அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jul 24, 2011

இறுதிநபி கொள்கையை கைவிட்ட இரு பெரும்(?) தௌஹீதுவாதிகள்(?)



கடந்த 1997 டிசம்பர் மாதத்தில் சென்னையில் பிரிவுப் பெயர்கள் கூடுமா?கூடாத? என்ற தலைப்பில் ஒரு விவாதக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தற்போது தங்களுக்குள் பிளவுபட்டு ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை தங்களுக்குள் மாறி மாறி அள்ளி வீசிக்கொண்டு சத்திய இஸ்லாத்தை மக்கள் மத்தியில் எத்திவைக்கப்பாடுபடுவதாக வரிந்துகட்டிக்கொண்டு பேசியும், எழுதியும் வரக்கூடிய இருபெரும் தௌஹீது(?) அறிஞர்களும், பல அறிஞர்களும் (ஆலிம்களும்) தௌஹீது(?) வாதிகளும் கலந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த விவாதத்தில் தாங்கள்தான் தௌஹீதை உண்மையிலேயே குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் தெளிவுபடுத்தி வருகிறோம் என்று பிரகடனப்படுத்தும், பல குட்டிப்பிரிவுகளில் ஒரு பிரிவினரை வழிநடத்தும் முன்னால் அந்நஜாத், அல்-ஜன்னத் பத்திரிகையின் ஆசிரியரும் உணர்வு பத்திரிகையின் ஆசிரியரும், மௌலவி p.j. என்று அறியப்படும் பி.ஜைனுலாப்தீன் உலவி அவர்கள் ஒரு ஹதீஸை எடுத்து வைக்கிறார். அந்த ஹதீஸை மற்றொரு பிரிவினரை வழி நடத்தும் சத்திய இஸ்லாத்தை உள்ளது உள்ளபடி எடுத்துரைப்பதாக வாதிடக் கூடிய அந்நஜாத் என்ற பத்திரிகையின் முன்னால் நிர்வாகியும் இன்றைய ஆசிரியருமாகிய அபூ அப்தில்லாஹ் அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார். அந்த சபையில் உள்ள அனைவரும் அதற்கு சாட்சியாக இருந்துள்ளார்கள் அந்த பி.ஜே. கூறியது போன்றே அப்படியே கீழே தருகிறோம்.

م أما بعد: روى الإمام أحمد عن حذيفة بن اليمان -رضي الله عنه- أن رسول الله -صلى الله عليه وسلم- قال: "تَكُونُ النُّبُوَّةُ فِيكُمْ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلَافَةٌ عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا عَاضًّا، فَيَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ اللهُ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا جَبْرِيّاً، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلَافَةٌ عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ" ثم سكت. 

நுஃமான் பின் பஷீர் (ரலி) அறிவிக்கின்றார். பஷீர் பின் சஃது என்பவரிடம் நான் கேட்டேன், உமராக்களைப் பற்றி எதாவது ஒரு ஹதீஸை நீர் மனனம் செய்து வைத்திருக்கின்றீரா? என்று, அந்த இடத்தில் (நேரத்தில்) ஹுதைஃபா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அவர் வழிய வந்து சொன்னார்கள். அன அஹ்ஃபலு ஹுத்பதஹு நான் நபி (ஸல்) அவர்கள் கூறியதை மனனம் செய்து வைத்திருக்கின்றேன் என்று சொன்னார்கள். சொல்லிவிட்டு கூறினார்கள், தகூனு நுபுவ்வத்ஃபீகும் - உங்களிடத்தில் நுபுவாத் நிலைத்து நிற்கும், மாஷா அல்லாஹு அன் தகூன - எவ்வளவு நாளைக்கு நிலைத்து நிற்க வேண்டும் என்று அல்லாஹ் நாடியிருக்கின்றானோ அவ்வளவு நாட்களுக்கு நான் இருப்பேன் என்று கூறுகிறார்கள். ஃதும்ம யர்ஃபஉஹா இஃத ஷாஅ அன்ய் யர்ஃபஅஹா அதை எடுக்க நினைக்கும் போது அதை அல்லாஹ் எடுத்துக் கொள்வான். (நபி (ஸல்) அவர்களின் மரணம் பற்றி கூறப்படுகிறது) ஃதும்ம தகூனு கிலாஃபத்துன் அலா மின் ஹாஜின் நுபுவ்வத் - நுபுவ்வத்தின் அடிச்சுவட்டில் கிலாபத் நடக்கும். ஃபதகூனு மாஷா அல்லாஹு அன் தகூன - கிலாஃபத் எவ்வளவு நாட்களுக்கு என்று அல்லாஹ் நினைக்கின்றானோ அதுவரை இருக்கும் ஃதும்ம யர்ஃபவுஹா இஃத ஷாஅ அன்ய்யர் ஃபஅஹா - அல்லாஹ் எடுக்க நினைக்கும் போது அதையும் எடுத்துக் கொள்வான். ஃதும்ம தகூனு முல்கன் அழ்ழன் - பிறகு கொடூரமான ஆட்சி ஏற்படும் பயகூனு மாஷா அல்லாஹு அன்ய்யகூன - அது எவ்வளவு நாங்கள் இருக்க வேண்டுமோ அது வரை இருக்கும். ஃதும்ம யர்ஃபவுஹா இஃத ஷாஅ அன்ய் யர்ஃபஅஹா - பிறகு எடுக்க நினைக்கும் போது அதையும் அல்லாஹ் எடுத்துக் கொள்வான். ஃதும்ம தகூனு முல்கன் ஜப்ரிய்யதன் - பிறகு இன்னும் அடக்குமுறை செய்யக்கூடிய ஒரு ஆட்சி ஏற்படும், தகூனு மாஷா அல்லாஹு அன் தகூன -அல்லாஹ் எவ்வளவு நாட்களுக்கு இருக்கவேண்டும் என்று நினைக்கிறானோ அது கொஞ்சம் நாட்களுக்கு நீடிக்கும். ஃதும்ம யர்ஃபவுஹா இஃத ஷாஅ அன்ய் யர்ஃபஅஹா - எப்போது அதையும் எடுக்கவேண்டும் என்று நாடுகிறானோ அப்போது அதையும் எடுத்துவிடுவான். ஃதும்ம தகூனு கிலாஃபத்துன் அலா மின் ஹாஜின் நுபுவ்வத் - பிறகு மறுபடியும் நுபுவ்வத்தின் பாதையில் கிலாபத் ஏற்படும். என்றும் கூறுகிறார்கள்.

ஆதாரம் பி.ஜே ( vs ) அபூ அப்தில்லாஹ் 1997 டிசம்பர் 17 to 20 தேதிகளில் நடைபெற்ற விவாத கேசட்

இங்கு இறுதியில் கூறப்படும் வாசகத்தை கவனிக்க வேண்டும் 'பிறகு மறுபடியும் நுபுவ்வத்தின் பாதையில் கிலாபத்' ஏற்படும் என்று தெளிவாக கூறப்படுகிறது.

(மேற்கண்ட ஹதீஸ் மிஷ்காத் என்னும் ஹதீஸ் நூலில் இடம் பெற்றுள்ளது)

சுமார் 100 வருடங்களுக்கு மேலாக உலக மக்கள் மத்தியில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்குப் பின் அவர்களின் ஷரியத்தைப் பின் பற்றி அவர்களின் உம்மத்தில் நபி வர முடியும் என்பதற்கான பல சான்றுகளை திருக்குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அஹமதிய்யா முஸ்லிம் ஜமாஅத் எடுத்து வைத்துவருகிறது. மூடத்தனமாகவும், முரட்டுத்தனமாகவும் எவ்வித சரியான ஆதாரமுமில்லாமலும் வேண்டுமென்றே மறுத்து வந்து கொண்டிருந்த ஆலிம்கள் தற்போது தெரிந்தோ தெரியாமலோ அவர்களுக்குள் கருத்துவேறுபாடு வந்ததன் காரணமாக ஏற்பட்ட விவாத அரங்கில் நபி வர முடியும் என்பதற்கு அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் எடுத்து வைக்கும் அதே ஹதீஸை ஒப்புக் கொண்டு விட்டார்கள். (அல்ஹம்துலில்லாஹ்)

உண்மையை நாடும் சகோதரர்கள் குறிப்பாக தௌஹீது சகோதரர்கள் இதை ஒப்புக் கொண்டு தங்களின் பிடிவாதத்தை விட்டு விலகி உண்மையை ஏற்க முன்வருவார்களா? எது எப்படியாயினும் இந்த காலத்தின் இமாமாக மஹ்தி(அலை) அவர்கள் ஒரு முன்னறிவிப்பு செய்துள்ளதையும் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் அவர்கள் கூறுகிறார்கள்.

"உண்மை நிச்சயமாக சிறிது சிறிதாக வெளிவந்தே தீரும் பொய் ஓடி ஒளிந்து கொள்ளும் இதை வரக்கூடிய காலம் கண்டு உணரும்"

இந்த முன்னறிவிப்பு அழகிய முறையில் நிறைவேறி அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தின் உண்மை ஒளி வீசிக்கொண்டிருப்பதை நல் உள்ளம் கொண்ட உண்மையை நாடுபவர்கள் அறிந்து இந்த ஜமாத்தில் இணைந்துகொண்டிருக்கிரார்கள். கடின உள்ளம், வெறுப்பு, துவேஷம்,கர்வம், அகம்பாவம் மற்றும் இறைவனால் உள்ளத்தில் முத்திரை குத்தப்பட்டவர்களும் இதனை மறுப்பதில் எவ்வித ஆச்சர்யத்திற்கும் இடமில்லை. அல்லாஹ் நேர்வழியை, சத்தியத்தை நாடுபவர்களுக்கு வழங்கியருள்வானாக, ஆமீன்.
Read more »

Jul 23, 2011

நஜாத் நிர்வாகிகளின் கூற்றுக்கு பதில்!


Read more »

Jul 19, 2011

விஜயபாரதம் ஏட்டிற்கு பதில்



நபிபெருமானார் (ஸல்) அவர்களின் திருமணம். 

நபி(ஸல்) அவர்கள் மீது குற்றம் சாற்ற முயன்றவர்கள் எல்லோருமே அம்மாநபி உலகுக்கு தந்த உயரிய போதனைகளிலோ குற்றம் காண முடியாத நிலையில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை, குறிப்பாக, அவர்கள் பல திருமணங்கள் செய்ததை குறை கூறுகின்றனர். 'விஜயபாரதம் ஏட்டின் ஆசிரியரும் இதற்க்கு விதிவிலக்காக இல்லை. நபி பெருமானார் அவர்கள் பல திருமணங்கள் செய்திருந்ததை இவர் எள்ளி நகையாடுகிறார். 

பூகோள ரீதியில் மட்டுமல்லாது பண்பாட்டிலும் நாகரீகத்திலும் கூட பாலைவனமாக இருந்த அந்த அரபு நாட்டு மண்ணில் அண்ணல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் செய்திருந்த பெரும் புரட்சியை சமுதாயச் சீரமைப்பு, அவர்கள் உலகுக்கு சொன்ன உயரிய நன்னெறிகள், அரசியலமைப்பு தத்துவங்கள், உலகுக்கே வழிகாட்டக்கூடிய ஓர் உன்னத சமுதாயத்தை ஒரு குறுகிய காலத்தில் உருவாக்கியிருந்த அவர்களின் சாதனை இவையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு அந்த மாநபி செய்திருந்த திருமணங்களை அவற்றுக்கான காரணங்களை கூட தெரிந்து கொள்ளாத நிலையில் குறை சொல்லும் இததகையோரின் குறுகிய மனப்பான்மையை, எதிலும் குற்றம் காணும் மனப்போக்கை என்னவென்று சொல்வது. 

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் அந்த அரபு சமுதாயத்திலே தரங்கெட்ட வாழ்க்கை புரையோடிருந்தது. தந்தையின் மனைவி அவரின் மறைவுக்கு பின் தனயனின் மனைவியாவது அங்கு சர்வ சாதாரணமாக நடை முறையில் இருந்தது. தாய்க்கும் தாரத்திற்கும் வேறுபாடு தெரியாதிருந்தது. வைப்பாட்டிகள் வைத்திருப்பது பெருமைக்குரியதாக கருதப்பட்டது. முறையான திருமணங்கள் அங்கு குறைவாகவே இருந்தது. இத்தகைய

காட்டு மிராண்டித்தனமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த அந்த அரபுச் சமுதாயத்திலே தான் நபிபெருமாநாறும் வாழ்ந்திருந்தார்கள்.

ஆயினும் நபிபெருமானாரின் வாழ்க்கை இளமைப்பருவம் முதல் அப்பழுக்கற்ற வாழ்க்கையாக இருந்திருந்தது. அவர்கள் தம்மை இறைவனின் தூதுவராக பிரகடனப் படுத்திக் கொண்டபோது அங்கிருந்த மக்கள் அவர்களைப் பொய்யன் என்று தூற்றினார்கள். அப்போது அந்த மாநபி "நான் உங்கள் மத்தியிலே ஒரு நீண்ட காலம் வாழ்ந்திருந்தேன் என்னிடத்தில் ஏதேனும் குறையினை நீங்கள் கண்டதுண்டா?" என்று கேட்டார்கள். அன்றைய தினம் அங்கு மௌனம் நிலவியது. அதுவே நபிபெருமானாரின் அப்பழுக்கற்ற வாழ்க்கைக்கு அத்தாட்சியாக விளங்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் தமது இருபத்தைந்தாவது வயதில் நாற்பது வயதான கதீஜா அவர்களை மணம்முடித்தது மட்டுமல்லாது ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் அவர்களுதேனேயே இல்வாழ்க்கை நடத்தி வந்தார்கள். கதீஜா அவர்களின் மறைவுக்கு பின்னரே நபி(ஸல்) அவர்கள் வேறு மனங்களை செய்திருந்தார்கள். அவைகளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும் இஸ்லாத்தின் உயரிய இலட்சியங்களை உலகறியச் செய்வதர்க்காக்கவுமேயாகும்.

பல திருமணங்கள் செய்ததினால் நபி பெருமானார்(ஸல்) அவர்கள் உலக இன்பங்களில் ஆர்வம் உள்ளவர்களாய் இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் தமது கொள்கைகளை விட்டுவிடுவார்கலேயானால் அவர்களுக்கு பொன்னும் பொருளும் மட்டுமல்ல அழகிய பெண்களையும் தருவதாக அன்று அக்குரைசித் தலைவர்கள் சொன்னார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்களோ அவற்றை ஏற்க்\கவில்லை இத்தகைய ஒரு மனிதப் புனிதரை உலக ஆசை மிகுந்தவர் என்று எவ்வாறு கூற இயலும்.

அண்ணல் நபிபெருமானார் அவர்கள் தமது ஐம்பதாவது வயதிற்கு பிறகு பல திருமணங்கள் செய்திருந்தார்கள். அவை பற்றிய விவரங்களை இங்கு தருவது தப்பெண்ணம் கொண்டிருப்பவர்கள் தம்மைத்திருத்திக் கொள்ள வழியாக அமையும் .

நபி(ஸல்) அவர்களால் திருமணம் முடிக்கப்பட்டவர்களில் ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர மற்றவர்களெல்லாம் விதவைகளும் விவாக விலக்கு பெற்றவர்களுமே ஆவார்கள்.

கதீஜா நாயகியின் மறைவிற்கு பிறகு நபி பெருமானார் சவ்த நாயகியை மணமுடித்தார்கள். இவர்கள் சக்கறான் பின் அம்ர் என்பவரின் மனைவியாக இருந்தவர். சக்கறான் பின் அம்ர் அவர்கள் ஆரம்பகாலத்தில் இஸ்லாத்தை தழுவியவர்களில் ஒருவர். இவருடைய திடீர் மரணத்தால் சவ்தா நாயகி விதவையானது மட்டுமல்லாமல். அவர் முஸ்லிம் ஆனதால் உறவினர்களாலும், நண்பர்களாலும் கைவிடப்பட்டு நிற்கதியாக நின்றிருந்தார்கள். மனிதத்துவத்திற்கு இலக்கணமாக திகழ்ந்திருந்த நபிபெருமானார்(ஸல்) அவர்கள் சவ்தா நாயகியை மணமுடித்து அவர்களுக்கு ஆதரவு தந்தார்கள்.

அடுத்து நபித்தோழர்களில் முதன்மையானவரும் நபிபெருமானாருக்கு மிக நெருங்கியவருமான அபூபக்கர்(ரலி) அவர்கள் தமது மகளான ஆயிஷா நாயகி அவர்களை மிகவும் கட்டாயப்படுத்தி நபி(ஸல்) அவர்களுக்கு மணமுடித்து தந்தார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு பதிமூன்று அல்லது பதினான்கு வயதிருக்கும். இதன் காரணமாக இஸ்லாத்தின் எதிரிகள் பலர் இத்திருமணத்தை விமர்சித்து வருகின்றனர். ஆனால் நபிபெருமானார் செய்திருந்த திருமணத்தால் இஸ்லாமிய சமுதாயம் பெரும்பலனைப்பெற்றது .
அறிவாற்றலும், புத்திசாலித்தனமும் மிகுந்த ஆயிஷா நாயகி அவர்களுடன் ஏறத்தாள எட்டு வருடங்கள் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்திருந்தார்கள் ஒரு சமூக சீர்திருத்தவாதி என்ற நிலையிலே சமூகத்தில் சரிபாதியான பெண்ணினத்திற்கு இஸ்லாத்தின் கொள்கை கோட்பாட்டை எடுத்துச் சொல்லவும் அவர்களை சீர்திருத்தவும் வேண்டிய பொறுப்பு நபிகள் நாயகத்திற்கு இருந்தது. இதனை திறம்பட நிறைவேற்றுவதில் அண்ணல் நபிபெருமானாருக்கு ஆயிஷா நாயகி பெரிதும் உதவி இருந்தார்கள். அதுமட்டுமல்ல, நபி(ஸல்) அவர்களின் உயரிய நடைமுறைகள் பல அன்னை ஆயிஷா நாயகியின் மூலமாக இஸ்லாமிய சமுதாயத்திற்கு தெரிய வந்தது. ஹதீஸ்களில், நபிமொழிகள் சரிபாதிக்கு மேல் ஆயிஷா நாயகியே அறிவித்துள்ளார்கள். "நீங்கள் மார்கத்தை ஆயிஷாவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்." என நபி(ஸல்) அறிவித்திருப்பது அன்னை ஆயிஷா நாயகியின் சிறப்பியல்பை எடுத்துக்காட்டுகிறது. இவற்றிலிருந்து வெறும் குடும்ப வாழ்க்கைக்காக மட்டும் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா நாயகியை திருமணமுடிக்கவில்லை. மாறாக அதற்க்கு மேற்சொன்ன உயரிய நோக்கம் இருந்தது என்பது புலனாகும்.

ஹஸ்ரத் குனைஸ் (ரலி) அவர்கள் ஆரம்ப கால் முஸ்லிம்களில் ஒருவர். இவர் பதர் யுத்தத்தின் போது படுகாயமுற்று சஹீது ஆனார்கள். இதனால் விதவையான ஹப்ஸா நாயகியை அவருடைய தந்தையான உமர்(ரலி) அவர்கள் நபிபெருமானாருக்கு மணமுடித்து தந்தார்கள்.

அடுத்து நபிபெருமானாரால் மனமுடிக்கப்பட்ட உம்முசல்மா நாயகியும் ஒரு விதவையே. இவருடைய கணவர் உஹத் போரில் இறைவனடி சேர்ந்தார்கள். அதன் காரணமாக உம்முசல்மா அனாதையானார்கள். இவரை திருமணம் செய்ததன் காரணமாக நபிபெருமானார் அவர்கள் விதவை விவாகத்திற்கு ஊக்கமளித்தார்கள்.

நபி(ஸல்) அவர்களின் திருமணங்களில் அதிக விமர்சனத்திற்கு உள்ளானது அவர்கள் அவர்களின் வளர்ப்பு மகனாக இருந்த செய்து அவர்களால் விவாக விலக்கு அளிக்கப்பட ஜைனப் நாயகியை திருமணம் முடித்திருந்ததுதான். ஹஸ்ரத் செய்து அவர்கள் அடிமையாக விற்கப்பட்டவர். நபிபெருமானார் கதீஜா நாயகியை மணமுடித்தபோது சைத அவர்களுக்கு விடுதலை தந்தார்கள். ஆனால் சைத அவர்களோ நபிபெருமானார் அவர்களை பிரிய சம்மதிக்கவில்லை. அவருடைய பெற்றோர் அவரை அழைத்தபோது கூட அவர்களுடன் செல்லாது அவர் நபி பெருமானாருடனேயே இருந்து விட்டார். நபி(ஸல்) அவர்களும் அன்னவரை தமது வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார்கள்.

அதுமட்டுமல்ல இஸ்லாத்தில் இனவேறுபாடு ஏற்றத்தாழ்வு இவைகளுக்கு இடமே இல்லை என்பதை உணர்த்தும் வகையிலே உயர் குலத்தை சார்ந்தவரும் தமது தாயாரின் சகோதரி மகளுமான ஜைனப் அவர்களை அடிமையாய் இருந்த சைதிற்கு நபி(ஸல்) அவர்கள் மணமுடித்து வைத்தார்கள், சைய்து  சிறுவயது முதலே அடிமையாய் இருந்த காரணத்தால் அவரிடத்திலே தாழ்வு மனப்பான்மை வேரூன்றி இருந்தது. இதனால் உயர் குலப்பெண்ணான ஜைனப் அவர்களுடன் அவருக்கு ஈடுபாடு இல்லாதிருந்தது. இந்தத் திருமணம் ஒரு உன்னதமான நோக்கத்தின் அடிப்படையில் செய்து வைக்கப்பட்ட திருமணம் எனினும் அவர்கள் இருவருக்கும் இடையில் மனப்பொருத்தம் ஏற்படாத காரணத்தினால் விவாக விலக்கு ஏற்பட்டது . இந்தத் திருமணத்தை நபி(ஸல்) அவர்களே முன்னின்று நடத்தியதால் அது முறிந்து விட்டதில் அவர்களுக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டது. இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்டவே நபி பெருமானார் அவர்கள் ஜைனப் நாயகியை திருமணம் செய்தார்கள்.

ஓர் அடிமையால் விவாக விலக்கு அளிக்கப்பட்ட ஒரு பெண்ணை திருமணம் செய்வதென்பது சிறுமையான ஒரு காரியமாக அரபுமக்களால் கருதப்பட்டிருந்தது நபிபெருமானார் ஜைனபை மணந்தது ஆண்டான் அடிமை என்ற பேதம் இஸ்லாத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.

நபிபெருமானாருடைய மற்றொரு மனைவி ஜுவைரியா ஆகும். இவர் ஒரு யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவர். மேலும் இவர் ஒரு விதவை இவரை நபிபெருமானார் திருமணம் முடித்த காரணத்தால் இவருடைய தந்தையும் உறவினர்களும் இஸ்லாத்தில் இணைந்தனர்.

உம்மு ஹபீபா நாயகி அக்காலத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு பெரும் எதிரியாக இருந்த அபூசுப்யானின் மகளும் ஆரம்பகால முஸ்லிம்களில் ஒருவராயிருந்த உபைதுல்லாஹ் என்பவரின் மனைவியாகவும் இருந்தார். உபைதுல்லாஹ் இஸ்லாத்தை விட்டு வழிதவறி கிறிஸ்தவராக மாறினார். கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி அகால மரணமடைந்தார். ஆனால் உம்மு ஹபீபா நாயகி இஸ்லாத்தை விட்டுவிடாமல் உறுதியான நம்பிக்கையோடு இருந்தார். இவர்களுக்கு ஆதரவு தர இவர்களை நபிபெருமானார் அவர்கள் மணமுடித்தார்கள். இதன் பயனாக இஸ்லாத்தை எதிர்த்திருந்த அபூசுப்யானின் மனம் மாறி அதனை ஏற்று முஸ்லிமானார்கள்.

நபி(ஸல்) அவர்கள் செய்திருந்த திருமணங்கள் உயரிய நோக்கங்களின் அடிப்படையில் அமைந்தவை ஆகும். மனித இனத்திற்கு ஒரு அழகிய முன்மாதிரி என்ற வகையிலே நபி(ஸல்) அவர்கள் செய்திருந்த திருமணங்கள் பெரும் படிப்பினைகல் அடங்கியுள்ளன. சமுதாயத்திலே பெண்களுக்கு உயர்ந்த இடம் அளிக்கும் வகையிலும் விதவைகளுக்கும், விவாக விலக்கு பெற்றவர்களுக்கும் மறு வாழ்வு அளிக்கும் வகையிலும் அத்திருமணங்கள் முமாதிரிகளாக அமைந்துள்ளன.

நபி(ஸல்) அவர்கள் செய்த திருமணங்கள் பற்றி பாஸ்வொர்த் ஸ்மித் என்ற ஐரோப்பிய வரலாற்றாசிரியர் இவ்வாறு எழுதுகின்றார்.

முஹம்மத் செய்திருந்த திருமணன்களுக்கு தகுந்த காரணங்கள் இருந்தன. அவர் மணமுடித்திருந்த பெண்களின் பரிதாப நிலை அதில் ஒன்ரூ. அதில் பெரும்பாலானோர் விதவைகள், அனாதைகள் ஆவார்கள். அழகும் செல்வமும் அவர்களிடத்தில் இருக்கவில்லை. மாறாக அதற்க்கு நேர் எதிராக அவர்கள் நிலை இருந்தது. கதீஜாவுடன் அவருடைய இறப்பு வரை முஹம்மத் நம்பிக்கை மிக்க கணவராக இருந்தும் ஐம்பது வயது வரை ஒரே மனைவியோடு வாழ்ந்திருந்ததும் அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை பொருளற்றதாக்கிவிடுகின்றது. (முஹம்மத் அண்ட் முஹம்மதிசம், பக்கம் ௧௩௬)

நபிபெருமானார்(ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்திருந்ததை ஆட்சேபிக்கின்ற விஜயபாரதம் ஆசிரியர் திரு இராமகோபாலன் போன்றோர் இந்து மத இதிகாசங்களை திரும்பி பார்க்க வேண்டும். அங்கு அவதார புருஷர்களும் ரிஷிகளும் முனிவர்களும் கூட ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைக் கொண்டிருந்தனர் என்பதற்கான சான்றுகள் காணக்கிடக்கின்றன. அவர்களெல்லாம் அந்தந்த காலத்திலிருந்த சூழ்நிலைகளுக்கேற்ப தமது மணவாழ்க்கையை அமைத்திருந்தனர். அவற்றை, அந்த சூழ்நிலைகளை உணராத நிலையில் ஆட்சேபிப்பது அறிவுடமையாகாது. அப்பழுக்கற்ற அவர்கள் மீது அவதூறு சொல்வது இறையோனின் கோபத்திற்கு நம்மை ஆளாக்கிவிடும்.
Read more »

இரண்டாவது இயேசு வந்து விட்டார்


இயேசுவின் இரண்டாவது வருகையை பற்றி வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிற அடையாளங்களுக்கு முற்றிலும் முரணானவற்றில் நம்பிக்கை வைத்து கொண்டிருக்கிற கிருஸ்தவகள், மனுஷ குமாரன் (கிருஸ்தவகளின் கருத்துப்படி, இயேசு கிறிஸ்து) வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும் வானத்திலுள்ள மேகங்களின் மேல் வந்திறங்குவார் என்றும், அப்போது பூமியிலுள்ளோர் யாவரும்அவரைக் கண்டு புலம்புவார்கள் என்றும், வேதாகமத்திலுள்ள சொற்களுக்கு மேலெழுந்தவாரியாக பொருள் கொண்டு பெரிய தவறிழைத்து வருகிறார்கள்.

கிருஸ்தவ சகோதரர்கள் பிரச்சாரம் செய்வதுபோல் மிகுந்த எக்காளத்தோடும், மிகுந்த வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும் மனுஷ குமாரன் வானத்திலுருந்து எல்லோருடைய கண்களும் காணும்படி வெளிப்படையாக தோன்றுவதாக இருந்தால், அவர் எக்காளச் சத்தத்தோடு தமது தூதுவர்களை அனுப்புவதாக இருந்தால், இவ்வுலகில் உள்ள எந்த மனிதனும் அவர் மீது நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொள்ளாதிருக்க முடியாது. வானத்திலிருந்து மேகங்கள் சூழ மனுஷ குமாரன் இறங்கி வருவது யாருடைய கண்களுக்குத்தான் தெரியாமல் போகும்? அப்படி எவனாகிலும் ஒருவன் மனுஷ குமாரன் மீது நம்பிக்கை கொள்ளாதிருந்தால் அவனை மானிடப்பிறவி என்று நாம் எவ்வாறு கூறமுடியும். 

இறைவன் கையாளும் வழிகள் இப்படிப்பட்டவை அல்ல, நல்லவர்களையும், தீயவர்களையும் பிரித்தறிவதற்காக இறைவன் சில ஒழுங்குமுறைகளை செய்திருக்கின்றான். அவற்றின்படி நல்லவர்கள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கெட்டவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள், நேர்மையாளர்களையும், நெறிதவறியவர்களையும் இவ்விதம் பிரிதரிந்தால் தான் (எல்லா வேத நூற்களிலும் சொல்லப்பட்டபடி) அவர்களுக்கு வெகுமதியோ, தண்டனையோ கொடுக்கமுடியும். இவ்விதம் பிரித்தறியாவிட்டால், தண்டனை பெறுவோரும், வெகுமதியடைவோரும் ஒன்றாக அல்லவா கருதப்படவேண்டும்? அப்படியானால், ஒருவன் எத்தனையோ சங்கடங்களுக்கும், கஷ்டங்களுக்கும் உட்பட்டு தேடிய நற்கருமங்களுக்கு இறைவன் ஒரு பலனையும் தரமாட்டன் என்றும், ஒருவன் எப்படிப்பட்ட தீய வழியை பின்பற்றியிருந்தாலும், எத்தகைய கொடுமை இழைத்திருந்தாலும் அவனுக்கு எவ்வித தண்டனையும் கிடையாதென்றும் , மனுஷ குமாரன் வானத்திலிருந்து எக்காளமிட்டுக்கொண்டே தோன்றும் காலத்தில் இவ்விருசாராரையும் இறைவன் ஒன்றாகவே பாவிப்பான் என்றும் நாம் கூறவேண்டியதிருக்கும்.

மனுஷ குமாரன் இவ்விதம் பகிரங்கமாக எக்காளச் சப்தமிட்டு உலகத்தில் இருப்போர் அத்தனைபேரையும் தட்டி எழுப்பச் செய்வாரென்றும், அவர் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திவிட்டு மேகங்களிலிருந்து கீழே இறங்கி வருவார் என்றும் பிரசாரம் செய்யும் கிருஸ்தவர்கள் கீழ்க் கண்ட வேதாகம வாக்கியங்களை ஏன் மறந்துவிடுகிறார்கள்? என்பது நமக்கு விளங்கவில்லை.

"மனுஷ குமாரன் வரும் நாளையும், நாழிகையையும் நீங்கள் அறியாதிருக்கிற படியால் விழித்திருங்கள். (மத்தேயு 25:13)

"உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டு எஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டை கண்காணிப்பான் என்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷ குமாரன் வருவார்: ஆதலால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் ." (மத்தேயு 24:42-44)

"அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும் அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து..." (மத்தேயு 24:60)

இவ்வாக்கியங்களிளிருந்து ஒரு திருடனைப்போல் சப்தம் செய்யாமல் அமைதியாக வந்து சென்று விடுவாரென்றும், அவர் வருகின்ற நாளும் நாழிகையும் மக்களுக்கு தெரியாதென்றும் புலப்படுகின்றது.

"அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும், மிகிந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள் மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்." (மத்தேயு 24:30) 

என்று வேதாகமத்தில் எழுதப்பட்டிருப்பது உண்மையே, நாம் முன்னர் கூறியபடி இந்த வாக்கியத்திலுள்ள ஆழிய கருத்தை ஆராய்ந்து உணராமல் ஆதிகால யூதர்கள் செய்தது போன்றே மேலெழுந்த வாரியான அர்த்தம் கற்பித்து உண்மையான கருத்தை கைநழுவ விட்டுவிட்டார்கள், நமது மதிப்பிற்குரிய சகோதரர்கள்.

யூதர்கள் ஒரு கிறிஸ்துவின் வருகையில் நம்பிக்கை வைப்பதற்காக, முந்தைய வேதத்தில் சொல்லப்பட்ட படி ஒரு எலியாவை (இலியாஸ்) வானத்திலிருந்து எதிர்பார்த்திருந்தார்கள் அவர்கள் எதிர்பார்த்தப்படி எலியா வானத்திலிருந்து இறங்கி வராமல் அவர்களுக்கு மத்தியிலேயே ஒரு சாதாரண மனிதனாக ஒரு யோவானாக தோன்றியதால், யூதர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை, கிறிஸ்து யூதர்களின் ராஜா வாகத் தோன்றுவார் என்று யூதர்கள் நம்பியிருந்தார்கள். ஆகவே ஒரு ஏழை நாசரேயனாகிய ஏசுவைக் கிறிஸ்துவாக அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை .

இயேசு தம்மைக் 'கிறிஸ்து' வாக வாதிடும் காலத்தில் யூதர்கள் அவரை நோக்கி: "கிறிஸ்து தோன்றுவதற்கு முன்னால் எலியா வானத்திலிருந்து இறங்கி வர வேண்டுமே, அவர் இன்னும் வரவில்லையே என்று கேட்டதற்கு இயேசு கூறிய பதில் என்ன?

கிறிஸ்து தோன்றுவதற்கு முன்னால் எலியா தோன்றுவார் என்பது உண்மையே. ஆனால் எலியா தோன்றிவிட்டார். யோவான் தான் நீங்கள் எதிர்பார்த்திருக்கும் எலியா என்று இயேசு கிறிஸ்து அவர்களிடம் கூறிவிடவில்லையா?

இதன்படி, யூதர்கள் எண்ணி இருந்ததைப்போல, எலியா வானத்திலிருந்து ஒருபோதும் தோன்றமாட்டார் என்பதும் எலியாவின் ஆவியிலும் பலத்திலும் மற்றொருவரே தோன்றுவார் என்பதும், அந்த மற்றொருவர் யோவானே என்பதும் நிரூபணம் ஆகிவிடவில்லையா? இயேசு கிறிஸ்து இப்படி கூறியதால் முந்திய வேதங்களிலுள்ள வாக்கியங்கள் பொய்யாகி போய்விட்டனவா? இல்லையே! பின்னர் யூதர்கள் ஏன் இயேசுவின் சொற்களை ஏற்றுக்கொள்ளாமல், எலியா இன்னும் வானத்திலிருந்து தோன்றவில்லை, ஆகவே கிறிஸ்து என்று வாதிடும் இந்த இயேசு ஒரு கள்ள தீர்க்கதரிசி தான் என்று முடிவு செய்து அவரை சபிக்கப்பட்ட மரணத்திற்கு ஆளாக்க விரும்பி, சிலுவையில் அறைந்து கொடுமை செய்தார்கள்?

"இவ்வளவு பெரிய கொடுமையையும், தவற்றையும் யூதர்கள் செய்ததற்கு காரணம் என்ன ஒரேஒரு காரணம்தானே!

வேத வாக்கியங்களை அப்படியப்படியே மேலெழுந்த வாரியாக அவற்றின் சொற்பொருள்படி யூதர்கள் பின்பற்றினார்கள்; அவ்வாகியங்களில் பொதிந்துள்ள கருத்தை அவற்றில் சொல்லப்பட்ட விசயங்களை பின்பற்றவில்லை. யூதர்கள் எலியா மற்றும் இயேசு கிறிஸ்துவுக்கும் இளைத்த துண்பம்களுக்கெல்லாம் இதுதான் மூல காரணம். வேத வாக்கியங்களில் நிறைந்துள்ள வார்த்தைகளை யூதர்கள் பின்பற்றினார்கள்: அவற்றின் அடியிலுள்ள விஷயத்தை விட்டுவிட்டார்கள். கிருஸ்தவர்கள் பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும் வேதாகமத்திலேயே இப்படித்தான் கூறப்பட்டிருக்கிறது. பிறகு எவ்வாறு கிறிஸ்தவர்களால் இதனை மறுத்துக் கூறமுடியும்?

எப்படியிருப்பினும், அப்பலங்கால யூதர்கள் செய்த தவற்றையே அறிவியல் அறிவு மிகுந்த இக்காலத்தில்- கல்வி அறிவு நிறையப்பெற்ற கிருஸ்தவ சகோதரர்களும் செய்து வருவது விந்தயில்லையா? மனுஷ குமாரன் மேகங்களிலிருந்து பூமியில் வந்திறங்குவார் என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டிருப்பதால், வானத்திலிருந்து இறங்கிவரக்கூடிய ஒரு மனுஷ குமாரனையே இவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

கிறிஸ்து தோன்றும் முன்னர், எலியா, தோன்றுவார் என்று முந்தய வேத நூற்களில் சொல்லப்பட்டிருந்தும் மரணித்துப்போன அதே பழைய எலியாதான் உயிரோடு மீண்டும் யூதர்களுக்கிடையில் தோன்றினாரா? அல்லது இயேசு கிறிஸ்துதான் அந்த மூடக் கருத்தை ஆதரித்தாரா? இரண்டும் இல்லை. மரணித்துப்போன எலியா மீண்டும் தோன்றுவாரென்றால், எலியாவின் வல்லமையிலும், கருத்திலும் அவரையொத்த மற்றொருவர் தோன்றுவார் என்றுதான் பொருள் என இயேசு கிருஸ்துவே விளக்கிக் கூறி யூதர்களின் அறிவிற்கு புறம்பான நம்பிக்கையை இடித்துரைக்கவில்லையா?

அப்படியானால், இயேசு இரண்டாம் முறையாகத் தோன்றுவாரென்று கிருஸ்தவர்களுக்கு மத்தியில் ஒரு நம்பிக்கை இருந்தால், அவர்கள் வானத்தை ஏன் ஏறிட்டு பார்த்து கொண்டிருக்கவேண்டும்? இயேசு மீண்டும் வருவார் என்பதன் பொருள் இயேசுவின் வல்லமையையும் இயேசுவின் கருத்தையும் கொண்ட அவரையொத்த மற்றொருவர் தோன்றுவார் என்பதுதானே பொருள்?

இயேசுவின் வல்லமையிலும், கருத்திலும் அவரையொத்த மற்றொருவர் ஏற்கனவே தோன்றிவிட்டார். அவரே பஞ்சாப் மாநிலத்தை சார்ந்த காதியான் என்னும் கிராமத்தில் பிறந்த ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத்(அலை) அவர்கள்! இவருடைய வருகையால் இயேசுவின் இரண்டாவது வருகைபற்றிய தீர்க்க தரிசனம் நிறைவேறிவிட்டது.

வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையைப்பற்றி, அதாவது மனுஷ குமாரனுடைய வருகையைப்பற்றி சொல்லப்பட்ட அடையாளங்கள் யாவும் ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்களின் வருகையின் போது தவறாமல் நிறைவேறிவிட்டன. சில ஆதாரங்களை கீழே காண்போம்.

"அந்நாட்களில் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்த காரப்படும், சந்திரன் ஒளியை கொடாதிருக்கும். நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும். வானத்தின் தத்துவங்கள் அசைக்கப்படும்." (மத்தேயு 24:29)

இயேசுவின் இரண்டாவது வருகைக்குரிய காலம் கி.பி 1873-ல் தொடங்குகிறது என்று கிருஸ்தவ வல்லுனர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். தமது வருகையால் இயேசுவின் இரண்டாவது வருகை நிறைவேறிவிட்டது என்று வாதிடும் வாக்களிக்கப்பட்ட மெசாயா ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு, இறைவனிடமிருந்து (revelation) வெளிப்பாடு கிடைத்தது. இந்த ஆண்டிலேயே என்பது குறிப்பிட தக்கது.

மனித குமாரன் தோன்றும் போது சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியை தராது, நட்சத்திரங்கள் வானத்திலிருந்து உதிரும் என்று வேதாகமத்தில் கூறப்பட்டபடி, சூரிய சந்திர கிரகணங்கள் இவ்வுலகே பிரமிக்கத்தக்க அளவில் நடந்தேறின, நட்சத்திரங்கள் வானத்திலிருந்து உதிர்ந்தன. கி.பி. 1894 ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் வெள்ளிகிழமை அன்று சூரிய கிரகணமும், கி.பி. 1894-ம ஆண்டு மார்ச்சு மாதம் இருபத்து ஒன்னாம் நாள் வியாழக்கிழமை அன்று சந்திர கிரகணம் உண்டாயின. வாக்களிக்கப்பட்ட மெசாயா தோன்றும் காலத்திற்கு அடையாளமாக ஒரு ரமலான் மாதத்தில் சூரிய சந்திர கிரகணங்கள் தோன்றும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரு தீர்க்க தரிசனத்தின் மூலமாக முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். அதற்கேற்பவே, நாம் மேலே குறிப்பிட்ட சூரிய சந்திர கிரகணங்கள் ஒரு ரமலான் மாதத்திற்குள்ளேயே நிகழ்ந்தேறின. உலகம் தோன்றிய நாள் முதலாக இப்படிப்பட்ட சூரிய சந்திர கிரகண நிகழ்ச்சிகள். ஒரு மாத காலத்திற்குள் நடைபெற்றதே இல்லை என வானவியல் ஆராட்சியாளர்கள் அத்தாட்சி பகருகின்றனர். வாகளிக்கப்பட்ட மெசாயாவாகிய ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்களின் உண்மையை வலியுறுத்த இறைவன் எத்தகைய பலமிக்க அத்தாட்சிகளை அருளியிருக்கின்றான்.

ஹாம்ஸ்வொர்த் சர்வதேச கலைக்களஞ்சியத்தில் கி.பி. 1872, 1885, 1892 ஆகிய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் நட்சத்திரங்கள் வானத்திலிருந்து உதிர்ந்தன என்ற உண்மை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சூரிய, சந்திர கிரகணங்கள் நடைபெற்றதைப் போன்றே, மனுஷ குமாரன் வரும் காலத்தில் மற்றொரு அடையாளமாகிய நட்சத்திரங்கள் உதிர்வதும் பிசகாமல் நடந்தேறிவிட்டது. உண்மையை உணர்ந்து, அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவற்றைப்போன்ற இவற்றைப் போன்ற அத்தாட்சிகள் எத்தனை எத்தனையோ!

வலுவாய் தொனிக்கும் எக்காளச் சத்தத்தோடு அவர் தமது தூதர்களை அனுப்புவார். அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தில் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனை மட்டும் நாலு திசைகளிலிருந்தும் கூட்டி சேர்ப்பார்கள். (மத்தேயு 24:31)

ஹஸ்ரத் அஹ்மத் அவர்களுடையா தூதர்கள் உலகத்தின் ஒவ்வொரு பாகத்திற்கும் சென்று பலம் பொருந்திய இஸ்லாத்தின் போதனைகளை பிரச்சாரம் செய்து, இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை நான்கு திசைகளிலிருந்தும் ஒன்று திரட்டினார்கள் என்ற உண்மையை உணர்வோர் எவரும் மேற்கண்ட தீர்க்கதரிசனம் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களிடத்தில் முழுமையாக நிறைவேறி விட்டதைகண்டு கொள்வர். இவ்வுலகில் இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் அஹ்மதியா பிரச்சார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
Read more »