் அந்நஜாத்திடம் புரையோடிப்போயிருக்கிறது. இது மூட மூலவிகளின் கூற்றுதானே யொழிய ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் கூற்று அல்ல. ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி முன்னறிவித்துள்ள ஹதீஸில் அவரை நபியுல்லாஹ் என நான்கு முறை குறிப்பிட்டு கூறியிருக்கிறார்கள். (சஹீஹ் முஸ்லிம்) என்பதை நாம் முன்னரும் எடுத்து வைத்தோம். அந்த ஹதீஸை மறுக்க திராணியற்ற நிலையில் நஜாத்தும் மூட மௌலவிகளைப் போன்று ஒரு சப்பைக் கட்டு கட்டி தனது போலித்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது! மாவட்ட ஆட்சியாளராக இருந்து ஒய்வு பெற்ற ஒருவர் முன்னர் கலக்டர் பதவி வகித்தால் அவரை முன்னாள் கலெக்டர் என்றே மக்கள் கூறுவதால் அவர் பதவியிலுள்ள கலெக்டர் ஆகிவிடமுடியுமா? ஒரு போதும் முடியாது என்ற ஒரு சுயவிளக்கத்தைக் கொடுத்து, ஈசாவும் ஒரு ஒய்வு பெற்ற நபி என்ற ஒரு மட்ட ரகமான கொள்கையை எல்லா மௌலவிகளையும் போல எடுத்து வைத்துள்ளது.

முன்னாள் கலெக்டர் என்று மக்கள் கூறுவதால் அவர் கலெக்டர் ஆகிவிடமுடியாதுதான். எனினும் சாதாரண அறிவு படைத்த மக்கள் கூட அவரை முன்னாள் கலெக்டர் என்று தான் கூறுவார்களே அல்லாமல் கலெக்டர் என கூறிவிடமட்டார்கள் என்பதை நஜாத் ஒப்புக் கொண்டுள்ளது. சாதாரன அறிவுபடைத்தவர்களே முன்னாள் என்ற சொல்லை பயன்படுத்தும்போது ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களும் நபியுல்லாஹி சாபிகுன் (அல்லாஹ்வின் முன்னாள் நபி) என்ற சொல்லை அல்லவா பயன்படுத்தியிருப்பார்கள்? ஆனால் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களோ அல்லாஹ்வின் நபியாகிய ஈஸா என்றல்லவா கூறியிருக்கின்றார்கள்! வழி கெட்ட இறுதி நபிக் கொள்கையை மனதிலிருந்து வெளியே எடுத்து வைத்து விட்டு காலியாக சிந்தித்தால் இவர்களாலும் புரிந்து கொள்ள முடியும். அனால் இவர்களோ அப்படி சிந்தப்பதில்லை!

நஜாத்தைப் போன்றே இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைப்பதாக தம்பட்டம் அடித்துவந்த ஜமாஅத்தே இஸ்லாமி மௌலவி மௌதூதியும் இதே போன்று கீழ்த்தரமாக ஈஸாவை ரிடையர்டு நபியாக (ஒய்வு பெற்ற நபியாக) வருவார் என்றே குறிப்பிட்டிருந்தார். இனம் இனத்துடன் சேரும் என்பது குன்றின் மேலிட்ட விளக்கு போல் விளங்கவில்லையா?விளன்காதவர்கலாகிவிட்டீர்கள் என்பதே எமது வருத்தம்!

அடுத்து, இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நாம் அபூஅப்தில்லாஹ் வீட்டிற்கு சென்று கருத்துப் பரிமாற்றம் செய்த போது அவரிடம் ஒரு கேள்வி கேட்டோம். சரி ஈஸா வருவர் என்றால் அவர் மீது ஈமான் கொள்ள வேண்டியது முஸ்லிம்களின் கடமையா? அதற்க்கு அவர் ஆம்: ஏனில்லை. கண்டிப்பாக நம் மீது கடமைதான் என்றார்

பிறகு இந்தக் கருத்தை (அவர் பாணியில் சொல்லப்போனால்) நம் உள்வாங்கிக் கொண்டு, ஈசாவின் மீது ஈமான் கொள்வது கண்டிப்பானது என்றால் அவர் நபி என்பதும் கண்டிப்பானதுதான் என்றோம். ஏனெனில் ஈமான் கொள்ளவேண்டிய ஆருவிஷயங்களில் மனிதர்களிலேயே நபியின் மீது மட்டும்தான் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் ஈமான் கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். வேறு எந்த மனிதர் மீதும் ஈமான் கொள்வதை ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கவில்லை. எனவே ஈசா (அலை) அவர்கள் மீது ஈமான் கொள்ள வேண்டியது கடமை என்றால் அவரும் அல்லாஹ்வின் நபிதான் என்பதை இந்த ஹதீஸின் மூலமும் தெளிவாக விளங்க முடிகிறது என்றோம். இந்த பதிலைக் கேட்ட அபூஅப்தில்லாஹ் திணறி வாயடைத்துப் போய்விட்டதை வாசகர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

எனவே பழைய நபி, முன்னாள் நபி, ரிடையர்டு நபி என்பதெல்லாம் குர்ஆன், ஹதீஸில் இல்லாத சொந்த கைவரிசைகள். நஜாத் பாணியில் சொல்லப்போனால் இவற்றை எப்படிப்பட்ட மேதை, அல்லாமா, முப்தி சொன்னார்லும் அவை சுயவிளக்கம், மறுக்கப்படவேண்டியவை.

அடுத்து, ஈஸா(அலை) உணவு உண்ணாமல், பௌதீக உடலுடன் வாழ் முடியுமா? என்ற கேள்வியை எழுப்பி, அவ்வாறு வாழ முடியாது என எடுத்துரைக்கும் பின்வரும் வசனங்களில் அடிப்படையில் கூறியிருந்தோம்.

"நாம் அத்தூதர்களுக்கு உணவு உண்ணாத உடல்களை வழங்கவில்லை. அவர்கள் மிக நீண்ட நெடுங்காலம் வாழ்ந்ததுமில்லை." (21:9)

உமக்கு முன்னர் எந்த மனிதருக்கும் மிக நீண்ட வாழ்க்கையை நாம் வழங்கியதில்லை எனவே நீர் மரணித்து, அவர்கள் மிக நீண்ட காலம் உயிருடன் இருப்பதா?" (21:35)

திருக்குரானின் மேற்கண்ட வசனங்களின் படி ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்கு முன் இறைவன் எந்த மனிதருக்கும் - இறை தூதருக்கும் மிக நீண்ட வாழ்க்கையை வழங்கவில்லை. எனவே ஈஸா (அலை) அவர்கள்2000 ஆண்டுகளாக உணவு உண்ணாமல் உயிருடன் இருக்கிறார் என்ற கிறித்தவக் கொள்கையை இவ்வசனங்கள் தவிடுபொடியாகிவிட்டன என நாம் கூறிவருகிறோம்.

ஆயினும் பிற முல்லாக்களைப் போன்றே கிறிஸ்தவர்களின் ஷிர்க்கான கொள்கைக்கு வரிந்து கட்டிக் கொண்டு ஒருவர் நீண்ட காலம் வாழ முடியும் என்றும் அது சாத்தியமானதே என்றும் நஜாத் எழுதியிருக்கிறது. அதற்க்கு நஜாத் எடுத்துவைத்திருக்கும் அதிமேதாவித்தனமான சான்று இதுதான்:

இப்லீஸ் ஆதமின் மக்களை வழிகெடுத்து நரகில் தள்ள அவகாசம் கேட்டான். இறைவனும் அவனுக்கு மிக நீண்ட ஆயுளை வழங்கினான். அதைப் பற்றிக் கூறும்போது உனக்கு அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் நீயும் ஒருவன் என்றே அல்லாஹ் கூறுகிறான்(7:15,15:37,38, 38:80,81காண்க) இதிலிருந்து பலருக்கும் நீண்ட ஆயுள் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. அப்படியானால் மனித இனத்திற்கு அது சாத்தியமில்லாமல் போகுமா? என்றும், ஆதத்திற்கு முன்னாள் படைக்கப்பட்ட சைத்தானுக்கு மெகா வாழ்வைக் கொடுத்த அல்லாஹ்வால் ஈசாவுக்கு நீண்ட வாழ்வை கொடுக்க முடியாத என்ற மெகா ஷிர்க்கான கேள்வியைக் கேட்டிருக்கிறார் அபூஅப்தில்லாஹ். (பார்க்க நஜாத் மே2011பக்கம் 27)

உங்கள் கருத்துப்படி, ஆதமுக்கு முன்னாள் படைக்கப்பட்ட சைத்தானைப் பற்றிதான் கால அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் நீயும் ஒருவன் என்று அல்லா கூறுகிறான் என்றால் அது சைத்தானுக்கு முன்னாள் படைக்கப்பட்ட (உங்கள் பாணியில்) மெகா படைப்புகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாமே தவிர ஆதமுக்கு பின்னால் படைக்கப்பட்ட ஈஸா (அலை)அவர்களுக்கு அது பொருந்தாது. உங்கள் மொழியாக்கப்படி கால அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் இப்லீசைப் போன்று பலரும் இருக்கலாம் என பொருள் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அதற்காக, இப்லீஸின் கூட்டத்தில் ஈஸா (அலை) அவர்களையும் நஜாத் சேர்த்திருப்பது எவ்வளவு மெகா அறிவீனம்!அநாகரீகம்!!

அடுத்து, இப்லீசுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டதாகத் தெரிகின்ற அதே திருக்குர்ஆன் தான் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் எந்த மனிதருக்கும் நீண்ட நெடுங்கால வாழ்வை வழங்கவில்லை என்றும், (21:35) இறை தூதர்களுக்கு உணவு உண்ணாத உடலை வழங்கவில்லை என்றும் (21:9) வரையறுத்துக் கூறுகிறது. ஈசாவை இறைதூதராகவும் மனிதராகவும் நம்பும் முஸ்லிம்கள் அவர் இறந்துவிட்டார் என்பதையும் நம்பித்தான் ஆகவேண்டும். அல்லாது நஜாத் பாணியில் சொல்லப்போனால் அவரை மனிதல் அல்லது இறைதூதருக்கு அப்பாற்பட்ட ஒரு மெகா படைப்பாக நம்ப வேண்டிவரும்.

ஈஸா (அலை) அவர்களை 2000 ஆண்டுகளாக உயிருடன் வைத்திருக்க அல்லது வானத்தில் வைத்திருக்க இறைவனால் முடியாத? இறைவனுக்கு வல்லமை இல்லையா? என நஜாத் பிற முல்லாக்களைப் போன்றே மீண்டும், மீண்டும் கேள்வி கேட்கிறது. அல்குர் ஆன் உங்களுக்கு விளங்காது: நாங்களே விளக்குகிறோம் என்று கூறும் மௌலவிகள் அல்லாஹ்வை விட நாங்களே விளக்கும் ஆற்றல் மிக்கவர்கள் என ஆணவம் பேசுகிறார்களே என்ற அந்நஜாத்தின் லோகோ (பார்க்க: நஜாத் மே 2011 பக்கம் 14) அந்நஜாத்திற்கே பொருந்தவில்லையா? இங்கு ஈசாவை பௌதீக உடலோடு உயர்த்தி, 2000 ஆண்டுகளாக உண்ணாமல் உறங்காமல் வைத்திருக்க இறைவனுக்கு வல்லமை இல்லையா என்பதல்ல கேள்வி, மாறாக அவ்வாறு செய்வது அல்லாஹ்வின் நடைமுறைக்கு மாறுபட்டது என்பதை 21:9, 21:35 ஆகிய வசனங்களின் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். மேலும் அல்லாஹ்வின் நடைமுரையில் நீர் எந்த மாற்றத்தையும் காணமாட்டீர் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.(33:63,25:44, 47:24, 17:78 காண்க) மேலும், 'நாம் விரும்பியிருந்தால் உயர்த்தியிருப்போம்; ஆனால் அவர் பூமியின் பக்கம் சாய்ந்துவிட்டார்'என்ற 7:177 வசனத்தில் வானம் என்பதற்கு எதிர்ச்சொல்லான பூமியின் பக்கம் சாய்ந்துவிட்டார். என வந்தும் கூட மேலே உடலோடு தூக்குதல் என்ற பொருளை எவரும் கொடுப்பதில்லை. ரபஅ என்ற சொல் திருக்குரானில் ஓர் இடத்தில் கூட உடலோடு தூக்குதல் என்ற பொருளில் இறைவன் பயன்படுத்ததிருக்கும் போது, ஒரு நபிமொழியில் கூட உடலோடு உயர்த்துதல் என்ற பொருளில் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களோ,நபித்தோழர்களோ பயன்படுத்தாதிருக்கும் போது ஈஸா நபி விஷயத்தில் மட்டும் அந்தப் பொருளைக் கொடுப்பதிலேயே அடம்பிடிப்பதிலிருந்து அல்குர்ஆன, அல்ஹதீஸ் உங்களுக்கு விளங்காது;நாங்கள் விளக்குகிறோம் என்று கூறும் அகந்தை கொண்ட புரோகித மௌலவிகள்தான் நஜாத் பிரிவினர்களும் என்பதை முஸ்லிம்கள் விளங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை
Read more »

Sep 16, 2011

சப்மிட்டர்ஸ் அஸோஸியேஷனின் கூற்றுக்கு பதில் (அஹ்லே குர்ஆன்)

சென்னை சப்மிட்டர்ஸ் அஸோஸியேஷனின் நிர்வாகி அவர்களுக்கு நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் உறுப்பினர் முஹம்மது அலி எழுதிய கடிதம் அஸ்ஸலாமு அலைக்கும்,வரமத்துல்லாஹி வபரக்காத்துஹு.

நான் 2010 ஏப்ரல் மாத இறுதியில் சென்னைக்கு வந்திருந்தேன். அது சமயம் எண்கள் அஹ்மதி சகோதரர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர், சில தினங்களுக்கு முன் தாங்கள் எண்கள் ஜமாஅத் சகோதரர்களை கருத்து பரிமாற்றத்திற்கு அழைத்ததால் சில சகோதரர்களுடன் தங்களை சந்தித்து பேசிய விபரங்களை என்னிடம் கூறினார்கள்.

தாங்கள் தங்கள் தலைவர், ரஷாது கலீபா கம்ப்யூட்டர் மூலம் திருக்குர்ஆனை ஆய்வு செய்து அத்தௌபா என்ற அத்தியாயம் 128 வது வசனம் இடைச் செருகல் என்று கண்டுபிடித்ததாக கூறியிருக்கிறீர்கள். மேலும் அந்த வசனத்தில் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களை ரவூபுர் ரஹீம் என்று கூறப்பட்டிருக்கிறது. ரவூபுர் ரஹீம் என்ற பண்பு அல்லாஹ்விற்கு மட்டும் உரியது. அதை ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்கு இருப்பதாக அந்த வசனத்தில் வருவதால் அது ஷிர்க் என்ற இணை வைத்தல் ஆகும். எனவே அந்த வசனம் இடைச்செருகல்தான் என்றும் கூறியிருக்கிறீர்கள். தாங்கள் இவ்வாறு கூறியதாக எனது சகோதரர் என்னிடம் கூறியதும் நான் மிகப் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். நான் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த முஸ்லிம் சகோதரரும் அதிர்ச்சி அடைவதுடன் மனவருத்ததிற்கும் உள்ளாவார் என்பது உறுதி.

திருக்குரானில் இருந்து ஒரு கேள்வி எழுந்தால் திருக்குரானிலிருந்தே அதற்கான பதில் கிடைக்கும் என்பது அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்திற்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. அதே போன்று எங்கள் சகோதரர் அதிலிருந்து அழகான ஒரு வசனத்தை உங்களிடம் எடுத்துக் கூறினார். இன்னா நஹ்னு நஸ்ஸல்னத் திக்ர வ இன்னா லஹு லஹாபிழூன் (15:10) நாமே இந்த குர்ஆனை இறக்கியிருக்கிறோம். நிச்சயமாக நாமே இதை பாதுகாத்து வருவோம்.

இந்த இறைவசனத்தின்படி இறுதிகாலம் வரை திருக்குரானை பாதுகாத்து வருவதாக அல்லாஹ் கூறியிருப்பதால் இதில் இடைச்செருகல் இப்போதும் கிடையாது. இனி எப்போதும் எவராலும் நுழைக்கவும் முடியாது ஏனென்றால் திருக்குர்ஆன் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருப்பதால் அதனுடைய பரிசுத்ததன்மைக்கும், மகிமைக்கும் இறுதிகாலம் வரை பொறுப்பு ஏற்று அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். என்று எங்கள் சகோதரர் கூறியிருக்கிறார். தாங்கள் அந்த வசனத்தை ஏற்றுக் கொண்டாலும் அவருடைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் நீங்கள் கூறிய விளக்கம், திருக்குர்ஆன் அல்லாஹ் இறக்கிய இறுதி வேதம் என்றும் இதற்குப் பின் வேறு மார்க்கமும் இல்லை. வேறு வேத நூலும் இல்லை. திருக்குர்ஆன் இறுதி காலம் வரை ஜீவித்திருக்கும் வேத நூல் ஆகும். ஆகவே இந்த குர்ஆனை இறுதி காலம் வரை நாமே பாதுகாத்து வருவோம் என்று நாம் அறிந்து கொள்வதற்காக இந்த இறை வசனத்தை இறக்கியிருக்கின்றான் என்று கூறியிருக்கிறீர்கள்.

அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் உறுதியான நம்பிக்கை யாதெனின்,ஹஸ்ரத் கத்தமுன்னபியீன் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் இறுதி காலம் வரை இறங்கிய இறை வசனங்களால் அவர்களின் காலத்திலேயே பரிபூரணமாக்கப்பட்ட பரிசுத்த வேதநூலாகிய திருக்குர்ஆனுக்கும், இன்று நம்முடைய நடைமுறையில் இருக்கும் திருக்குரானுக்கும் ஒரு மாற்றமும் இல்லை, அதாவது ஒரு எழுத்துக்கூட, ஒரு புள்ளி கூட அதில் சேர்க்கப்படவில்லை: எடுக்கப்படவுமில்லை. அல்லாஹ்வின் வார்த்தைப்பாடாகிய (15:10) இறைவசனத்தின் ஒளியில் திருக்குரானின் இடைச்செருகல் இல்லவேயில்லை என்று நாங்கள் உறுதியாக நம்பிக்கை வைத்துள்ளோம்.

அல்லாஹ் கூறுகிறான்: "நிச்சயமாக நாம் குரானை(மனிதர்கள்) நினைவு கூர்ந்து அறிவுரை பெரும் பொருட்டு எளிதாக ஆக்கியுள்ளோம். எனவே அறிவுரையினைப் பெறுபவர் எவரேனும் உண்டா? (54:18)

மேற்கண்ட வசனத்தைப் பாருங்கள், மனிதர்கள் சிந்தித்து ஆராய்ந்து நல அறிவுரியாயினைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறுகிறது. ஆகவே நீங்கள் தக்வா என்னும் இறை அச்சத்துடன் (15:10) வசனத்தை சிந்தித்து ஆராய்ந்து பாருங்கள். அப்பொழுது குர்ஆனுடைய மகிமையும்,பரிசுத்தத்தன்மையும் எத்தனை அற்புதமானது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். மேலும் திருக்குரானில் இடைச்செருகல் இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்வீர்கள். இறைவனுடைய படைப்பில் சிந்திக்கக்கூடிய தகுதியைப் பெற்றிருப்பது மனிதர்கள் மட்டுமே,மனிதர்கள் உருவாக்கிய எந்திரமகிய கம்ப்யூட்டரால் நிச்சயமாக சிந்திக்கமுடியாது என்பதை நியாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். சுமார்1400 வருடத்திற்கு மேலாக திருக்குர்ஆன் அத்-தௌபா அத்தியாயத்தின்128 வது வசனம் நிரந்தரமாக இருந்து வருகிறது. ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு பிறகு பல்லாயிரக்கணக்கான இறைநேசர்கள்,அல்லாஹ்வுடன் தொடர்புகொண்ட வலிமார்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களில் எவரும் இந்த வசனத்தை இடைச் செருகல் என்று கூறவில்லை. ஆனால் தங்களுடைய தலைவர் கம்ப்யூட்டர் மூலம் இந்த 9:128 வசனம் இடைச் செருகல் என்று கண்டுபிடித்துள்ளார் என கூறுகிறீர்கள்.

எனவே இப்போது உங்கள் முன் ஒரு கேள்வியை வைக்கிறேன். திருக்குர்ஆன் 15:30 இல் உள்ள, நிச்சயமாக திருக்குரானை நாமே பாதுகாத்து வருவோம் என்ற வார்த்தைப்பாட்டின்படி இடைச்செருகல் ஏற்படாதபடி திருக்குரானின் மகத்துவத்தை அதனுடைய புனித தன்மையை அல்லாஹ் பாதுகாத்து வருகிறான் என்று நம்புகிறீர்களா?நீங்கள் குர்ஆன் 15:18 ஆயத்தின்படி சிந்தித்து ஆராய்ந்து திருக்குரானின் மகத்துவம், புனிதத் தன்மைக்கு இழிவு ஏற்படாத நல்ல முடிவுக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் பண்பாகிய ரவூபுர் ரஹீம் என்று கூறப்பட்டிருப்பது ஷிர்க் என்னும் இணைவைத்தல் ஆகும். எனவே, இந்த வசனம் இடைச்செருகல் என்று கூறியிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் படைப்புகளில் மனிதானைப் போன்ற சிறந்த படைப்பு வேறு இல்லை. "லகது ஹலக்னல் இன்ஸான பீ அஹ்ஸனி தக்வீம் மனிதனை நாம் சிறந்த முறையில் படைத்துள்ளோம் என்று அல்லாஹ் கூறியிருக்கிறான். (95:5)

அதைப் பற்றி சிறிது ஆராய்ந்து பார்க்கலாம் (ஹதீது குத்ஸியாக இவ்வாறு வருகிறது) ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்)அவர்களிடம் அல்லாஹ் கூறுகிறான்: " நான் மறைவானப் புதையல் போன்று இருந்தேன், அதற்காக நான் மனிதனைப் படைத்தேன்". (மிஷ்காத்) மேலும் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் தங்களின் உம்மத்திற்கு கட்டளையாகக் கூறுகிறார்கள்.

"நீங்கள் அல்லாஹ்வின் அழகிய ஸிபத் என்னும் நற்பண்புகளை ஏற்று நடக்க வேண்டும்." (மிஷ்காத்). நற்பண்புகள் பற்றி நாம் அறிந்து அதனை நாம் ஏற்று நடக்க வேண்டும்.

திருக்குரானில் அல்லாஹ் தன்னுடைய சுமார் 100 சிபத்துக்கள் பற்றி அறிவித்திருக்கின்றான். அந்த பண்புகள் சிறப்பு பண்புகள் என்றும்,நற்பண்புகள் என்றும் இரண்டு விதமாக உள்ளன. இதில் நற்பண்புகள் என்ற அழகிய பண்புகளை ஏற்று நடந்து இறை நேசர்கள் ஆகுவதற்கு தகுதியனவர்களாக மனிதர்களை அல்லாஹ் படைத்திருக்கின்றான். ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அழகிய பண்புகள் அனைத்தையும் முழுமையாக ஏற்று மனித குளம் அனைத்திற்கும் முன் மாதிரியாக நடந்து காட்டியிருப்பதால், அல்லாஹ் அவர்களை ரவூபுர் ரஹீம் என்று மேன்மைப்படுத்தி கூறியிருக்கிறான். ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தியாகிய நாமும் அந்த நற்பண்புகளை ஏற்று நடந்து உண்மையான நம்பிக்கையாளர்களாக, உண்மையான நல்லடியார்களாக ஆகுவதற்கு முயற்சி செய்யவேண்டும். மனிதர்கள் அந்த நற்பண்புகளை எவ்வளவு முழுமையாக ஏற்று நடந்தாலும் அது எல்லைக்கு உட்பட்டதே ஆகும். ஆனால் அல்லாஹ்விடம் அந்த பண்புகள் எல்லையற்றதாகும் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து அல்லாஹ்வின் சிறப்புப் பண்புகளை அல்லது வேறு படைப்பினங்களுக்கோ இருப்பதாக கூறுவது 'ஷிர்க்' என்னும் இணைவைத்தல் ஆகும். உதாரணமாக, அல்லாஹ் ஹையுல் கையூம். இதில் அல்ஹை, 'அல்-கையூம்' என்ற சிறப்புப் பண்புகள் இருக்கின்றன. அல்ஹய்யு என்றால் அல்லாஹ் என்றென்றும் ஜீவித்திருப்பவன். அல் கய்யூம் என்றால் மாற்றமே இல்லாமல் நிலைத்திருப்பவன். இந்த அல்ஹையும் என்ற சிபத்துகளை எவருக்கு கொடுத்தாலும் நிச்சயமாக அது ஷிர்க் ஆகிவிடும். அடுத்து அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவன் என்ற அல் - அலீம் என்ற பண்பையும் எவருக்கு கொடுத்தாலும் அது ஷிர்க் ஆகும். இதைப் போன்ற சிறப்புப் பண்புகள் பல உள்ளன. அவற்றை அல்லாஹ்வை தவிர எவருக்கு கொடுத்தாலும் அது இணை வைத்தல் ஆகிவிடும். அடுத்து திருக்குரானில் ஒரு கேள்வி எழுந்தால் அதற்கு திருக்குரானில் இருந்தே பதில் கிடைக்கும் என்று கூறியிருக்கிறேன். அதற்க்கான சில எடுத்துக் காட்டுகளை கூறுகிறேன். அல்லாஹ்வின் நற்பண்புகளில் ஒன்று அல்-ஹலீம், இதன் பொருள் அல்லாஹ் இரக்கமானவன், மென்மையானவன்,அமைதியானவன் என்பதாகும். அத்-தௌபா அதிகாரத்தின் 114 வது வசனத்தைப் பாருங்கள். அதில் ஹஸ்ரத் இப்ராஹீம்(அலை) அவர்களை ஹலீம் என்ற பண்பு உள்ளவராக இருக்கிறார் என்று அல்லாஹ் கூறுகிறான். (9:114) தங்களுடைய கூற்றின்படி இந்த வசனத்தை ஷிர்க் என்று கூறி நீக்கிவிடுவீர்களா? (நவூதுபில்லாஹ் மின்ஹா)

அடுத்து, அல்லாஹ் அல் -அஹ்ப்வு என்ற பண்பு உடையவன், அடியார்கள் எவ்வளவு பாவம் செய்திருந்தாலும், திருந்தி, மனம் உருகி மன்னிப்பை வேண்டினால், அல்லாஹ் இந்த அஹ்ப்வு என்ற பண்பின் மூலம் மன்னிக்கின்றான். நீங்கள் அல்-அஹ்ராப் 200 வது வசனத்தைப் பாருங்கள்.

அதில் ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் அல்லாஹ் கூறுகிறான். (நபியே நீர்) அஹ்ப்வு என்ற (சிபத்தாகிய) மன்னிப்பை கடைபிடிப்பீராக என்று கூறப்பட்டிருப்பதை கவனியுங்கள். (7:200) இந்த வசனத்தை ஷிர்க் என்று கூறுவீர்களா? மேலும் அஸ்-ஸபூர், அதாவது அல்லாஹ் பொறுமையாளன். நம்பிக்கையலர்களுக்கான ஒரு இறை கட்டளையாக பொறுமையையும், தொழுகையையும் மேற்கொண்டு (அல்லாஹாவிடம்) உதவி தேடுங்கள் (2:46) என்று வருகிறது. அல்லாஹ்வின் பண்பாகிய பொறுமையை ஏற்று நடக்காதவன் சிறந்த மனிதனாக, ஸாலிஹீனாக இருக்க முடியுமா? மேலும் அல்லாஹ்வின் நற்பண்பில் இருக்க முடியுமா?மேலும் அல்லாஹ்வின் நற்பண்பில் ஒன்று அல்-அத்ல் என்பதாகும். இதன் பொருள் அல்லாஹ் நீதியானவன். திருக்குரானில் சில இடங்களில் இந்த அத்ல் என்ற பண்பை நம்பிக்கையாளர்கள் ஏற்று நடக்க வேண்டும் என்ற கட்டளை இருக்கிறது.

இவ்வாறு இன்னும் பல ஆதாரங்கள் திருக்குரானில் எடுத்துக் காட்டலாம். ஆனால் மேலே குறிப்பிட்ட சான்றுகள் உங்கள் கருத்துக்களை மாற்றுவதற்கு போதுமானவையாக இருக்கும் என்ற அபிப்ராயத்துடன் எனது நிருபத்தை நிறைவு செய்கிறேன். மேலும் உங்களிடம் பணிவுடன் ஒரு செய்தியைக் கூறுகிறேன். அதாவது நபி (ஸல்) அவர்கள் மூலம் நமக்கு கிடைத்த இஸ்லாம் மார்கத்தின் மகிமை, புனிதத் தன்மை அழகு பற்றி தெளிவாக அறிந்து கொள்ள அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்துடன் தொடர்புகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். வஸ்ஸலாம் முஹம்மது அலி, சங்கரன் கோயில்

Read more »