அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jun 5, 2022

இன்றைய அஹ்மதிய்யா ஜமாஅத்தின் நிலையும் இறுதி நபிக்கொள்கையும்

முன் சென்ற முதலாவது மஸீஹ் அதாவது ஈஸா (அலை) அவர்களின் சமுதாயம் எவ்வாறு ரூஹுல் குத்தூஸினால் எழுப்பப்பட்ட இறையருளை நிராகரித்து, ஈஷா (அலை) அவர்களை தொடர்ந்து ஏற்பட்ட கிலாஃபத்தை தேர்வு செய்தார்களோ, அவ்வாறே இன்றைய நிஜாமிகள், இறைபுரத்திலிருந்து ரூஹுல் குத்தூஸினால் பலப்படுத்தப்பட்ட கலீபஃத்துல்லாஹ் தோன்றும்போது, இரண்டாவது ஈஸாவின் அதாவது, மஸீஹ் மவூது (அலை) அவர்களின் கிலாபத்தின் தொடரை தேர்வு செய்துகொண்டனர். மேலும், இன்றளவும் முதலாவது ஈஸா (அலை) அவர்களின் நேர்வழி பொருந்திய கலீஃபாக்களுக்கு பிறகு பெயர்தாங்கிய கலீஃபாக்களின் (போப்) ஆட்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

மேலும், இவர்களும் அமைப்பு ரீதியாக, பொருள் தியாகத்திலும், தங்களது சந்ததிகளை அவர்களின் இறைவனுக்கு வக்பு செய்வதிலும், அவர்களின் இறை இல்லத்தை அழகிய பிரமாண்டமாக எழுப்புவதிலும், சமூக சேவை மற்றும் கல்விகூடம், மருத்துவமனை என்று பல்வேறு கட்டமைப்புகளை ஒரு தலைமையின் கீழ் இயங்கி கொண்டுதான் உள்ளார்கள் என்பதுதான் வியப்புக்குரிய ஒற்றுமை!!!

மேலும், எவ்வாறு முஸ்லிம்களுக்கு அவர்களின் இறுதிநபி கொள்கைக்கு திருகுர்ஆன் துணை நிற்பதில்லையோ, அதே போல இவர்களின் நபிமார்கள் அல்லாத கலீஃபாமார்களை மறுமைவரை செல்லும் கூற்றிற்கும் திருகுர்ஆன் துணை நிற்பதில்லை. இன்னும் வியப்புக்குரிய ஒற்றுமை என்னவென்றால் எவ்வாறு வேறு பிரிவு முஸ்லிம்கள் அவர்களின் இறுதி நபி கொள்கைக்காக அவர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையை “லா நபிய்ய பஃதீ” என்ற நபிமொழியின் தவறான புரிதல் வைத்தார்களோ, அவ்வாறே இன்றைய நிஜாமிகள் “கிலாஃபத்அலா மின் ஹாஜி நுபுவ்வத்” என்ற நபிமொழியின் தவறான புரிதலில் தங்களது ஒட்டுமொத்த கொள்கையையும் வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதாவது, முஸ்னத் அஹ்மதில் பதியப்பட்ட நபிமொழி இவ்வாறு வருகின்றது;-

"அல்லாஹ் நாடும் வரை உங்களிடத்தில் இந்த நுபுவ்வத் இருக்கும். பிறகு அல்லாஹ் அதை எடுத்துக் கொள்வான். பிறகு நுபுவ்வத் வழியிலான கிலாஃபத் உருவாகும். அல்லாஹ் நாடும் வரை அது இருக்கும். பிறகு அல்லாஹ் அதையும் எடுத்துக் கொள்வான். பிறகு கொடுங்கோல் ஆட்சி இருக்கும். அல்லாஹ் நாடும் வரை அது இருக்கும். பிறகு அல்லாஹ் அதையும் எடுத்துக் கொள்வான். பிறகு பலவந்தமான ஆட்சி ஏற்படும். பிறகு அல்லாஹ் அதையும் எடுத்துக் கொள்வான். பின்னர் நுபுவ்வத் வழியிலான கிலாஃபத் இருக்கும்."

நாம் மேலே கூறிய ஆதாரங்களை அனைத்தையும் படித்த பிறகு இந்த நபிமொழி எந்தவகை கிலாஃபத்தை பற்றி கூறுகின்றது என்பதை தெளிவாக அறிந்துகொள்ளலாம். அல்ஹம்துலில்லாஹ்...

மேலும், இந்த நபிமொழி ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தில், அன்னாரின் இரண்டாவது வல்லமையாக தோன்றும் ஒவ்வொரு நபியின் இரண்டாவது வல்லமையின் நிலையை குறிக்கின்றது. அதாவது, அந்த நபியின் கிலாஃபத் மற்றும் உம்மத்தே முஹம்மதிய்யாவில் அடுத்த நபி தோன்றும் போது முந்திய நபியின் கிலாஃபத்தின் நிலையை குறிக்கின்றது. இதன் விளக்கத்தை இக்காலத்தில் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமையில் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களுக்கு பிறகு இரண்டாவது நபியாக தோன்றியுள்ள ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

(காண்க:-http://www.jamaat-ul-sahihal islam.com/jusai_files/fs_29may09.htm)

ஒருவேலை இந்த நபிமொழி ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களுக்கு பிறகு தோன்றும் நபிமார்கள் அல்லாத கிலாஃபத்தே ரசூல்மார்களை குறிக்கும் என்றால், இது ஒரு தெளிவான இறுதிநபி கொள்கை மட்டுமல்லாமல் நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமைக்கு, இன்னும் கூறப்போனால் அன்னாரின் நிழல்களின், இன்னும் தெளிவாக கூறினால் அன்னார் மீண்டும் இந்த உலகத்திற்கு ஆன்மீக ரீதியாக வருவதை தடை போடும் மாபெரும் ஆபத்தான நிலையும் ஆகும்.

இவர்களின் மனோ இச்சையின் படி இவர்கள் கொடுக்கும் விளக்கம் ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றிற்கு எதிரானது என்பதை மிக எளிமையாக புரிந்துகொள்ளலாம். குறிப்பாக இந்த நபிமொழியின் ஆரம்பத்தில் கிலாஃபத் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதை எவ்வாறு ஒட்டுமொத்த கிலாஃபத் என்று எடுத்துக்கொள்ள முடியும்? ஏனென்றால், ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்கள் இந்த விளக்கத்தை கேட்டாலே தனது உடல் நடுங்குகின்றது என்கின்றார்கள். இன்னும் அன்னார் ஹஸ்ரத் மூசா (அலை) அவர்களின் கிலாஃபத் எவ்வாறு 1400 வருடங்களாக எந்த தடையும் அன்றி தொடர்ந்ததோ, அதே போல நபிமார்களுக்கு எல்லாம் இமாம் ஆன ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் கிலாஃபத் ஒருபோதும் எடுத்துக்கொள்ளபடவும் இல்லை , அன்னாரின் இரண்டாவது வல்லமையின் தொடர் அறுந்துவிடவும் இல்லை, என்பதே ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் நம்பிக்கையாகும். எனவே இப்போது இந்த நிஜாமிகளின் நிலையை உங்களால் அறிந்துகொள்ள முடியும் இன்ஷாஅல்லாஹ்.

மாறாக இந்த நூற்றாண்டில் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் கிலாபத்தில் 14 வது கலீஃபாவாக தோன்றிய இறைத்தூதர் ஹஸ்ரத் முஹையுதீன் அல் கலீபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் இந்த நபிமொழி, நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் தோன்றும் ஒரு நுபுவத்திற்கும் அடுத்த நுபுவத்திற்கும் இடையே கலீஃபத்துல் ரசூல் கிலாஃபத்தின் நிலை பற்றி கூறுகின்றது. இன்னும் குறிப்பாக கூறுவதென்றால், இந்த நபிமொழியில் எந்த ஒரு கால அளவையும் குறிப்பதில்லை.

மேலும், இந்த நபிமொழி தொடரக் கூடியதுமாகவும், இன்னும் இந்த நபிமொழியை ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுக்கும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களுக்கும் இடைப்பட்ட கிலாஃபத்தே ரசூல்களின் நிலை எவ்வாறு இருந்தது என்று பார்த்தோமேயானால், நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்து அல்லாஹ் நாடியவரை அதாவது அன்னாரின் முதலாவது வல்லமைக்கு பிறகு, அதாவது அன்னாருக்கு பிறகு அல்லாஹ் கிலாஃபத்தை, கிலாஃபத்தே ரசூல் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களின் வடிவில் ஏற்படுத்தினான். பிறகு இந்த கிலாஃபத்தே ரசூல்களின் காலம் 30 ஆண்டுகளில் எடுத்து கொள்ளப்பட்டது. இந்த இடத்தில் ஒரு விசயத்தை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். அதாவது ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் நுபுவ்வத் ஒரு பூர்த்தியடைந்த ஷரீஅத்தின் நுபுவத்தாகும், எனவே அன்னாரின் கிலாஃபத் ஒருபோதும் தடை படுவதோ அல்லது எடுத்துக்கொள்ளப்படுவதோ இல்லை. மாறாக அது ஒரு நிலையில் இருந்து மற்றுமொரு நிலையாக (கலீஃபத்துல்லாஹ்களாக) தான் இருந்தது. அல்ஹம்துலில்லாஹ் .

எனவே, இந்த நபிமொழி படி அல்லாஹ் அன்னாரிடம் இருந்து எடுத்துக் கொண்டது முழு கிலாஃபத்தை அல்ல, மாறாக எடுத்துக்கொள்ளப்பட்டது கிலாஃபத்தே ரசூல் வடிவிலான கிலாஃபத்தைத்தான், ஆனால் அன்னாரின் நுபவத்தின் கிலாஃபத் ஒவ்வொரு நூற்றாண்டிலும் இறைவனின் அருளாக தோன்றிய முஜத்தித்துகளின் மூலம் தொடர்ந்துகொண்டு தான் இருந்தது என்பதை இங்கே நாம் அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். இன்னும் உம்மத்தே முஹம்மதிய்யாவில் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களுக்கும் இடையில் நபி என்ற அந்தஸ்தை ஹஸ்ரத் காத்தமுன் நபீய்யின் (ஸல்) அவர்களின் ஒப்பற்ற பதவியை நிலைநிறுத்த அல்லாஹ் சுபஹான ஹுதாலா எந்த முஜத்தித்துக்கும் வழங்கவில்லை, எனவே நேர்வழியில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட கிலாஃபத்தே ரஸூலுக்கு பிறகு பெயர் தாங்கிய கிலாஃபத் அடுத்த நுபுவத்தான ஹஸ்ரத் மஸீஹ் (அலை) வரை தொடர்ந்தது

இந்த நபிமொழி, மிகத்தெளிவாக நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் தோன்றும் ஒரு நுபுவத்திற்கும் மற்றும் அந்த நுபுவ்வத் தோன்றும் போது கிலாஃபத்தே ரஸூலின் நிலையை முன்னறிவிக்கின்றது, இன்னும் கூறப்போனால் ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் காலத்தில் கூட இந்த கிலாஃபத்தின் அதாவது கிலாஃபத்தே ரஸூல் கலீஃபாவாக அப்துல் ஹமீது-II அவர்கள் இருந்தார். இந்த காலகட்டம் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பிறகு ஒரு மிக நீண்ட நீட்சியாக இருந்துள்ளது என்று ஹஸ்ரத் முஸ்லீஹ் மவூது (ரலி) அவர்களும் உறுதி செய்கின்றார்கள், அல்ஹம்துலில்லாஹ் .

பிறகு, ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் இரண்டாவது வல்லமையாக அவருக்கு பின் தோன்றிய அதாவது, கலீஃபத்துல் ரஸூல்களான கலீஃபத்துல் மஸீஹ்மார்களின் கிலாஃபத் ஏற்பட்டது என்பதே இந்த அருளுக்குரிய நபிமொழியாகும். இன்னும், இந்த நிஜாமிகள் கட்டவிழ்க்கும் மற்றுமொரு சுயவிளக்கம் இந்த நபிமொழிக்கு பிறகு நபி(ஸல்) அவர்கள் அமைதியாகி விட்டார்கள். எனவே, இதற்கு பிறகு இந்த கிலாஃபத்தான் தொடரும் என்ற கற்பனையை அப்பாவி மக்களிடையே பரப்புகின்றனர். மாறாக பெருமானார் (ஸல்) அவர்கள் இது ஒரு முடிவல்ல தொடர் என்பதையே இந்த நபிமொழியில் உணர்த்துகின்றார்கள். இந்த நிஜாமிகளின் கூற்றை போல் அன்னார் ஒருபோதும் இறுதி நபிக்கொள்கையை போதிக்கவில்லை (நஊதுபில்லாஹி மின் தாலிக்)

இக்கூற்றை இன்னும் விளக்கமாக அறிந்துகொள்ள அல்லாஹ் தனது இறைவேதத்தில் இவ்வாறு கூறுகின்றான்:-

அல்லாஹ் மேகத்திலிருந்து தண்ணீரை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? அதனை பூமியில் ஊற்றுகளாக ஓடச் செய்கின்றான். பின்னர் அவன் அதனைக் கொண்டு பல்வேறு நிறங்களைக் கொண்ட புற்பூண்டை வெளிப்படுத்துகின்றான். பிறகு அது உலர்ந்து விடுகிறது. பின்னர் அது மஞ்சள் நிறமாவதை நீர் காண்கின்றீர். பின்னர் அவன் அதனைப் பதராக ஆக்கி விடுகின்றான். நிச்சயமாக இதில் அறிவுடையவர்களுக்கு நற்போதனை இருக்கிறது. (திருக்குர்ஆன் 39: 22 )

இந்த வசனத்திற்கு ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் கூறுகின்ற பொருள் என்னவென்றால், பூமியானது ஆன்மீக ரீதியாக வறட்சியடைந்து விடும்போது, இறைவன் இறை வஹீயின் வடிவத்தில் மழையை இறக்குகிறான். பின்னர் அந்த பூமியானது ஒரு புதிய வாழ்க்கையைப்பெற்று, பல்வேறு நிறங்களையும், சுவைகளையும், தனித்துவ குணங்களையும் கொண்ட பூக்களும், பழங்களும், வளர்ச்சியடைகின்றன.

அதாவது, ஓர் ஆன்மீக சீர்திருத்தவாதி, முஜத்தித் தோன்றுகின்றபோது, நற்குணம் கொண்ட மற்றும் இறைவனுக்கு அஞ்சுகின்ற மனிதர்களின் சமூகம் பிறக்கின்றது, மேலும் பயபக்தியுள்ள மற்றும் கற்றறிந்த ‘உலமா’ அதாவது மார்க்க அறிஞர்களுக்குக்கூட இறைவனுடைய வார்த்தையை அவர் கற்பிக்கின்றார். பிறகு ஒரு நீண்ட இடைவெளி ஏற்பட்டு அதனால் இறைவனுடைய வார்த்தை மறக்கப்பட்டும், அவனுடைய கட்டளைகள் மீறப்பட்டும், கீழ்ப்படியாமையும் உருவாகி விடுகின்றது. மீண்டும், பூமியானது வறண்டு, காய்ந்துபோய், ஒரு நெருப்பில் எறியப்படுவதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கக்கூடிய உலர்ந்த எரிபொருளைப் போன்ற தீய மனிதர்களின் ஒரு தலைமுறையானது மீண்டும் பிறந்து, நல்ல மனிதர்களின் இடத்தைப் பிடித்துக்கொள்கின்றது. இவ்வாறாக இந்த சுழற்சி செல்கின்றது. அதாவது மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றது

இறைவன் மிகத்தெளிவாக ஆன்மீக வறட்சி ஏற்படும்போது, அவன் தனது அருள் மழையை வஹீயின் மூலம் தனது ஆன்மீக சீர்த்திருத்தவாதியின் மீது இறக்கி மீண்டும் பூமியில் ஆன்மீக வசந்த காலத்தை உருவாக்குகின்றான். சிறிது காலத்திற்கு பிறகு மீண்டும் இந்த நிகழ்வு ஏற்படுகின்றது அதாவது இது ஒரு சுழற்சியாகும். மேலும், இந்த இடத்தில் அல்லாஹ் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் இது ஒரு சுழற்சியாகும்.

இதே நிகழ்வு தான் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் கிலாஃபத்தே ரஸூலின் காலத்தை பற்றி கூறும்போது, ஒரு நபிக்கும் அவருக்கு பின் தோன்றும் நபிக்கும் இடையில் இந்த கிலாஃபத்தே ரஸூலின் நிலையை பற்றி முஸ்னத் அஹ்மத்தில் தொகுக்கப்பட்ட ஹதீஸீல் அன்னார் மௌனமாகிவிட்டார் என்று வருகின்றது. ஏனென்றால் இதுவும் ஒரு சுழற்சியாகும். இந்த நபிமொழி, நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் தோன்றும் ஒவ்வொரு நுபுவத்திற்கும் நிகழக் கூடியதாகும்.

மேலும், இந்த நபிமொழியின் உண்மை வடிவமே இந்த நூற்றாண்டில் அல்லாஹ்வின் பெரும் கருணையாக வெளிப்பட்டுள்ளது. அதாவது, இந்த நபிமொழி உம்மத்தே முஹ்மதிய்யாவில் தோன்றும் ஒருநபிக்கும் அடுத்து வரும் நபிக்கும் இடையிலான கிலாஃபத்தின் நிலையை குறிக்கிறது என்பதை தெளிவாக அறிந்து கொண்டோம்,

அவ்வாறில்லை என்றால் மற்ற பிரிவு முஸ்லிம்கள் போல் இறுதிநபி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதையும் தெரிந்துகொண்டாம்.

மேலும், ”எனக்கும் மஸீஹிக்கும் இடையே நபியில்லை” என்ற நபிமொழிக்கேற்ப நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் மஸீஹ் மட்டுமே நபி என்ற அந்தஸ்தை பெறுகின்றார். இன்னும் மூஸா (அலை) அவர்களின் கிலாஃபத் மஸீஹ் உடன் முடிவடைந்து விட்டது, ஆனால் நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமை அதாவது கிலாஃபத் மறுமைவரை தொடரக்கூடியதாகும், எனவே அன்னாரின் உம்மத்தில் இறுதியாக தோன்றக்கூடிய கலீஃபாவான மஸீஹ் இருக்கின்றார், இந்த இடத்தில் மிக குறிப்பாக நாம் அறியவேண்டியது என்னவென்றால் உம்மத்தே முஹம்மதிய்யாவில் மஸீஹ் ஒருவர் என்றால் அது மூஸா (அலை) அவர்களின் கிலாஃபத்தை போல் முற்றுபெற்றுவிடும் ஆகையால், உம்மத்தே முஹம்மதிய்யாவில் மஸீஹ் என்ற வார்த்தையின் அர்த்தம் மஸீஹ் ஒருவரல்ல பலர் என்பதாகும், இன்னும் தெளிவாக கூறினால் உம்மத்தே முஹம்மதிய்யாவில் இறுதி கலீஃபா மஸீஹ்காக இருக்கின்றார். அவர் ஒருவர் அதாவது ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) மட்டும் தான் என்று கருதினால், நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமை, மூஸா (அலை) அவர்களின் இரண்டாவது வல்லமை போல் முற்றுபெற்றுவிடும்! மாறாக, வரக்கூடிய மஸீஹ் ஒருவர் அல்ல பலர் என்றால் நபி (ஸல்) அவர்களின் அருளுக்குறிய கிலாஃபத் தொடரக் கூடியதாகவும் மஸீஹ்மார்களின் வருகை முற்றுப்பெறவில்லை என்பதால், பகுதி அதாவது நிழல் நுபுவ்வத்தின் கதவு என்றென்றும் திறந்தே இருக்கும் சகோதரர்களே .

ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் ஒருவரே மஸீஹ் அல்ல மாறாக அன்னார் நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமையில் மஸீஹ் என்னும் நபிமார்களின் கதவை திறப்பதற்காக வந்துள்ள இஸ்லாத்தின் கலீஃபா ஆவார்கள். மேலும் அன்னார் ஒரு காத்தமுள் குலஃபாவும் ஆவார்கள். எனவே இனி நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமையாக கியாமத்து வரை தோன்றும் மஸீஹ்மார்கள் அதாவது நபிமார்கள், அன்னாரை பின்பற்றாத ஏனைய பிரிவு முஸ்லிம்களில் இருந்து தோன்ற மாட்டார்கள். மாறாக, தோன்றக் கூடிய ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமையான மஸீஹ், அன்னாரையும் அதாவது நபி(ஸல்) அவர்களையும், காத்தமுள் குலஃபாவும் மஸீஹ் மவூது (அலை) அவர்களையும் பின்பற்ற கூடியவர்களாக இருப்பார்கள் என்பதையே ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் நமக்கு தெளிவு படுத்துகின்றார்கள்.

இப்போது மீண்டும் கிலாஃபத் சம்பந்தமான அந்த நபிமொழிக்கு வருவோம். மேலும் இந்த நபிமொழியில் காலத்தை குறிப்பிடப்படவில்லை என்பதை முன்னரே நாம் பார்த்தோம். எனவே, உம்மத்தே முஹம்மதிய்யாவில் தலைமை நபி காத்தமுன் நபிய்யீன் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுக்கும், அவர்களுக்கு பிறகு அன்னாரின் இரண்டாவது வல்லமையின் அங்கமான காத்தமுள் குலஃபா ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களுக்கும் இடையில் இந்த நபிமொழியின் அடிப்படையில் கிலாஃபத்தே ரஸூலின் காலம் நேர்வழியில் தொடங்கி கொடுங்கோலில் முடிந்தது.

ஆனால், இப்போது முஹம்மதிய்யா கிலாஃபத்தின் நூற்றாண்டின் முஜத்தித் மஸீஹ்காக, அதாவது, நபி என்ற பட்டத்தை பெற்று மஸீஹ்கின் வாசலை அதாவது, ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமையில் நுபுவ்வத்தின் அருளுக்குரிய வாசல் திறக்கப்படுகின்றது. நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமையாக கிலாஃபத்தே முஹம்மதிய்யாவில் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் நூற்றாண்டிற்கு பிறகு 15 வது நூற்றாண்டில் இறைவனின் ரூஹுல் குத்தூஸினால் பலப்படுத்தப்பட்டு ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் மறுமை வரை தொடரக்கூடிய இரண்டாவது வல்லமையில் தோன்றிய முஜத்தித் ஒரு மஸீஹ்க்காகவும் நபியாகவும் கிலாஃபத்தே முஹ்மதிய்யாவின் 15 வது கலீஃபாவாகவும் இறைவனின் அருளாக ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் தோன்றியுள்ளார்கள்.

எனவே, ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களுக்கும் அதாவது 14வது நூற்றாண்டின் முஜத்தித்துக்கும் 15வது நூற்றாண்டின் முஜத்தித் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்களுக்கும் இடைப்பட்ட காலம் ஒரு நூற்றாண்டாகும். அதாவது நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமையில் இரண்டு நபிமார்கள் அடுத்தடுத்த நுற்றாண்டில் தோன்றியுள்ளார்கள். இன்ஷாஅல்லா, இதற்கு பின் அடுத்த நூற்றாண்டுகளிலும் தோன்றுவார்கள். ஆக இந்த நபிமொழியின் அடிப்படையில் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் இரண்டாவது வல்லமையான கிலாஃபத்தே ரஸூலின் காலம் நேர்வழியிலிருந்து வழிகேட்டின் காலமாகும்.

உடனே, அஹ்மதிய்யா மௌவ்லவிகள் எங்களைப் பார்த்து ஜமாஅத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாம் 3வது மற்றும் 4வது கலீஃபாவிற்கு எதிரானவர்கள் என்று அப்பாவி மக்களை இந்த உண்மையின் பக்கம் சிந்திக்காதவாறு திசைதிருப்புகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் கிலாஃபத்தே ரசூல் வடிவிலான கிலாஃபத் நேர்வழியில் இருப்பதும் அது வழிகேட்டின்பக்கம் செல்வதும், பின்பற்றும் மக்களின் ஆன்மீக நிலையை பொறுத்துதான் அமையும். இதை ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்களும் உறுதி செய்கின்றார்கள்.

ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் இந்த கிலாஃபத்தை பற்றி கூறும்போது:- கிலாஃபத்தின் இழப்பு என்பது எந்தவொரு கலீஃபாவின் குறைபாடுகளின் காரணமாக அல்ல. மாறாக ஒரு ஜமாஅத்தின் குறைபாடுகள் காரணமாகவேயாகும். மேலும் கிலாஃபத்தின் இழப்பு என்பது ஒரு கலீஃபாவின் பாவத்தை நிரூபிப்பதாகவும் இல்லை. மாறாக ஒரு ஜமாஅத்தின் பாவத்திற்கு சான்றாகவே அமைந்துள்ளது. ஏனென்றால் இது எல்லாம்வல்ல அல்லாஹ்வின் தெளிவான வாக்குறுதியாகும். அதாவது பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கை மற்றும் நற்செயல்களின் பாதையில் நிலைத்திருக்கும் போதுதான், அவன் கிலாஃபத் என்பதை தொடரச் செய்வான். மேலும் அவர்களிடம் மாறுதல் ஏற்பட்டு பெரும்பாலான மக்கள் ஈமான் மற்றும் நற்செயல்களின் பாதையிலிருந்து விலகிச் செல்லும் பட்சத்தில் எல்லாம்வல்ல அல்லாஹ், “நீங்கள் தீயச்செயல்களை செய்பவர்களாக ஆகிவிட்டீர்கள், எனவே நான் எனது அருட்கொடைகளை உங்களிடமிருந்து விலக்கிக் கொள்கின்றேன்”; என்று கூறுவான். இறைவன் விரும்பினால் அவன் ஒரு கூடுதலான உதவியாக சில காலங்கள் வரைக்கூட ஒரு ஜமாஅத்தில் கலீஃபாக்களை ஏற்படுத்துவதை தொடரலாம்.

இந்த நபிமொழியில் கிலாஃபத்தின் முதல் காலகட்டத்தை, முஸ்லீம்கள் பொதுவாக புரிந்து கொள்வது தூய்மையாளர்களும், நேர்மையாளர்களுமான கலீஃபாக்களின் அதாவது கிலாஃபத்தே ராஷித் காலம் என்றாகும். அவ்வாறே வாக்களிக்கப்பட்ட மஸீஹின் காலத்திற்கு பிறகு, அஹ்மதியா ஜமாஅத்தில் கிலாஃபத் அமைப்பு உருவானது. ஜமாஅத்தின் கொள்கையை நடத்தி செல்ல கலீஃபத்துல் மஸீஹ்மார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அல்லாஹ் நாடியது வரையிலும் அது தொடர்ந்தது. பின்னர் அது வழிகேட்டின் பக்கம் செல்ல தொடங்கியது, இன்னும் குறிப்பாக இவர்கள் இப்பொழுது கொண்டுள்ள இவர்களின் கிலாஃபத்தின் மேல் உள்ள நம்பிக்கையால் இஸ்லாத்தின் போதனைகளும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் போதனைகளும் முதுகுக்குப்பின்னால் தூக்கி எறியப்பட்டுள்ளது. மேலும், அஹ்மதிகள் திருகுர்ஆன், நபிமொழி மற்றும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் போதனையைவிட கிலாஃபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

இன்னும் கூறப்போனால், அவர்கள் எந்தளவிற்கு ஆகிவிட்டார்கள் என்றால், “கிலாஃபத் எங்கள் உயிர்” என்ற கோஷங்கள் எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள் . எனவே அல்லாஹ் அவனது ஒளியை விலக்க ஆரம்பித்தான், அவனது கலீபஃத்துல்லாஹ்வாக இந்த எளியவனை (ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை)அவனது அருளாக எழுப்பினான்.

மேலும், இந்த எளியவன் எந்த மனித கரங்களாலும் தேர்ந்தெடுக்கப்படவில்லை மாறாக அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் ஸுபுஹானஹுதாலா, எனது எஜமானர் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) மற்றும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் வேலையை தொடர்ந்து எடுத்துச்செல்ல அவனது அன்பிற்குரியவனாக நேரடியாக தேர்வு செய்துள்ளான். ஒரு கலீஃபத்துல்லாஹ்வின் வருகை நுபுவ்வத்தின் போதனையின் அடிப்படையிலானதாகும். மேலும், இங்கு நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், நுபுவ்வத் அந்த ஏக இறைவன் ஏற்படுத்தும் ஒரு மாபெரும் அருளேயன்றி எந்த மனிதனாலும் உருவாக்க முடியாது. மேலும் இவ்வாறு தோன்றும் கலீஃபதுல்லாஹ் முற்றிலும் இறைவனின் ஆணைப்படி அவனது வஹியின் மூலம் வழி நடத்தப்படுகின்றார், இவ்வாறு தன்னை அல்லாஹ்வின் கலீஃபா என்று வாதம் செய்யும் ஒருவரிடம் பையத்தை பெறாமல் தனது முகத்தை திருப்பிக்கொண்ட ஒருவர் நிச்சயமாக நாளை மறுமையில் அந்த ஏக இறைவனின் முன் நிறுத்தப்படுவார். அப்போது அவருக்கு நிராகரித்ததற்கான எந்த ஆதாரமும் இருக்காது, மேலும் அவ்வாறாக ஒரு கலீஃபதுல்லாஹ்வின் பைய்யத்தை முறித்து கொண்ட நிலையில் மரணிப்பவர் நிச்சயமாக அறியாமையின் மரணமான "ஜாஹிலியத்தின்" மரணத்தை அடைகின்றார். ஆக, இந்த மாபெரும் அருளின் பக்கம் சிந்தியுங்கள்! அன்பானவர்களே!
Read more »

நம்பிக்கையாளரின் சிறப்பம்சம்!

ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் போதிக்கின்றார்கள்:-

இது ஓர் அருட்கொடையாகும். அதாவது இறை நேசர்களுக்கு இறைவனது வானவர்கள் தென்படுகின்றனர். மறுமையின் வாழ்க்கை என்பது வெறும் நம்பிக்கையேயாகும். ஆனால் இறையச்சமுடைய ஒருவருக்கு மறுமையின் வாழ்க்கை இங்கேயே காட்டப்படுகிறது. அவர்களுக்கு இவ்வுலகிலேயே இறைவன் கிடைத்து விடுகின்றான். அவர்களுக்கு காட்சியளிக்கின்றான். அவர்களிடம் உரையாடுகின்றான். ஆக, இத்தகைய நிலை எவருக்கு கிடைக்கவில்லையோ அவர் மரணிப்பதும் மேலும் இங்கிருந்து சென்று விடுவதும் மிகத் தீயதாகும்.

ஒரு இறை நேசரின் கூற்று இவ்வாறு வருகிறது. அதாவது ஒருவர் தமது வாழ்நாளில் ஒரு உண்மையான கனவைக் கூட காண்பதற்கான பாக்கியத்தைப் பெறவில்லை என்றால் அவரது முடிவு அபாயகரமானதாகும். ஏனெனில் இதனை அல்லாஹ் இறையச்சமுடையவர்களின் அடையாளமாக திருக்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான்.

அல்லாஹ்விடமிருந்து இல்ஹாம், கனவு, உரையாடுவதற்கான பாக்கியம் கிடைக்க வேண்டும். ஏனென்றால் இது நம்பிக்கையாளரின் சிறப்பம்சமாகும்.

(மல்ஃபூஸாத் :தொகுதி : 1, பக்: 12)

இந்த நூற்றாண்டின் தூது செய்தியை ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு அருளுக்குரிய மக்களுக்கும் அந்த ஏக இறைவன் அவனது மாபெரும் கருணையால் அருள்புரிவானாக ஆமீன்

Read more »

Jun 4, 2022

கிரகணங்கள் இறைவனின் மாபெரும் அத்தாட்சி

ஹஸ்ரத் முஹையுதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:-

இந்துக்கள் மற்றும் தமிழர்களுக்கு மத்தியில், குறிப்பாக நாளைய தினமான 3-11-2013 ஞாயிறு அன்று நிகழும் சூரிய கிரகணம் குறித்து அதிகமான அனுமானங்களும் ஊகங்களும் காணப்படுகின்றன. இதற்கான காரணம், மீண்டும் ஒருமுறை தீபாவளியன்று மொத்த சூரிய கிரகணம் நிகழும் என்பதே ஆகும். எனினும் இம்முறை, மொரிஷியஸில் கிரகணம் ஓரளவு கண்களுக்குத் தென்படும். ஆனால், அதே சமயம் கடந்த ஆண்டு (13-14 நவம்பர் 2012) இவ்வாறு அந்த சூரிய கிரகணம் கண்களுக்குத் தென்படவில்லை. எனவே மொரீஷியஸை சார்ந்த இந்து / தமிழ் மத நம்பிக்கையாளர்கள் பின்வருமாறு கேள்வி ஒன்றை எழுப்புகிறார்கள்: இதனால் என்ன நிகழும்? இருண்ட சக்திகளுக்கு எதிராக ஒளியின் வெற்றியைக் கொண்டாடும் விடுமுறை நாளான தீபாவளி அன்று சூரிய கிரகணம் அடைவது எதன் அறிகுறி ? என்பதே அவர்களின் கேள்வியாகும்.

1762 ஆம் ஆண்டு முதல், விளக்குகள் திருவிழா (தீபாவளி அல்லது தீப ஒளி ) தினத்தில் சூரியனின் மொத்த கிரகணம் வெளிப்படுவது இது நான்காவது முறையாகும் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும் :

• அக்டோபர் 17, 1762

• அக்டோபர் 24, 1995

• நவம்பர் 13, 2012

• நவம்பர் 3, 2013

இந்த நிகழ்வு தொடர்பான பல்வேறு விஞ்ஞான நம்பிக்கைகளின்படி, இது பூமியில் வாழும் மனிதர்களுக்கு அழிவையும் பேரிடர்களையும் கொண்டுவரும் நிகழ்வாகும். மத நம்பிக்கை உள்ள மற்றவர்களுக்கோ இது நற்செய்திகளைத் கொண்டுவரும் நிகழ்வாகும்.

கல்கி அவதாரம் தோன்றும் போது , சந்திரனும் சூரியனும் கிரகணம் அடையும் என்று மகாத்மா சுர்தாஸ்ஜி தீர்க்கதரிசனம் அருளியுள்ளார்கள்.

அவர் பின்வருமாறு எழுதுகிறார்:

"சந்திரன் மற்றும் சூரியன் இரண்டும் கிரகணம் அடைந்து வன்முறைகள் மற்றும் இறப்புகள் அதிகரிக்கும்."
(சுர்காகூர் )

சீக்கியர்களின் புனித புத்தகத்தில், ஸ்ரீ குரு கரந்த் சாஹிப் அவர்கள் எழுதுகையில், "மகாராஜ், நெஹ்கலன்காக அவதாரம் எடுக்கும்போது, சந்திரன் மற்றும் சூரியன் அவரது உதவியாளர்களாக இருக்கும்" (18-20) என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஏற்பாட்டில், புனித இயேசு தனது இரண்டாவது வருகையுடன் வரும் அறிகுறிகளை இவ்வாறு விவரிக்கிறார்: "அந்த நாட்களின் உபத்திரவத்திற்குப் பிறகு உடனடியாக சூரியன் இருட்டாகிவிடும், சந்திரன் ஒளியைக் கொடுக்காது ." (மத்தேயு 24:29)

இறுதி சட்டங்களைக் தாங்கிய புத்தகமான புனித குர்ஆன் மற்றும் இஸ்லாமிய இறைத்தூதரின் கூற்றுகளின்படி, கிரகணங்கள் என்பது சர்வ வல்லமையுள்ள இறைவன் நியாயத்தீர்ப்பு நாளின் நெருக்கத்தை உணர்த்த ஏற்படுத்தும் அறிகுறிகளாகும்.

ஹஸ்ரத் இப்னு உமர் (ரலி) பின்வரும் நபிமொழியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக தெரிவிக்கிறார்கள் :

"எவருடைய பிறப்பு அல்லது இறப்பின் காரணமாகவும் சூரியனும் சந்திரனும் கிரகணம் அடைவதில்லை. ஆனால், அவை இறைவனின் அடையாளங்களில் உள்ளவையாகும். நீங்கள் அவற்றைப் பார்க்க நேரிட்டால், இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்." (புகாரி)

புனித குர்ஆன் உயிர்த்தெழும் நாளின் முக்கிய அறிகுறிகளாக கிரகணங்களைக் குறிப்பிடுவதன் மூலம் இந்த நபிமொழியை மேலும் வலுப்படுத்துகிறது .

" 'மறுமைநாள் எப்போது வரும்? என்று அவன் (மனிதன்) கேட்கிறான்; பார்வை நிலைக்குலைந்து, சந்திரன் ஒளி இழந்து, சூரியனும் சந்திரனும் மீண்டும் ஒன்றாக்கப்பட்டுவிடுமானால் ..." (அல்குர்ஆன் 75: 7-10)

அண்ணல் நபி( ஸல் ) அவர்கள் அறிவுக்கு புலப்படாத மறைவான விஷயங்களைப் பற்றிய பரந்த ஞானம் அருளப்பட்டுள்ளார்கள். இறுதி நாட்களில், உலக (மனிதர்கள்) இறைமார்க்கத்தை விட்டு விலகி வாழும் போது, ஈசா (அலை) அவர்கள் மீண்டும் வருவார்கள் என்பதையும், அந்நேரம் இஸ்லாமிய மார்க்கத்தின் புணரமைப்பு மற்றும் புத்துயிர் உண்டாகும் என்பதையும் அவர்கள் கணித்துள்ளார்கள். இதனால் இறைநம்பிக்கை மீட்டெடுக்கப்படும். மேலும், இறைவன் புறத்திலிருந்து ஒரு தூதரின் வருகையைக் குறிக்கும் பல்வேறு அறிகுறிகளை அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். வாக்களிக்கப்பட்ட ஈசா (அலை) அல்லது இறைவனின் தூதரின் வருகையை வெளிப்படுத்தும் பல அடையாளங்களில், வின்னின் அறிகுறிகளாக சந்திரன் மற்றும் சூரிய கிரகணங்களும் ஒன்றாகும். குறிப்பாக, ஒன்றன் பின் ஒன்றாக ரமலான் மாதத்தில் ஏற்படும் இரண்டு தொடர் கிரகணங்கள் உண்டாகும்.

2001-2013 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து பார்போமேயானால், பல கிரகணங்கள் குறிப்பாக மொத்த சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள் 09 மற்றும் 23 நவம்பர், 2003 இல் ரமலான் மாதத்தில் நிகழ்ந்திருப்பதைக் காண்கிறோம். இது அல்லாஹ்வின் எளிய அடிமையான அவனது தூதரின் உண்மைத்தன்மையை கடந்த பத்து ஆண்டுகளாக (2003-2013) நிரூபிக்கிறது.

சுருக்கமாகக் கூறுவதானால், நம்முடைய இறைத்தூதரான அண்ணல் நபி ( ஸல் ) அவர்களின் தீர்க்கதரிசனம் மிகத் துல்லியமாகவும், மிக நேர்த்தியாகவும் நிறைவேறியுள்ளது .

"ஆகவே படைப்பாளர்களில் மிகச் சிறந்தவன் அல்லாஹ்." (23:15)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எல்லாம் வல்ல இறைவனிடமிருந்து நேரடியாகப் பெற்ற அறிவின் அடிப்படையில் இத்தகைய அதிர்ச்சியூட்டும் தீர்க்கதரிசனத்தை அருளியுள்ளார்கள் .

மொரிஷியஸ் மற்றும் பிற நாடுகளின் இந்து சகோதர சகோதரிகளே! இந்த விளக்குகளின் திருவிழாவை (தீபாவளி) கவனமாக சிந்தித்துப் பாருங்கள் – இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றி, தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றி. நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 1, 2013 ) எனது பிரசங்கத்தில் நான் உங்களுக்குச் சொன்ன அனைத்தையும் நினைவில் கொள்ளுங்கள் : -

“... வெளிச்சம் என்பது ராமர் தனது வருகையால் கிடைத்த வெற்றியைக் குறிப்பதாகும். அவர் தெய்வீக போதனையால் ஒளிரும் இறை மானிடராகவும், இறைச்செய்தியை (மற்றவர்களுக்கு) கொடுத்தவராகவும் இருந்தார். ஒளி இருளை வென்றபோது அவர் ஒரு மகத்தான வெற்றியுடன் வந்தார் . ”

எச்சரிக்கையாக இருங்கள்! இந்து மதத்தின் நம்பிக்கையில் இது ஒரு கரும்புள்ளியாக மாறியிருக்கிறது. காரணம் இந்த ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை என்பதையும் இந்நாளில் பிற்பகல் 2:00 மணி முதல் (சுமார்) 7:00 மணி வரை ஒரு கிரகணம் ஏற்படும் என்பதையும் பலர் (இந்துக்கள்) அறிந்திருக்கின்றனர்.

ஆம்! இது தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற்றதன் அறிகுறியாகும்! ஒளி பரவுவதன் அறிகுறியாகும்! அந்நேரத்தில்தான் இறைவன் தன்னுடைய அடியானின் பிரார்த்தனையைச் செவியுற்றார். இதற்கான வெகுமதியாக, ஒளி அடைந்த வெற்றியைக் கொண்டாட , இன்பத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இனிப்புப் பலகாரங்களுடன் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது . நம்முடைய இரட்சகனாகிய நம் கடவுள் நம்மை (விசுவாசிகளை) இருளின் மீது வெற்றி பெறச் செய்வதைப் பாருங்கள் .

இப்பண்டிகையின்போது நீங்கள் வெளியில் செல்லும் நேரத்தில், விளக்குகள் ஒளிரும், வீடுகள் விளக்குகளின் தோரணையால் அழகாகக் காட்சியளிக்கும். ஆனால், இப்பண்டிகையின்போது உங்கள் இதயங்கள் இன்னும் வெறுப்பை மறைத்துக்கொண்டு, உங்களின் நம்பிக்கை எப்போதும் இருளில் நிரம்பியிருந்தால், 5000 ஆண்டுகளுக்கு முன்பு ராமர், கிருஷ்ணர் ஆகியோரின் போதனைகளுக்கும், தீபாவளிப் பண்டிகை வழக்கமாகவும், கொண்டாட்டமாகவும் மாறிய நிகழ்வுகளின் பக்கமும் நீங்கள் திரும்பிச் சென்று சிந்திக்க வேண்டும். ராமர், கிருஷ்ணர் ஆகியோர் கடவுளின் தூதர்களாக இருந்தனர். பக்தர்களாகவும், புனிதர்களாகவும் இருந்தனர். அவர்கள் கடவுளின் ஏகத்துவத்தை பரப்பப் போராடினார்கள். பிளவுகள், பகை, இனவாதம், வகுப்புவாதம் ஆகியவற்றை சமூகத்தில் கொண்டு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். இது எல்லா தீர்க்கதரிசிகளின் வேலையாகும் .

எனவே, மொரீஷியஸிலும் உலகெங்கிலும் ஒரு அவதாரத்தின் வருகையைப் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்த இஸ்லாமிய மார்க்கத்தில் கூறப்படும் இந்த அடையாளத்தை விட சிறந்த அடையாளத்தை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது . இந்த சமூகத்தில் வாழும் சகோதர சகோதரிகளே! உங்களுக்கு ஒரு நற்செய்தி! நண்பர்களே! உங்களுக்கு வாழ்த்துக்கள்! இறைவன் அருளும் நன்மையின் பிரகாசம் வெளிப்பட்டு விட்டது. அதைக் காண விரும்புவோருக்கு அதற்கான வழி திறக்கப்பட்டுள்ளது . இந்த நாடுகளில் சூரியனும் சந்திரனும் தெய்வீக ஆணையாலும், நற்செய்தியின் தூதாலும் கிரகணம் அடைந்திருக்கின்றன; எனவே, ஒரு அவதாரத்தின் வருகை (இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இன்று வரை) எந்த ஒரு குறைகளும் இல்லாமல் மிகவும் தெளிவான முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம், அனைத்து ஆன்மாக்களும் எல்லாம் வல்ல இறைவனின் கிருபைகளை நினைத்தும், அகில உலகத்திற்கும் தூதரான அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள் நிறைவேறுவதின் அங்கீகாரத்தை நினைத்தும் ஆனந்தக் கண்ணீர் சிந்தவேண்டிய தினமாகும். நான் ஒரு நபிமொழியைக் கூறி இதை முடிக்கிறேன்.

அண்ணல் நபி முஹம்மது ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் பிரதிநிதியான மஹ்தி(அலை) அவர்கள் தோன்றுவார்கள். நீங்கள் மலைகளுக்கு அப்பால், அல்லது பனிகளின் மீது ஊர்ந்து செல்ல வேண்டியிருந்தாலும் , நீங்கள் எனது அமைதிக்கான வாழ்த்துக்களுடன் அவரிடம் சென்று அவரிடம் உங்களின் இறைநம்பிக்கைக்கான உறுதிமொழி கொடுக்க வேண்டும்.ஏனென்றால், மஹ்தி(அலை) அவர்கள் அல்லாஹ்வின் பிரதிநிதியாக இருப்பார்கள்.”( இப்னு மாஜா தொகுதி. 2)

இந்த நூற்றாண்டின் அவதாரத்தை ஏற்றுக்கொள்ள அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! இஸ்லாம் என்பது காலத்தின் துவக்கத்திலிருந்து தோன்றிய அனைத்து தீர்க்கதரிசிகள் மீதும் நம்பிக்கை வைக்கக் கூறும் ஒரு நேர்த்தியான மார்க்கமாகும். எனவே, நான் எனது இந்து சகோதர சகோதரிகளான உங்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்கிறேன். ஏனெனில், நீங்கள் தேடும் அவதாரம் இஸ்லாத்தில் தெளிவாக இருக்கிறது. மேலும், இந்த ஒரே ஒரு அவதாரமே இந்த காலகட்டத்தில் உங்களை அகில உலகங்களைப் படைத்து பரிபாலித்தவனான, இணை துணை இல்லாத எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பக்கம் நேர்வழி காட்டுகிறது. உங்களை இருளிலிருந்து வெளியேற்றவும் , நித்திய ஒளியின் வழியை உங்களுக்குக் காட்டவும் அல்லாஹ் உங்களுக்கு அனுப்பியுள்ள ராமர், கிருஷ்ணர் ஆகியோரின் சாரத்தை அடையாளம் காணவும் உதவும் வகையில் அல்லாஹ் உங்களது ஆன்மாக்களின் அகக்கண்களைத் திறப்பானாக! இன்ஷா - அல்லாஹ்... (அல்லாஹ் நாடினால்).
Read more »

நபி (ஸல்) அவர்களது உம்மத்தின் சிறப்பு!

ஹஸ்ரத் மஸீஹ்(அலை) அவர்கள் கூறுகிறார்கள்:-

“இறைவனிடமிருந்து இல்ஹாமை (இறை அறிவிப்பைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை, உண்மையான மார்க்கமாகிய இஸ்லாத்தில் - உம்மத்தே முஹம்மதிய்யாவில்

நிலைத்து நிற்பவர்களுக்கே அவன் வழங்குகிறான்; மறைவான செய்திகளை அவர்களுக்கு அறிவிக்கின்றான்.

உண்மையான மனத்துடன் திருக்குர்ஆனை இறைவசனம் என்று உறுதி கொண்டு, உண்மையான பற்றுடன் அதிலுள்ள கட்டளைகளின்படி நடந்து, ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனின் உண்மையான - முழுமை பெற்ற நபி என்றும் எல்லா நபிமார்களையும் விட மிகச் சிறந்த நபி என்றும் காத்தமுன்னபிய்யீன் என்றும் அவர்களே நேரான வழியைக் காட்டித் தருபவர்கள் என்றும் உறுதி கொள்கின்ற நம்பிக்கையாளருக்கு மட்டுமே அந்தத் தூய்மையான இல்ஹாமைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை அவன் வழங்குகிறான்.

யூதர்கள், கிறிஸ்தவர்கள், ஆரியர்கள், பிராமணர்கள் முதலிய வகுப்பினர்களுக்கு அந்த இல்ஹாம் ஒருபோதும் கிடைக்காது. ஆனால் திருக்குர்ஆனை முழுமையாகப் பின்பற்றி நடப்பவர்களுக்கு அது எப்பொழுதும் கிடைத்தது; இப்போதும் கிடைக்கிறது; இனிமேலும் கிடைக்கும். புதியதொரு ரிஸாலத்தை (புதியதொரு ஷரீஅத்துச் சட்டத்தை)க் கொண்டுள்ள வஹீ, அவசியமில்லையாதலால், அது முடிவு பெற்று விட்டது. எனினும் ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் உண்மையான தொண்டர்களுக்கு இல்ஹாம் கிடைக்கிறது.

அது ஒருபோதும் நிற்காது. நமக்குக் கிடைக்கும் அந்த இல்ஹாம், ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்மையான நபி என்பதற்கு மிகப் பெரிய சான்றாகும். இந்தச் சான்றுக்கு முன்னால் இஸ்லாத்தை மறுப்பவர்களும் எதிர்ப்பவர்களும், இழிவும் கேவலமும் அடைகிறார்கள்”.

(பராஹீனே அஹ்மதிய்யா; பாகம் 3, பக்கம் 216, அடிக்குறிப்பு 11)
Read more »

உங்கள் காலத்தில் தோன்றும் நபிமார்களை ஏற்றுக்கொள்ளுங்கள்!

ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவரகள் போதிக்கின்றார்கள்.

அல்லாஹ் சமூது சமுதாயத்தை ஓர் உதாரணமாகக் குறிப்பிட்டு, அவர்கள் தமது இயல்பிலேயே காணப்பட்ட வரம்பு மீறும் பண்பின் காரணத்தால் தமது காலத்தின் நபியைப் பொய்ப்படுத்தினர் எனக் கூறுகின்றான். மேலும் அவரைப் பொய்ப்படுத்துவதற்காக அவர்களிலிருந்தே பெரும் பாக்கியங்கெட்ட ஒருவன் முன் வந்தான். அந்தக் காலத்தின் ரஸூல் (இறை தூதர்) அவர்களுக்கு அறிவுரையாக, அல்லாஹ்வின் ஒட்டகமாகும். நீர் அருந்தும் இடத்திலிருந்து இதை நீங்கள் தடுக்காதீர்கள். எனக் கூறினார். ஆனால் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் ஒட்டகத்தின் கால்களை வெட்டினர். எனவே, இந்தக் குற்றத்தின் தண்டனையாக அல்லாஹ் அவர்களின் மீது அழிவை ஏற்படுத்தினான்.

மேலும் அவர்களை மண்னோடு மண்ணாக்கினான். அவர்களின் மரணத்திற்குப் பிறகு, அவர்களின் விதவைப் பெண்கள், அநாதை சந்ததிகள் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களின் நிலை என்ன வாகும் என்பதைப் பற்றி இறைவன் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. இந்த இடத்தில் இறைவன், மனிதனின் ஆன்மாவை அல்லாஹ்வின் ஒட்டகத்துடன் ஒப்புமைப் படுத்துவதற்காகக் குறிப்பிட்டிருப்பது ஒரு மிகவும் நுட்பமான ஓர் உதாரணமாகும். இதன் கருத்து என்ன வென்றால், மனிதனின் ஆன்மாவும் அல்லாஹ்வின் ஒட்டகமாக பயன்பட வேண்டும். உண்மையில் அது இந்த நோக்கத்திற்காகத்தான் படைக்கப் பட்டுள்ளது. அந்த ஆன்மா அல்லாஹ்விடம் தன்னை மாய்த்துக் கொள்ளும் நிலையில் ஒருவர் ஒட்டகத்தின் மீது சவாரி செய்வது போன்று இறைவன் தன் தூய தோற்றத்துடன் அதன் மீது சவாரி செய்ய வேண்டும். உண்மையை விட்டும் முகந்திருப்புகின்ற எனவே ஆன்மாவை வணங்கும் மக்களுக்கு அச்சுறுத்தியவாறும், எச்சரித்தவாறும் அல்லாஹ் கூறுவதாவது, நீங்களும் சமூது சமுதாயத்தைப் போன்று அல்லாஹ்வின் பெண் ஒட்டகம் நீர் அருந்தும் இடத்தை - இறைவனைப் பற்றிய நினைவு மற்றும் இறைவனைப் பற்றிய ஞானங்கள் எனும் நீரூற்றை - எதில் இறைவனின் ஒட்டகம் எனும் ஆன்மாவின் வாழ்வு நிலைத்திருக்கிறதோ - அதை நீங்கள் தடுக்கின்றீர்கள். தடுப்பது மட்டுமல்லாமல், இறைவனின் வழிகளில் அது செல்ல முடியாமல் போய்விடும் வகையில் அதன் கால்களை முறிக்கும் சிந்தனையில் இருக்கின்றீர்கள். எனவே நீங்கள் உங்களுக்கு நன்மையை வேண்டுகின்றீர்கள் என்றால், வாழ்விற்கான நீரை விட்டும் அ(ந்)த (ஆன்மாவி)னை தடை செய்யாதீர்கள். மேலும் உங்களின் பொருத்தமற்ற இச்சைகள் தாக்குதலினால் அதன் கால்களை முறிக்காதீர்கள். நீங்கள் அப்படிச் செய்தால் - இறைவன் வரை சென்றடைவதற்காக வாகனமாக உங்களுக்கு வழங்கப்பட்ட அந்த ஒட்டகம் காயமடைந்து மரணித்து விட்டால் நீங்கள் முற்றிலும் ஒன்றுமற்றவர்களாக, காய்ந்த விறகைப் போன்று கருதப்பட்டு வெட்டப்பட்டு விடுவீர்கள்; பிறகு நெருப்பில் போடப்படுவீர்கள். மேலும் உங்களின் மரணத்திற்குப் பிறகு இறைவன் உங்களின் உறவினர்கள் மீது ஒருபோதும் கருணை காட்டமாட்டான். இன்னும் சொல்லப் போனால், உங்களின் பாவம் மற்றும் தீமையின் தீய விளைவு அவர்களுக்கு முன்னாலும் வந்து நிற்கும். உங்களின் செயல்களின் தீய விளைவினால் நீங்கள் மரணிப்பது மட்டுமின்றி, உங்களின் மனைவி மக்களையும் அதே அழிவிற்கு நீங்கள் உள்ளாக்கிவிடுவீர்கள்.

(நூல் குறிக்கோள் பற்றிய விளக்கம்)

Read more »

தவறான ஷைத்தானிடம் தூண்டுதலில் இருந்து பாதுகாப்பு தேடுவதற்கு!

ஹஸ்ரத்  கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:

ஆகவே, மனித குலமே, எனது முஸ்லீம் சகோதரர்களே சகோதரிகளே, அன்புக்குரிய குழந்தைகளே! இன்னும் உலகெங்கிலும் உள்ள எனது ஸஹாபிகளே! அனைவரும் அல்லாஹ்வு(தபாரக்) விற்கு முற்றிலும் அடிபணிந்து விடுங்கள்! ஷைத்தானை எதிர்த்து நில்லுங்கள். அதனால், அவன் உங்களை விட்டும் ஒடிவிடுவான். அல்லாஹ்(தபாரக்)வின் அதிதீவிர வீரர்களாகி உங்களுக்குள்ளும் உங்களைச் சுற்றியும் அவனது ஏகத்துவத்தை மிகுந்த வீரியத்துடன் பாதுகாப்பவர்களாகி விடுங்கள். நல்லதைச் செய்யுங்கள், நல்லதையேப் பாருங்கள், நல்லவர்களாகவே நடந்து கொள்ளுங்கள். முஸ்லிம்களை நல்ல முறையில் பயிற்சி செய்யுங்கள், முஸ்லிம்கள் என்று வெறும் பெயரளவில் மட்டுமே இருந்துவிடாமல், அதனை செயல்படுத்திக் காட்டும் நல்ல முஸ்லிம்களாக நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ் (தபாரக்)விற்கு அருகில் வாருங்கள்! தினசரித் தொழுகைகளை மேற்கொள்ளுங்கள்!, திருக்குர்ஆனைப் படியுங்கள்! படைப்பினங்களுடன் அல்லாமல் அல்லாஹ்(தபாரக்)வுடன் நெருங்கிய நட்பு கொள்ளுங்கள், பிறகு அதற்கு பிரதிபலனாக அல்லாஹ் (தபாரக்) உங்களை எந்த அளவுக்கு நேசிப்பான் என்பதையும், எந்த அளவுக்கு நெறுங்கி வந்துவிடுவான் என்பதையும் நீங்கள் காண்பீர்கள். மேலும், நீங்கள் உங்களது உள்ளத்தை உங்களால் பார்க்க முடியும். உங்கள் இதயத்தின் நிலையை உங்களுக்குக் காண்பிப்பதற்காக அல்லாஹ்(தபாரக்) உங்களுக்குள் இருக்கும் இறை ஒளியை இயக்குவதற்கு ஏற்றி வைப்பதற்கு அனுமதியுங்கள். உங்கள் பாவங்களை ஒப்புக் கொள்ளுங்கள். இன்னும் அவனின் இருப்பை மறுக்காதீர்கள், ஏனென்றால் இறைவனின் தூய வார்த்தைகளையே நமது மனதில் நிறுத்தும்படி கட்டாயப்படுத்த வேண்டும்:

"எங்களிடம் எந்த பாவமும் இல்லை என்று கூறினால், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். நம்மில் எந்த உண்மையும் இல்லை என்று பொருள். ஆனால் நாம் அல்லாஹ்(தபாரக்)விடம் நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்போது அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றி, நமக்கு உகந்ததை நிறைவேற்றுவான். அவன் நம்முடைய பாவங்களை மன்னித்து நாம் செய்த அனைத்துத் தவறான செயல்களிலிருந்தும் நம்மைத் தூய்மைப் படுத்திவிடுவான்."




ஜுமுஆ பேரூரை 13.08.2021
Read more »

நேர்வழி பெறுபவர் யார்?

ஹஸ்ரத் மஸீஹ் (அலை) கூறுகின்றார்கள் :-

“ஓர் இறை தூதர், நபி, முஹத்தஸ் படைப்பினங்களின் சீர்திருத்தத்திற்காக வானத்திலிருந்து இறங்கும் போது அவருடன் கண்டிப்பாக வானவர்கள் இறங்குகின்றனர். அவர்கள் நல்ல உள்ளங்களில் நேர்வழியை இட்டுச் செல்கின்றனர். நன்மையைத் தூண்டுகின்றனர். இறை மறுப்பு, வழிகேடு எனும் இருள் நீங்கி ஈமான், நேர்வழி எனும் உண்மையான விடியற்காலை தோன்றும்வரை வானவர்கள் இறங்கிக் கொண்டிருக்கின்றனர். அல்லாஹ்வின் வழக்கம் இப்படித்தான் நடந்து வந்திருக்கின்றது.”

(ஃபத்ஹே இஸ்லாம் பக்கம் : 18 அடிக் குறிப்பு)
Read more »

இறைவஹீ இல்லையென்றால் இறைவன் உங்களிடம் உரையடாவில்லை என்றால் அதுவும் ஒருவகை சிலை வழிபாடே!

ஹஸ்ரத் மவ்லானா ஹக்கீம் நூருத்தீன் (ரலி) (முதலாவது கலீபஃதுல் மஸீஹ்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள் :-

அல்லாஹ் ஸுபுஹானஹு தஆலா முற்காலத்தில் தனது நேசர்களிடமும் தூதர்களிடமும் பேசியதைப் போன்று இப்போதும் எப்போதும் தான் விரும்பியவர்களுடன் உரையாடுகின்றான்.

இறைவா! உனது அருள் கிடைத்தவர்களின் வழியில் எங்களை நடத்துவாயாக!

என்ற வேண்டுதலை இறைவனே கற்றுத் தந்துள்ளான். அதாவது, நபி, சித்தீக், ஷஹீத், மற்றும் ஸாலீஹீன் ஆகியோர்களின் வழியில் எங்களை நடத்துவாயாக என்பதாகும். இறைவன் உரையாடுவது என்பது அந்த வழியை சேர்ந்ததே ஆகும்.

இஸ்ரவேலர்கள் (மூசா நபியுடைய காலத்தில்) கன்றுகுட்டியை வணங்கி வந்தார்கள் இதனை கண்டிக்கும் வகையில் அவர்கள் வணங்கக் கூடியவை அவர்களிடம் உரையாடுவதில்லை; அவர்களுக்கு நேர்வழி காட்டுவதும் இல்லை என்று இறைவன் கூறுகின்றான்.

இவ்வாறிருக்க இறைவன் பேசுகின்றான் என்பதை முஸ்லிம்கள் ஏன் ஏற்க மறுக்கின்றார்கள்? (மிர்க காத்துல் யக்கீன் 24-27)

அப்போது அன்னார் முஸ்லீம்களை பார்த்து கேட்டதை இன்று அஹ்மதிகளை பார்த்து கேட்பது போன்று உள்ளது. அல்லாஹு அக்பர். உடனே மௌலவிகள் கூறும் அடிப்படை ஆதாரம் இல்லாத வாதத்தை அதாவது வஹீ வரும் அதை சொல்லமாட்டார் என்று உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ளாதீர்கள் சகோதரர்களே!

இறைவன் உங்களுடன் வஹியின் மூலம் பேசுவது என்பது மார்க்கத்தின் ஆணிவேர் அதை சில சாக்கு போக்கு கூறி மறுப்பதும் சாமிரி செய்த சிலையை வணங்குவதற்கு ஒப்பாகும். (நஊதுபில்லாஹ்)

ஒன்று வஹீயை கேளுங்கள் மஸீஹ் (அலை) மிக தெளிவாக ரூஹுல் குத்தூஸ் இல்லாமல் உங்களுக்கு இறையச்சம் வராது என்று எச்சரித்துள்ளார்கள். (அல்ஹம்துலில்லாஹ்) சிந்தியுங்கள் சகோதரர்களே!!
Read more »

பொருள் தியாகத்தை பற்றி காலத்தின் இமாம் அவர்கள்

பொருள் தியாகத்தை பற்றி காலத்தின் இமாம் ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:

நமது ஜமாத்தை (ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்) சேர்ந்த மக்கள் எப்போதும் இந்த அருளின் பக்கம் நினைவு கூற்ந்தவர்களாக இந்த தியாகத்தின் அருள்களையும் பயன்களையும் புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும். எனது சகோதரர்களே நமது மறைவானவற்றை அவனை தவிர யார் அறிந்து கொள்ள முடியும்! எனவே நாம் இந்த தியாகத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்ற முழு விழிப்புணர்வு மற்றும் உண்மையான உணர்வும் நம்மிடையே உருவாக வேண்டும். நாம் உளப்பூர்வமாக நல்ல எண்ணத்தில் இந்த தியாகத்தில் ஈடுபடுத்திக் கொண்டால் அந்த ஏக இறைவனின் அருளுக்கும் அன்பிற்கும் பாத்திரமாகலாம். இதை சொற்களால் கூறுவது கடினமான விஷயமாகும். இன்னும் சில வேளைகளில் மக்கள் பிச்சைக் காரனுக்கு பிச்சை கொடுக்கும்போது நம்மை சிலர் தொந்தரவு செய்வதிலிருந்து தவிர்க்க அல்லது குழந்தைகள் அடம்பிடிப்பதை நிறுத்தும் நோக்குடன் அவர்களுக்கு ஏதாவது ஒன்றை கொடுப்பது போல பிச்சைக் காரனுக்கு பிச்சை கொடுக்கின்றனர், ஆனால், எனது அன்புக்குரியவர்களே! நீங்கள் பிறருக்கு கொடுக்கும் போது கூட மகிச்சியுடனும் உங்கள் இதயத்தை உருக செய்யும் மன உருக்கத்துடனும் மனநிறைவுடன் இந்த உலகம் நமக்கு தற்காலிகமானது என்றும் நமக்கு நிரந்தரமான மறுமை உள்ளது என்ற உண்மையை முழுவதும் உணர்ந்தவராக கொடுங்கள். இது உங்கள் மனிதாபிமானத்தை தட்டி எழுப்பக் கூடியதாக இருக்க வேண்டும். எனவே நீங்கள் இதை உளப்பூர்வமாக புரிந்து கொண்டு ஆத்மார்த்தமாக இறைவனுக்காக இவ்வகை நற்செயல்களை செய்தால் அந்த ஏக இறைவாகிய அல்லாஹ் சுபஹானஹு தாலா அதற்கு பகரமாக அந்த அடியானை அவனது தயவாளும் கருணையாலும் சிறந்த முறையில் பொருந்தி கொள்வான். அந்த வானங்களையும் பூமியையும் உங்களை படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வை தவிர உங்களை நேசிப்பவன் யார்? இன்னும் அவன் எப்படிபட்டவன் என்றால் அனைத்தும் அழிந்தாலும் அவன் ஒருவனே நம்முடன் என்றென்றும் இருப்பான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எனது அருமையானவர்களே!.
இஸ்லாம் ((ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்) என்ற இந்த உடல் ரூஹுல் குத்தூஸினாலும் உங்கள் அனைவரின் தியாகங்களாலும் ஒளிரூட்டப்பட்டு அந்த ஒளியூட்டப்பட்ட ஒளி பாய்ந்து வெளிச்சத்தை பரப்பும் போது அதன் முன்னேற்றத்தை எவராலும் தடுக்கமுடியாது இவ்வாறு செய்வதற்கு அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் நமக்கு உதவிபுரிவனாக! ஆமீன் சும்ம அமீன் யா ரப்புல் ஆலமீன்!!
Read more »

Jun 3, 2022

உண்மை இஸ்லாம்

இஸ்லாம் இரண்டு நிலைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது :-

ஒன்று மறைவான அம்சத்தையும், இரண்டாவதாக வெளிப்படையான நிலையையும் உள்ளடக்கியது. அதாவது முதல் நிலையை பொருத்தளவில், அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் மற்றும் அவனது திருத்தூதர் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்களின் மீது ஈமான், நேசம், நம்பிக்கை மற்றும் உண்மைத் தன்மையை குறிக்கின்றது. இரண்டாவது நிலை, முதல் நிலையை வெளிப்படையாக பிரதிபலிக்கக் கூடிய, இன்னும் குறிப்பாக இதில் எந்த அளவிற்கு நாம் மதிப்பு மற்றும் பற்றுதலுடன் இருக்கின்றோம் என்பதை நமது தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற அமல்களும், மேலும் புனித திருக்குர்ஆன் கூறும் சுன்னத்துகள், ஹராம் மற்றும் ஹலால் ஆகியவற்றை பேணுவதையும் குறிக்கிறது. இங்கு நாம் உணர வேண்டிய விஷயம் என்னவென்றால் நாம் ஒரு போதும் மறைவானவற்றில் இருந்து வெளிப்படையான நிலையை பிரிக்க முடியாது. இன்னும் கூறவேண்டும் என்றால் இவ்விரண்டையும் சேர்த்துதான் முழுமையானதொரு இஸ்லாம் என்று அழைக்கப்படுகிறது

இத்துடன் எனது இந்த ஜும்ஆ குத்பாவை நிறைவு செய்கின்றேன். இன்ஷா அல்லாஹ்! அல்லாஹ் நாடினால் இதன் தொடர்ச்சியை அடுத்த வாரமும் தொடர்வேன், மேலும் அல்லாஹ் உங்களுக்கு இந்த ஜும்ஆ சொற்பொழிவை புரிந்து கொள்ளும் ஆற்றலை வழங்குவானாக.இதன் மூலம் மனித குலம் மட்டுமல்லாமல், அழகிய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லீம்களும், உண்மை இஸ்லாத்தின் மாண்பு மற்றும் மனிதகுலத்தின் மதிப்பை அறிந்து கொள்ள முடியும். நன்றாக புரிந்துகொள்ளுங்கள் .. வெறும் நாவினால் பேசுவதற்கும் அதை நடைமுறை படுத்துவதற்கும் அதிகமான வித்தியாசம் உள்ளது. ஏன் இவ்வாறு கூறுகின்றேன் என்றால் நீங்கள் உண்மையான முஸ்லீம்கள் என்று கூறினால் அந்த அழகிய இஸ்லாத்தின் மதிப்பு உங்களிடமிருந்து பிரதிபலிக்க வேண்டும் . வெறும் உதட்டளவில் நான் முஸ்லீம் அல்லது இந்த நூற்றாண்டின் கலீஃபத்துல்லாஹ்வை ஏற்றுக் கொண்டேன் என்று கூறுவதற்கு சில நொடிகள் போதும். ஆனால் அதை நடைமுறை படுத்துவதில் தான் அந்த மேலான சிறப்புள்ளது. அந்த ஏக இறைவன் உங்கள் மீது மேலான அருளை பொழிந்து இந்த நூற்றாண்டின் தூது செய்தியை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளான். மேலும் உங்களை இந்த நூற்றாண்டில் அந்த அழகிய இஸ்லாத்தை பிரதிபலிக்கும் ஆற்றலையும் ஒரு பேரருளாக வழங்கியுள்ளான். எனவே இப்போது உங்களின் கடமை நீங்கள் உங்களுடன் போராடி, உங்களுக்குள் இறைவன் நாடும் அந்த அழகிய இஸ்லாத்தை மிளிர செய்ய வேண்டும். இதன் மூலம் ஒரு உண்மையான முஸ்லீம் சகோதர, சகோதரிகளாக ஒரே அணியாக நின்று, இந்த அழகிய உண்மை இஸ்லாத்தை உலகத்தின் எல்லை வரை எட்ட வைத்து, இந்த மகிமை மிக்க இஸ்லாத்தை வெற்றியின் பக்கம் முன்னேற செய்ய வேண்டும் இன்ஷாஅல்லாஹ் ஆமீன்.

-ஜுமுஆ பேரூரை 21.01.2022-ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள்
Read more »